ஞானத்தின் சக்திகளை எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…?

Divine blessings

ஞானத்தின் சக்திகளை எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…?

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெறவேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெறவேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

Leave a Reply