
ஓ…ம் நமச்சிவாய…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…!
மதத்தின் அடிப்படையில் ஆண்டவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால்.. அந்த ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்ற நிலையில் அன்று செயல்பட்டவர்கள் பலர் உண்டு.
சிவத் தத்துவப் பிரகாரம்
1.ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து ஜெபித்து இந்த உணர்வை இயக்கப்படும் பொழுது
2.இந்த உடல் எப்படி இருந்ததோ இந்த உணர்வின் இயக்கத்தைத் தொடர்பு கொண்டு
3.தன் உடலில் உள்ள அணுக்களைத் தன்னுடன் இணைக்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
அந்த உணர்வின் ஒலிக் கற்றைகள் மூடிவிட்டாலும் இதே உணர்வுகள் நுகரப்பட்டு
1.வெப்பத்தின் துணை கொண்டு உடலில் இயங்கிக் கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் எதுவோ கடைசி நிமிடம் இந்த உணர்வுகள் எல்லாவற்றிலும் உயிரைப் போல இந்த உணர்வுகள் அடங்கிவிடும்.
3.அதாவது.. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஒலியின் உணர்வுகள் மீண்டும் வந்து கொண்டிருக்கும்… அதன் இயக்கமாக மாற்றி விடுகின்றது.
இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஆனபின் “உடல் இருக்கும்… ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… ஆனால் அதற்குள்ளே தான் இருக்கும்…”
இது எப்படி இருக்கிறது…? என்பதை எனக்குக் காட்டுவதற்குத் தான் இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு குருநாதர் அழைத்துச் செல்கிறார்.
முதலில்… மரத்தின் அடியில் இருந்து வெளிவரும் நிலையும்… அதற்காக வேண்டி வெள்ளத்தை வரவழைக்கச் செய்து அதனால் கரைந்து வரப்படும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் தான் சிறைப்பட்டுள்ளார். அதற்கு மேல் தெரியாது… உடலின் உணர்வுக்குச் செல்கின்றார்.
கரைத்த பின் வேறு வழி இல்லை. அடைப்பட்ட நிலையில் அங்கே எதிரொலி இந்த உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகின்றது.
அவரை நீ நேரடியாகப் பார்க்காதே…! என்றார் குருநாதர். காரணம் அவர்கள் வலுப்பெற்றவர்கள்.
1.அவரை எண்ணி இந்த உணர்வை எடுத்தால் அவருக்குச் சேரும்.
2.அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
3.அவர் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவர் ஈர்ப்பார்.
4.இந்த உடலை விட்டு ஆன்மா வெளி வரும்.
5.இருளுக்குள் அடைந்திருந்த உணர்வுகள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் வரும்.
அதை நீ செய் என்றார்.
இதே போன்று ஜோஸ்மெட்டிற்கு மேலே என்னை அழைத்துச் செல்கின்றார். அங்கே புதையுண்டிருக்கின்றார்கள். அந்த இடம் ராணுவப் பாதுகாப்பிலே இருக்கின்றது.
அங்கே ஒரு பெரிய ஓடை வருகின்றது… அதிலே திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் நீர் வரும். ஆனால் திட்டுகளின் ஓரங்களில் அடங்கியுள்ளார்கள்.
ஹரி ஓம் நமோ நாராயணா… ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் சூரியனின் இயக்க நிலை. இந்த ஒலியை எடுத்து உணர்வாக இந்த உடலிலேயே அடங்கி இருக்கின்றார்கள்.
1.இது எல்லாம் குருநாதர் நேரடியாகக் காட்டிய நிலைகள்.
2.செவியை வைத்து அந்தச் சப்தங்களைக் கேட்கும்படி சொல்கின்றார் குருநாதர்.
அப்பொழுது அந்த ராணுவத்தினர் தமிழ் தெரிந்தவர்கள் என்ன பார்க்கின்றீர்கள்…? என்று என்னிடம் கேட்கின்றார்.
ஆனால் “அந்தச் சப்தத்தை நான் கேட்கின்றேன்…” என்று அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லிவிட்டார். சும்மா தான் பார்க்கின்றேன்… இந்த ஊரில்… மலை பிரதேசங்களில் ஏதாவது நிலநடுக்கம் வருகின்றதா…? என்று அவரிடம் சொல்கின்றேன்.
அப்படியா…! என்று கேட்டுக் கொண்டார். அந்தக் குளிர் பிரதேசத்தில் அவர்கள் எல்லோரும் சட்டை அணிந்து இருக்கின்றார்கள். நான் வெறும் கோவணத் துணி தான் கட்டிக் கொண்டு செல்கின்றேன்.
குருநாதர் சொன்ன உணரவின் ஒலியை எடுக்கப்படும் பொழுது எனக்கு அந்தக் குளிர் பாதிக்கவில்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டு… ராணுவத்தினர் என்னிடம் ஆசீர்வாதம் வாங்க வருகின்றார்கள்.
அங்கே என்னிடம் வேறு ஒன்றும் இல்லை. அங்கிருந்த மணலைத் தான் எடுத்து ஆசீர்வாதமாகக் கொடுத்தேன்… உங்களுக்கு நல்லதாகும் என்று சொன்னேன். சந்தோஷமாக வாங்கிச் சென்றார்கள்.
ஹரி ஓம் நமோ நாராயணா… ஹரி ஓம் நமோ நாராயணா… என்று சொன்னாலும் சூரியனின் தொடப்ரில் தான் வருகிறது.
1.இந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் சூரியனுடைய சக்தியால் தான் மீண்டும் கவரப்படும்.
2.அவர் எந்த ஒலியின் உணர்வைப் பெற்றாரோ அதன் உணர்வின் தன்மை தான் மீண்டும் வரும்.
இந்த உடலுக்குள் எப்படி அவர்கள் ஒடுங்கினார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் அங்கேயும் இதே நிலையைத் தான் உட்கார வைக்கும். அந்த உடலில் மீண்டும் இதே முயற்சியை எடுக்கும்.
ஹரி ஓம் நமோ நாராயணா…! என்கிற பொழுது
1.நாராயணன் செயல் இயக்குகிறது என்று அந்த உணர்வின் தன்மையை அங்கே தியானம் இருக்கும்படி குருநாதர் சொன்னார்.
2.அந்த உணர்வினை அங்கே அவர்களுக்கு ஊட்டும்படி சொன்னார்… அவர்களுக்கு அது தெரியும்…
3.தெரிந்த உணர்வு கொண்டவர்கள் எடுத்தால் அவர்கள் விண் செல்ல உதவும்.
4.அதற்காக வேண்டிச் சிலதுகளைச் சொல்லி… இந்த உணர்வின் எக்கோவை (எதிரொலி) கொடுக்கும்படி சொன்னார்.
இப்படி இமயமலைச் சாரலில் ஏராளமானோர் இன்னும் அந்தக் கூட்டுடன் உடலுடன் தான் புதையுண்டுள்ளார்கள். இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.