
காயத்ரி ஜெபத்தின் வலு
1.விஷத்தின் இயக்கத்தால் தான் உலகமே இயங்குகிறது… என்ற நிலையும்
2.விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பங்கள் உருவாகிறது… என்றும்
3.விஷத்தின் உணர்வால்தான் மற்றதை இயக்குகிறது…! என்றும்
4.இதைத் தெளிவாக்குவதற்காக பிரகலாதன் கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.
அதாவது…
1.ஒரு கருவிலிருந்து பிறக்காதபடி…
2.உணர்வின் மோதலில் உருவானது தான் உணர்வின் இயக்கச் சக்தியே என்று
3.அதைப் பிரகலாதன் என்று காட்டி நமக்கு விளக்க உரையையும் கொடுக்கின்றார்கள்
இரண்யன்… என்னால்தான் நீ உருவானாய்…! என்று சொல்கிறான்.
ஒரு அணுவாக ஆனாலும் சரி… மற்ற எதனின் நிலைகள் ஆனாலும் சரி…
1.விஷத்தின் தன்மை இயக்கத்தால் தான்
2.சூரியனே சூழலும் சக்தி கொண்டு ஒளியின் தன்மை பெற்றது.
3.“என்னுடைய இயக்கம்தான் சூரியன்…” என்று இரண்யன் சொல்கின்றான்.
இதைப் போன்று விளக்கவுரைகளைக் கொடுத்து இதிலே பிரித்து மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று காவியக் கதைகளாகக் கொடுத்துள்ளார்கள்.
பிரகலாதன் கருவுற்றுப் பிறந்தவன் அல்ல… உணர்வின் மோதலில் உரு பெற்றது என்று அதைத் தெளிவாக சொல்கின்றார்கள்.
இரண்யாய நம என்று “என்னை நீ வணங்கு…” என்று இரண்யன் சொல்கின்றான். இல்லை… ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று தான் நான் சொல்வேன் என்று அவன் சொல்கிறான்.
ஹரி என்பது சூரியன். அவன் உலகைச் சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவன். அவன் தான் எனக்குக் கடவுள் என்ற நிலையில் ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று பிரகலாதன் சொல்கின்றான்.
இல்லை என்னால்தான் நீ உருவானாய்… இல்லை அவனால்தான் உருவானேன்… ஜீவ அணுவாக உருமாற்றும் தன்மை அங்கிருந்துதான் உரு பெற்றது என்று இப்படி விரிவுரைகளைக் காட்டப்படும் போது அவன் (ஹரி) எங்கே இருக்கிறான்…? என்று இரண்யன் கேட்கின்றான்.
உன்னிலும் இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று தெளிவாக்குகின்றான்.
அப்போது அதைத் தாக்க முயற்சிக்கிறான்.
அந்தத் தாக்குதலில் உள் நின்று இருக்கும் இந்த உயிர்… விஷ்ணு அவனிடம் வரம் கேட்கின்றான். எனக்கு நீரிலும் இறப்பில்லை நெருப்பிலும் இறப்பில்லை காற்றிலும் இறப்பில்லை எதிலுமே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் கேட்கின்றான்.
அவன் விஷ்ணுவிடம் வரம் கேட்டதனால் அந்த வரம் கொடுத்த நிலைப்படி அவனை ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகிறது.
கொடுத்த வரப்படி எல்லாம் ஆனாலும் வாசல்படி மீது அமர்ந்து மனித உடலுக்குள் தீமைகள் (விஷத் தன்மை) உட்புகாதபடி தடைப்படுத்தும் தத்துவமாக விஷ்ணு – நரசிம்ம அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.
ஏனென்றால்
1.நாம் நுகரும் உணர்வை எல்லாம் உடலுக்குள் அவனே (விஷ்ணு) சுழலச் செய்கின்றான்.
2.ஆனால் அருள் ஒளியின் தன்மை கொண்டு உள்ளே வராதபடி இந்த உணர்வின் சக்கரத்தை உள்ளே சுழலச் செய்யப்படும் பொழுது
3.அங்கே வலுப்பெறும் தன்மை வரும்போது இங்கே உள்ளே வராதபடி தீமைகளைப் பிளந்து விடுகின்றான்.
இந்த உண்மையைக் காட்டுவதற்காகக் காவியங்களைச் சீராகப் படைத்து மனிதன் அதை உணர்ந்து தீமை தன் உடலுக்குள் புகாதபடி எப்படித் தடுக்க வேண்டுமென்று தெளிவாக்கப்பட்டுள்ளது
ஆக… தீமைகளை எல்லாம் வென்றவன் யார்…? துருவ மகரிஷி. அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்கி எப்போது தீமை என்று வருகிறதோ அப்போது தடுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.
உதாரணமாக ஒரு வேதனையால் வாடுவோரைப் பார்த்து அவரின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகுந்து விடுகிறது. ஆனால் உட்புகாதபடி அங்கேயே அந்தத் தீமையை அழித்து விடவேண்டும்.
ஒரு நோயாளியைக் காணும் பொழுது அவரின் உணர்வை நுகர்ந்தறிந்தால் உடனே அது நமக்குள் அணுவாக மாறி விடுகின்றது. அது அணுவாக உருவாதபடி இங்கே தடைப்படுத்துதல் வேண்டும்.
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த உணர்வின் வலிமை கூடி “தீமை வராதபடி தடுக்கப்படுகின்றது…”
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தும் போது அது வலிமை பெற்றபின் “தீமைகளை ஈர்க்கும் சக்தியே குறைந்து விடுகின்றது… தீமைகளைப் பிளந்து விடுகிறது…”
நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதைத் தான் கடவுளின் அவதாரம் நரசிம்மா…! என்று காட்டுகின்றனர். மனிதனான பின்…
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரைத் தனக்குள் எடுத்து
2.அதை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியான அணுக்களாக மாற்றி
3.பிறவி இல்லா நிலைகள் அடையும் பண்பினை அங்கே தெளிவாக்கப்பட்டுள்ளது
ஆக நாராயணன் யார்…? நர நாராயணன் யார்…?
சூரியன் இந்த உலகம் முழுமையும் உருவாக்குகின்றது. நம் உயிர் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நரநாராயணன் ஆக இருந்து இயக்குகிறது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக கணங்களுக்கு அதிபதியாகக் கார்த்திகேயா என்று பெற்ற நம் ஆறாவது அறிவை முருகன் என்றும் அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்து தனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்றும் காட்டுகின்றார்கள்.
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணை நோக்கிப் பாய்ச்சி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.
இதைத்தான் காயத்ரி ஜெபம் என்று சொல்வார்கள்
1.வலுவான உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வினைத் தன் உடலுக்குள் சேர்த்து வலிமையைக் கூட்ட வேண்டும்
2.இதுதான் உண்மையான காயத்ரி ஜெபம்.
3.சூரியனைப் பார்த்து காயத்ரி மந்திரத்தைச் சொல்வதனால் பலனில்லை…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.