கை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…? எப்படி நீக்குவது…?

Health bliss

கை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…? எப்படி நீக்குவது…?

அடுத்தவரிடம் கஷ்டத்தைக் கேtகும்போது கேட்பபவருக்குக் கைக் கால் குடைச்சல். வீட்டில் அமர்ந்து கேட்டால் கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம்.

பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள். அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்துப் பேசினார்களோ அங்கேதான் அமர்ந்துப் பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்தவுடன் இந்த இராமாயணம் தான்…! சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்…? என்பார்கள்.

ஆக இந்த உணர்வுகள் அவர்களைக் கண்டவுடன் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும். அதே சமயத்தில் காதிலும் கேட்போம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம்.

வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தாலும் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலைவலி எல்லாம் வந்துவிடும். அப்புறம் டாக்டரிடம்தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தால் உடனே எழுந்திருந்து விடலாம்.
1.ஆனால் அடிக்கடி சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.உடலுக்குள் அங்கங்கே விஷம் தேங்கி நிற்கும்.
3.பேசிய சங்கட உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பிராணவாயு நாம் மூச்சு எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும்.

இந்த இடத்தில் தடைப்பட்டால் என்ன ஆகும்…?

நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் சீராகத் துடிக்க வேண்டும். இந்தச் சங்கடமும் சலிப்பும் போய் மோதியவுடன் அந்த இடத்தில் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.
1.அது தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி நடக்க முடியாமல் கூட வரும்.
2.நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படி வலி வரும்.
3.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.
4.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.
5.அந்த விஷமான தன்மைகள் பலவீனப்படுத்தும்.
6.நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும்.

சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்மசுத்தி செய்து வாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். எத்தொழிலே முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும். நாளைய விஞ்ஞான அழிவுகளில் இருந்து வரக்கூடிய சில விஷத் தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ளவும் உதவும். சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சயப்படுத்தி விடாதீர்கள்.

ஆகையினாலே வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானமிருங்கள். இறந்தவர்களுடைய உயிராத்மாக்காளை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேர்ந்து அந்த உயிராத்மா அது ஒளிசரீரம் பெற வேண்டுமென்று விண் செலுத்துங்கள்.

அவசியம் இதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலிலிருக்கிறது. இந்த முறைப்படி இந்தத் தியானத்தைச் செய்து வாருங்கள்.

பௌர்ணமி தியானத்தில் எல்லாம் உங்களுக்கு அந்தச் சக்தியை அதிகமாகக் கொடுக்கிறோம். உங்கள் புலனறிவுக்கு விண்ணை விட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு அந்த விண்ணுடன் தொடர்புக் கொள்ள வைக்கிறோம்.

அதே சமயம் இந்த இறந்தவர்களின் உயிராத்மாவை நீங்கள் எண்ணி உந்தி அங்கே தள்ள வேண்டும். விஞ்ஞானி இராக்கெட்டைச் செலுத்தி அதற்குள் மனிதனை அனுப்பி இயந்திரத்தை வைத்து இங்கிருந்தே கம்ப்யூட்டர் அலை வரிசையை பார்க்கிறான். அங்கிருக்கக்கூடிய செய்தியை ஆண்டனா வைத்து இழுக்கிறான்.

அதே மாதிரி இறந்த நம் முன்னோர்களை விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திவிட்டு
1.நம் ஆண்டனா… கண் இருக்கிறது.
2.உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அங்கே ஏங்குங்கள்…. கேளுங்கள்.
3.மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை எடுங்கள்.
4.தெரிந்து எடுப்பதில்லை… தெரியாமலே எடுக்கலாம்…!
5.ரேடியோ அலைவரிசையைத் திருப்புவது போன்று லேசாகக் கொடுக்கிறோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply