கண்களுக்கு வரக்கூடிய கோளாறுகளை நீக்க முடியும்

கண் வலி க்ண் எரிச்சல் கண் பார்வ மங்கல் இதைப் போன்ற குறைபாடுகளை நீக்கும் வழி முறை

 

சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் நடக்கக்கூடிய சில கடுமையான நிலைகளில் மீண்டும் மீண்டும் வேதனையை அதிகமாக நுகர நேர்ந்தால் அதை ஆழமாக எண்ணி உற்றுப் பார்ப்பதால் கண்களில் உள்ள கருமணிகளில் இந்த விஷம் ஒட்டிக் கொள்கின்றது.

 

கருமணிகளில் சேரும் இத்தகைய விஷம் அதிகமாகும் பொழுது கண் எரிச்சல் கண் பார்வை மங்கல் கண்களிலிருந்து நீர் வடிதல் இதைப் போன்ற நிலைகளாகி கடைசியில் கண்களில் சுத்தமாகப் பார்வையே போகும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றது.

 

அதே சமயத்தில் அந்தக் கருமணிகளுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்திலும் விஷத் தன்மைகள் சேரத் தொடங்கும்.

 

இந்த நரம்பு (ELECTRIC WIRE போல்) வழியாகத்தான் நாம் பார்த்த செய்தி உடல் முழுவதும் பரவி அதற்குத்தக்க நம் உடலும் உடலின் அங்கங்களும் இயங்குகின்றது.

 

ஆனால் இந்தக் கருவிழியுடன் சேர்ந்த நரம்புகள் பலவீனமடைவதோடு மட்டுமல்லாதபடி வேதனைப்படும் உணர்ச்சியையே தூண்டிக் கொண்டிருக்கும். நம்மை நல்லதை அதிகமாக எண்ண விடாது.

 

அதற்காகத்தான் நாம் தியானம் செய்யும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கின்றோம்.

 

கண்களில் அந்தச் சக்திகளை அதிகமாகப் படரச் செய்கின்றோம்.

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அழுத்தமாக கண்களில் உள்ள கருமணிகளில் படரச் செய்யும் பொழுது அதில் படர்ந்துள்ள விஷத் தன்மைகள் கரைந்து விடுகின்றது. அதனுடன் ஒட்டிய நரம்புகளையும் தூய்மைப்படுத்துகின்றது.

 

இதனால் கண் பார்வை சீராகத் தெரிய வரும்.

 

மேலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கண் கருவிழியுடன் தொடர்பு கொண்ட நரம்புகளில் ஆழமாகப் பதிவாகின்றது.

 

அதனால் நமக்கு அடிக்கடி அந்த மகரிஷிகளின் பால் எளிதில் நம் நினைவுகள் செல்லத் தொடங்கும். இதனால் நம் கண்களுக்கும் வீரிய சக்தியாக (ANTENNA POWER) கிடைக்கும்.

 

விண்ணின் ஆற்றலை எளிதில் கவரும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

 

சாமிகள் உபதேசித்த ஒலி நாடவில் உள்ளதை நீங்கள் உற்றுக் கேட்டு அதைக் கண்களுக்கு நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பத் திரும்ப எண்ணி (சுமார் 4 – 5 மணி நேரம்) எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்ததால் உங்கள் கண் எரிச்சலும் நீங்கியது. உங்கள் கண் பார்வையும் தெளிவானது.

 

அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply