
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்
இன்றைய உலகில் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் நமக்குள் புகாது தடுக்க வேண்டும்…!
காரணம்… விஞ்ஞான அறிவால் டி.வி. கம்ப்யூட்டர் (எலெக்ட்ரானிக்) மூலமாகவோ அல்லது உணவுப் பயிர்களுக்குள் தூவப்படும் பூச்சி மருந்துகளினாலோ பல வகையில் நஞ்சின் தன்மை தாவர இனங்களில் படர்ந்து கொண்டுள்ளது.
அது உணவுடன் கலந்து உடலுக்குள் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து
2.விஷத் தன்மையை அதுவும் ஈர்க்கும் நிலை பெற்றுவிடுகின்றது.
விஷத் தன்மையை ஈர்க்கும் சக்தி பெறப்படும் பொழுது கை கால் குடைச்சல் சோர்வு விஷக் காய்ச்சல் இதைப் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகின்றது.
விஷத் தன்மைகள் அதிகமான அளவில் உணவுடன் கலந்து வருவதால் கேன்சர் நோயும் அதிகமாகப் பரவுகின்றது. அதே போல் எய்ட்ஸ் என்ற நோயும் விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டது தான்.
ஒவ்வொரு நாட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும் பரீட்சித்துப் பார்க்கின்றேன் என்று கொண்டு சென்று அதை அவர்கள் மற்ற கெமிக்கலில் கலக்கச் செய்து விஷமான அணுக்களை மீண்டும் உருவாக்கி அதிகரித்து விட்டனர்.
அதையே புதிதாக ஒரு பொருளாக உருவாக்கி… மனிதனுக்குள் கலக்கச் செய்து… விஷத் தன்மைகளைப் படரச் செய்து… (எயிட்ஸ் நோய்)
1.மக்களின் உடலைச் சிறுகச் சிறுக நலியச் செய்து
2.அந்த நாட்டையே சூனியமாக்கும் நிலைக்கு அமெரிக்காவில் அதைச் செய்தார்கள்.
ஆனால் அவன் நாட்டிலேயே முதலில் பரவியது. அங்கே பரவிய அதனுடைய தொடர்கள் மனிதனுக்கு மனிதன் பேசும் பொழுதே பரவு தன்மை வந்தது.
ஏனென்றால் அந்த எயிட்ஸ் நோய் அணுக்கள் மிகவும் விஷம் கொண்டது… அது வீரியமாகப் பரவும் தன்மை பெற்றது.
“எயிட்ஸ் நோய் உள்ளவர்கள்” அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் அந்த நோய் மாறிவிடும்.
இதைப் போல் கேன்சரில் இருந்தும் மற்ற நோயிலிருந்தும் விடுபட வேண்டும். சர்வ நோய்களையும் நீக்கும் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
1.இந்தத் தியானத்தின் மூலமாக அந்த அணுக்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அனுதினமும் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.