பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

 

விஞ்ஞான அறிவால் வந்த விஷத்தன்மைகள் பலவாறு பரவி… மக்களை இன்று மடியச் செய்யும் நிலையாக வருகின்றது.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய “அணு உலைகளை” உருவாக்குகின்றோம்.
1.அதிலிருந்து வரும் கசிவுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
2.இந்த உணர்வுகள் நம் பூமி முழுவதும் படர்கின்றது.
3.அதன் எல்லையில் நுகர்வோர் அனைவருக்குள்ளும் விஷத்தன்மையான கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
4.அந்தக் கதிர்கள் படரப்பட்ட மனிதர்கள் இறந்த பின் அந்த உடலிலிருந்து அதே அணுக்களின் தன்மை மீண்டும் பெருகத் தொடங்குகிறது.

மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது “மிகக் கடுமையான நோய்களாகவும்…” மாறுகின்றது.

முதலில் மனித உடலுக்குள் சென்று தீய அணுக்களின் தன்மையாக உருவாகின்றது. இறந்த பின் மனிதனை ஒத்த நிலையில் கொண்டு பரவிப் புது விதமான நோய்களாக வருகின்றது.
1.இதைத் தான் வைரஸ் என்ற நிலையில்
2.”புதிது புதிதாக உருவாகிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

ஒவ்வொன்றையும் என்னென்ன நிலைகள் என்று பரீட்சித்து பார்க்கும் போது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூடச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த அணு தன்மைகள் உடலிலே நுகர்ந்து விட்டால் அது விளைந்த பின்
1.கேன்சர் எப்படி விஷத்தன்மையான நோயாக ஆன பின் வேறு எந்தக் கடுமையான மருந்தைக் கொண்டும் அதை நீக்க முடிவதில்லையோ
2.இதைப் போன்று வைரஸ் சென்ற அந்தக் கிருமிகள் அதிகமாகி விட்டால் அதை மற்ற மருந்துகள் கொண்டு மாற்றி அமைக்க முடிவதில்லை

எதிர் நிலையான நிலைகள் வரும் பொழுது காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கப்படும் பொழுது இதை மாற்றுவதற்காக இரத்தத்தைப் பரிசோதித்து. இதனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையில் அதைக் கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆகி விடுகிறது.

இந்த உணர்வின் தன்மை சேர்த்துச் சேர்த்து இதற்கு இது ஒத்துக் கொள்கிறதா… இல்லையா…? இந்த உணர்வின் தன்மை எது…? என்ற நிலையும் இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்கு என்ன கொடுப்பது…? என்று பல மருந்துகளைக் கொடுத்துப் பரிசீலித்துப் பார்க்கின்றார்கள்.

அதற்கு அப்புறம் அது பலவீனமான பின் செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வைரஸின் வீரியத் தன்மை அதிகமாகிவிட்டால் அந்தக் காய்ச்சலையே போக்க முடியாது… எத்தனையோ பேர் அவதிப்படும் நிலைகளும் இருக்கின்றது.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்களால் தாக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை மனிதனுக்குள் வருகிறது…!

அது எப்படி…? என்றால் இன்று சென்னை அருகிலே அணு மின் நிலையத்தில் அணு உலைகளை அமைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே அருகிலே வீட்டிலே குடியிருக்கின்றார்கள்.

அங்கே இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றலாகி வந்தார்கள் என்றால்
1.அவர் உடலில் விளைந்த அந்தக் கதிரியக்கங்கள் அவர்கள் இறந்தால்
2.அந்த உடலிலிருந்த அந்த அணுக்கள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது.
3.அவர்கள் பழகிய நண்பர்கள் உடலில் எல்லாம் பரவுகின்றது.

இப்படி வரப்படும் பொழுது தான் இந்த அணுக்களின் தன்மை (வைரஸ்) வளர்ந்து விடுகின்றது.

ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டு வருகின்றது…? என்ற நிலையையும் குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

இதிலிருந்து மீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் வென்றது. அந்த உணர்வுகளை எல்லோரையும் பருகச் செய்…! என்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

திட்டியவர்களைப் பதிவு செய்த பின் அவர்களை நினைத்தால் கோபம் வருகின்றது. அன்றைக்கு ஒரு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் திட்டியவரை எண்ணினால் கணக்குத் தப்புத் தப்பாகத்தான் வரும்.

துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கேயும் தவறாகும். ஆக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம். நம்மை அறியாமல் இத்தகைய நிலைகள் நடக்கின்றது.

இதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி விட்டால் தீமை என்ற உணர்வை அறிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் அதை அடக்கும்.

ஆகவே…
1.ஒவ்வொரு நிமிடத்திலும் தீமையை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும்
2.அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கு தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஒரு சில பேர் சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஒரே தலைவலியாக இருக்கிறது என்று கூடச் சொல்லி விடுகின்றார்கள் ஆனால் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

Leave a Reply