சூரியனுக்கு அழிவு உண்டு. ஆனால், இந்த உயிருக்கு அழிவில்லை. இந்த உயிரில் எந்த உணர்வை இணைக்கின்றோமோ, அதனின் இயக்கமாக நமது உயிர் நம்மை இயக்குகின்றது.
ஆகவே, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாக இணைக்க வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலிலிருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் அனைத்தும் பேரற்றலைப் பெற்ற மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே தமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.


