
கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும்
ஒரு புதிய சாதனத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில்
1.அதற்குள் இன்னென்ன அளவில் அதற்குண்டான பொருளைச் சேர்த்தால்
2.அதனின் இயக்கச் சக்தி அது இந்த இடம் வலு தாங்கக்கூடியது என்று உணர்கின்றார் விஞ்ஞானி…
3.அதன்படி சீராக வேலை செய்யும் அந்தச் சாதனத்தை உருவாக்குகின்றார்.
அந்த விஞ்ஞானி அவர் கற்றுணர்ந்த நிலைகளை எல்லாம் தன்னிடம் சீடனாக வருபவரிடம் கற்பிக்கின்றார். அவர் கற்றுணர்ந்த வழியை அவருக்குள் காட்டப்படும் பொழுது சீடரும் கற்றுணர்ந்து வருகின்றார்.
அதன் வழியில் சீடர் வந்தாலும் அவர் எதைப் போதித்தாரோ அதன் வழிகளில் அவர் சீராகச் செயல்படுவார் என்றால் அவர் அதிலே வெற்றி பெறுகின்றார்.
1.ஆனால் கற்றுக் கொடுக்கும் பொழுது “கடினம்…” என்று எண்ணி அந்த்க் கல்வியைக் கற்க நேர்ந்தால்
2.ஒவ்வொரு எண்ணங்களிலும் அந்தக் கடுமை வந்துவிடும்
3.சீடனாக வருபவர் சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.
அவர் ஒரு இன்ஜினியராக வந்தாலும் எப்படியோ அவர் பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்
1.அந்தப் பாட நிலை தான் மீண்டும் அவருக்கு வரும்.
2.ஆனால் மூலக்கூறுகளை அறிய முடியாது.
3.ஏனென்றால் அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.
அதைப் போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை உங்கள் உணர்வுடன் இணைத்து விட்டால்… அந்த உணர்வை நீங்கள் நுகரும் பொழுது… அந்த அறிவின் ஞானமாக வளருகின்றது.
1.அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான்
1.ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்
2.அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது
3.அதனதன் கருக்கள் உங்களுக்குள் உருவாகின்றது.
அந்த ஞானிகளின் நினைவாற்றலின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவினை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவாக்க வேண்டும்.
அவ்வப்பொழுது உங்கள் வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றியமைக்க
1.இந்தப் பதிவான நிலைகள் நீங்கள் நினைவு கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டே வந்தால்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவி இல்லா நிலைகள் அடைய இது உதவும்.
இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய உணர்வுகள் நம்மை இன்னொரு பிறவிக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
மனிதனான பின் பிறவி இல்லா நிலைகள் அடைவதே… சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே கடைசி நிலை…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.