புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

 

உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!

ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது

சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்துவிட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.

மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.

அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.

அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.

ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.

“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.

1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.

Leave a Reply