வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்

வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரபப்டச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.

இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.

சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.

எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியவில்லையே…! என்று எண்ண வேண்டியதில்லை. அடிக்கடி இந்த அருள் உணர்வுகளைப் பெற்றுப் பாருங்கள்.
1.இரவெல்லாம் உங்கள் எண்ணங்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் மிதப்பதை காணலாம்
2.அதனுடன் உங்கள் உணர்வுகள் தொடர்பு கொண்டு உங்கள் உடலிலே வளர்ச்சி ஆவதைப் பார்க்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.

பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.

ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது

காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.

இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.

அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,

அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.

அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!

எமது அருளாசிகள்.

Leave a Reply