
கிருமிகள் தாக்கிடாது வித்துக்களை “அமிலங்களில்” ஊறவைத்துக் காப்பது போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்த்து அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்குங்கள்
உதாரணமாக இன்று விவசாய (AGRICULTURE) நிலைகளில் எடுத்துக் கொண்டால்
1.வித்துக்களை விஷக் கிருமிகள் தாக்கிடாது
2.அந்த வித்துகளில் அவர்கள் கண்டுபிடித்த அமில சக்தியில் ஊற வைத்துவிடுகிறார்கள்.
3.அதன் பின் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது உணர்வின் சத்து வலுப் பெற்றால் அதனை மற்ற கிருமிகள் வந்து இதைத் தாக்குவதில்லை.
4.அமிலத்தில் ஊற வைத்ததால் எதிர்த்துத் தாக்கும் அந்த உணர்வின் சக்தி வித்துக்களுக்குக் கிடைக்கின்றது.
நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். பழகுகின்றோம். அவர்கள் படும் துயரமோ கஷ்டமோ இதையெல்லாம் நாம் கேட்க நேருகின்றது.
அதையெல்லாம் நாம் உற்றுப் பார்க்கின்றோம். நம் கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
நாம் பார்க்கும் பிறருடைய வேதனை உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது. கோப உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது.
இதெல்லாம் நம் எலும்புகளுக்குள் உள்ள ஊன்களில் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
இதே மாதிரி எத்தனையோ உணர்வுகள் நமக்குள் தீமையின் செயலாக செயல்படும் உணர்வுகளில் அந்த மனிதர்களை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை
1.அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி
2.அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகிவிடுகின்றது.
இப்படி உருவான வித்துக்கள் தன் இனத்தைப் பெருக்கும் பொழுது தீய வினைகளாக சாப வினைகளாக மாறுகின்றது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களின் செயலாக்கங்கள் வலு குறைந்து உடல் நோய் மன நோய் போன்று ஏற்படுகின்றது.
தீய வினைகளை சாப வினைகளை உருவாக்கும் வித்துக்களை நாம் செயலிழக்கச் செய்ய என்ன செய்யவேண்டும்?
1.நமது உடலில் ஊழ்வினை என்ற வித்துகள் எத்தனையோ இருப்பினும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வினை அதற்குள் செலுத்த வேண்டும்.
ஒரு வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால் பூமியின் துணை கொண்டு தன் உணர்வைக் கவர்ந்து அதே செடியாக வளர்கின்றது.
ஆனாலும், அந்தச் செடிக்குள் இதைப் போல வித்தியாசமான நிலைகள் மற்ற உணர்வுடன் இணைக்கச் செய்து அந்த வித்துக்களுடன் கலந்து ஊன்றும்போது புழுக்களோ பூச்சிகளோ வருவதில்லை.
இதைப் போன்று நாம் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும் அடுத்த கணம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நாம் பதிவு செய்த உணர்வுடன் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து விட்டால்
2.நாம் நுகர்ந்த பிறருடைய நோயின் உணர்வுகளை
3.பிறருடைய தீமையின் உணர்வுகளைச் சுருக்கிவிடுகின்றது
அதே சமயத்தில் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும், உடல் நலம் பெறவேண்டும். தீமை செய்வோர் தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணிவிட்டால் அந்த உணர்வு இதனுடன் கலந்து இது “அருள்ஞான வித்தாக” நமக்குள் மாறுகின்றது.
இது மனிதனால் உருவாக்கப்படுகின்றது,
இயற்கையின் நிலையில் நம் உயிர் உருவாக்கினாலும் மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உயிருடன் இணைத்து எதை மாற்றவேண்டுமோ மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்.
அதைத்தான் முருகு என்ற நிலைகளில் மாற்றியமைக்கும் சக்தியான ஆறாவது அறிவிற்குப் பெயர் “முருகு” என்று பெயர் வைத்துள்ளார்கள்.
“முருகா என்றால் அழகா” என்றும் எதையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வின் சத்தை ஆறாவது அறிவு உருவாக்குவதனால் இதற்கு இவ்வாறெல்லாம் காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்வோம்.
தீமை நம்மை அணுகாதவண்ணம் பாதுகாப்புக் கவசமாக உருவாக்கும். தீமைகளிலிருந்து விடுபடுவோம். நம்மைக் காப்போம்.
நம் பேச்சால் மூச்சால் இந்த உலகைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக உருவாவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.