மனிதனுக்கு ஜாதகம் இல்லை… எண்ணியதை உருவாக்கக் கற்றுக் கொண்டவன் தான் மனிதன்…!

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… எண்ணியதை உருவாக்கக் கற்றுக் கொண்டவன் தான் மனிதன்…!

 

எத்தகைய தீமை வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினைக் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால்
1.அந்த அருள் ஒளி இங்கே இருளை மாய்க்கும்
2.உணர்வின் தன்மை இரண்டற இணைக்கும்… அருள் ஒளி பெருகும்.

திருமணம் ஆகும் போது மணமக்களை ஆசீர்வதிக்க வருபவர்கள் எப்படி வாழ்த்த வேண்டும்…?

அதாவது திருமணத்திற்கு வரும் அனைவரும் அந்த ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணித் தியானித்து அந்த உணர்வினைப் பெற்ற பின் தன் பார்வையும் செயலும் கொண்டு மணமக்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்ப வேண்டும்.

1.திருமணமாகும் பொழுது எல்லோரும் சேர்ந்து மணமக்களுக்கு இத்தகைய வாழ்த்தினைப் பாய்ச்சப்படும் போது
2.திருமண நாளை அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்
3.அவர்கள் வாழ்க்கையில் அது தீமையை அகற்றும் நாளாக வருகின்றது.

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் மனவி இருவரும் எண்ணும் போது இரு மனமும் ஒன்றுகின்றது.

இருள் சூழாத நிலைகளும் பேரருளை இருவருக்குள்ளும் உருவாக்கும் கருவின் தன்மையும் உருவாகின்றது.

வெளியில் சென்று விட்டு வரும் கணவன்… எத்தகைய தீமைகளைப் பார்த்து அல்லது நுகர்ந்து வந்தாலும்… அந்தத் தீமையின் சொல்லை மனைவியும் கேட்க நேர்ந்தாலும்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டுமென்று
2.இருவரும் ஒன்றாக எண்ணப்படும் பொழுது தீமைகள் வளரவிடாது தடுக்கும்…!

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இன்று ஜாதகம் பார்ப்போரும் சரி கேட்போரும் சரி எந்த நிலையில் இருக்கின்றனர்…?

குடும்பத்திலோ தொழிலோ கஷ்டம் என்று அங்கே சென்றால் காசுக்காக வேண்டி தோஷங்கள் இருக்கிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது… சனி இங்கே பார்க்கின்றது…! என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக இன்னென்ன உபசாந்திகளையும் சாங்கியங்களையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.

கணித்துச் சொல்லும் போழுது… கூட கொஞ்சம் இரண்டு எட்டு வைத்து அதை கூட்டிச் சொல்லி இருப்பான். ஜாதகம் தெரிந்தவர்களே வந்தாலும் கூட…
1.சனி வக்கிரமத்தில் இருக்கின்றது
2.இதனுடன் சேர்க்கப்படும் பொழுது இன்னென்ன முறிவுகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னால்
3.ஆமாம்… ஆமாம்… செய்தால்தான் சரியாக வரும்… நன்றாக இருக்கும்…! என்பார்கள்.

இவரும் ஜாதகம் பார்ப்பவர் அவரும் ஜாதகம் பார்ப்பவர்…! இவன் சொன்ன தவறை மறைப்பதற்கு காசு கொடுத்து மறைக்கச் செய்கின்றான்.

ஆனாலும் ஜாதகக்காரன் சொன்ன உணர்வு… இவருக்குள் பதிந்த அந்த விஷத்தின் தன்மை கொண்டு
1.கஷ்டம் என்று வரும் பொழுது… “அன்னைக்கு அந்த ஜோசியக்காரன் சொன்னான் அல்லவா…” என்ற எண்ணம் தான் வரும்
2.அந்த ஜாதகம் சொன்னபடிதான் நடக்கின்றது… அந்த விதிப்படிதானே நடக்கும்…! என்று சொல்வார்கள்.

விதிப்படிதான் நடக்கும் சென்று சொன்னாலும் ஏன் இந்த விதியை மதி கொண்டு வெல்லும் சக்தியை நாம் ஏன் பெற முடியாது…? என்று சிந்திப்பதில்லை.

பிறந்ததிலிருந்து ஜாதகத்தைப் பார்த்து நல்ல காலம் வரும் கெட்ட நேரம் வரும் என்று எல்லாம் செய்கிறார்கள். தொழிலையும் நல்ல நேரம் பார்த்துதான் வைக்கின்றார்கள்.
ஆனால் நஷ்டம் ஆகிவிட்டால்…
1.விதி…! இப்படி நடக்கின்றது என்ன செய்வது…? என்று
2.இதை அவர்கள் சமாதானப்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஜாதகம் ஜோதிடத்துடன் பார்த்து எல்லாம் செய்து… அடுத்து கோவிலுக்குச் சென்று அங்கே நஷ்டமானதையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.என்னமோ தெய்வம் என்னைக் கைவிட்டுவிட்டது
2.என் விதி என்னிடம் விளையாடுகிறது…
3.என் விதியினால் தெய்வமே என்னை விட்டு விலகிச் சென்று விட்டது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றார்கள்.

மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் திறனைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத்தான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி உங்களுக்கு அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்த மதி கொண்டு விதியை மாற்ற முடியும். ஆலயத்தின் பண்புகளும் அது தான். மனிதனுக்கு ஜாதகம் இல்லை…!

Leave a Reply