இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நுகர்ந்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது
இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளிமயமாக ஆக்குகின்றது சூரியன்.
அதே போல இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
2.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
3.உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனவன் அகஸ்தியன்.
4.மனிதனாகப் பிறந்த ஞானிகள் அகஸ்தியன் வழியில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் கதிரியக்கங்களைத் தங்கள் உடலிலே சேர்த்துக் கொண்டனர். ஒளி உடல் பெற்றனர்.
இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.
இருபத்தியேழு நட்சத்திரங்களின் உறுதுணை கொண்டது வியாழன் கோள். அதே இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்திகளையும் முழுமையாகப் பெற்றது சூரியன்.
இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தி பெற்று அதனின் உணர்வை இணைத்துத் தான் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழச் செய்யும் சக்தி பெற்றது.
இருபத்தியேழு நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பலவிதமான உணர்வுகளை எடுத்து மனிதனாகும் பொழுது அது முழுமை அடையும் பருவத்திற்கு வருகின்றது.
ஆனால் மனிதனின் நிலைகள் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் மனித நிலையிலிருந்து இழி நிலையான சரீரமாக உயிர் மாற்றிவிடும்.
ஆகவே அதைப் போன்று ஆகாதபடி
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.ஒளியின் உடலாக இருக்கும் அதனை நாம் சிறுகச் சிறுக நுகர்ந்து
3.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
4.அவ்வாறு செய்தால் ஒளியின் உடலாக உயிரின் துணை கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
5.மகரிஷிகளைப் போன்று நாமும் ஒளி உடல் பெற முடியும்.