
மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?
நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.
அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.
அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!
யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.
ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!
ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.
1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.
என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.
இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.
அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்… அ
2.ந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.
சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.
ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.
அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான்…! என்னுடைய வேலை..!
குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.