
தொழில் ரகசியம்
தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு “அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.
நடப்பது அனைத்தையும்…
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்… பின் இந்தப் பக்கம் சென்றேன்…
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.
ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது… இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.
இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.
அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம்… தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.
ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது…
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.
ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும்… உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.
உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.
1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.
ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது… வித்தியாசமாகிவிடும்.
அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.
தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.
ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது… சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது… எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.
உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது… எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்
ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.
நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை… நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.
இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.
பார்… அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்… எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.
இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்…
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.
எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.
அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும்… அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.
யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.
ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.
ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.