புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”
விஞ்ஞான உலகில் “நாகரீகம்…” என்ற போர்வையில் நாம் உடுத்தும் ஆடைகளிலும் சாயங்கள் என்ற பெயரில் விஷத் தன்மைகள் கலக்கப்பட்டு விட்டது. இன்று அத்தகைய ஆடைகளைத் தான் நாம் அணிகின்றோம்.
நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள விஷத் தன்மைகள்… அதே இனமான தன் சக்தியைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவில் கலக்கச் செய்துவிடுகிறது.
அதன் வழி ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டு நம் இரத்தநாளங்களில் விஷத் தன்மைகள் கூடிவிடுகின்றது.
ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இத்தகைய சாயங்கள் கலக்குவதனால் அதிலுள்ள விஷத்தினால்
1.கேன்சர் என்ற நோய் வருகிறது.
2.ஆஸ்த்மா என்ற நோய்கள் வருகிறது.
3.மனிதன் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது என்று கண்டு கொண்டனர்.
ஆகவே தீமையை உருவாக்கும் இத்தகைய சாயங்களை நீக்க வேண்டும்… எங்கள் நாட்டிலே இறக்குமதி செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினான்.
நம் நாட்டின் பண்பின் பிரகாரம் இன்றும் பழைய ஆலயங்களில் எல்லாம் சாயங்கள் (வர்ணம்) என்று பூசியிருப்பார்கள்.
1.இயற்கையில் உருவான பச்சிலைகளை எடுத்து
2.பல பல தீமைகளை அகற்றக்கூடிய அத்தகைய மூலிகைகளை
3.மற்றவைகளுடன் கலந்து மற்ற கலருடன் இணைக்கச் செய்யப்படும் போது
4.அந்த ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு… அதனின் உணர்வுகளை
5.ஆலயத்தில் உள்ள சுவர்களில் உள்ள காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்த பின்
6.அதிலிருந்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வெளி வரும்.
அந்த உணர்வுகள் காற்றிலே பட்ட பின் நீங்கள் அந்த ஆலயத்திற்குள் சென்ற பின் இருளை நீக்கும் அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் “இயற்கையில் விளைந்த தாவர இனங்களைச் சேர்த்தான் அன்றைய ஞானி…”
அன்று பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கருவிலே இருக்கப்படும் போது தாய் தந்தையர்கள் பல விஷத் தன்மை கொண்ட விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை தாங்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் போட்டு வைத்திருந்தனர்.
அந்த மணத்தை நுகர்ந்த பின் விஷப் பூச்சிகளோ மற்றவைகளோ அச்சத்தால் நகர்ந்து ஓடுகிறது. அகஸ்தியனின் தாய் தந்தையருக்கு ஒரு பாதுகாப்பாக அது அமைகிறது.
அவர்கள் தங்களைக் காத்திடும் நிலையாகச் செயல்படுத்திய தாவர இனத்தின் மணங்களை அந்தத் தாயின் கருவிலே வளர்ந்த அகஸ்தியனுக்குள்ளும் இது பெறப்படுகின்றது.
இதைப் போன்று தான் இயற்கையில் விளைந்த அத்தகைய தாவர இனங்களில் உள்ள
1.தீமைகளை அகற்றிடும் இப்படிப்பட்ட பச்சிலைகளை எடுத்துத் தான்
2.அன்று ஆலயங்களிலே வர்ணங்களாகக் கலந்து பூசுவதும்
3.அந்த வண்ணங்களை எடுத்து நமக்குள் நுகரப்படும் போது
4.தீமைகளை அகற்றிடும் ஒளிக்கதிர்களை தனக்குள் பாய்ச்சும் தன்மையாகக் கொண்டு வந்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.
எப்படி ஒரு தாவர இனம் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அந்த வித்துக்கள் விளைகின்றதோ… அதைப் போன்று தீமைகளை வென்றிடும் தாவர இனத்தின் சத்தை இங்கே நம்மை நுகர வைக்க சுவர்களிலும் சிலைகளிலும் வர்ணங்களாகத் தீட்டுகின்றனர்.
1.அந்த அலைகளைக் கவரும் தன்மையால்
2.இந்த ஆலயத்திற்குள் தீமை வராதபடி ரொம்பவும் நாசூக்காக அன்றைய ஞானிகள் செய்தனர்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மையின் தன்மைகளை மக்களுக்குக் கிடைக்க ஆலயங்களில் இப்படிச் செய்தனர்.
ஆலயங்களில் பார்த்தோமென்றால் வர்ணங்கள் எத்தனையோ இருக்கின்றது. நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.
