நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

 

எனது எண்ணத்தில் நான் அதீதமாக ஆன்மீக நிலைகள் பெற வேண்டும் என்று ஆசையை வைத்துக் கொள்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

அதை ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து விட்டால்… அந்த ஆசையில் அதைப் பெறுவேன் என்ற எண்ணம் கொண்டாலும் அந்த ஆசை ஒன்றேதான் தனக்குள் மிஞ்சுகின்றது.

ஆனால் அதை நான் பெறும் தன்மையை எதன் வழி…? என்ற நிலைகளை இழந்து விடுகின்றேன்

நான் எண்ணியபடி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அந்த சக்தியின் தன்மை ஒன்றேதான் நினைவில் இருக்கின்றதே தவிர அந்தச் சக்தியை எவ்வழியில் பெற முடியும்…? என்ற நிலைகளில்
1.எனது குருநாதர் காட்டிய நிலைகளை நான் இழந்துவிட்டால்
2.அதை நான் பெறுவது மிகவும் கடினம்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனிடமும் எத்தனையோ ஆசைகள் வருகின்றது எத்தனையோ நிலைகள் விளைகின்றது…. இந்த வாழ்க்கையில் ஆசைப்பட்டபடி தான் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அப்படி எண்ணினாலும் அதே சமயத்தில்
1.அவருடைய எண்ணத்திற்குள் அவரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சித்திரை…
2.அடுத்து எதிர்ப்பக்கம் என்ன வருகிறது…? என்று சிந்தனையற்ற நிலைகள் இருப்பார்கள்.

அது மறைத்திடும் பொழுது அதனின் நிலை இல்லாதபடி இவர் ஆசைப்பட்டபடி வாழ்க்கையில் நடக்காது அந்த நல்ல உணர்வுகளும் மறைந்து விடுகின்றது.

அதனைத்தான் “இந்தச் சித்திரையை” (இடைமறிக்கும் தீமைகளை) நீக்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

உதாரணமாக ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்போது வியாபாரத்தில் லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடனே செல்கின்றோம்.

ஆனால் அது எந்த காலப் பருவம்…? என்ற நிலைகளைத் தெரியாது “வியாபாரம் செய்ய வேண்டும்…” என்ற அந்த நோக்கம் ஒன்றுதான் நமக்குள் வருகின்றது

காலத்தை அறியாதபடி பொருள்களை வாங்கி வைத்து விட்டால் யாரும் வாங்கமாட்டார்கள். யாருமே வாங்கவில்லை… வியாபாரம் நடக்கவில்லை… என்றால் அங்கே அந்த உணர்வின் தன்மை
1.நாம் ஆசைப்பட்ட நிலைகளை இடைமறித்து அதை மறைத்துவிடுகிறது…
2.சித்திரையாக அது வந்து விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் அதைக் காக்கும் நிலையற்று நாம் போகும் பாதையையே அது தடைப்படுத்திடும் சக்தியாக வந்து விடுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் எத்தனையோ உணர்வுகள் சித்திரையாக நம்மை மறைத்து விடுகின்றது. இதைக் குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கம் கொண்ட நிலையில் வருவார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாக இருந்தாலும்
1.அவருடைய சந்தர்ப்பம் சூழ்நிலை அங்கிருக்கும் நிலைகளைத் தெளிவாக்கி
2.இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வினை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினால்
3.அருள் உணர்வுகளை அவர்களுக்குள் விளைவிக்கும் சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தினால்
4.உனக்குள் இருக்கும் நிலைகளை உன்னில் தெரிந்திடும் நிலைகள் வரும்.

ஆகவே… கேட்போர் உணர்வுகளில் அருள் ஞானத்தைப் பதிவு செய்து… அறியாத நிலைகள் கொண்டு அவர்கள் நல்ல உணர்வுகளை மறைத்திருக்கும் சித்திரையை நீக்கி…
1.அவர்கள் உணர்வின் தன்மை ஒளி பெறும் சக்தியாகவும்
2.கனியின் தன்மை பெறும் நிலையாகவும் நீ உருவாக்கு…! என்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

Leave a Reply