உடலுக்குள் உருவாகும் TB, கேன்சர் போன்ற நோய்கள் எப்படி உருவாகின்றது? அதைக் குறைக்கும் வழி என்ன?

Om Eswara

உடலுக்குள் உருவாகும் TB, கேன்சர் போன்ற நோய்கள் எப்படி உருவாகின்றது? அதைக் குறைக்கும் வழி என்ன?

 

விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிகளின் யுத்தங்களை உண்டாக்கி TB என்ற நோயினைப் போக்குகின்றனர்.

 

அதே சமயத்தில் கேன்சர் என்ற நிலையில் மனிதனின்  வாழ்க்கையில் அடிக்கடி வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தவுடன் நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற இந்த உணர்வுகள் கொடிய நஞ்சினை உணவாக உட்கொள்ளும் அணுவாக உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

 

அதனின் மணத்தை அது விழுதுகளாக்கி அந்த மலம் எங்கெல்லாம் படுகின்றதோ நல்ல உணர்வை மாய்த்து உணர்வின் தன்மை நோயாக நாம் தாங்க முடியாத நிலைகளில் வந்துவிடுகின்றது.

 

வலுகொண்ட (கேன்சர்) ஒரே அணு அதனுடைய மலத்தை ஊடுருவச் செய்யும் பொழுது நஞ்சின் தன்மையாகப் பீய்ச்சிக் கொண்டு இருக்கின்றது.

 

உதாரணமாக ஒரு விஷப் பூச்சி உண்டு. அதனை நாம் தொட்டுவிட்டால் அப்படியே சூடு போட்டுவிடும்.

 

இதைப் போலத்தான் TB என்ற நிலைகள் நமது உடலுக்குள் இருக்கும் அணுக்களை உணவாக உட்கொள்கின்றது. ஆனால் இதனுடைய மலமாகும் பொழுது எலும்பு கரைகின்றது.

 

கல்லுக்குள் தேரை எவ்வாறு உருவாகின்றது?

 

ஒரு உயிரணு பாறைக்குள் சிக்கிவிட்டால் அதனின் உணர்வுகள் வெப்பத்தால் அந்த உயிரணுவின் துடிப்பு இருந்தாலும் தாவர இனச் சத்துக்கள் நீருடன் கலந்து அதே பாறையில் படும்போது அதற்குள் இருக்கக்கூடிய காந்த அலைகள் அதை நுகர நேருகின்றது.

 

இந்த நீரின் தன்மை உள்ளுக்குள் சென்ற பின் ஆவியாக மாறுகின்றது.

1.அந்தச் சத்தின் தன்மை ஆவியாக மாறும் பொழுது

2.பாறைக்குள் இருக்ககூடிய அந்த உயிரணு இதை நுகர்ந்து

3.இந்தப் பாறையின் வழி கூடி உணவாக உட்கொள்கின்றது.

 

அந்த உயிரணு தனக்குள் இந்தச் சத்தான பின் மலமாக மாற்றுகின்றது. மலத்தின் தன்மை கல்லுக்குள் பட்டவுடனே அது கரைகின்றது.

 

கரைந்த நிலைகள் கொண்டு இந்த பூமியின் வெட்கையில் ஆவியாக மாறுகின்றது. அதனின் உணர்வை இந்த உயிரணு சுவாசிக்கும் பொழுது தேரையாக வளர்கின்றது.

 

அந்தத் தேரைக்குள் நீர் எங்கிருந்து வருகின்றது?

 

தேரையை எடுத்தால் “பிசுக்… பிசுக்…” என்று இருக்கும். அதற்குள் தண்ணீர் போக வழி இல்லை. காரணம்,

1.ஆவியாக வருவதைத் தான் நீராக எடுத்துக் கொண்டு

2.உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து கல்லைக் கரைத்து அதை ஆவியாக்கி

3.அந்த உணர்வை உடலாக மாற்றிக் கொள்கின்றது.

 

இதைப் போலத்தான் நமது உடலுக்குள் இருக்கக் கூடிய TB நோயும், கேன்சர் நோயும்.

 

மனித வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நிலைகள் கொண்டு பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து அடிக்கடி வேதனைப்படுகின்றோம்.

 

இந்த உணர்வின் தன்மை உருண்டு திரண்டு நஞ்சு கொண்ட உணவாக கேன்சர் என்ற இந்த அணுவின் தன்மை ஊடுருவும் பக்கமெல்லாம் தசைகளை நோகச் செய்துவிடுகின்றது.

 

நல்ல உணர்வினைத் தனக்குள் சத்தாக எடுத்து அதனைக் கரைத்து உணவாக அது உட்கொள்கின்றது.

 

நமது உடம்புக்குள் இருக்கும் உணர்வுகள் எலும்புக்குள் இருக்கும் அணுக்கள் அது இடும் மலத்தால், எலும்புகளை உருகச் செய்து அதனை ஆவியாக எடுத்து வரும்பொழுது அது எலும்பை உருக்குகின்றது.

 

இயற்கையின் நிலைகள் இவ்வாறு மாற்றமடைகின்றது.

 

வீட்டில் சங்கடமாக இருப்பீர்கள். ஒரு நண்பனிடத்தில் பாசமாக இருப்பீர்கள். உயர்ந்த குணங்கள் கொண்டு இருப்பீர்கள். அதிலே கொஞ்சம் நஞ்சு கலந்திருக்கும். அந்த நஞ்சு கலந்தவுடன் சுவை கெட்டுப் போயிருக்கும்.

 

அதே சமயம் இங்கே உபதேசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். அருள் ஞானியின் நிலைகளைப் புகுத்தியவுடன் இந்த ருசியின் தன்மையை அதிகமாக்கி சுவை கொண்டதாக மாற்றும்.

 

1.சுவையற்றதாக்கும் அந்த உணர்வினை வென்றவன் ஞானி

2.அவனின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது

3.அந்த வேதனையான உணர்வின் தன்மையை கடுமையான நோயாக இருந்தாலும் குறைக்கச் செய்யும்.

4.குறைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.

 

மணிக்கணக்கில் உபதேசித்தாலும் என்னுடைய கஷ்டம் நிவர்த்தியாக வேண்டும், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று யாரும் கேட்பது கிடையாது.

 

காரணம் நாம் அல்ல.

 

1.நமக்குள் விளையவைத்த உணர்வுகள் நமக்குள் இயங்குகின்றது…, மாற்ற முடியவில்லை.

2.அதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உபதேசிப்பது

3.தீமையை வென்ற உங்கள் மூச்சலைகள் இங்கே படரவேண்டும்.

 

முதல் மனிதனான அகஸ்தியன் அணுவின் ஆற்றலை உணர்ந்தவன். அந்த மாமகரிஷிதான் இன்றும் வேகாக்கலை என்ற நிலையில் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் பருக வேண்டும், உங்களையறியாது சேர்ந்த நஞ்சின் தன்மையை அடக்கிட வேண்டும்.

 

இந்த மனித வாழ்க்கையில் வரும் இடையூறுகளையும் நஞ்சினையும் வென்று நஞ்சினை அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலையை நீங்கள் அனைவரும் பெறவேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply