
உடல் வலுவைக் காட்டிலும் நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்
1.“அந்நியன் வெளியேறு…!” என்று காந்திஜி அன்று சொன்னாலும்
2.அடிமைப்படுத்தும் அந்நிய குணங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று தான் சொன்னார்.
அந்நியர்கள் என்று யாரையும் அவர் கருதவில்லை அந்நியனாக்கும் குணங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்த எண்ணத்தை தான் உருவாக்கினார்.
ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விடவில்லை.
1.உடல்தான் மடிகின்றது… அவருக்குள் விளைந்த உணர்வுகள் பரவுகின்றது.
2.அந்தப் பரவும் உணர்வுகள் மற்ற உடலில் சேர்க்கப்பட்டு அவனும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செயல்படுகின்றான்.
எங்கே மடிகின்றது…?
அவன் செய்த நிலைகள் மீண்டும் தாக்கப்படும் உணர்வுக்கே வளர்க்கப்படுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?
1.இது வீரியம் (வீரம்) அல்ல…
2.தாக்குவோர் நிலையிலிருந்து மீள வேண்டும் என்று எவர் வலிமை கொள்கின்றாரோ அவர் தான் வீரியத்தில் சிறந்தவராகின்ரார்.
ஆகவே…
1.ஒருவரைத் தாக்குவது என்றால் அது கோழை தான்
2.மீண்டும் பதிலுக்கு அவரைத் தாக்கி அதிலிருந்து நான் மீள்வேன் என்று சொல்வதும் கோழை தான்.
ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
சாமி ஆன்மீகம் பேசாமல் அரசியல் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் காந்திஜி தான் உண்மையான ஆன்மீகம்… அவர் வலிமை பெற்றவர்.
அந்த வலிமை இருந்தால் தான் உயர்ந்த நிலைகளை எண்ணித் தனக்குள் அதை வளர்த்து நம்மையும் காக்க முடியும்… நாட்டையும் காக்க முடியும்… மனிதன் என்ற முழுமையும் அடைய முடியும்.
1.அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்தால் தான் மகிழ்ச்சி
2.அந்த மகிழ்ச்சியை வளர்க்கப்படும் போது தான் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் (ஞானகுரு) அந்தத் தேசிய இயக்கத்தில் செயல்பட்டவன். தொண்டனாகச் சேர்ந்தவன். காந்திஜி வழியில் செயல்பட்டு தலையிலே அடி பட்டவன்.
குருநாதர் அருள் சக்திகளைக் கொடுத்தாலும் அந்த அருள் வழி கொண்டு நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.
1.வலிமை இருந்தால் தான் அருள் ஒளியைப் பெற முடியும்.
2.அது இல்லை என்றால் ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்
3.அது நடக்கவில்லை (அந்த வலிமை இல்லை) என்றால் கொடுத்த சக்தியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.