இடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கரங்களைச் சேர்த்து
2.சரீரத்தில் தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?

இடும்பன் என்றால் யார்…?

1.நல்வினைகளுக்கு எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.
4.இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள் போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
5.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!

இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டது.

1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

இடும்பனால் காட்டப்பட்ட தீவினை குணங்களைப் பற்றி போகர் அறிந்திட்ட வழியில் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணங்கள்) நீக்கிய தன்மையில் முருகா…! என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.

போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.

Leave a Reply