அவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Tap root for Spirituality

அவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.

காரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”
1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.
2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.
3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்
4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…!
5..அவர் குணத்தை அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.
6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…!

ஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.

மிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.

தன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.

அதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் தந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.

இப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.

மனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.

இத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்
1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால் தான்
2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்
3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.

இதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.

சித்து நிலையின் செயல் முறை எது…?

ஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று
1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்
2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி
3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply