
நாடித் துடிப்பு பற்றிய பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்… அதைக் காணும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்…!
1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)
ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.
ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்…
2. நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு…! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம்.இரத்த நாளங்களில் ஏது கூட இருக்கிறது… எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.
இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது…?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது…? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.
அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.
புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.
இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.
விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.
சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,
ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.தன்னுடைய உணர்வலையால் – வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.
யார்…? அகஸ்தியன்…!
அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.
அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.
அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று எல்லாவற்றிலும் வல்லவனாக உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.