
அண்டம் – பிண்டம் – ஒளி
இன்றைய நமது வாழ்க்கையில் நாம் சந்திக்க நேரும் எத்தனையோ இன்னல்களை அன்று வாழ்ந்த மகரிஷிகளும் சந்தித்தார்கள்.
அதை மாற்ற அவர்கள் காலத்தில் அவருடைய சந்தர்ப்பம் அதை நீக்கும் உணர்வாக அவர்களுக்குள் விளைந்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கினார்கள்.
இந்தப் புவியின் பற்று கொண்டு விளைந்த உணர்வின் சத்தை உணவாக உட்கொண்டாலும்
1.புவியின் ஈர்ப்புக்குள் நிற்காது இதனின்று விடுபட விண்ணை நோக்கி ஏகி அண்டத்தின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெற வேண்டும் என்று
2.இந்த மண்ணுலகில் தோன்றிய பிண்டத்தின் உணர்வுக்குள்
3.அந்த அண்டத்தின் உணர்வலைகளைச் சக்தி வாய்ந்ததாக மாற்றும் எண்ணங்களை உருவாக்கினார்கள்
4.அன்று கடும் தவத்தால் தன் எண்ண வலிமையால் சந்தர்ப்பத்தால் கிடைத்த உணர்வின் துணை கொண்டு.
அவ்வாறு விளைந்தாலும் தனது வாழ்க்கையில் எதிர்படும் கோபமோ சலிப்போ வெறுப்போ சங்கடமோ சஞ்சலமோ இது போன்ற நிலைகளை அவர்கள் உடலில் செயல்படுத்தாது
1.பேரண்டத்தின் சக்தியைத் தனக்குள் கூட்டி… அது நஞ்சு கொண்டதாக அது இருப்பினும் அதனின் வலு துணை கொண்டு
2.புவியில் விளைந்த நஞ்சின் தன்மையை அடக்கி அந்த ஆற்றல்மிக்க உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துப் புவியின் பிடிப்பை அறுத்து
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தாக ஒளியின் சிகரமாக உணர்வை மாற்றினார்கள்.
உணர்வு என்பது ஒன்றை அறிந்து கொள்ளும் நிலை தான். கோபமான உணர்வு வரப்படும் பொழுது அதை உணர முடிகின்றது. ஒருவர் தவறு செய்கிறார் என்று பார்க்கும் பொழுது அந்தத் தவறை நாம் அறிய முடிகின்றது.
இதைப் போல ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அதன் மூலம் பல பொருள்களை அங்கே நாம் காண முடிகிறது… இது இன்னது தான் இது இன்னது தான் என்று.
இதைப் போல அந்த மகரிஷிகள் தன் ஆற்றல்மிக்க உணர்வின் சக்தி கொண்டு ஒளி கண்ட உணர்வின் தன்மையால் ஒன்றைப் பிளந்து அதற்குள் எந்தக் குணமோ இருளைப் பிளந்து அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள். ஆகவே அதை ஒளியின் சிகரமாக உணர்வுகள் அனைத்தையும் மாற்றிநார்கள்.
1.விண்ணுலகில் வரும் நஞ்சு உருவாகும் முன் இதனின் துணை கொண்டு அதைப் பலவீனமாக்கி அதனின் உணர்வை ஒளியாக மாற்றி
2.அதனின் திறன் கொண்டு மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்தில் அண்டத்தின் உணர்வுகளைப் பிண்டத்திற்குள் மாற்றி
3.இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உடலை விட்டு உயிரான்மா சென்றபின்
4.அண்டத்தின் உணர்வின் சத்தை அது இங்கே மண்ணுலகிற்கு மாற்றி வருவதற்கு முன் அதனையே அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
5.இந்தப் பிண்டத்திற்குள்ளேயே அதை உருவாக்கினான் மகரிஷி.
அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருக்கின்றார்கள்.
நம் பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு
1.விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் நுழையும் தருவாயில் அதனையும் தனக்குள் நுகர்ந்தறிந்து அதை ஒளியாக மாற்றி
2.இந்த மனித உடலில் இப்பொழுது நாம் இருப்பது போன்று உயிருடன் ஒன்றி உணர்வின் சத்தை ஒளியின் சரீரமாக மாற்றி
3.அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல் மற்றதை அடக்கி அடக்கிடும் ஆற்றல்மிக்க நிலைகளை அவர்கள் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
4.மற்ற உணர்வை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் கண்டிடும் சக்தியாக விளைந்திட்ட
5.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க அருள் ஞானியின் உணர்வுகள் நம்முன் தோன்றிக் கொண்டிருக்கும் இந்நிலையில்
6.உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுணரும் பொழுது ஊழ்வினையாகப் பதிவாகி
7.அதனையே நினைவு கொண்டு அதனின் ஆற்றலை நீங்கள் பருகும் நிலைக்கு அதைப் பெருக்கும் தன்மைக்காக
8.கூட்டுத் தியானங்கள் மூலம் அதனை ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த வித்தாக உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகி
9.தீமைகள் அறியாது நமக்குள் புகுந்தாலும்… அப்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகள் அருள் ஒளியைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
10.தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளையை அது பிரிப்பது போன்று
11.நமக்குள் அந்த அருள் மகரிஷிகள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி ஆக்கினால்
12.மனித வாழ்க்கையில் துன்பத்தையோ துயரத்தையோ வெறுப்பையோ குரோதத்தையோ உருவாக்கும் நிலையை அடக்கி
13.ஒளியின் சரீரமாக நம் உடலை அது காத்து அதுவே குருவாக நின்று நல்வழிப்படுத்தும் நிலையாக
14.இந்த மண்ணுலகில் அந்த அண்டத்தின் உணர்வை மாற்றிட்ட
15.அது இந்தப் பிண்டமான உடலுக்குள்ளேயே இருந்து அண்டத்தை எட்டிடும் ஒளியாக அதைப் பற்றி
16.அதனின் நிலைகள் கொண்டு நாம் அங்கே சென்று இந்தப் பிண்டத்தின் உணர்வுக்குள் விளைந்த நஞ்சினை அறுத்து நஞ்சினை ஒடுக்கி
17.விண் சென்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்திடும் நிலைக்குத் தான் யாம் சொல்லும் இந்த உபதேசம்.
அந்த அருள் மகரிஷிகள் உணர்வை நாம் பற்றுடன் பற்றி… அவர்கள் ஒன்றுபட்ட நிலையில் வசிஷ்டர் அருந்ததி போன்று விண்வெளியில் ஒளிச் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும் அவர்கள் அருள் வட்டத்தில் நாம் சென்று
1.அண்டத்தின் நிலையைப் பிண்டத்தில் சேர்ப்பித்த அந்த மகரிஷிகளைப் போன்று
2.அவர்கள் விளைய வைத்த உணர்வின் தன்மை அண்டத்தின் ஆற்றலை அவர் அடக்கிடும் நிலையும்
3.அவர்கள் உணர்வின் துணை கொண்டு அண்டத்தின் ஆற்றலை நம் பிண்டத்திற்குள் சேர்த்து இந்த உடலை விட்டுச் சென்றாலும்
4.அண்டத்தின் உணர்வின் தன்மை தீமைகள் இருப்பினும் ஒளியின் சுடராக மாற்றிடும் செயலாக
5.ஆறாவது அறிவின் துணை கொண்டு செயல்படும் முறையைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.