பொன்மொழிகள் 3 – Quotes

சூரியனுக்கு அழிவு உண்டு. ஆனால், இந்த உயிருக்கு அழிவில்லை. இந்த உயிரில் எந்த உணர்வை இணைக்கின்றோமோ, அதனின் இயக்கமாக நமது உயிர் நம்மை இயக்குகின்றது.

 

ஆகவே, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாக இணைக்க வேண்டும்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலிலிருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

எல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் அனைத்தும் பேரற்றலைப் பெற்ற மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே தமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.

http://omeswara.blogspot.in/

Leave a Reply