சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

 

இந்தப் பேரண்டத்திலே மற்ற அணுக்களாகி… துகள்கள் ஆகி… கோள்களாகி நட்சத்திரமாகி வளர்ச்சியில் சூரியனாகி அதன் வழிகளில் பிறந்த நிலையில் அனைத்தும் தெளிந்திடும் அணுவின் தன்மை பெற்று உலகையே சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றது தான் “சப்தரிஷி மண்டலம்…” என்பது.

விண்ணின் ஆற்றலைப் பெற்று பேரண்டத்திலிருந்து வரும் நஞ்சினைப் பிளந்துவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள் ஒளிச்சுடராகச் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். பிறவா நிலை என்ற நிலை அடைந்துள்ளார்கள்

தீமை எது…? நன்மை எது…? என்று உணர்ந்து அதிலே தீமைகளை அகற்றி நன்மைகளை உருவாக்கும் எண்ணங்களைத் தனக்குள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் வலுவைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் உருவாக்கிய நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி அழியா ஒளி சரீரம் பெற்றுப் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளை அகஸ்தியன் அடைந்தான்.

ஆவியாக இருப்பது அணுக்களாக வளர்ந்தாலும் அதிலே மனிதனான பின் உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகள் ஒளியின் சிகரமாகப் பெற்றபின்
1.அதனின்று வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும்
2.பேரண்டத்தில் பெரும் சக்தியாக மாற்றமடைந்து வருகின்றது.

இப்படித் தான் தன்னுடைய வளர்ச்சியில் வந்த மனிதனின் உயிர் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறியபின் உலகையே படைக்கும் சக்தியாக வருகின்றது.

ஆகையினால் இந்த மனித வாழ்க்கையில் நாம் சிந்தித்து… எதனை நமக்குள் சமைக்க வேண்டும்… பொங்கலாக்க வேண்டும்… எதை ஒளியாக மாற்ற வேண்டும்…? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதிலே மற்ற அனைத்தையுமே வளர்ச்சி அடையச் செய்கின்றதோ அதே போன்று மனிதனானவன் சூரியனைப் போன்ற நிலைகள் அடைந்து படைக்கும் திறனைப் பெற்றவன் தான்,

அதனை அறிந்து அதன் வழிகளில் தீமைகளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் வளர்த்து முழுமை அடைந்தவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கியதோ அதைப் போன்று முதல் மனிதனான அகஸ்தியன் துருவத்தின் நிலைகளை உணர்ந்து துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

அதிலிருந்து உமிழ்த்திய உணர்வுகளைப் பெற்று அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்ற மனிதர்கள் அனைவருமே ஒளிச் சரீரமாகி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனோ அது குறிப்பிட்ட காலத்தில் மடிந்துவிடும். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வின் சத்தைத் தனக்குள் தெளிவாக எடுத்துக் கொண்டால் அது என்றுமே மடிவதில்லை.
2.இந்தப் பேரண்டத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது.

அத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் தான் அகஸ்தியனும் மற்ற மகரிஷிகளும். நாமும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…! (ஞானகுரு).

Leave a Reply