
விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்
பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது… அல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.
ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.
இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும்… சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.
1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல… நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.
இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்வது…?
மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்து… அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.
1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ… அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.
காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.
மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.
எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.
இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…”
அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.
ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…”
“இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.
இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.
1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.
ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.
ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.
நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ஓ…ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.
காரணம்… அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை…
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.
அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.
‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும் ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,
இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.