உடலை விட்டுப் பிரிந்தவர்கள் எல்லோரையும் விண் செலுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளவர் ஈஸ்வரபட்டர்

Ultimate destination - ursa major

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் எல்லோரையும் விண் செலுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளவர் ஈஸ்வரபட்டர்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்று சொல்கிறோமே அவருடைய உயிராத்மா இதற்கு முன் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்று சப்தரிஷி மண்டலங்களை அடைந்தது.

1.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் இங்கே வரும் பொழுது தான்
2.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள்ளும் அது பட்டு
3.அந்த உணர்வின் தன்மை மெய் ஒளிகளாக வளர்ந்து அதன் வழியாகப் (இன்றும்) பரப்பிக் கொண்டுள்ளது,

பல பாகங்களில் (வேறு பிரபஞ்சத்தில்) பரவினாலும் நம் பூமிக்குள்ளும் அந்த மெய் உணர்வுகள் பலவாறு பரவிக் கொண்டிருக்கின்றது என்ற நிலைகளை அவர் உணர்த்தினார்.

அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் அவர் சென்றிருந்தாலும் அந்தந்தக் காலத்தில் அவரிடமிருந்து வந்த ஒளி அணு மற்ற மனிதர்களுக்குள் ஈர்க்கப்பட்டு அவர்கள் மூலம் உணர்த்தி வந்தார்.
1.ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில்
2.இப்பொழுது தற்சமயம் வெளிப்படுத்தியதும் அதைப் போன்ற நிலைகள் தான்.

மனிதர்கள் உடலை விட்டுச் சென்ற பின் பூமியின் பிடிப்பில் இருக்கும் அந்த உயிராத்மாக்களை எப்பொழுது… எவ்வாறு… விண் செலுத்த வேண்டும்..? என்ற உணர்வின் தன்மையை அந்த உடலிலிருந்து உணர்த்திச் சென்றார்.

தாய் தந்தையர் அவர்கள் எண்ணத்தால் கருவாகி நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எப்படி விண் செலுத்த வேண்டும்…? என்றும் அந்த மார்க்கத்தைக் காட்டினார்.

தாய் தந்தையரை நாம் எண்ணி எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உடலுடன் உள்ள நாம்.. உந்தித் தள்ள வேண்டும்…!”

அவ்வாறு அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை
1.அவர்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
2.அந்த உணர்வின் சத்து கொண்டு ஒளியின் சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.

அவ்வாறு வளர்க்கச் செய்யும் பொழுது தான் நம் உணர்வின் அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்…! என்ற இந்த உண்மையின் நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

அதாவது நம் முன்னோர்களை விண் செலுத்தினால் தான் நாமும் அவர்கள் வழியில் விண் செல்ல முடியும். இனம் இனத்தை வளர்க்கும் என்ற நிலையைக் காட்டினார்.

ஈஸ்வரபட்டரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா 1971வது வருடம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று விண் சென்றது. அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்தது.

1.சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் – அவர்கள்
2.தன் மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த ஆற்றல்கள் பெற்றார்கள்…? என்றும்
3.எவ்வாறு சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்…! என்ற நிலையையும்
4.விண் சென்ற பின் முதல் நிலையாக – ஈஸ்வரபட்டர் அந்தப் பேருண்மைகளை எமக்கு (ஞானகுரு) வழிகாட்டினார்.

குருநாதர் எப்படி எனக்குக் காட்டினாரோ அவர் காட்டிய வழிகள் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலேயும் உங்களுக்கு இந்த உபதேசத்தின் வழி கொண்டு அதை யாம் ஊட்டுகின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்… அவர்கள் வழியில் நாமும் விண் செல்ல வேண்டும்… என்ற இந்த ஆசையை ஊட்டியதே அந்தக் குருநாதரின் உணர்வின் இயக்கம் தான்…!

Leave a Reply