காய்ச்சலுக்கு ஊசி போட்டால் (அதிக டோஸ்) சர்க்கரை நோய் வருமா…?

Health bliss

காய்ச்சலுக்கு ஊசி போட்டால் (அதிக டோஸ்) சர்க்கரை நோய் வருமா…?

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த உடல் உபாதையாக இருந்தாலும் உடனே அருகிலிருக்கும் மருந்துக் கடையில் மருந்து மாத்திரைகளை நாமே சாப்பிடும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். விளைவுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

அந்த நேரத்திற்கு வலியும் வேதனையும் குறைய வேண்டும். உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்வோம் என்ற அக்கறையில்லை.

ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டுமா அல்லது எங்கேயாவது கடுமையான வலி இருக்கின்றதா கடுமையான காய்ச்சல் இருக்கின்றதா… உடனே ஒரு இஞ்செக்சன்.

ஒரு டோஸ் போட்டவுடன் காய்ச்சல் நிற்கவில்லை என்றால்

1.இன்னொரு டோஸ்…, அப்புறம் இன்னொரு டோஸ் சேர்த்துப் போடுவார்கள்.
2.காய்ச்சல் உடனே நின்றுவிடும்.
3.நம் உடலில் இனிப்புச் சத்தெல்லாம் சுருங்கிப் போகும்.
4.காய்ச்சலுக்கு ஊசி போட்டால் அடுத்தாற்போல் சர்க்கரை வியாதி வந்துவிட்டது என்பார்கள்.

அதிகமான காய்ச்சல் இருந்தது. எல்லாம் நிவர்த்தியானது. அடுத்து நான்கு டோஸ் போட்டேன்.

1.அப்புறம் கிட்னி – சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது.
2.உடலில் உள்ள இரத்தத்தில் உப்புச் சத்து அதிகமாகிவிட்டது என்று சொல்வார்கள்.
3.ஆக, விஷம் கலந்த மாத்திரைகளையும் மருந்துகளையும் தான் உட்கொள்கின்றோம்.

“தலை வலிக்கின்றது…தலை வலிக்கின்றது…” என்று சொல்லி அடிக்கடி மாத்திரையைச் சாப்பிடுவார்கள். தலை வலி போய்விடுகிறது.

ஆனால் கிட்னி இந்த விஷத்தை முறியடிக்க முடியாதபடி செயலிழந்துவிடுகின்றது. கிட்னி வேலை செய்யாமல் போய்விடுகின்றது.

இந்த மாதிரி விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். “அவசரத்திற்குத் தலை வலி நீங்கினால் போதும்…” என்று எண்ணுகின்றார்கள். பின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை இல்லை.

ஆனால் அதிலுள்ள விஷத்தன்மைகள் கிட்னிக்குள் சென்றால் அது அதைப் பிரிக்க முடியாது போய்விடுகின்றது. அடுத்து அதைச் சரி செய்யலாம் என்றாலோ அல்லது மாற்று கிட்னி பொருத்தலாம் என்றாலோ பணம் இலட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்.

இதுவும் போக இதைக் காட்டிலும் யாராவது இந்த மாதிரிச் சிக்கினால் கிட்னியையே எடுத்து வியாபாரம் செய்துவிடுகின்றார்கள். “குழந்தைகள் காணோம் அல்லது முதியவர்கள் காணோம்…” என்றால் அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளை அலுங்காமல் எடுத்து வியாபாரம் ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப என்ன வைத்திருக்கின்றோம்?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…, அவர் எம்மைக் (ஞானகுரு) காடுகளில் மனித நடமாட்டமே இல்லாத சில இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்று மெய்ஞானிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறும்படி செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதை உங்கள் உடலுக்குள் சேர்த்து தீமைகள் உங்களுக்குள் விளையாது தடுத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞான விஷத்தால் வந்த தீமைகளை நீக்க முடியும்.

1..உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணையச் செய்து
3.விஷத்தைக் கழிக்கக்கூடிய
4.விஷத்தைக் கரைக்கக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.
5.விஞ்ஞானத்தால் விளைந்த விஷத்தை உங்கள் எண்ணத்தால் நிச்சயம் அகற்ற முடியும்.

இல்லை என்றால் மருந்து மாத்திரைகளின் விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் நஞ்சு விளைந்து உயிராத்மா நஞ்சாகிவிடும்.

உயிராத்மாவில் பெருகிய நஞ்சின் விளைவால் இன்று மருந்துகளை எப்படிப் பாம்பிலிருந்தும் விஷம் கொண்ட மற்ற உயிரினங்களில் எடுத்துப் பவுடாராக்கினார்களோ அந்த உடலுக்குள் போய்ப் பிறக்கலாம்.

எப்படியும் உடலை விட்டு ஒரு நாள் போகத்தான் போகின்றோம்.

1.நஞ்சை நீக்கி அருள் உணர்வை வளர்க்கும் நிலையில் பிரிந்து சென்றால் வளர்ச்சி.
2.ஆனால் நஞ்சின் சேமிப்பாக வளர்த்து வளர்த்து நல்லதை இழந்தால்
3.மனித நிலையிலிருந்து தேய்மானமாகி விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்க நேரிடும்.
4.விஷத்தை வெல்ல வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் நஞ்சை உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.

உங்களால் நஞ்சை வெல்ல முடியும். நம்புங்கள்.

 

Leave a Reply