
உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்
எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு தீண்டி விட்டால் மனிதனின் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது. உடலை விட்டுச் சென்றல் அந்த பாம்பின் ஈர்ப்புக்குத் தான் செல்ல வேண்டி வரும்.
ஆக… பல பிறவிகள் கழித்து மனிதனாக வந்த நாம்
1.விஷத்தை ஒடுக்கிய அந்தத் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரத்தின் உண்ர்வுகளை நுகர்ந்தோம் என்றால்..
2.அந்தப் பாம்பின் நினைவு மறந்து நஞ்சினை வென்றிடும் நினைவு வரும்.
பாம்பின் ஈர்ப்புக்குள் செல்லாது… நம் உணர்வின் நினைவலைகள்
1.கண்கள் எந்தத் துருவ நட்சத்திரத்தைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.கண்ணன் (கண்கள்) அர்ச்சுனனுக்குச் சாரதியாக சென்றான் என்பது போல்
3.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு அங்கே அழைத்துச் செல்லும்.
மனிதனாக ஆன பின் பிறவியில்லா நிலைகள் அடைந்தது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.
நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தை வலு கொண்ட எண்ணத்துடன் நாம் எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் இங்கே பாய்ந்தாலும்
2.நஞ்சின் உணர்வுகள் இதற்குள் கலந்தாலும்
3.நாம் பாதுகாப்பான இடங்களை அதை (துருவ நட்சத்திரத்தை) எண்ணும் பொழுது
4.ஒளியான உணர்வின் தன்மை பெற்று
5.உடலை விட்டு வந்தாலும் இது அர்ச்சுனனாகி (கூர்மை)
6.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
இங்கே நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது. ஆனால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலம் அருகிலே செல்கின்றோம்.
நஞ்சை வென்ற உணர்வுகள் அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைகின்றது. நாம் இந்த மனித உடலில் எடுத்திக் கொண்ட உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது.
அது தான் பிறவி இல்லா நிலை…!
எந்தச் சந்தர்ப்பத்திலேயும் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அதன் உணர்வு வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.அதன் வலுவை நாம் இழக்கச் செய்து அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.
அந்தத் தகுதியை நாம் காலை துருவ தியானத்தின் மூலம் வலுப் பெறச் செய்ய வேண்டும்.
எப்படி எந்த நிலைகள் இந்த ஒளியின் சரீரம் ஒளியின் நிலைகள் நாம் எடுத்தாலும் இந்த ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலின் உணர்வை உருவாக்கிய இந்த உடலும் “அந்த ஒளி பட்டு… இது கரையத்தான் செய்யும்…!”
1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.நான் இந்த உடலிலேயே இருப்பேன்..! என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
அவன் எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான். அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.