[su_heading size=”28″]31.03.2021 உபதேசம்[/su_heading]
இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்று இப்படி நான்கு ஐந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக அமைத்து விட்டது.
சூரியன் தனக்குள் கோள்களை வளர்த்து… நட்சத்திரங்களையும் வளர்த்து… தனித் தன்மையாக முதலில் எப்படி உருவானதோ அதைப் போல
1.இதிலே வளர்ச்சியடைந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
2.நம் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சமாக உருவாக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது.
குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து தனக்கென்று ஒரு குடும்பமாகிப் பிரிந்து செல்கிறார்கள் அல்லவா…!
அப்பொழுது அங்கிருக்கும் தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். கொள்ளுப் பேரன் என்றெல்லாம் வந்த பிற்பாடு யாரையாவது பார்க்க முடிகின்றதா…! அல்லது அப்படியே இருந்தாலும் வயதானவர்களை அவர்கள் கவனிப்பதில்லை.
இதே மாதிரித் தான் இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சூரியனாக மாறும் பொழுது இது உருவாகக் காரணமாக இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகின்றது.
உதாரணமாக நம் உடல் அழிந்த பின் பார்த்தோம் என்றால்… அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் அந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளி வந்துவிடுகின்றது.
1.ஆனால் நல்ல உடலாக இருக்கும் போது முதலில் வெறும் அணுக்களாகத் தான் இருந்தது
2.பின் உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது.
3.உயிரணுக்களாக ஆன பின் அதனதன் உணர்வுகளை தன் இரைகளைத் தேடி அதன் வளர்ச்சி பெறுகின்றது.
மனிதன் இறந்தால் அந்த உடலிலே உருவாகும் அந்த உயிரணுக்கள் மற்ற உடலிலே சேர்த்து அதை உணவாக எடுத்து வளர்க்கும் தன்மை வருகின்றது.
அதைப் போலத் தான்…
1.சூரியன் அழிந்தால் அந்த உணர்வுகள்
2.புதிதாக உருவாகும் பிரபஞ்சங்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.
சூரியன் அழிந்த பின் அந்த உணர்வின் சக்தி ஒரு புயல் போன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு கோளோ அல்லது மற்ற பாறையோ அதில் சிக்கினால் அதை மீண்டும் ஆவியாக மாற்றித் தனது நிலைகளுக்குள் பரப்பும்.
அப்பொழுது இந்தப் புதிய பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதைக் கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.
குருநாதர் அவர் கண்ட அகண்ட அண்டத்தின் உண்மைகளை எல்லாம்
1.உன்னால் நுகர முடியும்… பார்க்க முடியும்… என்று தான் எனக்குச் சொன்னார்.
2.அவர் சொன்ன வழியில் இதை எல்லாம் நான் (ஞானகுரு) பார்த்துத் தான் சொல்கிறேன்.
3.நீங்களும் பார்க்க முடியும்.
எண்ணத்தின் வலுக் கொண்டு இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவாக்கும் பொழுது இது வளர்ச்சி அடைய அடைய நமது பிரபஞ்சமும் நமது பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து எப்படி உணவு கிடைக்கிறது…? என்பதையும் நீங்கள் அறிய முடியும்.
ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் தான் இத்தனையும் பேசுகிறேன். இருந்தாலும் படித்தவர்கள் நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் எடுக்க முடியும்.
எனக்குக் குறித்து வைக்கக் கூட நேரமில்லை. குருநாதர் சொன்னதை மனதில் பதிய வைத்து அதைத்தான் உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன்.
நீங்கள் சொன்னதை இரண்டாவது தரம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்
1.வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவு இல்லை
2.குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் கொண்டு எனக்குள் அது பதிவான பின்
3.நினைவு கொண்டு எண்ணும் போது அந்த உணர்வை அறிய முடிகின்றது.
இந்த உணர்வின் தன்மை இப்பொழுது வெளிப்படும் பொழுது செவி வழி நீங்கள் கேட்ட பின் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது. கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.
இதை எல்லாம் நீங்கள் வளர்த்துக் கொண்டால் நான் எதையெல்லாம் பார்த்தேனோ…
1.அதையெல்லாம் நீங்களும் காட்சியாகக் காண முடியும்
2.தீமைகளை அகற்றும் அந்த வல்லமையும் நீங்கள் பெற முடியும்.
இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கினால் பிறவியில்லா நிலையையும் நீங்கள் அடைய முடியும்.
இன்றைய மருத்துவ முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை உணர்ந்து “அளவறிந்து மருந்து கொடுப்பது…” என்பது அனுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.
சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.
அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதி முறைகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு “அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி” நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் வருகிறது…” அவ்வாறு ஏற்படக் காரணம் என்ன…?
1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைபடுகிறது.
இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?
ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.
1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.
பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட… உயர்வு பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.
இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.
சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.
இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.
அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?
இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.
நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தகேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.
இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.
அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.
அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!
அவனா…? துரோகி… உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.
கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.
பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!
ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.
சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.
ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின் வெடித்து விடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.
நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.
ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.
சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்க வழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.
அதே போன்று தான் ஒருவர் நம்மிடம் வந்து… இந்த மாதிரி எல்லாம் உன்னைப் பற்றித் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன் நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?
ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.
ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
[su_heading size=”28″]30.03.2021 உபதேசம்[/su_heading]
கணஹோமம்
எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்…
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி…!
இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்…!
கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து… அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக… நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.
இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.
ஆகவே இருளைப் போக்கி… ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.
தனித்துத் தியானித்தாலும்… மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.
அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து… அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி… அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.
வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.
நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.
ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது…!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?
அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்… அவர் பாட்டுக்குப் போகின்றார்… கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்…! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.
இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.
அந்த ஆலயத்திற்குச் சென்று…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.
ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.
இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்…” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி… அடுத்தவன் கையில் சிக்கி… அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.
யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி… அல்லது அதைக் கேட்டாலும் சரி… அதன் நிலையிலே தான் சிக்க முடியும்… அதிலிருந்து தப்ப முடியாது.
நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல…!
ஆக… அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல…!
1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்… இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்… இது தான் தியானம் என்பது.
ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.
இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).
கணங்களுக்கு அதிபதி கணபதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.
அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.
சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.
விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.
இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே… பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!
ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).
அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயல்படும் தொடர்புகளை அறிந்து கொள்வதே “பிரம்மம்…!”
அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”
அவர் உயிரணுவின் செயல்… சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில்… வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.
வினையின் நாயகனே விநாயகர்…! என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.
அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே காரணம்…” என்று தெளிவாக உணர்த்தினார்.
மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.
நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”
கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.
1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே “விநாயகர்…” என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
அங்கிருந்து உங்களுக்கு வேண்டியவர் ஒருவர் வருகிறார். “ஒரே கஷ்டமாக இருக்கிறது…!” என்று சொன்னவுடனே காது கொடுத்து நீங்கள் உற்றுக் கேட்கிறீர்கள்.
அந்தக் கஷ்டமான உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிறது. வீட்டிற்குள் வந்தால் அந்த உணர்வு உங்களை அறியாமலே இயக்கும்.
வீட்டிற்குள் வந்து பேசும் பொழுது “அந்த வீட்டில் இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி இருக்கிறார்கள்… அவர்கள் தவறாகப் பேசுகிறார்கள்…!” என்று இந்த உணர்வுகள் எல்லாம் நீங்கள் உட்கார்ந்த இடங்களில் ஒலி அலைகளாகப் பதிவாகின்றது.
1.வீட்டிலுள்ள சுவர்.. தரை… எல்லாம் காந்தப் புலன் கொண்டது.
2.அது பதிவு செய்து (RECORD) வைத்துக் கொள்ளும்.
3.அந்த உணர்வு உண்டு… அறிவு உண்டு… நாம் பேசியதை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளும்.
வெளியிலே ஒரு வீட்டில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அடுத்து ஒன்றுமே செய்ய வேண்டாம்…
1.அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின்
2.அந்த வீட்டிற்குள் நுழைந்தால் நம்மை அறியாமலே இருள் சூழந்த மாதிரி இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வின் எதிரொலி எக்கோ (ECHO) வருகிறது. (கஷ்டம்…கஷ்டம்… என்று வெளிப்படுத்திய அந்த உணர்வின் இயக்கங்கள்)
அதனால் தான் அந்தக் காலத்தில் பழைய வீட்டை வாங்கினால் முதலில் என்ன செய்வார்கள்…?
தரையை உடைத்து ஒரு அடிக்கு மணலை எடுத்து விடுவார்கள். வேறு மணலை அதிலே போட்டு பருப்பையோ மற்ற நவதானியங்களையோ போட்டு அங்கே முளைக்க வைப்பார்கள். அது முளைத்த பின் இங்கே பதிவான உணர்வை எல்லாம் இழுத்துவிடும்.
அதற்கப்புறம்தான் தரையைச் சுத்தம் செய்வார்கள். அந்தக் காலத்தில் பழைய வீடு வாங்கினால் இப்படித்தான் செய்வார்கள்.
ஆனால் இப்பொழுது என்ன செய்கிறார்கள்…? வீட்டைக் காலி செய்தால் வெள்ளையோ அல்லது மற்ற வர்ணங்களையோ வீட்டிலே பூசி விட்டுக் குடி புகுந்து விடுகின்றார்கள்.
இன்றைக்கு வாஸ்து சாஸ்திரப்படி வாசலை இப்படி மாற்று… இந்தச் சுவரை இடித்து இப்படி மாற்று…! என்கிறார்கள்.
ஆனால் நாம் சுவாசிப்பது வாசு… தேவன்…! மூக்கு வழி கூடி புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் (தேவன்) படுகிறது
1.அதாவது “நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால்… வாசு தேவன் – அந்த நல்ல உணர்வைச் சுவாசிக்கின்றோம்.
2.அப்பொழுது தீமையை நீக்கக் கூடியதாக அந்தச் சக்தி கிடைக்கிறது.
ஆக வாசு தேவன்…! என்று இந்த வாசல்படியைச் சுத்தம் செய்யாதபடி கட்டிய வீட்டில் உள்ள வாசலை இடித்து இங்கேயும் அங்கேயும் மாற்றினால் அது எப்படிச் சரியாக வரும்…?
முதலில் வசதியாக நன்றாக இருந்து தானே வீட்டைக் கட்டுகின்றார்கள். அன்பாலே பண்பாலே பரிவாலே பாசத்தாலே மற்றவர்களைப் பார்க்கின்றார்கள். மற்றவர்கள் துன்பங்களும் துயரங்களும் வேதனையும் எதிர்பாராது இங்கே வந்துவிடுகின்றது.
1.அது எல்லாம் இந்த வாசல் (மூக்கு வழி உயிரிலே பட்டு) வழியாகத் தானே போகும்…
2.அப்பொழுது இந்த வாசல்படிக்கு முன்னால் வருவதைச் (நம் ஆன்மாவை) சுத்தம் செய்ய வேண்டுமல்லவா…!
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி இந்தப் பாதையைச் சுத்தம் செய்தால் தான் இந்த வாசல் நன்றாக இருக்கும்.
“வாஸ்து சாஸ்திரம்…” என்று எங்கிருந்தோ இங்கே வந்து நம்மை எல்லாம் பைத்தியக்காரர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவிலிருந்து வந்தது…! என்பார்கள். ஊரை ஏமாற்றிக் காசைச் சம்பாரிக்க இந்த வழியைக் கையாளுகிறார்கள்.
வாஸ்துபடிச் செய்தால் தான் நல்லது…! என்று உங்களிடம் இதை விதைத்து விடுவார். அதனால் உங்கள் வீட்டு வாசலை இப்படிக் கொஞ்சம் மாற்றி வையுங்கள்..! என்பார்.
அதை இப்படித் திசை திருப்பி விட்டு அடுத்து முக்கோண வடிவில் “ஒரு பிரமிட்” மாதிரி வைக்க வேண்டும் என்பார்கள். அந்தப் பிரமிட்டுக்கு என்ன செய்கிறார்கள்…?
அன்றைய காலங்களில் சவங்கள் (இறந்த உடல்) கெட்டுப் போகாமல் இருப்பதற்குப் பிரமிட்டை உருவாக்கினார்கள். ஏனென்றால் அப்படிக் கட்டினால் அந்த வெயிலின் கதிர்கள் உள்ளே வராது தடைப்படுத்தி ஒதுக்கி விடும்.
அப்பொழுது அங்கே குளிர்ச்சியாகும். மருந்தைப் போட்டு அந்த உடல்களைப் பதனப்படுத்துவார்கள். அந்த உடல்கள் அழுகிப் போகாமல் கருவாடு மாதிரிக் காய்ந்து போகும். அதற்காக வேண்டித்தான் பிரமிட்டைக் கட்டினார்கள்.
1.செத்தவர்களுக்கு வைத்த பிரமிட்டை இங்கே கொண்டு வந்து வைத்தால்
2.உங்களுக்கு நோய் வராது…! என்று சொல்லி நம்மை முட்டாளாக்குகின்றார்கள்
அவர்கள் படித்து விட்டுச் சம்பாரிக்க இந்த மாதிரி எத்தனையோ வழியைக் கையாளுகிறார்கள். மக்களுக்கு நல்ல வழி காட்டுவதில்லை.
வாஸ்து சாஸ்திரப்படி நீ இந்தக் கோவிலில் அபிஷேகத்தைச் செய்து உன் தோஷத்தை நீக்கலாம்… என்பார்கள். அவர்கள் சொன்னபடி பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தனாபிஷேகம் செய்தால் தோஷம் போய்விடுமா..?
ஆனால் ஞானிகளால் கட்டப்பட்ட நம்முடைய கோயில் எல்லாம் எப்பேர்ப்பட்ட கோவில்கள்..?
1.உன் உடலில் உள்ள நல்ல குணங்களை நீ எப்படிக் காக்க வேண்டும்…? என்று தான் கொடுத்தார்கள்
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் உயர்ந்த குணங்களை எடுத்து
3.நம் உயிரில் அதைப் படச் செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த அபிஷேகம் செய்ய வேண்டும்.
[su_heading size=”28″]29.03.2021 உபதேசம்[/su_heading]
அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்
1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.
அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.
1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது…!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல… நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.
ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.
அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.
ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.
நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி… தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.
1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்… நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்…!
உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,
அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.
நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது
ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை… என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது… என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்றே எண்ணுவார்கள்.
இப்படி எண்ணுவதற்கு மாறாக… பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.
பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.
அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.
உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.
1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே ஒவ்வொருவருக்கும் “கடமை என்ற விதியாகும்” – ஈஸ்வரபட்டர்
பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டவன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.
உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாக “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.
சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதத்தால்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.
அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.
உலக நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.
குரு என்றால் என்னப்பா…? குரு என்றாலே “ஒளி நிலை…” (வழி காட்டும் நிலை) என்பது பொருள்…!
1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.
அவ்வகையில் கூறும் குரு என்பவர்… எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.
கடமை விதி… சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் அது குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலக நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.
பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.
அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?
“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.
ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.
1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.
குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”
1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.
உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.
தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒருவர் மற்றொருவரை வேதனைப்படுத்துகிறார் என்று உற்றுப் பார்க்கின்றோம். “பாவிப்பயல்…! இப்படி வேதனைப்படுத்துகின்றானே…!” என்று எண்ணுகின்றோம்.
பிறரை வேதனைப்படுத்தும் போது அதை நாம் கூர்மையாகப் பார்க்கும் போது அந்த மனிதனை நம் கண்ணின் கரு விழி ருக்மணி படமாக்கி எலும்புக்குள் ஊனாகப் ப்திவாக்கி விடுகின்றது.
அதே சமயத்தில் அந்த மனித உடலில் இருந்து வேதனைப்படுத்தும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது. இதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இந்தக் காற்றிலே வைத்துக் கொள்கின்றது.
ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை (அதாவது அதனின் சத்தை) சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.
அதே சமயம் அந்தச் செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றும் போது சூரியனால் ஏற்கனவே கவரப்பட்ட அந்தச் சத்தினை இந்த வித்து தனக்குள் கவர்ந்து அதே செடியைப் போன்று விளைகின்றது.
இதைப் போன்று தான் வேதனைப்படும் உணர்வுகள் ஒரு மனிதனுக்குள் விளைந்து அது சொல்லாக வெளிப்படும் போது நாம் அவனைக் கூர்மையாக பார்த்து அவன் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நமக்குள்ளும் அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.வேதனைபடுபவனைப் பார்த்து நாம் அனுசரிப்போம். அவன் வேதனையால் அழுவான்.
2.அதை வைத்து வேதனைப்படுத்துபவனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்கிறாய்…?” என்று நாம் கேட்கத் தொடங்குகின்றோம்.
3.அப்பொழுது வேதனைப்படுத்தும் உணர்வும் வேதனைப்படும் உணர்வும் நம் உயிருக்குள் படுகிறது.
4.இந்த இரண்டு உணர்வும் கலந்த பின் இது பிரம்மமாக (சிருஷ்டி) உருவாகிறது.
வேதனைப்படுபவன் வேதனைப்படுத்துவனை எண்ணி அந்த வேதனை ஒன்றைத் தான் நினைக்கின்றான். அதனால் வேதனைப்படும் உணர்ச்சியை அவனுக்குள் தூண்டுகின்றது.
வேதனைப்படுத்துபவனோ வேதனைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றான். அந்த உணர்ச்சிகளை அவனுக்குள் தூண்டுகிறது.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்த இரண்டையும் நுகர்ந்து சிந்திக்கும் பொழுது நமக்குள் இது புது குணமாக… புது அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
வேதனயால் வாடுபவனை அங்கே காக்க எண்ணுகின்றோம். அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் உருவாகின்றது. அந்த நேரத்தில் நியாயத்தையும் பேசுவோம். ஆனால் நாம் வேதனைப்படவும் செய்வோம்.
1.வாழ்க்கையிலே நான் நியாயத்தைப் பேசுகிறேன்…! என்று சொல்லலாம்
2.அதே மாதிரி அயோக்கியத்தனம் செய்கின்றான்…! என்றும் சொல்லலாம்.
ஆக அயோக்கியததனம் செய்பவனையும் அதனால் வேதனைப்படுபவனையும் இந்த இரண்டையும் சேர்த்து நாம் நுகர்கின்றோம். இந்த இரண்டையும் சேர்த்துத் தான் நாம் நியாயத்தை வாதிக்கின்றோம். இந்த வலு நம்மிடம் வந்து விடுகிறது.
அடுத்து நாம் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது எப்படிப் பேசுவோம்…? நம்மை அறியாமல் இந்த இரண்டு உணர்வையுமே சொல்வோம்.
1.வேதனை உணர்வையும் சொல்வோம்…
2.வேதனைப்படுத்துவது நியாயமா…? என்று அதையும் அதிகமாகச் சொல்வோம்.
இரண்டும் இப்படிக் கலந்து வந்த பின் நம் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் அதற்கு உணவு தேவை.
உதாரணமாக ஒரு செடிக்குள் மற்ற செடியின் ஜீன்களை (GENE) இணைத்து விட்டால் இது இரண்டும் கலந்து எந்த ஜீன் அதிகமாக வளர்ந்துள்ளதோ அதற்கொப்ப அந்த மலரின் தன்மையும் அதிலே விளையும் காயின் சுவைகளும் மாறுகின்றது.
இதைப் போல உயிரினங்களில் எடுத்துக் கொண்டாலும் ஒரு உயிரினத்திலிருக்கும் அணுக்களின் சிசுக்களை எடுத்து இன்னொரு உயிரினத்தில் இணைக்கப்படும் போது இரண்டு சிசுக்களும் ஒன்றாகி
1.புதுவிதமான உடலின் அமைப்பைப் பெறுகின்றது….
2.குணத்தின் தன்மைகளும் மாறுகின்றது…!
விஞ்ஞான அறிவில் பார்க்கலாம்… கொடூர குணம் கொண்ட மிருகங்களைச் சாந்தமான மிருகமாக மாற்றுகின்றார்கள். பரிணாம வளர்ச்சியில் இப்படி வருகிறது…!
இதைப் போல நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அத்தனையும் நமக்குள் கலந்து…கலந்து கலவையாகிப் புதிய குணங்களாக அணுக்கள் உருவாகிறது. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாறாது காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் ஞானிகள் உணர்வை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்.
[su_heading size=”28″]28.03.2021 உபதேசம்[/su_heading]
வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி
தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவருமே கூட்டுத் தியானம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு பேர் சேர்ந்தாலும் கூட்டுத் தியானங்கள் அமைக்கலாம்.
1.ஏனென்றால் ஒருவர் கை தட்டுவதைக் காட்டிலும்
2.பலர் சேர்ந்து கை தட்டும் போது ஓசை அதிகரிக்கும்.
அதைப் போன்று தான் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் கணவன் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்று எல்லோரும் சேர்ந்து எண்ணுதல் வேண்டும்.
அதே போல் அருள் ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் தியானத்தில் கலந்து கொள்ளும்படி பழக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்…! என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சி… இந்த உணர்வுகளை கூட்டிக் கொண்டே வரவேண்டும்.
1.இதைப் போன்று எண்ணி எடுக்கும் இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
2.நமக்குள் தெளிந்த மனம் பெறச் செய்யும்…
3.அது நமக்குள் பேரருளாக மாறும்… பேரொளியாக மாறும்
இந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லப்படும்போது அவர் மனதைத் தெளிவாக்கி… அவர்களையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.
அந்தத் தெளிவான மனதையும் தெளிந்திடும் மனதையும் அங்கே உணர்த்தும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அந்த தெளிவான உணர்வும் தெளிந்த மனமும் உருவாகும்.
இதைப் போன்ற ஒரு பழக்கத்திற்கு வந்தால் மனிதன் என்ற முழுமையை நாம் அடையலாம். பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையலாம்.
வீட்டைப் புதிதாகக் கட்டினாலும் அதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம்.
இங்கே இந்தத் தியான மண்டபத்தையே அமைத்திருக்கிறோம் என்றாலும் சில காலம் அதைத் தூய்மைப்படுத்தவில்லை நெடி ஏறி விடும். பின் இங்கே வரும் போதே உள்ளுக்குள் நுழையும் போதே சங்கடம் வந்து விடும்.
அதே போல் தான் நம் வீட்டைச் சில காலம் திறந்து உபயோகப்படுத்தாதபடி விட்டு விட்டால் வீட்டிற்குள் நுழைந்தால் நெடி வரத் தான் செய்யும்.
அன்றாடம் நாம் குளிக்காமல் இருந்தால் உடம்பில் அரிப்பு வரும். நாம் அணிந்திருக்கும் துணியைத் துவைக்காமல் விட்டு விட்டால் அது இற்றுப் போகும். எல்லோருக்கும் இது தெரிந்தது தான்.
ஆகவே நம் ஆன்மாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா…?
1.அருள் ஞானிகளின் அருள் உணர்வைக் கொண்டு
2.நமது ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
3.நம் வாழ் நாள் முழுவதுமே தூய்மைப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
இப்படி எந்த அளவிற்கு நாம் அதைத் தூய்மைப் படுத்துகின்றோமோ அது அனைத்தும் நமக்குள் பேரருளாக மாற்றும். எதனையுமே நல் சொல்லாகவும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.
1.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
2.நம் சொல்லின் உணர்வுகள் நமக்கும் நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்.
பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் அது பேரொளி ஆகின்றது. நமக்குள் பேரொளியின் அணுக்களாக விளைஉஅத் தொடங்குகின்றது.
ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இந்த இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழச் செய்யுங்கள். அதற்குண்டான உணர்வுகளையும் உபாயங்களையும் கூட்டுங்கள்.
நீங்கள் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல… ஊருக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
1.ஒரு பத்து குடும்பங்கள் இது போன்று ஒன்றுபட்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்தால் அந்தத் தெருவே சுத்தமாகும்
2அங்கு வசிக்கக்கூடிய மக்களும் தெளிவு அடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாமல் வரும் பகைமை உணர்வையும் மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக இது மாறும்.
4.அந்த வீடோ தெருவோ ஒரு சொர்க்கலோகமாக மாறும்
5.மற்ற இடத்திலிருந்து அங்கே யார் வந்தாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் சக்தியாக இது வரும்.
ஆகவே தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வினை முதலில் உங்கள் குடும்பங்களில் இத்தககைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சிகளை நாம் ஒவொருவரும் அவசியம் கொண்டு வர வேண்டும்.
ஆத்மாவின் முழுமை எப்பொழுது புலப்படும்…? – ஈஸ்வரபட்டர்
ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.
உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.
எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள்
3.விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி” வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.
ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?
ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்று உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.
1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் “நான் என்பதே ஆத்மா” என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!
ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நம்முடைய மனித வாழ்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளை ஒவ்வொரு நாளும் சந்திக்க நேருகின்றது.
உதாரணமாக… நம்மை யாரும் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை…! ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏசிப் பேசுவார். நாம் அதைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு நுகர்ந்து கொண்டிருப்போம். அதன் உணர்வை நாம் நுகர்ந்த பின் நமக்குள் என்ன நடக்கிறது…?
1.அவர்களுக்குள் ஏசிப் பேசிய உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகிறது.
2.அதனின் உணர்வின் தன்மை நாம் வளர்க்க நேர்கின்றது.
3.“இப்படிப் பேசுகின்றான்… இப்படிப் பேசுகிறானே..!” என்று நாமும் உணர்ச்சி வசப்படுகின்றோம்.
பிறர் கெட வேண்டும் என்ற உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிகின்றார்கள்.
1.நாம் காது கொண்டு கேட்கின்றோம்.
2.மூக்கின் வழி சுவாசிக்கின்றோம்.
3.நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது.
4.உயிரிலே படும் அந்த உணர்ச்சிகள்தான் அப்பொழுது நம்மை ஆளுகின்றது.
எப்படிப் பேசுகிறான் பார்…! இவனை எல்லாம் நாம என்ன செய்ய வேண்டும் தெரியுமா…? என்கிற அந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது… நம்மை ஆளுகின்றது… நம் உடலாக்குகின்றது.
ஆகவே இத்தகைய தீய உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணினோம் என்றால்… அது நம் உடலிலே பெருகி விட்டால் என்ன செய்யும்..?
அதே தீமையின் செயலாகத் தான் நம் சொல்லும் வெளிப்படத் தொடங்கும்.
1.அடுத்து நம் சொல்லைக் கேட்போரிடத்திலும் நம்மை எதிரியாக்கும்.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள்ளேயே எதிரி ஆகும்.
3.நம்முடைய நல்ல அணுக்களை இது கொல்ல நேரும்.
ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் என்ன செய்கிறது…? தீமைகளின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது. நன்மையின் உணர்வை அது இழக்கச் செய்கின்றது.
அதே போல் நாம் ரோட்டில் சென்று கொண்டிருப்போம். நமக்கு முன்னாடி ஒருவன் போய்க் கொண்டிருப்பான். அவன் சிந்தனை எங்கோ இருக்கும்.
எதிர்த்து வரும் வண்டியைப் பார்க்காதபடி அதன் மேலே மோதப் போவான். போகிறான் பார்…! ரோட்டிலே எப்படிப் போகிறான்…? என்று அவன் செயலைக் கண்டு நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
அதை நுகர்ந்து அறியப் போகும் போது அதே உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது… நம்மை ஆளுகின்றது…! அவன் அருகிலே சென்று “ஏனப்பா கொஞ்சம் பார்த்துப் போகக் கூடாதா…” என்று நாம் சொல்ல நேரும்.
1.அப்பொழுது அங்கே எது நம்மை ஆட்சி புரிகின்றது…?
2.அவனுடைய சிந்தனையற்ற உணர்வு நம்மையும் இயக்கி ஆள்கிறது.
ஒரு குடும்பத்தில் சண்டையிடுகின்றனர். அதைக் கேட்டு நுகர்கின்றோம் நுகர்ந்த பின் என்ன சொல்கிறோம்…?
1.பக்கத்து வீட்டிலே பார்…!
2.எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்…! என்று சொல்லி விட்டு
3.அவர்கள் சண்டையிடும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம்.
இந்த உணர்வை எடுத்து அடுத்தவர்களுக்குச் சொல்லப்படும் போது அதை நமக்குள் வளர்த்து அதிகமாகப் பெருக்கிக் கொள்கின்றோம். இப்படி நமது வாழ்கையில் ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு நாளும் நமக்குள் உருவாக்குகின்றோம்.
ஆனால் நாம் எதை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோமா…?
[su_heading size=”28″]27.03.2021 உபதேசம்[/su_heading]
நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்
இந்தக் காற்று மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவிக் கொண்டே உள்ளது. அந்த அகஸ்தியன் பெற்ற இயற்கையின் உண்மைகளையும் அவன் நஞ்சினை நீக்கிய உணர்வுகளையும் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.
ஒரு இயந்திரத்தையோ உபகரணத்தையோ விஞ்ஞான அறிவால் காட்டப்படும் பொழுது… “இன்னது… இன்னது…” (FEATURES) என்று சொல்லி அதிலே முழுமையின் நிலைகள் காட்டி அதனைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவார்கள்.
அதைப் போன்று தான்
1.மெய் ஞானத்தின் நிலைகள் கொண்டு முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
2.அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒளியின் உணர்வாகப் பெற்றதையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.வாழ்க்கையில் தீமைகளும் கஷ்டங்களும் துயரங்களும் நுகரப்படும் பொழுது
2.அது உள் புகுந்து தீமையை உருவாக்கும் அணுக்களாக உருவாகிடாது
3.அருளொளி என்ற உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து அதை அடக்கி
4.தனக்குள் இணைந்த நிலைகள் கொண்டு செயல்படும் நல்ல சக்திகளாக அதை மாற்றி அமைத்தல் வேண்டும்.
உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள்…! கோபிப்பது நீங்களா…? வேதனைப்படுவது நீங்களா…?
இல்லை…!
நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது. ஆக ஆறாவது அறிவு கொண்ட நாம் அந்தத் தீமைகளை நீக்கும் வலிமையை எப்படிப் பெற வேண்டும் என்று சீராக்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக எண்ணைய் சம்பந்தப்பட்ட வகையில் (பிசுபிசுப்பு) கையிலோ மற்ற இடத்திலே அழுக்காகப் படிந்திருந்தால் வெறுமனே தண்ணீரை வைத்துக் கொண்டு அதைக் கழுவ முடியாது.
ஆனால் மண்ணெண்ணை வைத்து அழுத்தமான நிலைகள் கொண்டு தேய்த்தால் எளிதில் அதை நீக்கி விடலாம். அது தன்னுடன் இணைத்து இணைத்து அந்த அழுக்குகளைப் பிரித்துவிடும்.
இதைப் போலத் தான் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் கலந்து மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்றால் அது இரண்டறக் கலந்த தீமைகளைப் பிரித்து அகற்றிவிடும். ஆன்மா சுத்தமாகிவிடும்.
1.ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளவும்
2.பிறவியில்லா நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்ற இந்த ஆசையில்தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் உங்களை நீங்கள் காத்து உங்கள் அருகில் உள்ளவருக்கும் இந்த அருள் வழியினைச் சொல்லி அந்த ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குங்கள்.
நீங்கள் எடுக்கும் தியானத்தால் அந்தப் பொது விதிப்படி வெளி பரப்பப்பட்ட அருள் உணர்வுகளை அனைவரும் நுகர… எதிர்காலத்தில் தீமையை வென்றிடும் சக்தியாக எல்லோரையும் வளரச் செய்வது… “நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்…” என்று வேண்டிக் கொள்கின்றேன்.
உயிரே கடவுள்… நுகர்ந்ததை உருவாக்கும் போது உடலாக அதுவே சிவமாகின்றது. ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அது என்ற நிலையில் நாம் ஒவ்வொரு மனிதனையும் எண்ணி மதித்திடல் வேண்டும்.
பகைமை உணர்வு புகாதபடி தடுக்கச் செய்யும் இத்தகைய உயர்ந்த ஞானத்தை நாம் வெளிப்படுத்தும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாகி அந்த உடலான ஆலயம் பரிசுத்தமாக நம் உணர்வுகள் செயல்படும்.
அதே சமயத்தில் நமக்குள் தீமை புகாது தடுக்கவும் இது உதவும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். இருந்த இடத்திலிருந்தே நீங்கள் அருள் உணர்வைப் பெருக்க முடியும்.
ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணங்கள் வளர்ச்சியாகி…
1.டி.வி.யில் ஒளிபரப்பு செய்வது போன்று எல்லா இடத்திலும் இது பரவி
2.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்தியாக இது வளரும்.
ஆங்காங்கு உள்ளோர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து கூட்டமைப்பாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்.
1.இந்த உலகில் பரவி வரும் நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும்
2.மக்கள் மத்தியில் அருள் ஒளி பரவ வேண்டும் …இருளை அகற்றும் அருள் ஒளி பரவ வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நாம் பரப்ப வேண்டும்.
ஏகோபித்த நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை இப்படிப் பரப்பப்படும் பொழுது நாம் வாழும் பகுதிகளில் நஞ்சை வென்றிடும் அருள் சக்திகள் படரும். சிறுகச் சிறுக மற்றவரையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். காலம் நெருங்க நெருங்க…
1.உங்களைக் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர்த்து அதன் மூல்ம் உங்கள் சார்புடையோரைக் காத்திடவும்
2.அவர்கள்… அவர்களுடைய சார்புடையோரைக் காத்திடவும்
3.இந்த பூமியில் அசுர குணங்களை மாற்றி அருள் ஒளி என்ற உணர்வை பரப்பச் செய்திடவும்
4.அருள் ஒளி என்ற உணர்வினைப் பரவச் செய்து விஷத்தன்மை கொண்டு இயக்கும் உணர்வுகளை மாற்றிடவும்
5.உலகில் வாழும் மனிதருக்குள் பேரருள் என்ற உணர்வினை உருவாக்கிடவும்
6.இது உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரது உயிரான ஈசனை வேண்டுகின்றேன்
7.உங்கள் உடலுக்குள் அரும் பெரும் சக்தி பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).
குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை – ஈஸ்வரபட்டர்
மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொள்ளும் முயற்சியாகத்
1.தான் கண்டுணர்ந்த வழி வகைகளை… மெய் உணர்வுகளை
2.மறை பொருளாக்குபவர்களும் உண்டு.
ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில்
1.“விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி
2.அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது…
3.அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.
இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”
“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?
பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாக (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும்… இறந்தபின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.
உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்… அன்றைய “பாஷாண்டகம்..!”
4.அந்த எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.
பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”
நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.
1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!
ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
1.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
2.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்துணர்ந்து கொண்டால்
3.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை… “மிக மிகத் தெளிவு பெறும்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
சூரியன் எல்லாவற்றிற்கும் பொதுவானதே…! எது எது பூமியில் உருவாகியுள்ளதோ அதிலிருந்து வெளிப்படும் அனைத்தையும் அலைகளாக மாற்றி (பூமியில் உள்ள காற்று மண்டலத்தில்) எடுத்து வைத்துக் கொள்கிறது.
பின் பூமியிலே வளரும் வித்துக்களுக்குத் தான் கவர்ந்து வைத்திருக்கும் அலைகளை உணவாகக் கொடுத்து அதனின் இனத்தை வளர்த்துக் கொடுக்கும் திறன் பெற்றது சூரியன்.
இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்தும் கோள்களிலிருந்தும் வரும் உணர்வுகளில் கலந்துள்ள நஞ்சினை மாற்றி அவைகளை ஒளியாக மாற்றும் போது
1.எல்லாவற்றையும் அறிவுடன் வளர்த்திடும்
2.அதாவது அதனதன் உணர்வு கொண்டு அறிவுடன் வளர்த்திடும் நிலையைச் செய்கின்றது சூரியன்.
இதைப் போலத் தான் மனிதன் சுவாசிக்கும் உணர்வுகள் எவையோ அவை எல்லாம் அந்தந்த உணர்வின் வித்தாக மாறுகின்றது. ஒரு மனிதன் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அதுவே உடலுக்குள் “கோபம் என்ற ஒரு வித்தாகின்றது…!”
ஒரு மனிதன் தன் உடலில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவன் வெளிப்படுத்தும் அந்த வேதனையான சொல்லை நாம் கேட்கும் போது அது “வேதனை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது…!”
முதலில் சொன்ன மாதிரி சூரியன் எப்படி ஒன்றைக் கலவையாகி வித்தின் தன்மை அடைந்து பூமியில் செடியாக முளைத்த பின்
1.அந்தச் செடியிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வினைத் தனக்குள் அலைகளாக எடுத்து
2.மீண்டும் அதே செடியில் விளைந்த வித்துக்கு அதை உணவாக எப்படிக் கொடுக்கின்றதோ
3.இதை போலத் தான் நம் உயிரும் மற்ற மனிதன் உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நமக்குள் வித்தாக மாற்றிய பின்
4.அதற்கு – அந்தந்த உணர்வுகள் உந்தப்படும் போது (கோபம் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி)
5.நம் உயிர் காற்றிலிருந்து அதே இனமான அலைகளைச் சுவாசிக்கச் செய்து
6.நம் இரத்த நாளங்களில் வழியே உடலுக்குள் இருக்கும் அந்த வித்துக்களை (அணுக்களை) வளர்க்கச் செய்கின்றது.
உதாரணமாக கோபமான உணர்ச்சிகளையோ வேதனைப்படும் உணர்வுகளையோ நாம் நுகரப்படும் போது அந்தந்த உணர்ச்சிகள் கொண்டு தான் நாம் சொல்லும் வருகிறது… செயலையும் செயல்படுத்தச் செய்கின்றது.
அப்போது வேதனைப்படும் உணர்வுகள் அதிகரித்து அந்த அணுக்களைப் பெருக்கப்படும் போது நமது உடலுக்குள் இருக்கும் நல்ல உறுப்புகளை மாற்றி விடுகின்றது… நோயாக உருவாகின்றது.
இதனால் மனிதன் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் சுவையாக உருவாகும் உணர்வும் மறைந்து விடுகின்றது. பின் மனிதன் அல்லாத நிலையையே உருவாக்கி விடுகின்றது.
சூரியன் எப்படித் தனக்குள் மோதும் விஷத்தை நீக்குகின்றதோ… அதனதன் கவர்ந்து கொண்ட உணர்வு கொண்டு அது இயங்குகின்றதோ… அதைப் போல நம் உடல் இயங்கினாலும் மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வரும் தீமையை நீக்கிடல் வேண்டும்.
நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இவ்வாறு நமக்குள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வு பெறும் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
[su_heading size=”28″]26.03.2021 உபதேசம்[/su_heading]
நாம் எண்ணியபடி நடப்பதும் நாம் எண்ணாமலே நடப்பதும் எதனின் தொடர் கொண்டு செயல்படுகிறது…? ஈஸ்வரபட்டர்
1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட “எழுத்தில் வடிக்கும் ஆசானும்…”
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போனது…?
கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைத்து விட்டான் இன்றைய மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?
எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலக நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்குத் தான் சென்று விட்டது இன்றைய “அறிவு…”
எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால் ஆத்மாவா…. நான் என்பது…?
1.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
2.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.
ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.
சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?
இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?
சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?
எண்ணத்தின் அலையே சுவாசமாக… சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி… என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.
சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான்.
“நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி அந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”
இப்பொழுது நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?
கை வலி… கால் வலி… மூட்டு வலி… தலை வலி… மேல் வலி… இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்
நாம் கோபமோ ஆத்திரமோ படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த வேதனையான நிலைகளில் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கடினமான ஒரு பொருளை அந்த வேதனையுடன் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அப்பொழுது சுவாசிக்கும் இந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் பாய்ந்தவுடன்
2.இந்த உடலை மடக்கிய நிலைகள் கொண்டு பிராணவாயு செல்லும் பொழுது இங்கே தேங்கிச் செல்லும்.
மூட்டிற்கு மூட்டு அது தேங்கிச் செல்லும் பொழுது அந்த மூட்டினுடைய நிலைகளில் அவயங்கள் வேலை செய்யும் பொழுது, அந்த வேதனையான நிலைகள் வந்தவுடன் அந்த வேதனையான விஷமான உணர்வுகள் அங்கங்கே தேங்கிவிடும்.
1.அது சுவாசத்திற்குள் சென்று கரைக்கும் நிலையை இழந்து
2.அது ஓடிச் சென்று வெளியிலே வரும் முன்பாகவே – நாம் சுவாசிப்பது உள் செல்வதனாலே,
3.இது ஒவ்வொரு இடத்திலும் தேங்கிக் கொள்ளும்.
இதனால்தான் சிலருக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது.
சிலருக்குத் தொழில் நிலைகளில் வேலைகள் செய்யும் சந்தர்ப்பத்தில் எல்லம் இந்த வேதனையை எடுத்தார்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி மூட்டுகளில் வலி வரும்.
நமது பூமி சுழலும் பொழுது விண்வெளிகளிலே இருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது. இதைப் போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்டு எண்ணங்களாக இயங்குகின்றது.
அப்படி இயக்கினாலும் அந்த வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து அது நம் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த வேளைகளில் கூர்ந்து செயல்படும் பொழுது கவன நிலைகளில் எடுக்கப்படும் பொழுது கண் குத்தல்… மண்டைக் குத்தல்… போன்ற நிலைகள் வரும்.
அதைப் போன்று சுவாசத்தினுடைய நிலைகள் சிந்தனையினுடைய நிலைகளை அதிகமாகச் சேர்த்தால் மூக்கு துவாரத்திற்குள் சில நிலைகள் வரும்.
அடிக்கடி சிந்தனை செய்து கொண்டு குனிந்திருந்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தால் மடக்கிய நிலைகள் கொண்டு பிடரியில் பிடரி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
சில நேரங்களில்… ஒரு புறம் சாய்ந்திருந்து இடைஞ்சலான நிலைகளில் நாம் இருந்தால் நாம் சுவாசிக்கும் பிராணவாயு செல்லும் பொழுது சப்பைகள் மூட்டுகளிலே போய் இந்த வேதனையைக் கொடுக்கும். சாதாரணமாக இதை நிவர்த்தி பண்ண வேண்டுமென்றால், வைத்தியர்களால் கொஞ்சம் சிரமம்தான்.
ஏனென்றால்…
1.நரம்பியல்களிலே இருக்கக்கூடிய நிலைகள்
2.எலும்புகளிலே ஒட்டியிருக்கக் கூடிய காந்தத்தினுடைய சக்தி
3.நாம் எடுக்கக்கூடிய இந்த அமிலத்தின் தன்மை (ACID POWER) நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது
4.அதே சமயத்தில் நாம் பிராண வாயுக்களை எடுத்து அதன் ஓரத்திலே இயக்கித்தான்
5.அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களை இயக்கச் செய்து நரம்பியலின் தன்மைகளை இயக்க வேண்டும்.
அப்பொழுது அந்த நரம்புகளில் விஷத் தன்மைகள் பாய்ந்து விட்டால் அதே இடத்தில் அது துடித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் அது வேலை செய்யும். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
சில பேர் கவலைப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தால் வேதனையை அதிகமாக உண்டாக்கும். கை நிமிர்த்துவதே கஷ்டம்… பிடரியில் அதிகம் வலி ஏற்படும்.
எந்த அளவிற்குக் குனிந்து கொண்டிருந்தார்களோ அதற்குத்தகுந்த மாதிரி விஷங்கள் படர்ந்திருக்கும். நிமிர்ந்தவுடன் வலி அதிகமாக இருக்கும்.
வேதனையும் கவலையும் கூடிய நிலையில் நாம் சுவாசித்து அந்த பிராண வாயுக்கள் செல்லும் பொழுது…
1.அதற்குள் நாம் சுவாசித்த உணர்வின் விஷத்தன்மைகள்
2.நம் உடலில் எல்லா இடங்களுக்கும் போய்,
3.எல்லா இடத்திலும் பாய்ச்சி அவற்றை இயங்கச் செய்யும்.
இதையெல்லாம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதை நாம் வெல்ல வேண்டுமென்றால் நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று அழுத்தமாக நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,
2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை
3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.
ஆத்ம சுத்தி செய்துவிட்டு நமக்கு எங்கெல்லாம் நோவு இருக்கின்றதோ அந்த இடத்தில் “கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி” மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் படரச் செய்யுங்கள்.
அந்த வேதனையை உண்டாக்கும் உணர்வின் சக்திகள் மறைந்து எங்கள் உடலிலே மகரிஷிகளின் அருள் ஒளி வளர வேண்டும் என்று சிறிது நேரம் நீங்கள் தியானித்தால் போதும்.
உங்கள் உணர்வின் சக்தியைக் கொண்டு நீங்கள் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று உடலில் நோவு வரும் இடங்களில் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த நோவின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தி அந்த இடத்திலே அதைக் கரைக்கும்.
இவ்வாறு தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து வந்தால்… வாத நோயோ ஆஸ்த்மாவோ குஷ்ட ரோகமோ கேன்சர் நோயோ இருந்தாலும் அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
1.எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ
2,எதை எல்லாம் நாம் பார்கின்றோமோ
3.எதை எல்லாம் நாம் கேட்கின்றோமோ
4.எதை எல்லாம் நாம் நுகர்கின்றோமோ
5.அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிக் கருவாக உருவாக்கி
6.”ம்…” என்று நம் உடலாக இணைத்து விடுகின்றது.
அதற்குப் பெயர் தான் ஓ…ம் நமச்சிவாய….! என்பது.
இப்படி ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய…! என்று நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தகைய குணங்களை எல்லாம் நுகர்கின்றோமோ அது அனைத்தையும் நம் உடலாக மாற்றுகின்றது.
அதே சமயம் நாம் எண்ணிய குணங்கள்… அந்த உணர்வுகள் எதுவோ “அதே குணங்கள் தான்” நம்மை ஆளுகின்றது.
1.கோபம் என்ற உணர்வை நுகர்ந்தால்… கோபத்தின் நிலை கொண்டு நம்மை ஆளுகின்றது.
2.வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்.. அந்த வேதனை என்ற உணர்வை வைத்து நம் உயிர் நம்மை ஆளுகின்றது.
3.வெறுப்பு என்ற உணர்வை நாம் நுகர்ந்தால்… வெறுப்பு என்ற உணர்ச்சிகளை ஊட்டி வெறுக்கும் உணர்வுடன் நம்மை ஆளுகின்றது.
ஆகவே நமது வாழ்கையில் எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் நமது உயிர் நாம் எண்ணிய உணர்வு கொண்டு தான் நம்மை ஆளுகின்றதே தவிர தனித்து “எவரும் நமக்குள் ஒன்றும் செய்வதற்கு இல்லை…!”
ஒருவன் என்னைத் திட்டினான்… என்னைத் திட்டினான்…! என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தத் திட்டிய உணர்வுகள்…
1.நாம் எப்படிக் கெட்டு போக வேண்டும் என்று அவன் எண்ணினானோ
2.அந்த உணர்வு தான் நம்மை ஆண்டு நமக்குள் அந்த உணர்வின் தன்மை தான் வரும்.
1.ஆனால் திட்டிய உணர்வு நமக்குள் புகாது தடுத்தால்
2.அருள் ஒளியை நாம் நமக்குள் நுகர்ந்து எடுத்தால்
3.அந்த இருளை அகற்றும் அருள் ஞானம் நம்மை ஆளத் தொடங்கும்…!
[su_heading size=”28″]25.03.2021 உபதேசம்[/su_heading]
ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
உதாரணமாக ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்றால் அதை ஒரு மனிதன் கண்ணுற்றுப் பார்த்த பின் நண்பரிடத்தில் இதைச் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த மாதிரி மோதி விபத்தாகி விட்டது.. அடிபட்டு உடல்கள் சிதைந்து விட்டது…! என்று அவன் பார்த்த உணர்வுகளைச் சொல்லப்படும்போது அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் இது நம் ஆன்மாவாகிறது.
இரவு புலனடங்கித் தூங்கும் பொழுது…
1.நாம் எங்கேயோ சென்ற மாதிரியும்
2.அங்கே விபத்தான மாதிரியும்
3.யாரோ துரத்துவது மாதிரியும் போன்று கனவுகளாக வருகின்றது.
இது எல்லாம் நமக்குள் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் நுண்ணிய உணர்வுகளாக இயக்கி நாம் புலனடங்கித் தூங்கினாலும் அந்த உணர்ச்சிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றது… அறியச் செய்கிறது…!
ஆனால் விடிந்தவுடன் இதை எல்லாம் நினைவுக்கு வரும் போது கலக்கம் வருகின்றது. காரணம் நாம் இரவிலே நுகர்ந்த உணர்வுகள் அது பதிந்து தீமையான அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.
நம்மை அறியாது வரும் கனவுகள் எல்லாம் இப்படித்தான் இயக்குகிறது. ஒரு சிலருக்கு இதனால் சில தீமையின் விளைவுகளும் ஏற்படக் காரணமாகின்றது.
இது போன்ற உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிய வேண்டும்… இந்த மனித உடலில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றோம்.
ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்…! என்று ஏங்கித் தியானித்தால் இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி நஞ்சின் தன்மைகளை மாற்றிடும் நிலை வருகின்றது.
அதிகாலை துருவ தியானத்தின் மூலம் தொடர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
கடவுளின் அவதாரம் வராகன் என்று காட்டியதில்…
1.நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினை நுகர்ந்து மனிதனாக எப்படி உருவாக்கியதோ
2.மனிதனான பின் நச்சுத் தன்மைகளை எல்லாம் நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிய
3.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்த்து
4.எதிர்காலத்தில் வரும் நச்சுத்தன்மையை நீக்கிடும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.
திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால் உங்கள் வாழ்க்கையில் இருளினை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.
உங்கள் செவிகளில் இப்பொழுது பதிந்தாலும் ரேடியோ டி.வி. அலைகள் போன்று இந்த அருள் உணர்வுகள் பரவுகின்றது.
உங்கள் நண்பரிடத்தில் சொன்னால் அவருக்குள்ளும் இது பதிவாகிறது. அவரும் சிந்தித்து அந்த உணர்வினை நுகர்ந்து வரும் பகைமை உணர்வினை வளராது தடுக்க இது உதவும்.
அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.
தன் உயிராத்மாவுடன் உரையாடுவதே உண்மையான மௌனம் – ஈஸ்வரபட்டர்
யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனமான நிலை கொண்டே அருள் சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாகத் தன் உயிராத்மாவை எண்ணி…
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெறத் தான் “மௌனம்…”
மௌனம் என்றால் என்னப்பா…?
1.ஆத்மாவை எண்ணியே.. சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால்… பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல…!
கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெறும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏட்டறிவின் வழி கற்றவர் அன்றி… படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.
கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.
அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக…
1.அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து
2.ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி
3.அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.
உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின்… தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?
சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.
1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.
ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தன்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?
ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில்
1.ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில்
2.உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.
மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா… என்ற சுவாசத்தின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ணி ஏங்கிச் சுவாசிக்கும் பொழுது உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு நம் உடலில் உள்ள காந்த செல்களை மட்டும் இயக்கும். “கரண்ட்டை…” அதிகமாக உண்டாக்கும்.
1.“ஓ…ம்” என்ற உணர்வின் தன்மை கொண்டு அந்த மெய்ஞானிகள் எதை எடுத்துக் கொண்டார்களோ,
2.அந்த உணர்வின் அலையை உங்களுக்குள் வித்தாகப் பதியச் செய்யும் உணர்வைத் தூண்டி
3.ஞான வித்தாக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
அதே நினைவுடன்… ஓ…ம் என்று நீங்கள் சொல்கின்ற பொழுது…
1.அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகள் பெருகி
2.உடலுக்குள் காந்தத்தை அதிகமான நிலைகளில் பிடிக்கச் செய்து
3.இந்த அழுத்தத்தின் நிலை கொண்டு எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் ஆவியாக்கி
4.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும்… இது குருவின் பலம்.
இதைத்தான் ஒவ்வொரு ஞானியின் நிலைகளையும் காட்டி அவர்கள் எந்த எண்ணத்துடன் எந்த உணர்வுடன் எவ்வாறு விண் சென்றார்கள்…? என்ற நிலையை உணர்வதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காட்டிற்குள் போகச் சொன்னார்.
அப்படி யாம் பெற்ற உணர்வின் அலைகளைத் தான் இங்கே உபதேச உணர்வாகக் கொடுக்கின்றோம்.
[su_heading size=”28″]24.03.2021 உபதேசம்[/su_heading]
உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் – ஞானகுரு
இன்று பார்க்கின்றோம்… விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரைத் தயார் செய்து கொண்ட பின் பூமியிலிருந்து வரும் எதிர் அலைகள் அந்த எக்கோ (ECHO) வருவதை அளந்தறிகின்றனர்.
கம்ப்யூட்டர் சாதனத்தில் நாடாக்களில் இந்த விஷமான உணர்வின் (கெமிக்கல்) ஓலி அலைகளைப் பதிவாக்கி வைத்து… அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகள் (PROBE) பூமியை உற்று நோக்கிக் காட்டப்படும் பொழுது… பூமிக்குள் இருக்கும் நிலைகளைக் காட்டுகின்றது.
அதாவது…
1.இவர்கள் பாய்ச்சும் உணர்வின் தன்மை அந்த எலக்ட்ரிக்கின் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
2.அதன் நிலைகளில் அந்த மணத்தையும் உணர்ச்சியின் வேகங்களையும் கண்டறிந்து நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த மிருகங்களின் உடல்கள் மண்ணுடன் மண்ணாக மறைந்திருக்கும் நிலைகளையும்… பாறைகளாகக் கூட ஆன நிலைகளையும் கண்டறிந்து… அங்கே தேடிச் சென்று குறைந்தது 100 அடிக்குக் கீழ் அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தையே கண்டறிகின்றனர்.
உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் இதை கம்ப்யூட்டரில் இணைத்து அதில் வரும் அலைகளை எடுத்து
1.அதனுடைய தசைகளின் அமைப்பையும் அதன் உணர்ச்சியின் செயலாக்கங்களையும்
2.வாழும் போது அந்த மிருகம் எதை எல்லாம் உணவாக உட்கொண்டது என்றும்
3.உணர்வின் அதிர்வுகளைக் கண்டு அந்த மிருகத்தின் உருவத்தையே கம்ப்யூட்டர் காட்டுகின்றது.
4.விஞ்ஞான உலகில் இதைப் பார்க்கின்றோம்… விஞ்ஞானம் இன்று அதை நிரூபிக்கின்றது.
முந்தைய காலங்களில் எல்லாம் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கைரேகை பட்டால் அதை வைத்துத்தான் பார்ப்பார்கள். ஓரே கைரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு ஒத்துப் பார்த்து “இவன் தான்…” என்று அது கண்டுணர்ந்தார்.
இப்பொழுது அதுவெல்லாம் இல்லை…! எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஓரு கைரேகை பட்டால் அவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது என்று அதை வைத்துக் கம்ப்யூட்டரில் அந்த அதிர்வினைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர்.
1.அப்பொழுது இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் மோதப்படும் போது
2.அந்த மனிதன் எப்படிப்பட்ட ரூபம் உள்ளவன்…?
3.அவனுடைய குணங்கள் என்ன…? எப்படி இருக்கின்றான்..? என்று அவனின் ரூபத்தையே காட்டுகின்றது கம்ப்யூட்டர்.
இப்படி எல்லாம் நுண்ணிய நிலையில் விஞ்ஞான அறிவு இன்று காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம்…? என்றால் இன்னும் அறியாமையில் தான் வாழுகின்றோம்…!
1.மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வு தான் வருகின்றதே தவிர
2.மனிதனைக் காக்க வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இம்மியளவும் வரவில்லை…
3.இயந்திரத்தின் துணை கொண்டு எல்லாமே செயல்பட்டாலும் அந்த இயந்திரம் கூட ஒன்றைக் கட்டுப்படுத்துகின்றது (CONTROL)
4.ஆனால் மனிதன் தன் மனதைக் கட்டுப்பபடுத்த முடியாதபடி
5.பிறரின் உணர்ச்சியின் தன்மை கொண்டு தவறுகள் செய்வது… கொலைகள் செய்வது… தன் இச்சைக்குச் செயல்படுத்துவது
6.தான் இன்பத்தைப் பெறுவதற்காக மற்றவருக்குத் துன்பத்தை ஊட்டுவது என்று
7.இது போன்ற நிலையில்தான் இந்த உலகம் இருக்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளுவதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).
ஏனென்றால் யாம் சொல்வது சாதாரணமானது அல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால் அது உங்களைத் தெளிவுபடுத்தும் சக்தியாக வரும்.
உங்கள் உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கம் கொண்டது. அதிலே இந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கப்படும் போது
1.வாழ்க்கையில் எதிர்ப்படும் உணர்வுகளில்
2.இது பிழை கொண்டது… இது தேவையற்றது…! என்று அதை நீக்கி
3.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்
உங்கள் கவனத்தைத் திருப்பாது உற்று நோக்கி இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.
காயகல்பம் பற்றிய சூட்சமங்கள் – ஈஸ்வரபட்டர்
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.
ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளைத் தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.
அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.
வானியல்… புவியியல்… உயிரியல்… என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.
அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது உயிரியல் தத்துவமாக அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.
1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் மாற்றமே காணப்படுகின்றது.
காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…!
1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………
இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.
அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.
1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் – “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே…! (திருமூலர்)
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி இங்கே உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.
1.அப்படி ஒன்றப்படும்போது உயிரான கண் அகக்கண் ஆகின்றது.
2.நம்முடய கண் புறக்கண் ஆகின்றது.
3.புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு
4.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுதுதான்
5.சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால், சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.
நம் உடலான சிவத்திற்குள் உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில் புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
1.உள் நினைவில் கண்களை மூடி
2.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று செய்வதே
3.கண்ணன் காட்டிய திருட்டு வழி.
கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்…”
அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்யப்படும்போது அது வளர்ச்சியாகி விளையும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை – ஞானிகளின் அருள் சக்தி
4.உள் நின்று வெளி வருவதை.. நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.
ஆனால் பொதுவாக நாம் பிறருக்கு உதவி செய்தாலும் அவருடைய துயரமான உணர்வுகளை எண்ணி நம் உடலுக்குள் சேர்க்கும் முன் அது நம் ஆன்மாவாக… மனமாக மாறுகின்றது.
இப்படி அது மடி மீது ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்” அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும்” என்று கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்.
அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.
1.நாராயணன் என்பது சூரியன்
2.நர நாராயணன் என்பது உயிர்
3.பேரண்டத்தின் பெரு நிலைகள் நமக்குள் (பிண்டத்திற்குள்) இருந்தாலும்
4.உணர்வின் எண்ணங்களாக இயக்கி நம்மை ஆண்டு கொண்டிருப்பது நரநாராயணன்.
நமக்குள் இருக்கும் சர்வத்தையும்… விண்ணில் பிறந்த நிலையும்… ஜீவ அணுக்களாக உருவாக்கி நம்மை உருப்பெறச் செய்து… அதனின் உணர்வின் நிலையாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும்… நர நாராயணான உயிர் தான்.
ஆகவே உயிரான அவன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது அமர்த்திய இரண்யனைப் பிளந்தான்…! என்று எடுத்துரைக்கப்பட்டது.
[su_heading size=”28″]23.03.2021 உபதேசம்[/su_heading]
“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்
மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.
மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.
அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?
அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.
மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழி உண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். ஆனால் சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.
மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.
ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.
ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலக ஆசையின் எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.
1.அசை நூல் கொண்டே உரையும்… உரை நடையும்… மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
1.செருக்கின் தொடரில் எழும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
2.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?
மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”
ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும் நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?
அதற்கு எது முக்கியம்..?
நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை. ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.
கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொள்ளும்.
ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடாத…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடும் வழியாக்கிக் கொண்டதே “வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்…”
1.செவிக்கு உணவு… வயிற்றுக்கு உணவு… என்பது போன்றே
2.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
3.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.
கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.
ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!
பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.
வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கினால் தான் தியானத்தின் மூலம் சக்தியை நீங்கள் கூட்ட முடியும்
குருநாதர் எவ்வழியில் எமக்கு (ஞானகுரு) வழி காட்டினாரோ அந்த வழியை நீங்களும் பின் தொடரும் பொழுது அந்த மெய் ஞானிகள் சென்ற வழிகளில் எல்லோரும் அங்கே செல்வதற்கு ஏதுவாகும்.
அன்றைய ஞானிகள் காட்டிய ஒவ்வொரு உணர்வின் சக்தியும், அவர்கள் உடலிலே விளைய வைத்த ஆற்றல் மிக்க சக்திகள் நமக்கு முன் ஒலி/ஒளி அலைகளாகப் படர்ந்து கொண்டுதான் உள்ளது.
யாம் இப்பொழுது பேசும் போது இந்த உணர்வின் ஒலி அலைகளை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து ஆற்றல் மிக்க எண்ண அலைகளாக, அது படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1.இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.க்களிலோ ஒலிபரப்புச் செய்யும் இந்த உணர்வின் சக்தியை
2.இயந்திரத்தில் அதே அலைவரிசையில் வைத்து
3.பட நிலைகளையும்… ஒலி அலைகளையும்… நாம் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.
இதைப் போன்றுதான் நாம் பேசும் சாதாரணp பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட இச்சக்திகள் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் அது சுழன்று கொண்டிருகின்றது.
அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான், இந்தத் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இங்கே உணர்த்துகின்றோம்.
நமது உயிரின் ஆற்றலை நமக்குள் இயக்கக்கூடிய சக்தியை நாம் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
1.ஒரு மேக்னட்டில் “காந்தத்தை” அதிகமாகக் கூட்டச் செய்யும்போது,
2.அந்த “சுழற்சியின்” வேகத்தைக் கொண்டு கரண்ட் உற்பத்தியாகின்றது.
அதைப் போல…
1.நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டி
2.அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியைப் பெருக்கச் செய்வதுதான் அந்த நிலை.
3.நாம் அதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும்.
குற்றம் செய்தோரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் அந்தக் கோப உணர்ச்சிகள் எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…?
இதைப் போன்றுதான்…
1.நம் உயிரின் நினைவலைகளை…
2.அந்த மெய் ஒளி பெற வேண்டுமென்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போதுதான்,
3.அந்த இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாகக் கூட்டி
4.நாம் எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
அந்த தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த இயற்கையின் உண்மையின் இயக்கச் சக்தியை எவ்வளவு தெளிவாக உணர்த்தி உள்ளார்களோ அதையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
நீங்கள் உணர்கிறீர்களோ… இல்லையோ… ஒன்றுமறியாத வாயில்லாத நாடாக்களில் (MEMORY DRIVES) கம்ப்யூட்டர் மூலம் இப்பொழுது எப்படிப் பதிவாக்குகின்றனரோ இதைப் போல
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய “மேக்னட்…”
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்களுக்குள் ஈர்த்துத் தனக்குள் பதிவு செய்கின்றது
அதாவது…
1.புகைப் படங்கள் எடுக்கப்படும்போது “கேமரா” எப்படி அதனுடைய நிலைகளைப் பதிவாகின்றதோ,
2.மைக்கின் முன் பேசுவதை, “மைக்” ஈர்த்து எப்படிப் பதிவாக்குகின்றதோ அது போல
3.உங்கள் எண்ணங்கள் செம்மையாக… “சாமி (ஞானகுரு) சொல்வதைப் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன்
4.உங்கள் கண்ணின் நினைவலைகளில் ஏங்கி இருந்தாலே போதுமானது.
அதுவே பதிவாகி… மீண்டும் நினைவவலைகள் வரப்படும்போது, மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
“சாமி என்னமோ சொல்கின்றார்…” ஏதோ சொல்கின்றார்… என்று இல்லாதபடி நினைவுகளை வேறு பக்கம் திசை திருப்பாது
1.உபதேசிக்கின்றவரை வரையிலும் உற்றுக் கேட்போம் என்று
2.உங்கள் நினைவின் எண்ணங்களை எவ்வளவு தூரம் பதிவு செய்கின்றீர்களோ
3.அந்தப் பதிவின் ஆற்றல் மிக்க சக்தியை… மகரிஷிளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்கள் உயிரின் இயக்கத்தின் ஓட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைத் தனக்குத்தானே தனக்குள் இயங்கும் ஆற்றலை அறியவில்லை என்றால் பிறரின் நிலைகளை அறிந்து கொள்வது மிகக் கடினம்.
நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் இயக்குவதை நாம் கட்டுப்படுத்தாமலோ… அல்லது நமக்குள் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவோ… நாம் இருந்தோம் என்றால்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த உயிர் மனித உடலைப் பெற்றபின்
2.பரிணாம வளர்ச்சி பெற்ற மற்ற மிருக உணர்வுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமலே சென்று கொண்டிருக்கும்.
ஆகவே மனித உடல் பெற்றபின்… மெய்யுணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்க சக்தியை வளர்ப்பதே நல்லது.
இங்கே கொடுக்கப்படும் உபதேசங்கள் ஒவ்வொன்றையும் எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றோமோ அந்த அளவுக்கு மெய் உணர்வின் தன்மையை…
1.நாம் எடுத்துக் கொண்ட ஞானிகளின் சுவாசமும்…
2.எடுத்துக் கொண்ட ஞானிகளின் எண்ணத்தின் உணர்வும்…
3.நமக்குள் அவதார புருஷனாக மாறுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும்… பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் வந்தபின்… அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து அது ஓங்கி வளர்ந்து… உடலை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
அதனால் உடல் நலிந்து…
உணர்வுகள் குறைந்து…
எண்ணங்கள் நலிந்து…
நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
இதிலிருந்து நம்மைக் காத்திட இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நாம் நம்மைக் காத்திட முடியும்.
அதற்குத்தான் அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்கு இதை உபதேசிப்பது.
வியாசர் காட்டிய அருள் வழியில்… கண்ணன் காட்டிய வழி நமது கண்கள் நமக்குள் இதை நினைவு கூர்ந்து எண்ணும்போது
1.அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற வேண்டும்.
2.அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும்
4.அருள் ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
ஆகவே மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் உணர்வின் நல்ல குணங்களை நலியச் செய்தது போன்று நலிந்த உணர்வின் தன்மையை மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து நலிந்ததை மீட்டச் செய்யும். இதை நல்லுணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
[su_heading size=”28″]22.03.2021 உபதேசம்[/su_heading]
அகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான அகஸ்தியனை அவன் தாய் தந்தையர் “கடவுள் பிள்ளை” என்றே எண்ணுகின்றனர்.
ஏனென்றால் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் போனால் மற்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது. “அந்தக் குழந்தையினால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது…”
ஆனால் மிருகங்களிடமிருந்தும் நஞ்சு கொண்ட விஷ ஜெந்துக்களிலிருந்தும் தப்ப
1.முதலில் பச்சிலையைத் தான் இவர்கள் நுகர்ந்தார்கள்… பல பல மூலிகைகளைத் தான் உபயோகப்படுத்தினார்கள்.
2.அதன் வழி அகஸ்தியன் என்ற அந்தக் கருவின் தன்மை விளைந்தது.
அந்தக் குழந்தையை கையில் எடுத்துச் செல்லப்படும் போது மற்ற மிருகங்கள் அருகில் வருவதில்லை என்று கண்டுணர்ந்த பின் அவன் கடவுள் பிள்ளை என்று போற்றுகின்றனர்.
அந்தக் குறுகிய காலத்தில் அங்கே வாழும் ஒரு ஐம்பது குடும்பங்களில்… ஒரு நூறு பேர் இருக்கும் இடங்களில் அவனைப் போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.
உதாரணமாக பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் துகள்களால் “மின்னல்கள்” வருகிறதென்றால் அது எல்லாம் விஷத் தன்மை கொண்டது.
1.ஆனால் அந்தக் குழந்தை அதை உற்றுப் பார்த்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும் மகிழ்வதும் போன்ற தன்மைக்கு வருகின்றது.
2.இதே போல் சூரியனையௌம் கண் கூசாது உற்றுப் பர்க்கின்றான்,
இன்று நாம் தீபாவளிக் காலங்களில் மத்தாப்புக்களைக் கொளுத்தினால் அவைகளிலிருந்து பொறிகள் எப்படி வருகிறதோ அது போல் சூரியன் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் இவை வெளிப்படுத்தும் கதிர்கள் மோதி வான்வீதியில் பல வர்ணங்களில் எப்படி வருகின்றது…? என்று அவன் வேடிக்கை பார்க்கின்றான்.
சூரியனும் மற்ற கோள்களும் அதனின் உணர்வுகளின் மோதலினால் ஏற்படும் இந்த மின் பொறிகளைப் பார்த்து அவன் அறியாமலே அதைக் கண்டு சிரிக்கின்றான்.
1.அங்கே வானிலே நடக்கும் நிகழ்ச்சிகளில்
2.அதில் வரும் விஷத்தின் தன்மை அவனுக்க்ள் ஒடுங்கும் பொழுது
3.சாந்தமான நிலை கொண்டு அகஸ்தியன் பார்க்கின்றான்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களும் சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்ற கண்ணாடிகளில் விஷத் தன்மைகளை அடக்கும் அந்தச் சக்திகளைப் பூசி அதனைக் கலக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் பார்க்கின்றனர்.
சூரியனை நேரடியாக இவர்கள் பார்ப்பதில்லை. அந்தக் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற விஷம் இவர்களைத் தாக்குவதில்லை.
அதே போலத் தான் நட்சத்திரங்கள் பல வகைகளில் ஒன்றுக்கொன்று உராயப்படும் போது தூசிகள் வருகின்றது. அவைகள் மோதினால் மின்னல்களாக மாறுகின்றது.
அந்த மின்னல்களையும் இந்தக் கண்ணாடி வழி தான் விஞ்ஞானிகள் கண்டு அதனுடைய கலர்களையும் அதனுடைய இயக்கத் தன்மைகளையும் காணுகின்றார்கள்.
அன்று வாழ்ந்த அகஸ்தியனோ இத்தகைய தன்மைகளை நேரடியாக உற்றுப் பார்க்கின்றான்.
1.அவன் கருவிழி அதைப் பதிவாக்குகிறது.
2.அதிலிருந்து வெளி வரும் ஆற்றல்களை அவன் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் நுகரச் செய்கின்றது.
அப்படி அவன் நுகர்ந்த உணர்வோ உயிரான ஈஸ்வரலோகத்தில் இணைந்து
1.அந்த விஷத்தின் தன்மையை அவன் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
2.வீரிய சக்தியாக ஊட்டும் சக்திகளாக மாறுகின்றது.
இது எல்லாம் அகஸ்தியனின் சந்தர்ப்பம்…! அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்ற ஆற்றல்மிக்க மெய் ஞானியாக ஆகலாம்.
பிறப்பு இறப்பு என்று இருந்தாலும் அதிலே “வளர்க்கப்பட வேண்டியது எது…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சூரியனை மையப்படுத்திக் கொண்டு பூமி சுழன்று ஓடும் நிலையில் ஏற்படும் இயற்கையின் பருவ மாற்றங்களின் செயலால் பரவெளியில் படர்ந்துள்ள அமில குணத்தன்மைகளைப் பூமி தன் ஈர்ப்பின் சுவாசம் கொண்டு ஈர்த்துக் கொள்கிறது.
அவ்வாறு பூமி தன்னை வளர்ச்சிப்படுத்திடும் செயலில் எண்ணம் கொண்டே ஆத்மாவாக உயிரணுக்கள் பல பிறப்பிற்கு வருகின்றன.
1.ஜீவன் என்ற சரீர பிம்பம் பெறும் இந்த உயிராத்மா
2.இயற்கையின் கதியில் சரீரம் கொண்டு வளர்ச்சி கொள்ளும் செயலின் தொடராக இருந்தாலும்
3.தான் பெற்ற இந்தச் சரீரத்தையே “இறப்பு…” என்ற கதி நிகழ்வுக்கு உட்பட்டே வினைச் செயல் புரிகின்றது.
ஒரு உயிரணு சிசுவாக வளர்ச்சி கொள்ளும் காலத்தில்… தான் எடுத்துக் கொண்ட (ஏற்கனவே முந்தைய பிறவியில்) எண்ணத்தின் செயலில் உணர்வுகளாகத் தாய்மை கொண்ட எண்ணமுடன் தன் உணர்வுகளையும் கூட்டித்தான் உருவத்திற்கு வருகின்றது.
அந்த உருக்கோலம் கொள்ளும் பிம்பத்திற்கு வேண்டிய ஆகாரத்தைத் தாயின் இரத்த நாளங்களுடன் ஒன்றியே எடுத்து வளர்த்துக் கொள்கிறது.
பஞ்ச பூதங்களின் அமைப்பாகத் தனக்கு ஒவ்வொரு அவையங்களும் அமைவு கொள்ள தாயின் ஆகாரத்திலிருந்து அமில குணத் தன்மைகளை ஈர்த்துக் கொள்கிறது.
1.எந்தத் தாயின் சரீரத்தில் இணைந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றதோ
2.அந்தச் சரீரத்தில் அமைந்துள்ள சகல நாடிகளில் ஓடும் சுவாசத்தின் செயல் தன்மைகளையும் ஈர்த்துத் தான் அந்தச் சிசு முழுமை பெறுகிறது.
முழுமை பெற்ற பின்… தாயின் உடலிலிருந்து வெளியேறும் உந்துதலை உணர்த்தி… அந்த உந்துதலின் செயலைத் தாய்க்கும் ஊட்டுகின்றது.
அந்த உந்துதலில் தாயின் சரீரத்தில் செயல்படும் நாடிகளில் உலவிடும் “மறைமுகக் காற்று ஒன்று…” பிறப்பின் செயலுக்குத் துணை புரிந்து சிசு வெளியேற உதவுகிறது.
ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற இந்த மூன்று வகையான தொடரின் சூட்சமத்தை இயற்கையின் கதியில் அறிந்து கொள்ள வேண்டும்.
1.பூமித் தாயின் செயலுக்கும்
2.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் சுவாச அலைகளில் பூமிக்குள் நிறைந்திருக்கும் காற்றின் தொடர்பிற்கும்
3.பற்பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.
கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுவும்… கற்பாறைகளின் முதிர்விலிருந்து உப்பு வெளிப்படுவதுவும்… மண்ணின் குணத்தன்மைகளில் சில இடங்களில் உயர் அமிலமாகி… அதுவே பொருளாக வெளிப்படும் செயலுக்கும் காற்றின் தொடர்பு உண்டு.
இது எல்லாம் தன்னை உணர்ந்திடும் பக்குவமாக… இயற்கையின் கதியைத் தன்னுள் கண்டுணரச் செய்திடும் தெளிந்த உயர் ஞானமாக… மெய் ஞானமாக… ஞானிகளால் உலகினுக்குப் போதனைகளாகக் கொடுக்கப்பட்டது.
அந்த மெய் ஞானிகளின் நிலையை நாமும் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து காட்ட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இமயமலையிலே தபசு இருந்தார் என்றால்
1.“இமய” என்றால் என்ன…?
2.இமை என்பது இரண்டு கண்களின் மையம் – “உயிர்”
3.உடல் உயர்த்தியான நிலைகள் மலை.
இமயம் என்று அவர்கள் பாடியிருந்தால் இமயமலையிலே போய் நான் தபசு இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்…?
உட்பொருளின் தத்துவத்தை அவர்கள் கொடுக்கப்படும்போது இமயமலையிலே போய்த் தவம் இருக்கச் சொன்னார். தவம் இருந்தார் என்றால்… தவம் என்றால் என்ன…?
இந்த இமய மலையிலே புருவ மத்தியிலே நாம் எதையெல்லாம் உயர்த்தி எண்ணுகின்றோமோ,
1.இந்த தவத்தை நீ கூட்டி
2.இங்கே சேர்க்க வேண்டும்.
இதுதான் பொருள்… அந்த காவியத்திற்குள் இருக்கக்கூடிய மெய்ப் பொருள்.
[su_heading size=”28″]21.03.2021 உபதேசம்[/su_heading]
பூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது
இன்றைய உலகம் மிகவும் துரித நிலைகள் கொண்டு மாற்றமாகிக் கொண்டே உள்ளது.
மனிதனுக்கு மனிதன் காட்டு விலங்குகள் எப்படி ஒன்றுக்கொன்று அஞ்சி வாழ்கின்றதோ இதைப் போன்றுதான் கிராமந்தோறும்… ஊர் தோறும்… நகரம் தோறும்… ஒவ்வொரு நொடிக்கும் அஞ்சி வாழும் தன்மை வந்து விட்டது.
பின் தொழிலை எப்படி நீங்கள் பார்ப்பது…? கிடைப்பதைத் தட்டிப் பறித்து உணவாக உட்கொள்ளும் இந்த உணர்ச்சியின் தன்மை வளர்ந்து விட்டது.
இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
1.காற்று மண்டலத்தில் கலந்துள்ள அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நாம் தியானித்து
2.இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கி
3.அத்தகைய மூச்சலைகளைப் பெருக்குவோம் என்றால் சிந்திக்கும் மனிதர்கள் உருவாவார்கள்.
ஆகவே தீமையிலிருந்து மீட்டிடும் அருள் சக்திகளை நமக்குள் உருவாக்க முடியும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடிவதில்லை. அது அறுந்து விடுகின்றது. ஆனால் பல நூல்களை இணைத்துக் கனமான… கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.
கதிரியக்கப் பொறியின் உணர்வுகளை… அந்த அழுத்தத்தை அதிகமாகச் சேர்க்கும் பொழுது இராக்கெட்டை விண்ணில் உந்திச் செலுத்துகின்றான் விஞ்ஞானி. அது சிறுதுளி என்று இருக்கும் பொழுது ஒரு இயந்திரத்தைத் தான் இயக்க முடிகின்றது
1.அத்தகைய உந்து விசையின் உணர்வுகள் வலு கொண்டு வருவது போல
2.நமது உணர்வுகளும் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
3.உந்துதலின் தன்மையை அதிகமாக எடுத்துச் செலுத்தினால்
4.அது தீமை என்ற நிலைகளைக் கலைக்கவும்… மோதலில் இதைக் கருக்கவும் செய்யும்.
ஆகவே உங்களில் இதைப் பக்குவப்படுத்தி இந்த அருள் உணர்வின் தன்மை வளரச் செய்து கொண்டால் பூமியில் வரும் தீமைகளை அகற்ற முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.
விஞ்ஞானத்தால் வரும் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்து கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் தான் அது முடியும்.
1.இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் எதிர் நிலையான உணர்வுகளை… (அந்தத் தூசிகளை)
2.மின்னல்களைக் கவர்ந்து தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது துருவ நட்சத்திரம்.
அத்தகைய துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் நுகர்ந்தால் நமக்குள் வரும் விஷத் தன்மைகளை மாற்றி விட்டு
1.நமக்குள் அறிவின் ஞானமாக வளரச் செய்யும்… உயிருடன் ஒன்றி வாழச் செய்யும்
2.இதையெல்லாம் உங்கள் மனதில் தெளிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்ததாக மாறும்
4.வாழ்க்கையில் வரும் எத்தகைய பகைமையான உணர்வுகளும் உங்களைச் சாடாது
5.பகைமை உணர்வு என்று தாக்கும் உணர்வை உங்களால் அறியவும் முடியும்
6.பகைமையை நீக்கும் அறிவின் வளர்ச்சியும் உங்களுக்குள் வளரும்
இதை வளரச் செய்வதற்கு நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்களிலே இதைப் பதிவாக்கும் போது…
1.என்னால் என்னை அறியச் செய்யும் சக்தியாக
2.குரு அருள் தன்மை கொண்டு நான் என்னை அறிய முடிகின்றது.
இதைப் போலத் தான் இந்த உலகிலே வாழும் நீங்கள்… சந்தர்ப்பவசத்தால் நீங்கள் நுகரும் உணர்வுகள்
1.உங்களைத் தவறான வழிக்கு அது அழைத்துச் சென்றாலும்
2.உயிரான ஈசனை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தை இணைத்தால்
3.தவறின் பாதையில் இருந்து அது திசை திருப்பி
4.உங்களை அருள் வழியில் அழைத்துச் செல்ல இந்த உணர்வின் தன்மை உதவும்.
ஏனென்றால் இத்தகைய நிலைகள் “இன்று” தேவைப்படுகின்றது. அதை நீங்கள் பெறுவதற்குண்டான உணர்வைத்தான் இப்பொழுது இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.
கார்த்திகை ஜோதி… தீப வணக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்குப் போதனையாக உரைத்து வந்ததில்… மனதின் பக்குவம் பெற முயற்சிக்க வேண்டும்.
உலக வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணங்கள் அலை அலையாக வந்து நம் மீது மோதினாலும்
1.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று சேர வேண்டிய இடம் சேர்வதைப் போல்
2.நம் நிலையிலும் எல்லா உணர்வுகளையும் சமப்படுத்த வேண்டும் என்ற அந்த நல் எண்ணத்தின் உந்துதலாக
3.அதன் வழி முறைகளை நம் சிந்தையில் இருத்திச் “சித்தன் நிலை…” பெற வேண்டும்.
ஏனென்றால் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல. மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் “எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது….!”
நம் உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும்…
1.மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.
2.ஆக… நோய் உடலிலா…! எண்ணத்திலா…? அல்லது…
3.நம் சுவாச நிலையின் இயல்புத் தன்மையை மாற்றி விட்டாலே
4.எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்
5.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.
கார்த்திகை ஜோதியைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்ததா…? இன்றைய நடை முறைக்கு அது எல்லாம் பெரும் சடங்காக மாறி விட்டது.
அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் என்ன…?
பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் நமக்கு அளித்திடும் செயலை மறைபொருளாகக் காட்டினர்.
அந்த ஜோதியின் உட் பொருளை உணர்த்த… கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் “தீபமேற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது…!”
எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே “கார்த்திகை ஜோதி…” என்று தீப வணக்கமாகக் கூறப்பட்டது.
1.இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து
2.தன் மனதை… தன் சிந்தையை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்து…
3.பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
4.ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் தான் அது…!
தியான நிலையறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் இந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
தீமை செய்யும் அணுக்கள் உடலுக்குள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
தீமையானவற்றைச் சந்தித்த உடனே நம் நினைவு புருவ மத்திக்குச் செல்ல வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அங்கே நிறுத்துதல் வேண்டும்.
அப்பொழுது… தீமையான உணர்வுகள் சுவாசத்தின் மூலமாகவும் தடுக்கப்படுகின்றது.
1.கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்கும்போது
2.எந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துகின்றோமோ
3.அது தான் நம் விலா எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாறும்.
4.அந்த ஒளியான அணுவாகத்தான் உடலுக்குள் அது உருவாகும்.
உதாரணமாக நாம் சாலையில் போகும்பொழுது விஷத்தை நுகர்ந்து விட்டால் அதனின் அணுக்கள் உடலில் உருவாகி விஷத்தன்மைகளை உணவாகச் சாப்பிட்டு வளரும் உடலாக மாற்றி விடுகின்றது.
ஆகவே… கெட்டதை நுகர்ந்தாலும், உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அதற்குத்தான் உங்களை ஆயுள் மெம்பராகத் துருவ நட்சத்திரத்துடன் இணைப்பது.
கெட்ட வாசனை வரும்பொழுது…
1.“ஈஸ்வரா…” என்று நமது உயிரை புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்
வாசனை சிறிதுதான் உள்ளே போகும். “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்” என்று வலுக்கூட்ட வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது அந்தச் சிறிதளவு விஷத்தையும் அது தள்ளிவிடும். ஏனென்றால் அதைவிடச் சக்தி வாய்ந்தது துருவ நட்சத்திரத்தின் ஆற்றல். அப்போது நமது ஆத்மா சுத்தமாகின்றது… உயிராத்மா ஒளியாகின்றது.
[su_heading size=”28″]20.03.2021 உபதேசம்[/su_heading]
உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…?
உலகில் வாழும் மனிதர்கள் எத்தனையோ கோடித் தெய்வங்களை வணங்கினாலும் அந்தத் தெய்வம் காக்க வருவதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்… இதையெல்லாம் எங்கே உருவாகின்றது என்று…!
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தும் நம் சிரசின் பக்கம் இருக்கும் உயிர் தான் இயக்குகிறது… உருவாக்குகிறது. அதை “ஈஸ்வரலோகம்…” என்று ஞானிகள் காரணப் பெயர் இடுகின்றனர்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அதை அணுவாக உருவாக்கும் கருவாக
3.உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
அப்படி உருவாக்கிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது “பிரம்மலோகமாக…” மாறுகின்றது. அதே சமயம் நம் உடலுக்குள் அந்தக் குறித்த காலத்தில் வளரத் தொடங்குகிறது.
கோழி அடை காப்பது போன்று என்னை இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்…! என்று இந்த உணர்வின் தன்மை எண்ணினால் அந்தக் கரு முழுமையடைந்து அணுவின் தன்மை அடைகின்றது.
அப்படி அணுவின் தன்மை அடைந்த பின் அது தன் உணவுக்காக ஏங்குகின்றது.
உதாரணமாக முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளி வந்தபின் புற நிலையில் இருக்கக்கூடிய உணவை அகநிலையில் உட்கொள்ளும் நிலை வருகின்றது.
இதைப் போன்றுதான்…
1.உடலில் உருவான இந்த அணு முழுமை அடைந்த பின்
2.நம் உடல் உறுப்புடன் ஒன்றி இரத்தத்தில் வரும் உணர்வினை
3.உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது.
ஆகவே அந்த அணுவின் தன்மை அடைந்தால் பிரம்மலோகம் என்ற நிலை அடைகின்றது.
இரத்தத்தின் வழியாக உணவாக உட்கொள்ளும் நிலை வரும் பொழுது அந்த அணுக்கள் நம் உடலுக்குள் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
ஒரு வித்தினை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து செடியாக… மரமாக வளர்ந்து… தன் இனத்தை உருவாக்குகின்றது. ஒரு கோழி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுகள் வளர்ச்சியாகி அது மீண்டும் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகளை வளர்க்கும் தன்மை வருகின்றது.
இதைப் போலத்தான் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுகின்றோமோ அத்தகைய அணுக்களின் இன விருத்தி நம் உடலுக்குள் அதிகமாகின்றது.
இப்படி வளர்ச்சியாகி வளர்ச்சியாகித்தான் நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.
காட்டிலே வாழும் மான் சந்தர்ப்பத்தால் புலியைப் பார்த்து விட்டால் அதனிடமிருந்து தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை எண்ணி எண்ணி அதன் உணர்வினை மான் அதிகமாக நுகர்கின்றது.
ஆக… புலியின் உணர்வை மான் பயத்தால் நுகர்ந்த பின் மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தப் புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும் அணுக்கள் அங்கே பெருகி விடுகின்றது.
1.அப்பொழுது மானின் சாந்தமான உணர்வுக்குள் அது ஊடுருவி அதை மடியச் செய்து விடுகின்றது
2.அது தன் நினைவை இழக்கச் செய்கின்றது.
புலியோ மானின் தசைகளை உணவாக உட்கொண்டு விடுகின்றது. மான் புலிக்கு இரை ஆகின்றது.
ஆனால் புலியின் உணர்வை மானின் உயிர் கருவாக மாற்றி அந்த (மானின்) உடலை விட்டுச் சென்றபின் புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் அடைகின்றது.
1.அப்பொழுது கடவுள் யார்…? இந்த உயிரே கடவுள்.
2.உயிர் தான் இத்தகைய நிலையைச் செயல்படுத்துகிறது…!
3.பல கோடிச் சரீரங்களில் ஒன்றிலிருந்து மீண்டு ஒன்றுக்குள் இரையாகும் பொழுது நரக வேதனைப்பட்டு
4.அதன் நிலை கொண்டு கொன்ற உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று
5.இப்படி உருமாறி… உருமாறி உருமாற்றி… நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர் தான் என்ற நிலையை
6.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மை இது…!
சுவாசத்திற்கும் நாடிகளின் இயக்கத்திற்கும் உண்டான தொடர் இயக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக ஐம்புலன்களில் செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.
எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.
உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்…” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்துச் செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.
மார்பு தொடங்கி நாபியின் வழி ஓடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.
1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.
அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும் முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.
சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.
அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.
அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.
பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.
இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.
மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும். உணரவும் முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இராமாயணத்தில் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று காட்டியுள்ளார்கள். எப்படி…?
குகை மேலே இருக்கக்கூடிய பாறையைத் தள்ளி மூடிவிடுகிறான். அதனால் வாலி இராமனுக்கு இடையூறு செய்ய முடியவில்லை.
புலி ஒரு மனிதனைத் தாக்க வந்தால் என்ன செய்கின்றார்கள்…? ஒரு கூண்டைக் கட்டி புலி சாப்பிட ஒரு ஆட்டைக் கட்டுகின்றான். ஆடு “மே…” என்று கத்தும் பொழுது, புலி வேகமாக வந்து நுழைந்ததும் கூண்டின் கதவை மூடிப் பிடித்துக் கொள்கிறான்.
அந்த ஆட்டையும் காப்பாற்றுகிறோம். புலி மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் தடுத்து மனிதனான நிலையில் மற்றவரையும் காக்கிறோம்.
அதைப் போன்று தான் வாழ்க்கையில் சில கொடூரமான உணர்வுகள் வரப்படும் பொழுது… அது நம்மைத் தாக்காத வண்ணம் நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா… என்று உடனே உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி எண்ண வேண்டும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் புருவ மத்தியைத் தாண்டித்தான் போக வேண்டும்.
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
2.தீமை செய்யும் உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.
உதாரணமாக… நீங்கள் கோபமாக இருக்கும் போது ஒருவர் நல்லது சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா…? வேதனையாக இருக்கும் போது சிரித்து ஆடிச் சந்தோசப்படலாம் என்று ஒருவர் வந்தால் எப்படி இருக்கும்…?
வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். சந்தோசப்பட வேண்டும் என்ற நிலையில் உங்கள் முன்னாடி ஒருவர் வந்து ஆடினால் என்ன செய்வீர்கள்…?
நம்மைக் கிண்டல் செய்கிறார்… கேலி செய்கிறார்… என்று உதைக்கத்தான் வருவீர்களே தவிர நல்லதை விடுவோமா…?
நம் கண்கள் அந்த உணர்வின் தன்மையை வலிமை பெறச் செய்துவிடுகின்றது.
ஆகவே இதைத் தடைப்படுத்தி ஈஸ்வரா… என்று அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து உயிர் வழி உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
சிறிது நேரம் இழுத்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் நினைவினைச் செலுத்தி அவனிடமே வேண்டுதல் வேண்டும். ஏனென்றால் அவன் தான் நாம் நினைப்பதையெல்லாம் உருவாக்குகின்றான்.
நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் உணர்வை உந்தப்படும் போது உள்ளுக்குள் இழுக்காது தடைப்படுத்தப்படுகிறது.
இந்த உணர்வின் தன்மை வலிமையான பின் இங்கே நிற்பதற்கு வழி இல்லை. தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது. செய்து பாருங்கள்…!
[su_heading size=”28″]19.03.2021 உபதேசம்[/su_heading]
நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்
உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாது அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.இந்த விஷத் தன்மைகள் கூடி சிறுநீரகங்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
2.இரத்தத்தில் கலந்து வரும் அசுத்தங்களை நீக்கும் சக்தியை அது இழந்து விடுகின்றது.
3.விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
4.இதனால் “உப்புச் சத்து” என்ற நிலை உருவாகி வருகின்றது.
உப்பை வெளியிலே வைத்தால் அந்த வைத்திருக்கும் இடங்களில் எப்படிக் கசிவாகின்றதோ இதைப் போல நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கசிவு அதிகமாகி விட்டால் அதனால் அவர்களுக்கு அடிக்கடி “வாந்தி” வரும்.
சர்க்கரையைச் சமப்படுத்தும் சக்தியும் இழந்து விட்டால் அதுவும் இணைந்து விடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உணர்வின் உந்து விசை அதிகமாகிவிடும். இரத்தக் கொதிப்பும் இதனுடன் சேர்ந்து கொள்ளும்.
இத்தகைய நிலைகள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பதும் வேதனை உணர்வு அதிகமாகி இந்த உடலை விட்டே ஆன்மா பிரியும் தன்மையும் வந்துவிடுகின்றது.
ஆனால் இத்தகைய நோய்கள் இருப்பினும் இது போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு
1.அதிகாலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று
2.அதைச் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் எத்தகைய நோய்கள் இருப்பினும் அதை நீக்க முடியும்.
யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தியானித்தால் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீங்களே அகற்ற முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது…
2.அதே எண்ணத்தைக் கொண்டு நோய் நீக்கும் அருள் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டு
3.அறியாது வந்த நோயினைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.உங்களால் முடியும்… நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற இந்த நினைவுடன் எண்ணி ஏங்கித் தியானித்து விட்டு மீண்டும் கண்ணை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை “உடலுக்குள் சர்க்குலேசன் (CIRCULATION) செய்வது போன்று செலுத்துங்கள்…!”
உதாரணமாக… கிட்னியில் குறைபாடு இருந்தால் உங்கள் நினைவினை அங்கே அந்தப் பாகத்தில் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உறுப்பு சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
வாத நோயோ கீழ்வாதம் முடக்குவாதம் போன்ற நோயோ ஆஸ்த்மாவோ சர்க்கரைச் சத்தோ இதைப் போல எந்த நோயாக இருப்பினும் அந்தந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும். எங்கள் உடலில் அந்த அரும் பெரும் சக்தி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்… என்பது போல்
2.உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி விட்டு
4.அடுத்த கணம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
5.இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை கலக்கச் செய்ய ஏங்கித் தியானியுங்கள்.
டி.பி.யிலிருந்து கேன்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் இதைப் போல் உங்கள் எண்ணத்தை உடலுக்குள் செலுத்தினால் அந்த நோயை நிச்சயம் நீக்க முடியும். உடல் நலம் பெற முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.
ஐம்புலனை இயக்கும் நாடிகள் மூலம் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில்
1.காட்சிப் புலனறிவு… (கண்)
2.செவிப் புலனறிவு… (செவி)
3.உணர்வுப் புலனறிவு… (மெய்)
4.நுகர்தல் புலனறிவு… (மூக்கு)
5.சுவைத்தல் புலனறிவு… (வாய்) என்று
6.ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.
இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது… தோன்றும்
“எண்ணங்களும்… உணர்வுகளும்…” இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.
ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை
5.இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?
சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா…! உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.
எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும்… ஆத்ம பலமும்… பேரின்பப் பெரு வாழ்வும் பெற
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டப்பட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!
“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு “ஒலிக் காற்று…” என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.
விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை “விழிக் காற்று” என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.
விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?
சோம்பல் ஏற்படுத்துவதும்… வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்…
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.
விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,
1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.
எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.
இதை எல்லாம் தெளிவாக உணர்தல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.
பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்து விட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.
இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்று விடுகின்றது.
ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.
இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது
இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.
இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.
இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.
தாய் உற்றுப் பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி… தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும்… இனம் புரியாத சங்கடமும்… இனம் புரியாத வருத்தமும் வரும்.
சில குழந்தைகளில் இப்படி ஆகும்.
ஏனென்றால்… சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.
முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.
இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.
பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது…? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது…? என்ற நிலையையும் காட்டினார்.
இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.
இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள் எனக்குள் அதைப் பாய்ச்சி குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி “என்னை நீ பார்…” எனக்குள் அது எப்படி இயங்குகின்றது…? உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையைக் காட்டினார்.
அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது…? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார். அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் எல்லாவற்றையும் கொடுத்தார்.
[su_heading size=”28″]18.03.2021 உபதேசம்[/su_heading]
தீமை வரும் பொழுதெல்லாம்… டி.வி.யில் சேனலை மாற்றுவது போல் நம் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்கு மாற்ற வேண்டும்
இந்தத் தியான வழியினைக் கடைப்பிடித்து வருவோர் எப்பொழுதுமே “விழித்திருத்தல்” (CONSCIOUS) வேண்டும். சந்தர்ப்பவசத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அதைத் தடுக்கும் விதமாக நாம் எடுக்கும் தியானத்தை உஷார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்படுகின்றோம். அவருக்கு உதவி செய்வதற்காகச் செல்கின்றோம். பார்த்ததும் அவருடைய கஷ்டத்தைக் கேட்டறிகின்றோம்.
அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?
அவருடைய நோயினைக் கேட்டு அறிந்து கொண்டபின் ஈஸ்வரா…! என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.
நோயுற்றிருக்கும் அந்த நண்பனிடம்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய்..
2.நோயிலிருந்து விடுபடுவாய்… உன் உடல் நலம் பெறும்…! என்ற உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
3.அவருடைய வேதனை நமக்குள் புகாதபடி இப்படி விழித்திருத்தல் வேண்டும்
ஏனென்றால் வேதனைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நமக்குள் தீமை வராது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு
3.மற்றவர்களுக்கும் இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால்
4.அவர்களையும் காக்க முடியும்… நம்மையும் காக்க முடியும்.
இத்தகைய தெளிவான உணர்வு கொண்டு செயல்பட்டு நோயுற்றவரிடம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்…! என்று சொல்லுங்கள். இந்த உணர்வை நாம் அவர்களுக்குள் வித்தாகப் பதித்து விட வேண்டும்.
ஏனென்றால் நோயிலிருந்து அவர் விடுபட முடியாத நிலை இருக்கும் பொழுது இந்த உணர்வைப் பாய்ச்சி அவருக்குள் இந்த உணர்வை ஏற்ற வேண்டும்.
அவரும் நாம் சொன்னபடி இதை எண்ணத் தொடங்கினால் அவர் நோய் நீங்கக் காரணமாகின்றது. அவர் ஓரளவுக்கு மன உறுதியைப் பெறவும் இது உதவுகின்றது.
நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பல தீமையின் உணர்வுகளை நாம் கேட்டறிந்தாலும் மேலே சொன்ன முறைப்படி செய்து… துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் வலிமை கொண்டு… நம்மைக் காத்து நம் நண்பர்களையும் காத்திட வேண்டும்.
ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யும் பொழுது எந்த அலை வரிசையில் வைக்கின்றனரோ அந்த அலையைத் தான் அது கவர்கின்றது… நாம் கேட்கவோ காணவோ முடிகின்றது.
ஆனால் பிடிக்கவில்லை என்றால் வேறு அலை வரிசைகளை உடனுக்குடன் மாற்றுகிறோம்.
இதைப் போன்றுதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பலருடைய உணர்வுகளைக் கேட்டாலும் நுகர்ந்தறிந்தாலும் அந்தத் துயரத்தின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அடுத்த கணமே…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.இந்த அலை வரிசையை நமக்குள் எடுத்துத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.
நாம் எடுத்துக் கொள்ளும் அந்த துருவ நட்சத்திரத்தின் உண்ர்வு கொண்டு நண்பனைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் இது உதவும்.
இதை ஒரு பழக்கமாக நாம் வளர்த்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் அறியாது சேரும் தீய வினைகள் இருந்து உடனுக்குடன் நாம் விடுபட முடியும்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வினை நாம் பெற்று நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாமும் அடைதல் வேண்டும்.
இதன் மூலம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனை நாம் யாரென்று அறிய முடிகின்றது
1.அவனையே வேண்டி… அவனுள்ளேயே கேட்டு
2.நாம் விரும்பியதை இங்கே உருவாக்க முடியும்
தெளிந்த மனம் கொண்டு நாம் அருள் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்ததை அவன் (உயிரான ஈசன்) உருவாக்கி அவன் வழியிலேயே நம்மை வழி நடத்தி நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.
ஆகவே ஞானிகள் காட்டிய வழி சென்றால் இந்த வாழ்க்கையில் நாம் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலை அடையும் சக்தி பெறுகிறோம்.
நாடிகள் சங்கமிக்கும் நெற்றிப் போட்டு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.
சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.
அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.
மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.
சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.
சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.
இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.
எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திட வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.
ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.
1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது.
ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.
1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.
சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு.
அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.
அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகி விட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக… ஒன்று” உருவாகின்றது.
யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.
உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ… அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.
அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்… போட்டு வைப்பார்கள்”.
அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்…”
இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.
இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு…” என்பதைக் காட்டினார்.
ஆனால் வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.
120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.
விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.
[su_heading size=”28″]17.03.2021 உபதேசம்[/su_heading]
விஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… ஞானத்தின் தன்மை வளரும்
இந்த உடல் வாழ்க்கையில் நாம் சேர்த்த சொத்து நம்முடன் வருகின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.நமக்கு அழியாச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரம் தான்.
2.அதைத் தான் கொண்டு போக வேண்டும்.
என் பிள்ளை என்றோ அல்லது என் குடும்பம் என்றோ எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் என்று யாரை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்தச் சொத்தைத் தேடி வைத்தோம் என்றால் உடலை விட்டுச் செல்லும் போது… அங்கே… அந்த உடலுக்குள் தான் புக முடியும்.
புகுந்த பின் அவர்களையும் தரித்திரம் ஆக்கிவிட்டு நஞ்சின் உணர்வினைச் சேர்த்து அடுத்து ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.
இல்லையென்றால் பேயாகப் போய் மற்ற குடும்பத்தையும் அழித்து நாய் பாம்பு தேள் போன்ற விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டி வரும்.
இது போன்ற தன்மையிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) அனுபவ ரீதியில் எல்லாம் கொடுத்தார்.
அது மட்டுமல்ல… இந்த விஞ்ஞான உலகில் இன்று கடுமையான விஷங்கள் பரவிக் கொண்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த விஷத்தன்மைகள் நம்மைப் பாதித்து விடக் கூடாது.
ஏற்கனவே இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்றார்கள். ஆனால் விஷ உலகம் தான் அழிகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின் கருவில் வளர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் (ஞானகுரு) கொடுத்துள்ளோம்.
கருவில் வளரும் அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். இந்த உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த ஆர்வத்தில் வரும் பொழுது அந்தத் தாய்மார்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்திருக்கின்றோம்.
ஆதியிலே தாயின் கருவிலே அகஸ்தியன் இருக்கும் போது அவன் எப்படி அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றானோ… உலகை அறிந்தானோ… அவன் உணர்வை எடுத்து வளர்ந்த அந்த மாதிரியான குழந்தைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த விஞ்ஞான உலகில் வரும் தீமைகளை அவர்கள் நீக்கப் போகின்றார்கள். விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று அது மோதி அழியும். ஞானத்தின் தன்மை வளரும்.
1.அகஸ்தியன் இந்தத் தெற்கிலே தான் தோன்றினான்
2.மீண்டும் இந்த தெற்கிலிருந்து தான் தீமைகளை நீக்கும் சக்தியும் உருவாகின்றது.
விஞ்ஞான உலகில் பேரழிவு வருகின்றது அங்கே…!
1.ஆனால் ஞானத்தின் வழி இங்கே வருகின்றது.
2.இது பேரழிவிலிருந்து மனிதனைத் தப்பச் செய்யும்.
உங்களை நீங்கள் நம்புங்கள். இதனுடைய நிலைகளை நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.
துன்பங்கள் ஒவ்வொரு நிமிடத்தில் அறியாது வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை கூட்டிக் கொள்ளுங்கள்.
ஒரு நோயாளியைப் பார்க்க நேர்ந்தால் அவர் நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதுவே நமக்குச் சொந்தமாக அழியாத சொத்து ஆகின்றது உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.
ஆனால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிச் செய்தான் என்று அதை எல்லாம் சொந்தமாக்கி விடாதீர்கள். ஏனென்றால் அந்தச் சொந்தத்தை எடுத்தால் மீண்டும் பிறவிக்கு வந்து விடுகின்றோம்.
ஆகவே…
1.அருளைச் சொந்தமாக்குவோம்
2.இருளை அகற்றுவோம்
3.மெய்ப் பொருள் காண்போம்
4.மெய் வழி வாழ்வோம்
5.அருள் ஞானம் பெறுவோம்
6.அருள் வாழ்க்கை வாழ்வோம்…!
இயல்பான வாழ்க்கையில் கனமான சுவாசம் இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்
பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.
ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.
நாடிகளின் வழி ஓடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.
“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.
நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”
இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்தினேன்.
என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.
இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?
ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?
கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருப்பார்கள். ஏகாதசி அன்று விரதமும் இருப்பார்கள். ஏனென்றால் சொர்க்க வாசலை அப்பொழுதுதான் திறப்பார்கள்.
முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.
அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.
உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம்.
பெரும்பகுதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது உயிர் தான்.
விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது… எப்பொழுது…?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.
ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது…? என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.
நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.
நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.
சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.
இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.
இது எப்பொழுது…?
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
[su_heading size=”28″]16.03.2021 உபதேசம்[/su_heading]
உட்கொள்ளும் உணவு பிடிக்கவில்லை என்றால் எப்படி வெளியே தள்ளுகிறோமோ அது போல் தீமைகளை உந்தி வெளியே தள்ள வேண்டும்
காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றேன்… அதற்குத்தான் உபதேசங்கள் வாயிலாக இங்கே பதிவாக்குகின்றேன் (ஞானகுரு)
மீண்டும் மீண்டும் இதை நினைவு கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கின்றது. இருளைப் போக்கிடும் சக்தியாக வளர்கின்றது.
1.ஆகவே உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சங்கடங்களைப் பார்க்கின்றீர்களோ
2.உடனே ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.
அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியன் துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது அந்த நேரத்தில் அதை நுகரும் பொழுது உங்களுக்குள் அதீதமாக வளருகின்றது.
ஏனென்றால் அன்றாடம் காலையில் இருந்து இரவு வரை பார்த்தால் எத்தனையோ உணர்வுகள் நம் மீது மோதுகின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை போன்ற இத்தனை உணர்வுகளும் நமக்குள் பதிவாகின்றது.
1.இந்த பதிவின் தன்மைகள் அனைத்தும் நம் ஆன்மாவில் இருக்கின்றது.
2.நம் உடலில் உள்ள அணுக்கள் அது ஒவ்வொன்றையும் வரிசையாக நுகர்ந்து சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரிலே மோதிய பின் அந்த எண்ணங்கள் எல்லாம் வரத் தொடங்குகின்றது.
நாம் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட… அவன் சண்டை போட்டான்… இவன் ஏமாற்றினான்… தொழில் இந்த மாதிரிப் போய்விட்டது… என்ற எண்ணங்கள் எல்லாம் வருகின்றது.
ரோட்டில் சென்றாலும்… நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட எத்தனையோ இது போன்று நமக்குள் அன்றாடம் பதிவாகிக் கொண்டே வருகின்றது.
இப்படிப் பதிவான உணர்வுகள் விளைய ஆரம்பிக்கும் போது நமக்குள் அந்த உணர்வுகள் அதனதன் உணர்வை உணவாக எடுத்து ஆன்மாவிலிருந்து நுகருகின்றது.
நுகரும் பொழுது உயிரில் பட்ட பின் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கிறது அப்பொழுது நல்ல அணுக்கள் சோர்வடைகிறது… சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
1.இந்த இடத்தில் யார் தவறு செய்தது…?
2.யாரும் தவறு செய்ய வில்லையே…!
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் வேதனைப்படுவர்களைப் பார்க்கின்றோம். இந்த வேதனையான உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அது வேதனைப்படச் செய்யும் அணுக்களாக உருவாகின்றது.
ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் துருவ நட்சத்திரம் நீக்கியது. அந்த அரும் பெரும் சக்திகளை நுகரும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம் இந்த உபதேச வாயிலாக.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்தால்
2.அது தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வருகின்றது.
இயற்கையில் சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மம் ஆகின்றது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மனிதன் உருவாக்கி அருள் உணர்வுகளை உயிர் வழி நுகர்ந்து உருவாக்கினால் அது பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவை சிறைப்பிடித்தான் முருகன்…!
ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகள் கொண்டு தீமை வருகிறது என்று தெரிந்து கொண்டபின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று உணர்வாக எடுத்தால் தான் அதை உருவாக்க முடியும்.
இதுவும் சந்தர்ப்பம் தான். அப்பொழுது தீமையை நீக்கும் சக்தியாக அது வரும். இது நம்மால் முடியாதா…?
என்னைத் திட்டினான்…! என்று சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்டபின் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று நாம் சொல்கின்றோம். இந்தத் தீமையான உணர்வு நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் அல்லவா…?
தடுக்காமல்… சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை அப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் அந்தத் தீமையான உணர்வுகள் உடலிலே விளையும்.
சாபங்கள் இடுவதும்… கொதித்துப் போய்ப் பேசுவதும்… அடிப்பேன் என்பதும்… குத்துவேன் என்பதும்… கொன்று விடுவேன்… என்றும் இது போன்ற உணர்வெல்லாம் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.
1.விளைந்த பின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவது போன்று குத்த ஆரம்பிக்கும்.
2.அந்த மாதிரியாக ஆன பின் ஐய்யய்யோ.. அம்மம்மா…! வேதனையாகச் சொல்லும் நிலை தான் வரும்.
பிறரை கொல்ல வேண்டும் எண்ணினோம்…! அந்த உணர்வுகளை நுகர்ந்த பின் அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்குகிறது.
அப்பொழுது நாம் தான் அந்த வேதனையை அனுபவிக்கின்றோம்.
பிறரைக் குத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் அதனின் வீரியத் தன்மை உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது.
1.ஆகவே நாம் அருள் உணர்வு பெற வேண்டும் என்று இங்கே தடுத்து நிறுத்தி விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மற்றவர்களும் பெற வேண்டும் என்று அவர்களுக்கு ஊட்டி
3.அந்தத் தீமையை உந்தித் தள்ள வேண்டும்… அப்போது தான் நம்மைக் காக்க முடியும்.
அத்தகைய “ஒரு காக்கும் சக்தி வேண்டும்…” என்பதற்குத்தான் அதிகாலை நேரத்தில் உயர்ந்த உணர்வின் தன்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
பதிவாக்கிக் கொண்ட பின் அடிக்கடி நீங்கள் அதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமையை அகற்றும் வல்லமையை நீங்கள் பெற வேண்டும்.
மூச்சுக் காற்று பற்றிய இரகசியம் – ஈஸ்வரபட்டர்
“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.
அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.
அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.
பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.
அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.
பஞ்ச பூதத் தத்துவப்படி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.
உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.
பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.
தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.
“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.
இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.
சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.
அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.
அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலக நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.
மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!
காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களும் ஞானிகளும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“எல்லா உயிரும் கடவுள்… எல்லா உடலும் கோவில்…,” அந்த கோவிலுக்குள் அசுத்தம் சேராது அருள் ஒளியென்ற உணர்வைப் படரச் செய்து மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டுவதே நம்முடைய வேலையாக இருக்க வேண்டும்.
1.பிறரின் உணர்வை நமக்குள் சேரவிடாமல்
2.நாம் நம் உடலான கோயிலுக்குள் அருள் ஞானத்தைப் புகுத்தி
3.இந்தக் கோயிலை எப்போதும் மகிழ்ச்சி என்ற நிலைகளில் உருவாக்க வேண்டும்.
குருநாதர் எனக்கு இப்படித்தான் உபதேசித்தார்.
அவர் என்னைப் புருவ மத்தியில் பார்க்கச் சொன்னார். அதே மாதிரி நீங்களும் பாருங்கள். குரு காட்டிய அருள் வழியில் அருளுணர்வுகளைப் பெறுவோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் ஏங்கியிருங்கள். அது சமயம்
1.இந்த உணர்வுக்குள்ளும்
2.நம் குரு உணர்வுக்குள்ளும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள்ளும்
4.நம் உணர்வுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கிறோம்.
5.அப்படி ஒன்றாகச் சேர்த்து வலிமையான நிலைகள் பெறச் செய்கிறோம்.
ஆகையினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம். அதை எல்லோரையும் பெறச் செய்வோம்.
[su_heading size=”28″]15.03.2021 உபதேசம்[/su_heading]
மின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்
மின்னல் பூமியிலே ஊடுருவிப் பாயும் பொழுது ஒரு கர்ப்பிணிப் பெண் அதை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தை சிதைந்து விடும்…! இது சாதாரண நிலைகள் கொண்டது.
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன்…
1.தாய் கருவிலேயே அந்த மின்னலைத் தணிக்கும் சக்தியைப் பெற்றதனால்
2.பிறந்த பின் அவன் மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்தான்
3.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டான்.
அந்த நஞ்சினை அடக்கிடும் அந்த உணர்வின் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…? என்பதைத் தான் அகஸ்தியன் பெற்ற அந்த நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாக எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
அகஸ்தியன் பிறந்த பிற்பாடு அவனின் வளர்ச்சியில் எந்தெந்தச் செடிகளில் அந்த நட்சத்திரத்தின் தன்மைகள் (மின்னல்) இருந்தது என்பதை அந்தப் பல கோடி தாவர இனங்களையும் அறிந்து கொள்கின்றான்.
மின்னல் வரும் பொழுது பார்த்தோம் என்றால் சில செடிகள் அபூர்வமாக விளையும்… அவைகளின் வளர்ச்சி வீரியத் தன்மை கொண்டதாக இருக்கும்.
எந்த நட்சத்திரத்தின் உணர்வு அந்தச் செடியில் இருந்ததோ அந்த மின் கதிர்களை இழுத்துச் சத்தாக உரமாக எடுத்து அதன் இயக்கமாக வளரும்.
ஆனால் இரண்டு நட்சத்திரங்களின் சக்தி உராய்ந்து மின்னலாகப் பரவி மோதப்படும் பொழுது செடிகளில் பட்டால் அது கருகி விடுகின்றது.
அதாவது
1.மின் கதிர்களை நுகரப்படும் பொழுது செடிகளுக்கு அது உரமாகிறது
2.மின்னலின் தன்மை அந்த செடியிலே அழுத்தமாக மோதி ஊடுருவும் போது செடிகள் கருகி விடுகின்றது.
ஏனென்றால் இரண்டு மின் அலைகள் அது மோதும் போது அதனின் அழுத்தம் வரும் பொழுது இந்தச் செடியோ மரமோ கருகி விடுகின்றது
ஆனால் மின் கதிர்கள் பாயும்போது
1.எந்தெந்த நட்சத்திரத்தின் மின் கதிர்களை அந்தச் செடி உட்கொண்டதோ அந்தச் செடி செழிப்பாக வளர்கிறது.
2.அதனால்தான் குருநாதர் அடிக்கடி “மின்னலைப் பார்…” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
அந்த மின்னலின் இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த மாதிரி எத்தனை வழிமுறைகளில் தெரியப்படுத்துகின்றார்.
மின்னல்கள் சில பேர் உடலில் பாயும்போது சூறாவளி போன்று மோதிய பின் அவர்களுக்குத் தெரியாதபடியே காக்கா வலிப்பு போன்ற நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இது எல்லாம் சுழற்சியின் தன்மையால் வருவது.
ஆனால் குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொல்லும் போது இது எப்படி எல்லாம் வளருகிறது…? அது எந்த நிலை…? என்ன செய்கிறது…? என்கிற வகையில் தெளிவாக எனக்குக் காட்டினார்.
அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் போது தாய் உடலில் பல விதமான உணர்வுகள் தாக்கப்பட்டு அவன் பிறந்த பின் அந்த மின் கதிர்களை நுகர்ந்து வளர்த்துக் கொண்டான்.
1.ஒரு மின்னெட்டாம்பூச்சி எப்படி உருவாகி வந்ததோ… எலக்ட்ரிக் மீன் எப்படி உருவாகி வந்ததோ…
2.அதே மாதிரி உணர்வுகள் இவன் உடலுக்குள் உணர்ச்சிகளாக ஆகி விளையத் தொடங்கியது.
இது அவனுடைய சந்தர்ப்பம்.
அப்படி விளைந்த பின் தான் இவனுடைய உணர்வுகள் கொண்டு எந்தெந்தச் செடிகளிலிருந்து என்னென்ன சக்திகள் வருகிறது…? என்று அவனால் நேரடியாகப் பார்க்க முடிகின்றது.
அதே சமயத்தில் ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி அந்த மின் கதிர்கள் போகும்போது அதை எந்தெந்தச் செடிகள் உட்கொள்கிறது…? அது எதனால் உரமாகிறது…? என்பதையும் காணுகின்றான்.
இரண்டு நட்சத்திரங்களின் சக்திகள் மோதுவது போல்… அதிலே உருவான செடிகளிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் கவரப்படும் பொழுது அது இரண்டும் மோதலாகி புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…? என்று அது அனைத்தையும் காணுகின்றான்.
தாய் கருவில் வளர்ந்து பிறந்த பிற்பாடு அகஸ்தியனுடைய வளர்ச்சியில் இதையெல்லாம் அறிந்து கொள்கின்றான் தன் அனுபவத்தில்.
காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் குருநாதர் நேரடியாக என்னைக் காணும்படி செய்தார். நேரடியாகப் பார்த்ததைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.
ஆனால் குருநாதர் சொல்லும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உண்மையை அறிய முடியாது. அதைப் போன்று யாம் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்தான் உங்களால் மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உண்மைகளை அறிய முடியும்.
1.ஆகவே இதை உற்றுக் கவனித்து
2.அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்
3.நீங்கள் எடுத்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
விஞ்ஞான உலகில் இன்று பரவிக் கொண்டிருக்கும் கதிரியக்கச் சக்திகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குள் உணர்த்துகின்றேன்.
மகரிஷிகளும் சப்தரிஷிகளும் தேடிக் கொண்டிருப்பவர்களில் நாம் ஏன் ஒருவராக இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்
பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த “மகா மகான்களும்… மகா மகரிஷிகளும்…” எத்தனையோ பேர் உண்டு.
எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?
இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில் என்று
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் இத்தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”
எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில்… காமத்தின் அடியாக எழும் மோகமாக… கீழான ஈர்ப்புச் செயலாக… “சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது…” உலக நடைமுறை வாழ்க்கையில் உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.
ஆனால் இந்த மோகத்தை வென்ற ஞானி..
1.உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தான் தோன்றும்…!”
மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே (எலி) மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!
ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.
ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!
நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியதில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெறவேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!
குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”
1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!
அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நம்முடைய மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான உணர்வுகள் தாக்கும். அந்த உணர்வுகளெல்லாம் நம்மைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் நம்மைக் கோபித்துத் திட்டுகின்றார் என்றால் திட்டுகிறான்… திட்டுகின்றான்… என்று எண்ணினால் அவன் உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
“அவன் உணர்வை…” வராமல் தடுக்க முடிகின்றதா…!
பிள்ளை மேல் பாசமாக இருக்கின்றோம். அவன் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணினால் அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றதே தவிர நம் உணர்வை இயக்கச் செய்ய முடிகிறதா…? முடியவில்லை என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம்.
ஒருவருக்குப் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம். கொடுத்த பணம் வரவில்லை என்கிற பொழுது அன்றைக்கு உதவி செய்தேன்… ஆனால் இன்று ஏமாற்றுகின்றானே…! என்று இந்த உணர்வைத்தான் வளர்க்கின்றோம்.
“இல்லை” என்று சொல்ல முடியுமா…?
ஆகவே இதைப் போல்
1.நம் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் குறைகளைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
2.இதை நீக்கும் உணர்வே வரவில்லை.
ஆறாவது அறிவு கொண்டு நம் உடல் நஞ்சைப் பிளந்த பின் தீமைகளை நீக்கக்கூடிய அறிவின் ஞானம் தீமை என்று தெரிகின்றது. தீமையை நீக்க வேண்டும் அல்லவா…?
அந்தத் தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். அது நமக்கு முன் படர்ந்துள்ளது.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எந்தக் குறைகளைக் காணுகின்றோமோ அந்தக் குறையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…”என்று புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.
நம் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இங்கே நிறுத்தி உணர்வின் தன்மை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.
[su_heading size=”28″]14.03.2021 உபதேசம்[/su_heading]
மின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்
சில வண்டுகள் முட்டை இடுகின்றது. அது முட்டை இடும் பொழுது
1.அந்த முட்டைகள் மீது மின்னல் பாய்ந்தால் அந்த மின் கதிர்கள் நேரடியாகத் தாக்கினால்
2.அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து மின் மினிப்பூச்சியாக மாறுகின்றது.
3.அதாவது முட்டைக்குள் மின்னல் பாய்ந்தபின் மின்னட்டாம் பூச்சியாக மாறுகின்றது.
குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.
மின்னல்கள் கடலிலே தாக்கும் பொழுது மணலாக மாறுகின்றது. அதனுடைய வீரியம் குறைந்து விடுகின்றது. ஆனால் அதற்குக் கீழே ஏதாவது ஒரு மீனினம் இருந்தது என்றால் இந்த மின்னல் தாக்கிய உடனே அந்த உடலில் ஊடுருவி அது சாகின்றது.
அது இறந்த பிற்பாடு இந்த உணர்வுகள் பாய்ந்த நிலைகள் கொண்டு அடுத்த சரீரம் அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
முதலிலே மின்னல் பாய்ந்த பின் இந்த உணர்வின் வலுவான பின் மீன் அழிகின்றது. ஆனால்
1.இந்த உயிரோடு சேர்த்து அந்த மின்னலின் தன்மை கருவாகின்றது
2.அடுத்த கணமே அது எலக்ட்ரிக் மீனாகின்றது.
பொதுவாக மின்னல்கள் தாக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் கடலில் அதிகமாக இருக்கின்றது. மீன் இனங்கள் மீது அது பட்டால் அதற்குள் கலந்து விடுகின்றது… எலெக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
உதாரணமாக நீர் உயரத்தில் இருந்து கீழே வேகமாக விழுந்தாலும் (நீர் வீழ்ச்சி) நாம் அதன் வழி சென்றால் அது நம்மைக் கீழே அழுத்தி விடும்.
ஆனால் இந்த எலக்ட்ரிக் மீன்கள் அதில் வரக்கூடிய காந்தப்புலனை எதிர்த்து மேலே செல்கின்றது.
1.அதிலுள்ள மேக்னட் வரப்படும் போது மீனுக்குள் காந்தம் அடைகின்றது.
2.அதை எடுத்து மேலே செல்லுகின்றது.
3.அதனுடைய காந்தப் புலனறிவு எப்படி இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.
அந்த மீனுக்குக் கையும் இல்லை கால்களும் இல்லை. ஆனால் எதிர்த்து நீந்திக் கொண்டு மேலே போகின்றது. அந்தக் காந்தப் புலனறிவு அதற்குள் ஈர்த்துப் போகின்றது.. இது எப்படி…? என்று காட்டுகின்றார் குருநாதர்.
சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் செடியில் தாக்கப்பட்ட உடன் அது எந்த உணர்வோ தாய்ச் செடியின் சத்தை எடுத்து அது வளர்கின்றது.
அதைப் போன்று தான் அக்காலத்தில் வாழ்ந்த மனிதன் வான் வீதியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டான். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இப்படித்தான் துருவ நட்சத்திரமாக ஆனான்.
அகஸ்தியனால் கண்டுணர்ந்து அவன் அறிந்து கொண்டது தான் மேலே சொன்ன அத்தனை நிலைகளும். இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்து கொண்ட பின் என்ன செய்கின்றான்…?
அந்த மின்னலின் உணர்வுகள் வான்வீதியிலே வரும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகரகின்றான். துருவ நட்சத்திரமாக ஆனான்.
அவனுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது…? தாய் கருவிலிருக்கும் போது அவன் பெற்ற சக்தி தான் அது.
தாயின் கருவில் இருக்கும் பொழுது அவனுடைய தாய் தங்களைப் பாதுக்காத்துக் கொள்வதற்காக
1.விஷத் தன்மைகள் எதுவும் தன்னைத் தாக்கி விடாதபடியும்
2.உயிரினங்களுக்கு எதிரான மூலிகைகளையும் பச்சிலைகளையும் போட்டு வைத்து இருக்கின்றார்கள்.
3.உடலிலே அரைத்துப் பூசிக் கொள்கின்றார்கள்.
அதே சமயத்தில் அந்த மணங்களை அந்தத் தாய்மார்கள் சுவாசிக்கிறார்கள். கணவன் மனைவி ஒன்றி வாழும் போது சந்தர்ப்பத்தில் கர்ப்பம் ஆகின்றார்கள்.
அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருக்கும் தாய் மின்னலைப் பார்த்தாலும் அது அடங்குகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல் கிடைக்கின்றது.
ஏனென்றால் கர்ப்பமான அந்தத் தாய் சுவாசிக்கும் நஞ்சை வென்றிடும் உணர்வுகள் எல்லாம் இரத்தத்தின் வழியாக கருவிலிருக்கும் குழந்தைக்கும் உணவாகப் போகின்றது.
1.அப்போது அந்த மின் கதிரின் உணர்வுகள் அதற்குள் அடங்கி வளரக்கூடிய தன்மை வருகின்றது.
2.இப்படிப் பத்து மாதங்களும் வளர்ச்சி அடைந்து பிறந்த பின்
3.எத்தகைய விஷங்களையும் முறிக்கக் கூடிய சக்தி பெற்றவனாக அகஸ்தியன் வளர்கின்றான்.
தியானத்தின் மூலம் அறிதல் உணர்தல் தெளிதல் என்ற நிலைக்கு வளர வேண்டும் – ஈஸ்வரபட்டர்
பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.
கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.
மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.
ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.
இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.
1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.
ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.
அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
1.ஞானத்தை அறிதலும்
2.அதன் தன்மைகளை உணர்தலும்
3.சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.
நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட வேண்டும்.
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெறவேண்டிய நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை “தன் உயிருடன் ஒன்றி… மலம் போன்று உண்டு”.
அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.
அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ
1.மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை
2.“ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக… ஒன்று” உருவாகின்றது.
3.யானைக்கும் இத்தகைய நிலை உண்டு “யானை மதக்கல்” என்பார்கள்.
4.நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.
உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.
அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்…” போட்டு வைப்பார்கள்.
அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று… “ஜொலிக்கும்”.
இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.
இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.
ஆனால் வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.
120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.
விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து
1.உயிர் வழி (புருவ மத்தியின் வழியாக) நாம் சுவாசித்தால்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும்.
ஒளியின் சரீரம் பெற முடியும்.
[su_heading size=”28″]13.03.2021 உபதேசம்[/su_heading]
உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்…?
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுதெல்லாம் நம் உயிரை ஈசனாக மதித்து நம் உடலுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் “உயிரே குருவாக இருக்கின்றது…” என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ… எந்தக் குணத்தை நுகர்கின்றோமோ… அந்தக் குணமே உயிரிலே பட்டு நம்மை ஆட்சி புரிகின்றது.
உதாரணமாக ஒரு கோபமான குணத்தை நுகர்கிறோம் என்றால் உயிரிலே அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மைக் கோபக்காரனாக ஆக்கி அது தான் நம்மை ஆட்சி புரியும் (நாம் இயக்குவது அல்ல அந்த உணர்வே இயக்குகிறது).
அதே போல் ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த உணர்வை நுகர்ந்தால் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த வேதனையான உணர்ச்சிகள் தான் நம்மை ஆட்சி புரியும்.
அதே சமயத்தில் சாந்தமும் ஞானமும் கொண்டு நாம் பேசினால் அதன் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு நம் வாழ்க்கையில் ஞானத்தின் உணர்வாக அது தான் நம்மை ஆட்சி புரிகின்றது.
ஆகவே நமது வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அவை அனைத்தும் உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்கின்றது. அதன் வழி தான் நம் சொல் செயல் எல்லாமே அமைக்கின்றது.
1.இதற்கு உயிர் பொறுப்பல்ல…
2.உடல் பொறுப்பல்ல…
3.நாம் நுகர்ந்த (அந்தந்த) உணர்வு தான் பொறுப்பு…!
அதை உனர்த்துவதற்குத்தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் தான் விஷ்ணு. நாம் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது. உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று சொல்லாகவும் செயலாகவும் இயக்குகிறது.
உதாரணமாக…
1.ஒரு காரமான உணர்வை நுகர்ந்தால் ஆ… என்று அலறுகின்றோம்.
2.ஒரு கசப்பான உணர்வை நுகர்ந்தால் ஓய்… என்கிறோம்.
3.அரிப்பின் தன்மை கொண்ட விஷத்தின் தன்மையை நுகர நேர்ந்தால் உச்… உச்… என்று சொல்கின்றோம்.
இவ்வாறு நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (மணங்கள்) உயிரிலே பட்டு அந்தந்த உணர்ச்சிகள் நம்மைச் செயல்படுத்துவதும் அந்த உணர்வின் வழிப்படியே நமக்குள் எண்ணங்கள் வருவதும் நம்மை இயக்குவதும் போன்ற நிலைகள் நடக்கின்றது.
இப்படி நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் பலவாறு இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையை (உதாரணமாகக் கோபம் என்றால்) மீண்டும் மீண்டும் எண்ணிப் பல முறை எடுத்தால் இந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து கோபத்தை உண்டாக்கும் கருத்தன்மை அடைகின்றது.
அதனால்தான் நம் இரத்த நாளங்கள் இருக்குமிடத்த்தை இந்திரலோகம் என்று சொல்வது. அதாவது இந்திரீகம்… என்று சொல்வதை இந்திரலோகம் என்று காரணப் பெயராக வைக்கின்றார்கள்.
நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது சங்கு… நாதங்களாக எழும்பி அந்த உணர்ச்சிகள் தான் நமக்குள் இயக்குகின்றது.
இருந்தாலும் இதை இயக்குவது யார்…? நம் உயிரான ஈசன் தான், உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஞானிகள் வைக்கின்றார்கள். ஈசன் என்றால்…
1.உருவாக்குபவன்…
2.உணர்த்துபவன்…
3.இயக்குபவன்…! என்று பொருள்.
ஆனால் நாம் நுகர்ந்தது எந்த உணர்வாக இருந்தாலும் அதைப் பல முறை எண்ணி எடுத்துக் கொண்டால் நம் உடலுக்குள் சென்று இரத்தத்திலே கருவுற்று அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.
ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் “எதை நுகர வேண்டும்…?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உயிரின் இயக்கத்தை அக்காலங்களில் கடவுளாகக் காட்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதச் சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.
உலக வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்
சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.
உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.
1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.
அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் (எலி) காட்டினார்கள்.
மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெறுவதற்காக வேண்டி கீழான நிலையை விலக்கி விட்டுத் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துப் போதனைகளும் கொடுக்கப்பட்டன.
இந்த மனிதச் சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாக ஒளிச் சரீரம் பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!
மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.
1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!
ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.
அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும்… சுருதி பேதங்கள் இருந்தாலும்… ஏற்ற இறக்கம் இருந்தாலும்…
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.
ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.
“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.
நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.
“ஈஸ்வரா..,” என்பது இயக்கச் சக்தி.
“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன…? என்று திருப்பிக் கேட்பார்கள்.
“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி… “பிரணவம்” என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.
யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.
இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.
அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்
அதை மாற்றி அமைப்பதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.
[su_heading size=”28″]12.03.2021 உபதேசம்[/su_heading]
துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டுதான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்
உதாரணமாக அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரைத் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அழுக்கு நீர் குறைந்து கடைசியில் காணாமல் போய்விடும்.
அதே போல் நல்ல தண்ணீரில் அழுக்கு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அது அழுக்காக மாறும். இப்படி இது இரண்டும் மாறி மாறி எது அதிகமோ அதன் வழி தான் செயல்படும்.
இதைத் தான் குருநாதர் எம்மை (ஞானகுரு) சாக்கடை அருகே அமரச் செய்து பன்றியின் செயலாக்கங்களையும் உணர்த்தி “கடவுள் என்றால் யார்…?” என்று காட்டுகின்றார்.
1.உன் உயிரே உள்நின்று இயக்குகின்றது… அது கடவுள்…!
2.நீ நுகர்ந்த உணர்வே உள்நின்று… அதுவும் கடவுளாக இயக்குகின்றது
3.நுகர்ந்த உணர்வு உள்நின்று இயக்கும் போது அதுவும் கடவுள் தான்.
ஆகவே சுவாசிக்கும் உணர்வின் தன்மை உள்நின்று உணர்த்துவது… இந்த “உயிர் தான் கடவுள்…” என்று உணர்ந்தபின்
1.ஆறாவது அறிவு கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால்
2.நுகர்ந்த உணர்வின் வலு எதுவோ அதன் வழிதான் உன் வாழ்க்கை வழி நடக்கும்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
நேற்றைய செயலாக இன்று நாம் மனிதச் சரீரம் பெற்றிருந்தாலும் இன்றைய செயலால் தான் நாளைய சரீரம் உருவாகிறது என்ற பேருண்மையைச் சாக்கடையில் அமரச் செய்து எனக்கு உணர்த்தினார் குருநாதர்.
இதை எல்லாம் குரு எமக்குச் சொல்லச் சொல்ல… அவர் உபதேசம் கொடுக்கக் கொடுக்க… அங்கே எத்தனையோ நாற்றம் இருந்தாலும்
1.நாற்றத்தையே காணோம்… எங்கேயோ போய்விட்டது
2.சாக்கடை அருகில் அமர்ந்து இருந்தாலும் எந்த நாற்றமும் எனக்கு வரவில்லை
3.எங்கேயோ அழைத்துச் செல்கின்ற உணர்வு தான் இருந்தது.
அப்பொழுதுதான் வான மண்டலத்தின் உணர்வுகளை எடுக்கச் செய்கிறார் குருநாதர்.
வானிலே ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வு ஒன்றுக்குள் ஆகி… விஷத்தின் தன்மை தணிந்து… “ஞானத்தின் உணர்வு ஒளியாக எப்படி மாறுகின்றது…?” என்று வான மண்டலத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
இந்தப் பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் உன் உயிர் உன் உடலுக்குள்ளும் பிரபஞ்சத்தைப் போன்று உருவாக்குகிறது. அந்தந்த உறுப்புகளாக உருவாகிறது.
நாம் நுகர்ந்த (சுவாசிக்கும்) உணர்வுகள் உடல் உறுப்புகளில் கலக்கப்பட்டாலும்
1.தீமை என்று வந்தால் அதை நீக்கும்… அதை வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறையாகி மனிதனல்லாத பிறவிக்குப் போய் விடுவோம் என்று காட்டுகின்றார்.
ஆனால் அந்தத் தீமைகளை வடிகட்ட வேண்டும் என்றால் குருவின் பலம் வேண்டும். குருவின் பலம் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இங்கே சேர்க்க வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை கொண்டுதான் வடிகட்டுதல் வேண்டும் என்று உணர்த்துகின்றார்.
ஆகவே நம் உயிரை ஈசனாக மதித்து… உயிரைக் குருவாக எண்ணி… ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எடுக்கும் அந்த அருள் ஒளியைக் குருவாக்கினால் இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்.
அத்தகைய நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் அடிக்கடி எலெக்ட்ரிக் போஸ்டில்.. கல்லைக் கொண்டு தட்டிக் கொண்டே இருப்பார்.
ஏன் சாமி…? போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்.
எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்பார். நான் தட்டுகிறேன்… ஆனால் ஏன்…? என்று நீ கேட்கிறாய்.
நான் டெலிஃபோன் செய்கிறேன்… தந்தி கொடுக்கின்றேன்…! “ஆண்டவனுக்கு…” என்பார்.
அதாவது தட்டும் ஓசை என்பது… உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலி ஆக்கப்படும் போது
1.காதிலே படுகிறது… உணர்வு ஒளியாகிறது.
2.அந்த உணர்வின் தன்மை இருளை நீக்குகிறது
3.எல்லோருக்கும் இந்த ஒளியான உணர்வு கிடைக்க வேண்டும் என்று நான் தட்டுகின்றேன்…! என்றார்.
போஸ்டில் (பைத்தியம் போல்) தட்டுவதை வைத்து இப்படியெல்லாம் நொடிக்கு நொடி எனக்கு உபதேசித்தார் குருநாதர்…!
உயரிய சுவாசம் எடுத்தால் நீல வண்ண ஜோதியைக் காணலாம் – ஈஸ்வரபட்டர்
பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதி சக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.
சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்
இயற்கையின் செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொள்ள இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?
எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.
பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.
சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.
பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?
ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.
வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.
இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.
இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.
1.இவற்றிலிருந்து நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் எந்த நிமிடம் தீமையான நிலைகளைக் கண்டாலும் சரி… அல்லது யாராவது சங்கடமான நிலைகளை நம்மிடம் சொன்னாலும் சரி… ஆத்ம சுத்தியை நாம் முறைப்படி எண்ண வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று வானை நோக்கி எண்ணுங்கள். தீமையான அலைகள் வருவதை இப்படி எண்ணி உடனே மறைக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நினைவில் கொள்ள வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று சொல்லி இங்கு மறைக்கச் சொல்வது என்பது என்ன…?
மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நமக்கு முன் இருப்பதை இந்தக் காற்று மண்டலத்திலிருந்து எடுப்பது தான் நாம் சாதாரணமாகச் சுவாசிப்பது.
ஏனென்றால் கடிகாரம் (ALARM) போல இருக்கின்றது. நம் உடல் முழுவதும் இழுப்பதை இது நெஞ்சுக்கு முன்னாடி குவித்துக் கொடுக்கிறது.
அப்போது
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியிலிருந்து வானை நோக்கி எண்ணி
2.நாம் நுகர்ந்த தீமையான நிலைகளைத் தடைப்படுத்தி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் இதைக் கூட்டவேண்டும்.
4.இல்லை என்றால் மற்ற எல்லா உணர்வுகளும் கலந்து வரும்.
ஈஸ்வரா என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தத் தீமைகளை அமுக்கி விடுகின்றது. (ஈஸ்வரா… ஈஸ்வரா… என்று சும்மா சொல்ல வேண்டியதில்லை உணர்வுடன் உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் எண்ணி வேண்டிச் சுவாசிக்க வேண்டும்)
அந்த மெய் ஒளியின் தன்மையைப் பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று இதைப் போலச் சொல்லும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்திற்கு வந்து விடுகின்றது.
உங்களுக்குள் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும். இருள் சூழ்ந்த நிலைகள் அனைத்தையும் அடிபணியச் செய்ய வேண்டும்.
உப்பு காரம் மிளகாய் போன்ற சத்துகளைத் தனித்துச் சாப்பிட முடியாது. ஆனால் அதை எல்லாம் அடக்கி மற்றதுடன் கலக்கச் செய்து சுவையாக ஆக்கி ரசித்துச் சாப்பிடக் கூடிய தன்மையாகக் கொண்டு வருகின்றோம்.
அதைப் போன்று தான்
1.நாம் பார்ப்போர் எத்தனையோ சங்கடமான நிலைகளில் இருந்தாலும்
2.அவர்கள் வேதனையாகவோ கோபமாகவோ பேசினாலும் கூட
3.நிச்சயம் அவர்கள் நல்லது செய்ய வேண்டும் நல்லது பெற வேண்டும்
4.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற
5.இந்த உணர்வை நாம் ஊட்டிக் கொண்டே வரவேண்டும்.
கடையில்…. “வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
என்னிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லாம் நலம் பெறுவார்கள் வளம் பெறுவார்கள் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்,
எங்களிடம் பொருள் வாங்குபவர்கள் குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும். உங்கள் கடை வியாபாரம் நன்றாக இருக்கும்.
தொழில் செய்கிறார்கள் என்றால் தொழில் செய்பவருக்கு உடல் நலம் பெற வேண்டும். மன பலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
அவர்கள் செய்யும் தொழிலில் எந்தப் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ அதை வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.
இதைத் தியானிக்க வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து உயிரில் வலுப் பெறச் செய்ய வேண்டும்.
[su_heading size=”28″]11.03.2021 உபதேசம்[/su_heading]
உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்
உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது நல்ல கிழங்கு… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் “உடலுக்கு நல்லது” என்று சொல்கின்றார்கள்.
நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
இன்னொருவர் வருகின்றார்…! ஐய்யய்யோ… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டார்… அவருக்கு வயிற்று வலி வந்து விட்டது… மிகவும் சிரமப்பட்டார்…! என்று சொல்கிறார்.
ஏனென்றால் சில வகையான கிழங்குகள் அது சக்தி வாய்ந்தது. ஆனால் அந்தக் கிழங்கை அவர் சாப்பிட்ட நேரம் எது…?
அவர் உடலிலே நோயாக இருக்கும் பொழுது.. ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் அவர் கிழங்கைச் சாப்பிட்டார். அதனால் அவருக்கு வயிற்று வலி வந்தது. அது தான் உண்மை.
ஆனால் “அவர் கிழங்கைச் சாப்பிட்டார் அதனால் மிகவும் அவஸ்தைப்பட்டார்…! என்ற உணர்வை ஊட்டிவிடுகின்றார்.
இதைக் கேட்பவர்கள் அந்தக் கிழங்கைக் கண்ணிலே பார்த்த உடனே எண்ணங்கள் பலவீனமடைந்து விடுகிறது. அதே உணர்வு வந்து உமிழ் நீரைக் கூட்டியவுடன் சாப்பிட்டால் என்ன நடக்கின்றது..?
அதே உபாதை இங்கே வந்து விடுகின்றது. வந்ததும் என்ன நினைக்கின்றோம்…?
கிழங்கைச் சாப்பிடாதே…! என்று அந்த ஆள் சொன்னார். அது சரியாகப் போய்விட்டது. நமக்கும் வயிறு வலிக்கிறது என்ற உணர்வு தான் இயக்கமாகின்றது.
1.ஏனென்றால் இது எல்லாம் நாம் எண்ணி எடுத்துப் பதிவாக்கும் உணர்வின் இயக்கங்கள்.
2.நம் உயிர் தான் இதை எல்லாம் இயக்குகின்றது.
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நம்மை ஆட்சி புரிகின்றது
4.இந்த ஈசன் தான் நம்மை ஆட்சி புரிகின்றான்…!
நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
இதை எல்லம் தெளிவாக உணர்த்துவதற்குத்தான் குருநாதர் என்னை (ஞானகுரு) சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார்.
பன்றி சாக்கடைக்குள் முகர்ந்து பார்த்து அதில் மறைந்துள்ள உணவுப் பொருளை “அந்த நல்லதை மட்டும் எடுத்து எப்படிச் சாப்பிடுகிறது பார்த்தாயாடா…?” என்று காட்டுகின்றார்.
ஏனென்றால் வராக அவதாரம் என்கிற பொழுது…
1.கழிவை எல்லாம் நீக்குகிறது… அதை நுகரவில்லை.
2.நல்லதை மட்டும் நகர்கின்றது…!
வாழ் நாள் முழுவதும் இப்படி நல்லதாகவே நுகர்ந்த பிற்பாடு என்ன செய்கிறது…? பன்றி உடலில் உள்ள கெட்டது எல்லாம் பலவீனமாகி வெடித்துவிட்டு வெளியிலே வந்து இந்த உயிர் என்ன செய்கிறது…?
மனிதனாகப் பிறக்கின்றது. தீமைகளை நீக்கும் உறுப்புகள் உருவாகிறது.
1.அதாவது… எந்தத் தீமைகளை நீக்கியதோ அதற்குத் தக்கவாறு மனித உடலின் உறுப்புகள் உருவாகி
2.அந்த உறுப்புகளான பிற்பாடு தீமையை நீக்கக் கூடிய சக்தியை உன் உடல் பெறுகின்றது
3.நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உன் உடலாக மாற்றுகின்றது என்றார் குருநாதர்.
பன்றியிலிருந்து தான் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று தெளிவாக்குகின்றார் குருநாதர்.
இதைத் தான் கடவுளின் அவதாரம் “வராகன்…” என்றும் அந்த வலிமைமிக்க சக்தியைப் பெற்றுத்தான் உயிர் நம்மை மனிதனாக்கியது என்றும்… எத்தகைய தீமைகளையும் நீக்கக் கூடிய வல்லமை பெற்ற இந்த நிலையில் “நம் உயிரான ஈசனை மதிக்க வேண்டுமா இல்லையா…?” என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.
நாடி என்ற காற்று நூல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன்…
1.அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
2.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
3.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.
வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்மாவின் சக்தியையே உயர்த்திட “நீல வண்ண…” இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.
கால நேரம் இரவு பகல் என்ற செயல்களை மனிதன் அறிந்து கொள்ள விநாடி நிமிடம் மணி என்று அறிவுப் பூர்வமாக உபகரணங்கள் கொண்டு காலத்தைக் கணித்தாலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தன் காலத்தை எப்படிக் கணித்தான்…? எதைக் கொண்டு காட்டினான்…?
பிண்டத்தைக் கொண்டே அண்டத்தை அளந்தான்.
1.பிண்டமாகிய இந்தச் சரீரத்தில்
2.சுவாசத்தின் ஓட்ட கதியில் உயர் ஞானத்தைச் செலுத்தி அறிந்து கொண்டான்.
தன்னை உணர்ந்த நிலையில் இந்தச் சரீரத்தின் உள்ளே நடக்கும் சகல காரியங்கள் கொண்டே வான இயலையும் உலக வாழ்க்கைக்குகந்த நல் நெறிகளையும் உலகினுக்கு ஈந்தான்.
நாழிகை என்று அன்று காட்டியது சொல் நாமத்தில் தான் இன்றைய மாறுபாடு. அறுபது நாழிகையை ஒரு நாள் என்று தன் சுவாசத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தான் அன்றைய சித்தன்.
சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.
1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.
சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து… உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.
சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயன்படும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து “அறுபது நாழிகை ஒரு நாள்…” என்று காட்டினான்.
மூலம் குறி நாபி இருதயம் கண்டம் அறுகோணக் கருவறை உச்சி என்றும் உச்சியின் மேல் பகுதி சிரசைக் கடந்த ஆகாயம் என்ற சூட்சமச் செயல்களை உணர்வதோடு அல்லாமல்
1.இந்தச் சரீரத்தில் ஓடிடும் சகல நாடிகளையும் அறிந்து
2.அவற்றில் பத்தைத் தெளிந்து
3.அவற்றிலும் சிறப்பு மூன்று என்று காற்று நூலை அறிந்துணர்ந்தான் சித்தன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.
ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கிப் பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.
அதி காலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.
அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.
உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள். அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.
சிலருக்குக் குறு…குறு… என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதைச் சுவாசிக்கின்றீர்கள்.
புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை. இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது.
அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.
நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம். உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தச் சக்தி பெறுகின்றது.
[su_heading size=”28″]10.03.2021 உபதேசம்[/su_heading]
பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!
சந்தர்ப்பத்தால் ஒருருவருகொருவர் கருத்து வேறுபாடு ஆகி சண்டை வந்து விட்டால் அவரை உதைக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்பொழுது அந்த உணர்வை உருவாக்கிக் கொடுக்கின்றது நம் உயிர்.
“உதைக்கப் போகின்றோம்…” என்ற அந்த வார்த்தையை அவர்கள் கேட்டவுடன் அதே உணர்வு அங்கே இயக்கப்பட்டு நம்மைத் திரும்ப உதைக்கச் சொல்கின்றது… அல்லது பயமுறுத்தச் செய்கின்றது…!
1.உதைத்து விடுவோம் என்ற பயமான பின்
2.தன்னைத் தாக்கி விடுவான்…! என்ற நிலையில் “பயந்து தாக்கும் நிலை” வந்து விடுகின்றது.
3.அதாவது… பயமுறுத்துகின்றான்… நம்மைக் கொன்று விடுவான்… என்ற எண்ணத்தில்
4.எதிராளி நம்மைக் கொல்வதற்கு முன் திருப்பி வேகமாக… பயத்தால் கொன்று விட வேண்டும் என்ற உணர்வு இயக்கப்படுகின்றது
ஆகவே பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது…!
தைரியமாக இருப்பவரிடம் நம்பிக்கையுடன் இருக்கலாம். அதை அடித்து விடுவேன்… இவனை அடித்து விடுவேன்… என்று சொல்பவர்களை நம்பலாம்.
ஆனால் ஒருவர் பயப்படுகிறார் என்று சொன்னால்
1.பந்திக்கு முந்து என்று சொல்வது போல் “பட்…” என்று அடித்து விடுவார்
2.பயப்படுபவர்கள் எந்த நிமிடத்தில்… எதைச் செய்வார்கள்…! என்று சொல்ல முடியாது
3.ஏனென்றால் பலம் இல்லை என்கிற போது “நம்மைத் தாக்கி விடுவான்…!” என்று அவன் முந்திவிடுவான்.
மற்றவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள். பயந்த உணர்வு கொண்டு தாக்கிவிடுவார்கள். தனக்கு இடைஞ்சல் செய்து விடுவான்… தன்னைத் தொல்லைப்படுத்துவான்… என்று உணர்வுகள் அவர்களுக்குள் வரப்படும் பொழுது… பயத்தால் தன்னை அறியாது தவறு செய்வார்கள்… நிச்சயமாக…!
ஆனால் “வேண்டும்…” என்று செய்வதில்லை.
உதாரணமாக சமையல் செய்யும் போது சிறிது பயம் ஆகிவிட்டால் குழம்பில் உப்பையோ சீரகத்தையோ காரத்தையோ அளவாகப் போட முடியுமா…? என்று பார்க்கலாம். ஒரு கணக்கையே சரியாக எழுத முடியுமா…? என்று பார்க்கலாம்.
சரியாக எழுத முடியாது.
அப்பொழுது இந்தப் பயம் என்ன செய்கின்றது…?
1.நம்மையும் வாழ விடுவதில்லை
2.சிந்திக்க வேண்டிய செயலையும் செயல்படுத்த முடிவதில்லை
3.பயத்தால் தவறு செய்யும் உணர்வுகளே அதிகமாகின்றது.
ஆகவே பயம் என்ற உணர்வு வந்தாலே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும். இல்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கிக் கொண்டே இருக்கும்.
அதே சமயத்தில் பயமான உணர்வை நமக்குள் அதிகமாக நுகர்ந்து விட்டால் நம் உடலில் உணர்ச்சிகள் கிடு…கிடு… என்று ஆகி நடுக்க வாதமே தோன்றும்.
ஒரு பேனாவை எடுத்துக் கையெழுத்தைக் கூடச் சரியாகப் போட முடியாது. ஒரு சாமானை எடுத்துச் சீராக வைக்க முடியாது.
ஏனென்றால் அந்தப் பய உணர்வுகள்
1.உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் அணுவின் மலமாகும் பொழுது
2.நம்மை இயக்கும் நரம்பு மண்டலங்களுக்குள் வரக்கூடிய இந்த உணர்ச்சிகள் அது வித்தியாசமாக மாறும்.
பயத்தால் ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்று சொன்னால் அதற்குக் காரணம் “நம் நரம்பு மண்டலங்களில் இழுக்கக்கூடிய இந்த அழுத்தம்… வலு இழந்து இருக்கின்றது…!” என்று அர்த்தம்.
இரத்தத்தில் வருவதைத் தான் அணுக்கள் எடுத்துச் சத்தாகக் குடிக்கின்றது. அந்த அணுக்களின் மலம் அமிலமாக மாறுகின்றது இதைப்போல சில நரம்பு மண்டலங்கள் அது அது மாற்றிக் கொள்ளும் தன்மை வருகின்றது.
பய உணர்வுகள் அதிகமாக வந்தால் நடுக்கத்தின் தன்மை கொண்டு பலவீனமான உணர்ச்சிகளைத் தூண்டும். நரம்பு மண்டலம் கிடு…கிடு… என்று ஆகிவிடுகிறது
எழுந்து ஒழுங்காக நடக்க முடியுமா…? என்றால் முடியாது. அப்போது என்ன செய்கின்றது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இத்தனை பெரிய பிழைகளை உண்டு பண்ணுகின்றது.
ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.
1.ஆகவே நம் உயிரின் தன்மை கொண்டு
2.நாம் எப்படி நல்ல உணர்வுகளை எடுக்க வேண்டும்…? என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நான் எதை எடுத்தாலும் எதை எண்ணுகின்றேனோ… அதை நீ உருவாக்கி விடுகின்றாய்… அதை நீ ஆட்சி செய்கின்றாய்..! ஆகவே என இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…! என்று உயிரிடமே நாம் வேண்டி
1.நீ எப்படி எல்லாவற்றையும் தெரிவிக்கின்றாயோ…
2.அறியச் செய்கின்றாயோ… அறிவை ஊட்டுகின்றாயோ… தெளிவாக்குகின்றாயோ…
3.அந்தத் தெளிவின் தன்மை நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அவனிடமே வேண்டுகின்றோம்
எண்ணியதை எண்ணியவாறு உருவாக்கித் தருவது நமது உயிர் தான்…! இதை உணர்தல் வேண்டும்.
பஞ்ச லிங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்தும் நிலைக்கு வருகின்றது.
அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.
இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” அனைத்தும் செயல் கொள்கிறது.
இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்க வேண்டும்…?
காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொள்ளும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளைச் சித்தத்தில் ஊன்றிப்பார்.
பஞ்சலிங்கம் என்பதே மனிதச் சரீரம் தான்…!
தன்னை உணரும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.
அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்குத் தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.
நம் பூமியின் தொடருக்கும் இதே தன்மைகள் உண்டு.
பூமியின் காந்த ஈர்ப்பின் தொடர்பில் சூரியன் உள்ளிட்ட மற்ற கோளங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குள் இயற்கைக் கனி வளங்களைச் சுவாசத்தின் மூலம் உள் நிறைத்தே வளர்ச்சி பெற்று வருகிறது.
அந்த ஈர்ப்பு நிலைகள் பூமிக்குள் எப்படி எங்கே உள்ளது…?
கடலினுள் இருந்தே எழுந்து லிங்க வடிவில் சுயம்பாகக் காந்தப் பாறைக்குள் மரகத வண்ண வடிவாகத் தோன்றிடும் தன்மைகளில் பூமித் தாயின் அத்தகைய ஈர்ப்பு சக்திகள் செயல்படுகின்றது.
1.சூரியன் ஒளிக்கிரணங்கள் பாய்ந்திடும் செயலிலும்
2.சுழல் வேகம் கொண்டு மேலிருந்து அந்தப் பாறைகளின் மீது விழும் நீர்ச் சக்தியின் தொடர்பிலும்
3.அதனால் ஏற்படும் “அதீத காந்தப்புலம்..”
4.பூமியின் பல்வேறு இடங்களில் இயற்கையாகச் செயல் கொள்ளும் இரகசியத் தன்மைகளில்
5.பாரதத் தேசத்தின் தென் கோடியில் மகரிஷிகளால் சூழப் பெற்ற ஓர் இடம் உண்டு.
பூமியின் கரைப்பிளவுகளில் உள் மறைவாக கடல் பூமியில் உள் நுழைந்து கடல் பகுதியிலிருந்து காணும் பொழுது வெளியிலே தெரியாதபடி “மரகத வண்ணப் பஞ்சலிங்கங்கள் உண்டு…!”
கடலினுள் அமைந்த அந்த ஐந்து மரகத லிங்கங்களில் மையத்தில் அமைந்த லிங்கத்தின் மீதே மலை உச்சியிலிருந்து விழும் நீர் விழுந்து மற்ற லிங்கங்களின் மீது மோதிடும் செயலில்
1.சூரிய ஒளிக்கதிர்களினால் பற்பல வண்ணங்கள் ஏற்படும் இடத்தின் காந்தப் புலமாக
2.அந்த இடமே மகரிஷிகளால் சூழப் பெற்றுள்ளது.
மலையின் உச்சியில் சங்கு வடிவமாக அமைந்துள்ள இயற்கை ஊற்றில் நீர் பீறிட்டு மேலே கிளம்பி கடலினுள் அமையப் பெற்ற மரகத லிங்கம் மீது விழும் ஊற்று நீரும் தனித்துவத் தன்மை கொண்டது.
யாரும் நெருங்கிடாத வண்ணம் இயற்கையின் அமைப்பில் மறைபொருளாக உள்ளது.
1.இயற்கை வனப்பால் ஆகாயத்தில் இருந்தும் காண முடியாது.
2.தரை மார்க்கமாகப் பகலிலும் இருளாகத் தோன்றும் கானகத்தினுள் விலங்கினங்களைக் கடந்து சென்றாலும் மரத்தில் வாழும் இரு இனத்தவரால் தடுக்கப்படும் ஓர் சூட்சமம் உள்ளது.
3.ஞானிகள் அறிவர் ஞயம்பட உரைத்தலை.
அரபிக் கடல் தவழும் கேரளத்தின் தென் கோடியில் மேற்கு மழைத் தொடர்ச்சியில் உள்ளது அந்த இடம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ பல கோடி உடல்கள் பெற்று வந்தாலும் “நம் எண்ணத்தால் தான் காக்கப்பட்டு… இன்று மனிதனாக வந்துள்ளோம்…!”
வாலி என்ற வலிமையான உணர்வுகள் அது இரண்யனாகி
1.அத்தகைய நஞ்சான உணர்வுகளை மாற்றி மாற்றி
2.பல கோடித் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வுகள் இரையாகி
3.அந்தத் தீமைகளை வெல்லும் உடல் அமைப்பாக உயிர் நம்மை உருவாக்கியுள்ளது.
4.அந்த உயிரை நாம் மதிக்க வேண்டும்.
நம் உயிரை மறந்தால் “யாரோ என் உடல்…!” என்ற நிலைகள் கொண்டு இந்த உடலின் இச்சை கொண்டு வளர்க்கும் பொழுது உடலுக்குள் இரண்யனாக மாறி மனிதான பின் மீண்டும் அரக்கனாக மாறுகின்றது.
அதாவது “தசப்பிரியன்” உடலின் மீது பற்று வருகின்றது. உடல் பற்று கொண்டால் இயற்கையின் உண்மையின் இயக்கத்தை அறிய முடியாது
தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற நிலையில் மனித உடல் பெற்று வந்த நாம்
1.மகிழ்ச்சியை உருவாக்கும் அந்த உணர்வுகளை மறந்துவிட்டால்
2.நமக்குள் அந்தச் சந்தோஷத்தை இழக்கின்றோம்
3.”சீதாவை இராவணன் சிறைப்பிடித்தான்…!” என்று இராமாயணம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
இதை மாற்றுவதற்கு என்ன வழி…?
நாம் சமையல் செய்யும் பொழுது பல சரக்குகளைச் சேர்த்து ஒரு ருசியாக மாற்றுகின்றோம். அதைப் போல பல இன்னல்கள் பல குறைகள் வந்தாலும் அதை நல்லதாக மாற்றிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு.
அப்படி நல்ல உணர்வாக மாற்றும் நிலைக்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
வேதனைப்படும் உணர்வை நாம் சுவாசித்தால் உயிர் வழியாகத்தான் (புருவ மத்தியின் வழியாக) அது உடலுக்குள் செல்ல வேண்டும். உயிர் வழியாகச் செல்லும் அந்தப் பாதையை நாம் அடைத்துப் பழக வேண்டும்.
1.நம் உடல் ஒரு குகை
2.குகை வாசலைப் பாறையைப் போட்டு மூடுவது போல்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் போட்டு மூடி விட்டால்
4.தீமை செய்யும் எந்த உணர்வுகளும் நமக்குள் போகாது
5.எந்தத் தீமையும் நம்மை இயக்காது…!
[su_heading size=”28″]09.03.2021 உபதேசம்[/su_heading]
உயிரைப் போன்று ஒளியின் ஸ்வரூபமாக நாம் ஆக வேண்டும்
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…! என்று பாடுகின்றோம்.
நம் உயிர் ஒளியாக இருந்து நாம் கவர்ந்த உணர்வினை (சுவாசித்தது) எல்லாம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
ஒரு விளக்கைப் போட்டு அதில் எந்த வர்ணங்களை இடுகின்றோமோ (பூசுகின்றோமோ) அந்த வர்ணம் தான் வெளிச்சமாகத் தெரியும்.
வெளிச்சமாகக் காட்டும் போது நிறம் என்ற நிலைகளை மாற்றி விட்டால்… ஒளி வெண்மையாகத் தான் தெரியும். ஆக அப்படி வெள்ளையாக இருப்பதைப் போன்று எங்கள் மனம் தூய்மையாக வேண்டும்.
நீ எப்படி ஒளியாக இருந்து தூய்மை ஆக்குகின்றாயோ அதைப்போல எனது உணர்வுகளும் அதே நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்ட அருள்வாய்…! என்று உயிரிடம் வேண்டுகின்றோம்.
1.நீ எப்படி அந்த வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல
2.என் எண்ணம் பிறருக்குச் சொல்லப்படும் பொழுது வெளிச்சமாகி
3.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவும்
4.நல்ல உணர்வுகள் பெறவும்… தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடவும் இது உதவ வேண்டும்.
இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால் இந்த உணர்வின் தன்மை உங்கள் செவிகளில் பட்டு அது ஆட்சி புரியும்.
1.நான் (ஞானகுரு) எதை எண்ணுகின்றோமோ அதுதான் என்னை ஆட்சி புரிகின்றது…
2.அப்பொழுது ஆட்சி புரிவது எது…? என்னுடைய எண்ணம்..!
3.ஆட்சி புரிய வைப்பது எது…! நமது உயிர்.
இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகளை இயக்கி நாம் எண்ணிய உணர்ச்சி நம்மை இயக்குகின்றது. ஆனால் அதை இயக்கச் செய்வது நமது உயிர் தான்.
1.இருள் என்ற நிலைகள் வரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது… சொல்லும் செயலும் இருண்டு விடுகின்றது
2.அதைக் கேட்போர் உணர்வுகளும் இருண்டு விடுகின்றது.
ஆகவே இதை எல்லாம் மாற்றுவதற்கு நீ எப்படி வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல் என் சொல் பிறரை அந்த வெளிச்சமான நிலைக்குத் தெளிந்த நிலைகள் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ உதவ வேண்டும். கருணையுடன் என்னை நீ ஏற்றுக் கொள்வாய்…!
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா… குருதேவா…! என்னை ஆட்கொண்டருள்வாய்.
ஆதிசக்தி என்பது விஷம்…!
1.ஆதியிலே அந்த விஷம் தாக்கித்தான் வெப்பமாகின்றது (நெருப்பு)
2.அந்த வெப்பத்தின் தன்மை தான் வெளிச்சமாகின்றது
3.ஆக அந்த உணர்வின் தன்மை இயக்கியது விஷம் தான்.
இப்போதும் நம் உயிரின் தன்மை வெப்பம் ஆவதற்குக் காரணமே அந்த விஷம் தான். விஷத்தின் தன்மை தாக்கப்பட்டுத் துடிக்கும் போது தான் வெப்பம் ஏற்படுகின்றது. வெப்பமாகும்போது ஈர்க்கும் காந்தம் வருகின்றது.
ஆகவே இந்த வழியில் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! அந்த ஆதிசக்தியின் இயக்கத்தின் தொடர் கொண்டு அந்த அருள் பெற்று நீ இன்று என்னை உருவாக்குகின்றாய்.
கருணைஸ்வரூபா…! என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…!
1.நஞ்சை எப்படி நீ ஒளி ஆக்கினாயோ அது ஒளியாக ஆனதோ அதே போல
2.இருளை நீக்கி ஒளி என்ற அந்த உணர்வுகளை நான் பெற வேண்டும்
3.அந்தக் கருணை நான் பெற வேண்டும்
4.நீ இருக்கும் அந்த ஒளியின் ஸ்வரூபமாக நான் ஆக வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் நோக்கம்.
மூவுலகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூற முடியும்.
அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.
மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”
பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாகக் குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.
அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.
உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது.
உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது. அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.
தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூலச் சக்திகளைத் தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.
“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!
மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி குணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.
மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?
இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனிதச் சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
தீமை என்ற நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையாக இருப்பது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா,
தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம் அதை வழி நடத்தி அதன் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் சொல்கின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்களால் வானை நோக்கிப் பார்த்து
2.ஏக்க உணர்வுடன் இருக்க வேண்டும்.
அதே உணர்வுடன் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது நாம் கண்ணால் பார்த்து உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர முடிகின்றது.
உதாரணமாக வேதனைப்படுவோரைக் கண்களால் உற்றுப் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வை உயிரின் காந்தம் இழுத்து நமக்குள் அறியச் செய்கின்றது.
1.கண்ணால் பார்க்கின்றோம்.
2.உயிரால் உணர்கின்றோம்.
இதே போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
2.அது வலிமையாகி விடுகின்றது.
வேதனைப்பட்டோர்களுக்கு அதை விசாரித்து நாம் உதவியும் செய்கின்றோம். வேதனை நமக்குள் வராமல் தடுக்க அடுத்து நாம் எண்ண செய்ய வேண்டும்…?
அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்துப் புருவ மத்தியில் எண்ணித் தடுக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.கட்டளையிட வேண்டும் – அது தான் சேனாதிபதி.
அதே சமயத்தில் தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் முதலில் சிறிதளவு போய்விட்டது. அது உடலுக்குள் புகாது அந்தத் தீமையான உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வது. ஏனென்றால் வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது கண்ணின் நினைவு வேதனைப்படுபவர் மீது தான் இருக்கும். அதைத்தான் உயிர் கவரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் இணைக்கும் பொழுது இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடைப்படுத்தப்படுகின்றது.
புருவ மத்தியில் தடைப்படுத்திய பின் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி ஆணையிட வேண்டும். ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா. இவ்வாறு உடலிலுள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
நாம் எண்ணியபடி அந்தத் தீமைகள் வராதபடி தடுக்கும் நிலைக்குத் தயாராகின்றது. இந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலில் சேர்க்கப்படுகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துத் தீயதை நுகராது தடுத்த பின்
2.விஷத்தை அடக்கும் சக்தியாக அமைந்துவிடுகின்றது
3.நாம் நுகர்ந்த தீமைகள் சிறுத்து விடுகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது அது குறைக்கப்படுகின்றது.
ஒரு தீயவனைப் பார்க்கும் பொழுதோ நோயாளியைப் பார்க்கும் பொழுதோ கண்ணின் கரு விழி “ருக்மணி” ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாக்குகின்றது. பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.
அடுத்த கணம் அதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால்
1.கருவிழி ருக்மணி நம் உடலுக்குள் பதிவாக்கிய
2.அந்த உணர்வுகளுக்கு (நோயாளி/தீயவன்) அருகிலேயே பதிவாக்குகின்றது.
3.துருவ நட்சத்திரம் அதைக்காட்டிலும் வலிமையானது.
4.மற்றவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… நிறுத்தி விடுகின்றோம்….!
அடுத்து அந்த நோயாளி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
1.அவர் உடல் நலம் பெற வேண்டும்.
2.அவர் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இந்த உணர்வுகளைப் பதிவு செய்து (RECORD) விடவேண்டும்.
4.இதற்கு மத்தியில் அவருடைய வேதனை என்ற நிலைகள் அடங்கி விடுகின்றது.
[su_heading size=”28″]08.03.2021 உபதேசம்[/su_heading]
துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்
ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிர் வழி கவர்ந்து புருவ மத்தியில் ஏங்கி தியானியுங்கள்.
இப்பொழுது உயிரிலே அந்தச் சக்திகள் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு மோதும் பொழுது அங்கே வெளிச்சம் வரும். இந்த உடலுக்குள் மகிழ்ச்சி வரும்.
1.உடலுக்குள் தீமை இருந்தால் எரிச்சல் வரும்… அது குறையும்… அந்தத் தீமை நீங்கும்.
2.எப்படி நெருப்பிலே ஒரு விஷத்தின் தன்மை பட்டால் அதிலிருந்து புகை வெளி வருகின்றதோ அதைப் போல
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் படும் பொழுது
4.தீமை என்ற உணர்வுகளைக் கருக்கி வெளி வரும்போது அந்த உணர்ச்சிகள் தெரியலாம்.
5.தீமைகள் அகலும்… நன்மைகளை உணர முடியும்… நன்மைகள் பெருகும்…!
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானியுங்கள். இது உங்களுக்கு ஒரு பயிற்சி…!
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
இத்தகைய வீரிய உணர்வுகள் பெருகும் பொழுது அது ஓரளவுக்கு நம் இரத்தத்தில் உள்ள தீய அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் பயம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தால்
1.அது உமிழ் நீராக மாறி அதுவே இரத்தமாக மாறி
2.இரத்தத்தில் அந்தந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக – “கரு முட்டைகளாக…” விளைந்து விடுகின்றது.
ஏனென்றால் இப்படி அது எது விளைந்ததோ அதன் உணர்வை அது இயக்கும். தீமையான உணர்வாக அது இயக்கத் தொடங்கும்.
அதை மாற்ற வேண்டும் என்றால் அந்தக் கருமுட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த… அண்ட நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஒரு தட்டான் பூச்சி தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு எந்தப் பூ மீது அமர்ந்து தன் முட்டைகளை இடுகின்றதோ அந்தப் பூவைப் போல நிறம் கொண்ட ஒரு பட்டாம் பூச்சியாக வருகின்றது.
தட்டான் பூச்சி தான் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. நெல் செடிகளில் தட்டான் பூச்சி முட்டை இட்டால் நெல் பூச்சிகளாக உருவாகின்றது.
இதைப் போன்று தான் நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து
1.இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கருக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணையச் செய்தால்
2.அது நல்ல கரு முட்டையாக மாற்றி நல்ல அணுக்களாக நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதன் வழியில் உடலிலே நோய் வராது தடுக்க முடியும். பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றிக் கொள்ள முடியும்.
அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்
சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன…?
1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்…. உடலோ அசைவம்…!
4.பூமி அசைவம்… பூமி பெறும் ஒளியோ சைவம்…!
இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும்.
அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.
ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.
அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.
மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.
இந்தக் கலியான உலகில் யாம் (ஈஸ்வரபட்டர்) சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம்.
அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.
சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.
அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து உதவி செய்யும் பண்புடன் நாம் சென்றாலும் இந்தப் பண்பால் கவரப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இயக்கித்தான் அந்தப் பண்பின் அன்பால் அவர்களுக்கு நன்மையைச் செய்கின்றோம்.
அதன் மூலம் நன்மைகளை அவர்களுக்குச் செய்தாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.சூரியன் எவ்வாறு தனக்குள் வரும் நஞ்சினை வெளியிலேயே மோதி வீழ்த்துகின்றதோ
2,மகரிஷிகள் எவ்வாறு தீமைகளை வீழ்த்தி உணர்வை ஒளியாக (நன்மையின் சக்தியாக) மாற்றிக் கொண்டார்களோ
3.அதைப் போல நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அந்தத் தீமைகளை வீழ்த்திட வேண்டும்,
அது எவ்வாறு…?
நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வின் தன்மைகள் வெளியிலிருந்து தான் நம் ஆன்மாவிற்குள் வருகின்றது. ஆன்மாவில் வந்த பின் தான் மூக்கின் வழியாகச் சுவாசிக்கச் செய்து அதைப் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிர் நுகர்கின்றது.
உயிரிலே பட்ட பின் இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் அந்தச் சத்தைப் பரப்புகின்றது.
அதாவது தீங்கு செய்கின்றான்… தீங்குடன் இருக்கின்றான்… வேதனைப்படுகிறான்…! என்ற இந்த உணர்வுகளை எல்லாம் கண் கவர்ந்தாலும் இங்கே ஆன்மாவாக மாற்றி உயிரின் இயக்கத்தால் ஈர்த்து உணர்வின் அலைகளைப் பரப்பி “அகக்கண்ணாக…!” இருந்து நமக்குள் உணர்த்துகின்றது உயிர்.
1.புறக்கண்களால் நாம் பார்த்துக் கவர்ந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்றி
2.அது உயிருடன் ஒன்றும் பொழுது இதை அகக்கண்ணாக மாற்றி (உள் உணர்வாக) உடலுக்குள் உணர்த்துகின்றது.
3.இப்படித்தான் பிற தீமைகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
இதைப் போன்ற விளைவுகளிலிருந்து தப்புவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற வலுவான உணர்வைத் தனக்குள் பதிவு செய்து புறக்கண்ணின் நினைவை அகக்கண்ணான உயிருடன் ஒன்றி உள்முகமாகத் தனக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
இப்படிப் பல முறை சொல்லி உள்ளே செலுத்தும்போது நம்மை அறியாத தீமைகளை அகற்றுவதும் அந்த ஞானியின் உணர்வு இங்கே வரப்படும் போது தான் நம் ஆன்மாவில் இருக்கும் அந்தத் தீமைகளைப் பிளக்கவும் செய்கின்றது.
தீமையின் தன்மையை பிளக்கும் இந்த நிலையைத்தான் விநாயகர் தத்துவத்திலேயும் காட்டப்பட்டது. மாரியம்மன் ஆலயத்திலும் காட்டப்படுகின்றது.
ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகின்றான் என்றால் அவனை எண்ணி எண்ணி “எனக்குத் துன்பம் செய்தான்…!” என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இறந்த பின் அவன் உடலிலே தான் சேர்கின்றோம்.
குடும்பத்தில் பாசத்தால் “என் பையன் அடுத்து என்ன செய்வான்…!” என்று எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வரும் போது பையன் உடலிலே சென்று நாம் நோயைத் தான் உருவாக்க முடியும்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விலகி அந்த மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி மெய்ப் பொருளை நாம் காண வேண்டும்.
ஆகவே அந்த மகா ஞானிகள் நமக்குக் காட்டிய அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக எடுத்து அந்தச் சாஸ்திர விதிப்படி உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.
[su_heading size=”28″]07.03.2021 உபதேசம்[/su_heading]
நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் பிரதி உபகாரம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…!
நம் குடும்பத்தில் அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள் நன்மை செய்தபின் அந்த நம்மை செய்தவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்…?
1.அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்…
2.எனக்கு எல்லா வகையிலும் நன்மைகளை வழிவகுத்துக் கொடுத்தார் என்று அவரை எண்ணி ஏங்குகின்றோம்.
ஆனால்… சந்தர்ப்பவசத்தால் அவர் உடலை விட்டுப் பிரிந்தால் அவரை நாம் மீண்டும் எப்படி எண்ணுகின்றோம்…? நம் எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?
எனக்கு எவ்வளவோ உபகாரம் செய்தார்… போய்விட்டாரே…! எனக்கு இனி யார் உதவி செய்வார்கள்…? என்று மிகவும் வேதனைப்படுகின்றோம்.
அதற்கு முதலில்… அவர் நோயுடன் வாடும் பொழுது “நல்ல மனிதர் இப்படி நோயுடன் வாடுகின்றார்…” என்ற உணர்வை நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
அவர் உடலை விட்டுப் பிரியும் பொழுது…
1.நல்ல மனிதர் போய்விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு அவர் வேதனைப்படும் காலத்தில் எடுத்த உணர்வு நமக்குள் இருப்பதனால்
3.அந்த உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது.
நமக்குப் பல நல்லதைச் செய்தார். ஆனால் உடலை விட்டு பிரியும் பொழுது அவரை எண்ணி நாம் ஏங்கி இழுக்கப்படும் பொழுது அவர் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகிறது.
வந்த பின் அவர் எந்தக் கஷ்டங்களை எல்லாம் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது.
ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார் ஆனால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்
1.நம்முடைய அறியாமை… பண்பும் அன்பும் கொண்டு பரிவுடன் நாம் எண்ணும் பொழுது
2.அவர் ஜீவன் பிரியப்படும் பொழுது வேகமான உணர்வுடன் நாம் எண்ணும் பொழுது நமக்குள் வந்து விடுகின்றது.
நம் உடலுக்குள் வந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலிலும் அது கவரப்பட்டு நமக்கும் அவர் உடலில் இருந்த நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
அந்த ஆன்மா நமக்குள் வந்தபின் இங்கேயும் அந்த நோயின் விஷத்தை வளர்த்து நாமும் இறந்தபின் அடுத்து மனித உடலுக்குள் செல்லாதபடி உடலை விட்டுச் சென்றபின் விஷத்தின் தன்மை கொண்ட உடலுக்குள் தான் செல்வோம்.
மாடு ஆடு இவைகளெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் அதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலை மாற்றிக் கொள்கின்றது.
மானும் யானையும் புலியும் நரியும் நாயும் இவை எல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப விகிதாச்சாரப்படி அந்த உறுப்பில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.விஷத்தின் இயக்கத்தால் தான் அதன் ரூபங்கள் உருவாகின்றது.
2.உயிரால் அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்தந்த உடல்கள் எப்படி மாறுகின்றது என்பதனை
3.குருநாதர் உயிரின வாழ்வில் ரூப மாற்றங்கள் எவ்வாறு என்று தெளிவாகக் காட்டுகின்றார்.
ஆகவே இந்த வழியினை எல்லாம் தெளிந்து கொண்ட பின்னும் நமக்கு எவ்வளவோ நன்மை செய்தார் என்றாலும்… இனி அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?
அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில்… நோயினால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
3.எல்லோருக்கும் நன்மை செய்த அந்த ஆன்மா இன்னொரு உடல் பெறாத நிலையில்
4.அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று யாராவது நாம் எண்ணுகின்றோமா…?
இல்லை…!
அதற்கு மாறாக அவரை மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அவரின் வேதனையான உணர்வுகளை உருவாக்கப்பட்டு நாமும் இறந்த பின் மீண்டும் மனிதனல்லாத உருவாக உருவாக்கத்தான் நாம் பயன்படுத்த முடிகின்றது.
ஆனால் நாம் அவர்களை மீண்டும் பிறவிக்கு வராதபடி அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்… பிறவி இல்லா நிலையும் அடையச் செய்ய முடியும்.
அது தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி…!
சைவ சித்தாந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால்… “வளர்ப்பிற்கே வழியில்லை…!”
ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.
1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.
ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.
அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.
ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”
மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு…!
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை…!
ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3.மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.
சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.
அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.
வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.
அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.
ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.
அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.
புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.
உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?
கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.