மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.

அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆகவே யாராவது திட்டினாலும், உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.

ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்த உணர்ச்சியைத் தூண்டும் நேரத்திலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.

அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

Leave a Reply