மனிதன் பெற வேண்டியது மெய் ஞானத்தின் வளர்ச்சி தான் – ஈஸ்வரபட்டர்

மனிதன் பெற வேண்டியது மெய் ஞானத்தின் வளர்ச்சி தான் – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானி ஓர் பொருளை அறிந்து உருவாக்குகின்ற செயலில் அப்பொருளின் தேவை நிலையில் “சிக்கல்கள் ஏற்படும் போது…”
1.மாற்று நிலை என்ன செய்யலாம்…? என்ற அறிவின் ஞானத்தைக் கூட்டி
2.தன் தேவைக்குகந்த செயலைச் செயலாக்கிட
3.மீண்டும் வளர்ந்த புதுப்பிக்கும் அறிவு ஞானத்தைக் கொண்டு
4.வளர்த்துக் கொண்டே செல்கின்றான் – விஞ்ஞானத்தில்.

காட்சி:-
ஆதிகாலத்தில் இருந்த இரண்டு சக்கரமுடன் கூடிய வண்டியைப் போன்றும்… அவ்வண்டியே அடுத்த நிலையில் பெரிய சக்கரமாக அமையப் பெற்றதைப் போன்றும்… அச்சக்கரத்தில் டயர் வைத்து உருள்வதைப் போன்ற வண்டியும் தெரிகின்றது.
1.ஆரம்பக் காலத்தில் இருந்த வண்டியும் இன்று நூதனத்தில் அமைக்கப்படும் வண்டியும்
2.அதைப் போன்றே ஆரம்பக் காலத்தில் ஓடிய நான்கு சக்கரங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அதற்குப் பின் உருவான மோட்டார் வாகனத்தையும்
3.அதன் தொடரில் இன்றைய நூதன வசதியுடன் கூடிய மோட்டார் வாகனமும் காட்சியில் மாறி மாறித் தெரிகின்றன.

மெய் ஞான வழித் தொடரிலும்… மனித ஆத்மா தன் ஞானத்தைக் கூட்டி மனித ஆத்மாவின் உயர்வு நிலைக்கு வழிகாட்டிய பக்தி மார்க்க நெறி முறைகளை நம் அறிவின் ஞானத்தைக் கொண்டு உயர்த்திப் பார்ப்போமானால் “அதிலுள்ள உண்மை விளக்கங்களையும்… அதன் தொடரில் அறியக்கூடிய ஞானச் சித்துவையும்…” மனிதன் பெற முடியும்.

எண்ணத்தின் பகுத்தறியும் அறிவு நிலையினால் மனிதன் ஒன்றின் உருவகத்தில் பிறிதொன்றைச் சேர்த்து வாழ்க்கை வசதிக்கு அறிவின் ஞானச் செயலினால் முற்படுத்துகின்றான்.

காட்சி:-.
ஓர் ஓவியன் ஓவியம் வரைவதைப் போன்றும் பிறகு ஒரு பெண் தலையில் மல்லிகைப் புஷ்பத்தைச் செண்டாக்கி வைப்பதைப் போலவும் காட்சி தெரிகின்றது.

இதன் பொருள் யாது…?

போதனையில் புகட்டப்படும் பாட முறைக் கல்வியை… செயல் முறையில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் ஆரம்பக் காலம் தொட்டு வெறும் போதனையை ஒத்த செயலுடன் நின்றிருந்தால்… எந்த மனிதனின் அறிவுத் திறனும் வளர முடியாது.

ஓவியன் தன் எண்ணத்தைக் குவித்து ஓவியம் எழுதும் பொழுது…
1.தன் ஞானத்தில் அந்தந்த இடங்களுக்குகந்த பகுத்தறிவைக் கொண்டு வண்ணங்களைச் செலுத்தினால் தான்
2.அந்த ஓவியத்தின் அழகே பொலிவு பெறுகின்றது.

பெண்ணிற்குத் தலையில் பூச்சூடும் வழி நிலையே நம் முன்னோர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். அதில் பல ஜீவ சக்தியுடன் கூடிய உண்மை நிலைகள் அதில் பொருந்தியுள்ளன.

இயற்கைத் தாவரத்தில் மலருடன் தன் சக்தியை வெளிப்படுத்தும் தாவரமும்… பூவாகிக் காயாகிக் கனி தரும் தாவர இனமும் இப்படி பல உண்டு.

மணமுடன் கூடிய மல்லிகையின் அமில குணமானது பெண் இன ஜீவ சக்திக்கு ஈர்ப்பு சக்தியை தரவல்லது.

மல்லிகை மலரைத் தலையில் சூடும் பொழுது
1.மனித இயக்கத்தின் அறிவு ஞானத்தை வளர்க்கும்
2.கவன நரம்பின் சிறு மூளை இயக்கத்தில் ஏற்படும் உஷ்ன அலையை
3.மல்லிகையின் மணமுடன் கூடிய அமிலத் தன்மை… பின் தலையில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையில் மோதும் பொழுது
4.அதனுடைய குண நிலை – பெண்களின் அறிவின் ஞான வளர்ச்சியில் ஏற்படும் உயர்வு நிலைக்கு “வித்தாகின்றது…”

முன்னோர்கள் உணர்த்திய இத்தகைய வழியிலும் நாம் அறியாத பல உண்மைகள் உண்டு. ஆகவே எண்ணத்தின் உணர்வை அறியும் ஞானம் கொண்டு வளர்க்கும் ஜெப நிலையில்…
1.வளர்ந்தோரின் தொடருடன் செலுத்தி
2.மேல் நோக்கிய எண்ணமுடன்
3.அவர்களிடமிருந்து உயர்வு ஞானத்தை நம் ஆத்மாவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply