ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

 

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

Leave a Reply