இனி நடக்கப் போகும் உலக மாற்றத்தின் நிகழ்வுகள்

Nostradamus

இனி நடக்கப் போகும் உலக மாற்றத்தின் நிகழ்வுகள்

 

நமது பூமி சுழலும் போது அந்தச் சுழற்சியால் காந்தப்புலன்கள் ஏற்பட்டு அதன் மூலம் தான் கவரும் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் பனிப் பாறைகளாக உறைகின்றது.

1.அப்படி அந்த உணர்வின் தன்மை நுகரும் போது பார்வதி பஜே… நமச்சிவாய…!
2.இந்த உடலாக (பூமியாக) மாறுகின்றது. பார்வதிக்கும் சிவனுக்கும் கல்யாணம் என்ற நிலைகள்.

அதாவது பூமியின் ஓடு பாதையில் தன் பார்வையில் பட்ட (விண்ணிலிருந்து வரும்) சக்திகளை நுகரப்படும் பொழுது இந்த உடலான சிவனுடன் சேர்த்து இரண்டற இயங்குகிறது என்று வியாசகர் காட்டுகிறார்.

உலகமே இங்கு திரளும். அதனால் பூமியில் மாற்றங்கள் வந்து விடும் என்பதற்காக வேண்டி நீ தெற்கே போ…! என்று சிவன் சொன்னான். ஏனென்றால் தெற்கே தோன்றியது தான் பூமியைச் சமப்படுத்தும் உணர்வு…!

பூமியைச் சமப்படுத்த அகஸ்தியனைத் தெற்கே போ…! என்று சொல்லும் பொழுது தெற்கிலே (தென்னாட்டிலே) தோன்றியவன் தான் அந்த அகஸ்தியன்.

அந்த அகஸ்தியைன் உணர்வுகளை ஒவ்வொருவரும் எடுத்தால் தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்ற அந்தக் காரணத்துடன் தான் வியாசகர் சொல்லியிருக்கிறார். அதை நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

1.மனித உடலுக்குள் வருவதை மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு இந்தப் பூமியின் திசையைத் திருப்பியதும் அவர் தான்
3.நம் பூமியைச் சமப்படுத்தியவரும் அந்த அகஸ்தியன் தான்.

அது ஒரு காலம் துருவப் பகுதியில் இது வளர வளர இது வளர்ந்து கொண்டே இருக்கும். இது எடை கூடி விட்டால் மாறிவிடும். அப்பொழுது கடல் அலைகள் மாறும்.

தென் துருவம் வட துருவம் எல்லாம் மாறி அதிலே மாற்றங்கள் வரப்போகும் போது நீக்ரோக்கள் வாழும் பகுதி எல்லாம் கடல் அலைகளுக்குள் திருப்பிவிடும்.

கருப்பர்கள் என்ற நிலைகள் வரப்போகும் போது வளர்ந்த நிலைகள் கொண்டு காட்டு விலங்குகளாக மாற்றி விடும். இன்றைக்குச் சக்திவாய்ந்த செயற்கைக் கோள்கள் மூலமாகவும் விமானங்கள் மூலமும் பறந்து
1.கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் ஊர்களை எல்லாம்
2.விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆதியிலே பூமி கவிழும் நிலை வரும் பொழுது அதை மாற்றிப் பூமியைச் சமப்படுத்தியவர்… அணுவின் ஆற்றலைப் பெற்றவர் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த அகஸ்தியர் அவர் அன்றைக்குச் செய்ததால் தான் இப்போதும் இந்நேர வரையிலும் பூமி ஒரு சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் அபரிதமான விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.விஞ்ஞானிகளோ அல்லது அரசை நடத்துபவர்களோ இதைச் திசை திருப்பப் போகிறார்கள்.
2.நாம் எங்கெங்கே போகப் போகிறோம் என்று தெரியவில்லை.
3.இதற்குள் எத்தனையோ ஆசை வைத்திருக்கின்றோம்.
4.பூமிக்குள் பதுக்கி வைத்திருக்கும் சில விஷத் தன்மைகள் (குண்டுகள் ஆயுதங்கள்) வெடிக்கப் போகிறது.
5.அதனால் ஏற்படும் புகை மண்டலம் அடர்த்தியின் தன்மை அடையப் போகிறது.
6.அத்தகைய புகை மண்டலத்தால் சூரியனின் ஒளிக் கதிர்கள் மங்கி நம் பூமியே ஒரு பக்கம் பனியாக உறையப் போகிறது.
7.அப்படி உறைந்தால் பூமி தலைகீழாகப் போகும்

இரண்டு மூன்று வகையில் விபத்து வரப்போகிறது. அதில் எந்த விபத்து என்று… எதிலே வந்து தாக்கப் போகிறது…! என்று யாரும் சொல்ல முடியாது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சின் தன்மை பரவுகிறது. அந்த நஞ்சின் தன்மை வரப்போகும் போது மனிதன் செய்து வைத்தது வெடிக்கத்தான் போகிறது. வெடித்த பின் அதை நுகரத்தான் போகின்றோம். மனித உருவையே மாற்றும் தன்மையாக வந்து கொண்டிருக்கிறது.

ஞானிகள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அவர்கள் பெற்ற அருள் ஆற்றல்களை எடுத்து நமக்குள் அருள் ஒளி சுடராக வரப்படும் போது இந்த வேடிக்கை எல்லாம் நாம் பார்க்கலாம்.

இல்லை என்றால் அந்தச் சுழற்சிக்குள் சிக்கி காணாத நிலைகளில் போய்த் திரும்பவும் முதலிலிருந்து வளர்ச்சிக்கு வர வேண்டும்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply