
மூட்டு வலியைப் போக்கும் செடி”
ஒரு சமயம் குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கப்படும் போது ஒரு இடத்தில் உட்காரச் சொன்னார்.
அவர் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். என்னை ஒரு பக்கம் உட்காரச் சொன்னார். உட்கார்ந்தபின் அந்த இடத்தில் தரையில் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகின்றது. என்னால் உணர முடிந்தது.
இனம் புரியாத ஈர்ப்பு வரப்படும் போது “என்ன…?” என்று பார்த்தால் மண்ணிற்குள் மறைந்த வித்துகள் மனிதனின் எண்ணத்தைக் கவர்கின்றது. ஏனென்றால்
1.அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு இறந்த மனிதனின் உடல் பட்டபின்
2.அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகின்றது.
3.வளர்ந்த செடிகளின் வித்துக்கள் அங்கே பரவிக் கிடக்கின்றது.
4.அதன் மீது நான் உட்கார்ந்தவுடனே அப்போது ஒரு வித அரிப்பின் தன்மையாகி
5.அந்த ஈர்ப்புடன் அந்தச் செடி ஏங்கி என்னிடம் வருகின்றது.
தொட்டால் வாடி…! என்றும் தொட்டால் சிணுங்கி…! என்றும் சில செடிகளைப் பற்றிக் கேள்விட்ப்பட்டிருப்பீர்கள்… பார்த்திருப்பீர்கள்.
தொட்டால் சிணுங்கிச் செடியை நாம் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் வடியும். நீர் வடியும். தொட்டால் வாடி என்றால் நாம் தொட்டவுடனேயே அப்படியே வாடிவிடும்.. சுருங்கிவிடும்.
தொட்டால் “வாடி…” தொட்டால் “சிணுங்கி…” என்று இப்படிச் செடிகளுக்கும் இத்தகைய உணர்வின் நிலையாக வருகின்றது.
ஒரு மனிதன் இறந்த பின் அந்த உடலில் அவன் என்னென்ன குணங்களை வளர்த்துக் கொண்டானோ அத்தகைய உணர்வுகள் மற்ற தாவர இனங்களில் கலந்த பின் அதனின் நிலையாகச் செடிகள் உருவாகின்றது.
ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் பல உணர்வுகளின் தாக்குதலால் சோர்வடைந்திருப்பான். அந்தச் சோர்வடைந்த (வாடிய) உணர்வுகள் அந்தச் செடிகளில் சேர்த்த பின் மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அதுவும் வாடுகின்றது.
அந்தச் செடியைப் பதப்படுத்தி மனிதனுக்கு நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
சிலருக்கு மூட்டு வாதம் இருக்கும். சில உப்புச் சத்துக்கள் இரத்தத்தில் அதிகரித்து விட்டால் இரத்தம் அது உறையும் தன்மை அடைந்து மூட்டுகளில் உறைந்துவிடுகின்றது. அது சீழாக மாறுகின்றது.
தொட்டால் சிணுங்கி என்ற செடியையும் மிளகையும் அரைத்துச் சேர்த்து அதைப் பற்றாகப் போட்டால்
1.இந்த உணர்வின் இந்த கார உணர்ச்சிகள் ஊடுருவிச் சென்று
2.இரத்தம் உறையச் செய்த அணுக்களை வாடச் செய்து
3.அந்த வாதத்தை அகற்றி உடல் நலம் பெறச் செய்கிறது.
இயற்கையின் நிலைகள் மாற்றமாகும் போது தாவர இனங்கள் எப்படிப் புதிது புதிதாக உருவாகின்றது, விஷத்தையே உணவாக உட்கொள்ளும் இத்தகைய (தாவர இன) அணுக்களும் உண்டு.
ஆனால் அந்த அணுக்கள் மற்ற நிலைகளில் படரப்படும் போது எந்தெந்த நிலைகள் ஆகின்றது..? என்ற நிலையைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவபூர்வமாகக் காட்டினார்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.