
பிரம்ம குருவான வசிஷ்டரைக் கேட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்
மனிதனான பின் தசரதச் சக்கரவர்த்தி… இந்த உயிர் “பத்தாவது நிலை” அடையக்கூடிய பக்குவம் பெற்றது. இதற்குப் பிரம்ம குருவாக இருப்பவர் யார்…?
வசிஷ்டர்…! வசிஷ்டரைக் கேட்டு விட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்.
பத்தாவது நிலையை அடையும் நிலையில் இன்று மனிதனாக இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவர நேர்ந்தால் அது வசிஷ்டர் தான்.
அந்தத் துருவ நட்சத்திரம் இருளை நீக்கி ஒளியாக மாற்றியது.
1.நீங்கள் கவர்ந்து கொண்ட அந்தச் சக்தி உங்களுக்குள் பிரம்மமாக உருவாக்குகின்றது… அந்த உணர்வின் அணுவாக.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு எதுவோ அருந்ததி… அதனுடன் இணைந்து உங்களுக்குள் ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
இவ்வளவு பெரிய தத்துவத்தை இராமாயணத்தில் இந்த உயிர் என்ன செய்யும்…? என்று தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
“வசிஷ்டரும் அருந்ததியும் போல” என்றால் ஒருவர் வேதனைப்படுகின்றார். நாம் பாசமாக என்ன…? ஏது…” என்று விபரங்களைக் கேட்டறிகின்றோம்.
அப்போது வசிஷ்டர். ஆண்பாலாக உடலுக்குள் அந்த வேதனையான உணர்வுகள் உறைகின்றது. அந்த குணத்தின் சக்தி இங்கே வந்தால் அருந்ததி… வேதனை உணர்வைத் தான் உங்களுக்குள் இயக்கும்.
“நளாயினி” என்றால் எந்த உணர்வின் சக்தியாக ஆனதோ இந்தச் சக்தி “உறுதுணையாகத் தான் இருக்கும்” என்று பொருள்.
சாவித்திரி போன்று என்றால் அந்த உணர்வுகள் (வேதனை) விஷத்தின் தன்மையாகவே நம்மை இயக்கும் என்று பொருள்.
ஆனால்…
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால்
2.நம் உணர்வுகளை எல்லாம் அது ஒளியாக மாற்றும் என்பதை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.
இது நம்முடைய சாஸ்திரங்களின் உண்மை. ஆனாலும் இதனை அறிய முடியாதபடி காலங்களால் எத்தனையோ நிலைகள் மாறிவிட்டது
மறைந்த உண்மைகளை எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்களை நீங்கள் முழுமையாக அறிய வேண்டும் என்ற நிலையில் இதை குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
விஞ்ஞான உலகில் பேரழிவு வரும் நிலையிலிருந்து
1.உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்
2.அன்பு கலந்த உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
அந்த உணர்வைத் தான் உங்களில் இப்போது பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.