September 2025 – உபதேசம்

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

 

உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.

என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் “இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.

ஏனென்றால்…
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.

அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி… இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.

அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.

நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை “அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி” உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.

பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் “அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”

ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம்… அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்…
1.நாம் தவறு செய்யாமலேயே “குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.

ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்து… அறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை… அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.

சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கவர்ந்த சக்தி” உடலுக்குள் சென்று சிவம்… தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி “அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”

1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான்… வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்…? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது…?

ஐய்யய்யோ…! என்னை வெட்டிப் போட்டார்களே… வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்…
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்…!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது… என்ன செய்வது…? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்… என்று சொல்லி…!

இது என்ன…? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா… பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது…? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி…
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது…?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது…?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுழி முனை – எண்ணம் தோன்றும் இடம்

 

ஒரு மணத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும் பொழுது சீதா என்ற சுவையானாலும் அந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.

1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.

இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம் எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம் என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?

எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?

மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே பாயும்.

உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன் செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமாக ஓங்கி வந்து விடும்.

1.அந்த அலைகள் எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள் நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!

சுழி முனையில் நிலை நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? “பிராணயாமம்… வாசியோகம்…” என்று மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.

அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை… மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து ஏதோ குறு…குறு… என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.

யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.

1.மூலம் என்பது நமது உயிர்…
2.ஆதாரம் என்பது நமது ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம் என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான் முதலில் அது எடுத்தது.

அதாவது… சூரியனிலிருந்து வெளிவந்த வெப்ப காந்தம் அந்தச் செடியின் சத்தைக் கவர்ந்தது. சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது சீதாராமனாக மாறுகின்றது.

1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதா ராமனாக மாறுகின்றது… எண்ணங்கள் தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மணம் எண்ணமாக
3.அந்த எண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது… சீதாராமா…!

ஆகவே ராமஜென்ம பூமி எங்கே உருவாகின்றது…? ஒருவர் என்னைத் திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச் சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை சீதா.

அந்த உணர்வின் தன்மை எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது…?
2.நம் உடல் தான்.

சீதா லட்சுமி ஆக வந்து உடலுக்குள் வரும் பொழுது சீதாராமனாகப் பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?

சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.

நாம் அணுவின் தன்மையாக உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று
2.யானைத் தலையை மனித உடலில் இணைத்து “விநாயகா” என்று மனித உடலைக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.

மனிதனின் சுவாச நிலை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்) விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும் வெறுப்பும் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றி நான் சொன்னாலும்… மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை… ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில் பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்…
1.அந்த எண்ணங்கள் வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது… இழுத்தவுடனே சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்… அதுதான் நம்மை ஒவ்வொரு நொடியிலும் இயக்குகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து… சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ… எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான்.

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!

ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எனக்கு உபதேசித்ததை உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டா… எமது குருநாதர் – ஆதியிலே “அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றிய அவர்…”
2.தனக்குள் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை
3.துருவப் பகுதியின் ஆற்றலை நுகர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்

அவர் எவ்வாறெல்லாம் சக்தி பெற்றார்…? என்ற நிலையை எனக்கு உபதேசித்தார்… உபதேசித்தது மட்டுமல்ல…!
1.அந்த அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல… அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் அவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி
2.அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.
3.இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் (முகப்பில் உள்ளது) கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் முகப்பு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அணுமதிக்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எண்ணத்தால் இயக்கி… ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து… 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைக்கச் செய்வதே தியானத்தின் முக்கியப் பொருள்.

என்ன…? பெரியதாக 27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெறச் சொல்கிறார்…? என்று எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் 27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் எனக்குக் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்ற எண்ணத்தைப் பரப்பி
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஞானிகள் மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்கிப் பெற்ற ஆற்றலையும்
9.ஒளிச் சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

குருநாதர் உபதேசித்த அந்த அருள் வழிப்படி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உங்களுக்கு உபதேசித்து வருகின்றேன்.
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

எப்படிப் பிறர் செய்யும் தீங்கான உணர்வுகள் தீய வினைகளாகி உடலில் நோயாக வருகின்றதோ இதைப் போல் “அந்த நோயை மாற்றவல்ல” அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “உங்களை அறியாமலே அந்த நல்வினைகளை ஓங்கச் செய்கின்றேன்…”

அதை நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும் போது இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து… பொருள் கண்டுணர்ந்த அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் நீங்கள் சென்று… பெருவீடு பெரு நிலை என்ற நிலையாக “ஒளிச் சரீரம் நீங்கள் பெற வேண்டும்” என்ற இச்சையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.

கீதையிலே சொல்வது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் உங்களுக்குள் பெருக வேண்டும் என்ற இந்த உணவின் நோக்கம் கொண்டு தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்களும் இதையே பின்பற்றினால் அதன் வழி கொண்டு
1.பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
2.அந்த வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
3.உங்களுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் சக்திகள் அது ஒடுங்கி
4.மெய் உணர்வைக் காணும் சக்தியாக உங்கள் பேச்சு மூச்சும் வெளிப்பட்டு
6.விஞ்ஞான உலகால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சினை வென்று
6.இந்தப் பூமியிலிருந்து நஞ்சினை அகற்றிடும் ஆற்றலாக நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

அத்தகைய ஆற்றலை இந்தப் பூமிக்குள் உருப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். அத்தகைய மூச்சலைகளாக உங்கள் மூச்சு வெளிப்பட வேண்டும்.

அந்த நிலை பெற வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பெற்றால் ஒழிய இனி வரக்கூடிய தீமையான விளைவுகள் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

ஆகவே இனி வரும் நிலையில்
1.இந்த உலகிற்கு அருள் வழி காட்டக்கூடிய அரும் பெரும் சக்திகளாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது

 

உதாரணமாக… சோர்வான எண்ணத்தை நாம் எடுக்கிறோம் என்றால் இந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… “ஹூம்… என் உடலுக்கே முடியவில்லை…” என்று வந்து விடுகிறது.
1.சோர்வை வலுவாந பின் உடலுக்கு முடியாது போய் விடுகின்றது.
2.மீண்டும் அதிகமான நிலைகளில் வேதனையை ஊட்டும்

அந்தச் சோர்வின் வலிமை வரும் பொழுது அது அர்ஜுனன். அந்த உணர்வினைக் கண்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது…
1.அங்கே அந்த வேலைக்குப் போக முடியாது…! சரி நீ இரு…! என்று
2.இந்த உணர்வினை உபதேசித்து அதாவது இந்த உடலுக்கு தக்கவாறு அந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றார்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவின் அலைகள் எதுவோ அதிலே எதிர் நிலைகள் தாக்கப்படும் பொழுது அந்த நிலை வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சியாக இருந்து ஒரு காரியத்தைச் செயல்படப் போகும் போது “ஒரு வேண்டாத எதிரி அங்கே வருவான்…” என்றால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு
1.மகிழ்ச்சியான உணர்வுடன் மோதப்படும் பொழுது ஆத்திரத்தைத் தூண்டுகின்றது.
2.என் வலுவான எண்ணங்கள் கொண்டு “அயோக்கியன் போகின்றான் பார்…” என்ற எண்ணத்தை எனக்குள் உணர்த்தி உபதேசிக்கின்றது.
3.அவரிடம் போனால் ஏதாவது செய்துவிடுவான் அதனால் நீ இப்படித் தப்பிச் சென்று விடு…! என்று வழிகாட்டுகின்றது.

ஒருவன் பால் எதிரியாக இருக்கிறோம் என்றால் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையைப் பார்த்த பின் “எதிரி போகின்றான்” என்ற நிலையும் தனக்குள் வலுவான… தன்னைக் காக்கும் எண்ணங்களைக் கண்கள் ஊடுருவி “நீ இப்படிக் காத்துக் கொள்…” என்ற நிலையை இந்த ஞானத்தைப் போதித்து இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றான்.

இது தான் கீதா உபதேசம் என்று சொல்வது.

1.நமக்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வும் அர்ஜுனன்…! அவன் சகலகலா வல்லமை பெற்றவன்…! என்று
2.உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அதிலே எதை எண்ணுகின்றோமோ அதனதன் வல்லமையை அது காட்டும்.

அந்த வல்லமைக்குத் தக்கவாறு எண்ணிய நினைவில் இந்தக் கண்ணன் வழிகாட்டி அதனுடைய நிலைகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைக் கண்ணின் இயல்பான நிலையும் நம் உடலுக்குள் அது இயக்குவதையும் வியாசக பகவான் காட்டுகின்றார்.

நம் உடலின் உறுப்புகளில் கண்ணின் நிலைகள் புழுவிலிருந்து வரப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து அதை வளர்த்து அந்த உணர்வின் தசையாக நமக்குள் உருவாகி அந்த மணத்தின் தன்மை கொண்டு நாம் எப்படிச் செயல்படுகின்றோம்…? என்ற நிலை தான் கீதா உபதேசத்தின் தெளிவான நிலைகள்.

கண்ணன் மகா ஞானி என்று சொல்கின்றோமே தவிர இந்தக் கண்ணன் யார்…? நமக்குள் சாரதியாக இருப்பது யார்…?

ரோட்டிலே சென்றாலும் நம் கண்கள் தான் சாரதியாக இருந்து வழி காட்டுகிறது.
1.இது மேடு… இது பள்ளம்…!
2.இங்கே வேகமாக வண்டி வருகின்றது… அங்கே மாடு மிரண்டு வருகின்றது… ஆகவே இந்தப் பாதையில் நீ செல்
3.இங்கே உன்னுடைய எதிரி வருகின்றான்… அங்கே உன் நண்பன் வருகின்றான் அவனிடம் நீ அணுகு
4.அவருடைய உதவி உனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது யார்…?
5.நம்முடைய கண்ணான கண்கள் தான் ஒவ்வொரு நொடியிலும் அதை உபதேசிக்கின்றான்.

நமக்குள் இருக்கக்கூடிய குணம் கொண்டு கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது எதிரியின் வேகமான உணர்வுகளைக் கண் இழுத்தாலும் நமக்குள் இருக்கும் வலுவான எண்ணங்களுக்குள் அதைச் சமப்படுத்தும் பொழுது
1.அந்த உணர்வின் நினைவைத் தூண்டி… வலுவான எண்ணங்களைக் கூட்டி
2.அதனுடன் இயக்கச் செய்யும் இந்த ஞானத்தை ஊட்டுகின்றது நமது கண் தான்.

அதைத்தான் கண்ணன் கீதா உபதேசம் செய்தான் என்று அவன் ஒரு பெரிய மண்டலத்தையே நமக்குள் அமைத்திருக்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பேரண்டத்தின் நிலைகள் இங்கே செயல்படுகின்றது என்று காட்டினார்கள்.

அதனால் தான் கண்ணன் சொல்கின்றான்…! “என்னை அறியாது…” எச்செயலும் யாரும் செயல்படுத்த முடியாது என்று…!

நம் கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி யாரும் எதையும் செயல்படுத்த முடியாது.
1.எதைக் கூர்ந்து கவனித்தோமோ அந்த உணர்வின் சக்தியைப் படமாக்கி
2.அந்த உணர்வின் சக்தியை உடலாக்கி
3.அந்த உணர்வின் எண்ணங்களை உருவாக்கி வைப்பது இந்தக் கண்கள் தான்.

ஆகவே தான் கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அதைப் படம் எடுத்து அந்த உணர்வின் சக்தி தனக்குள் வலுக் கூடி கூர்மை அவதாரமாக நாம் எண்ணிய நிலைகள்… அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருமாற்றிக் கொண்டு வந்தது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம்முடைய கூர்மை அவதாரம் எதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்து உணர்த்தினார்.

கீதாச்சாரம் என்ற நிலையில் அன்று வியாசக பகவான் எதை உணர்த்தினாரோ
1.அந்த உணர்வலைகள் நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
2.அவர்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தையும் நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”

 

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது இந்த மனித உடலை உருவாக்கிய சக்திகள் தான். இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியாகச் சேர்த்து
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது விண்ணுலகம் சென்ற அந்த மெய்ஞானிகள் நிலையை
2அவர்கள் கண்டுணர்ந்த அந்தச் சக்தியைத் தான் நாம் இன்று தியானத்திலே எடுப்பது.

தாவர இனச் சத்தில் விளைந்ததை நாம் புசிக்கின்றோம். அதனின் சத்தை ஆவியாக மாற்றிப் பாலாக எடுத்து இந்த உணர்வின் சத்தை வடிகட்டி ஒவ்வொரு நிலைகளிலும் பார்க்கின்றோம்.

பாலை வைத்து இறக்கி தாவர இனச் சத்தின் நிலைகள் அது ஒரு நிறமாக இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அதற்குள் வெள்ளையான ரசத்தை எடுத்து அதை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் தாவர இனத்திலே விளைந்த சத்துகள் மனித உடலானாலும் இந்த உடலுக்குள் நின்று மெய்ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அந்த உணர்வின் தன்மையை
1.ரசத்தை எப்படி இறக்குகின்றார்களோ இதைப் போன்று மனித உடலில் இருந்து மெய் ஞானிகளின் அருள் வித்தின் நிலைகளைக் காட்டி
2.உடலில் இந்தத் தாவர இனச் சத்தின் தசைகளை நீக்கி அந்த தசைக்குள் விளைந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அன்று உருவாகியது சப்தரிஷி.

ஆறாவது அறிவு சரஹணபவா குகா நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் மறைந்திருந்த விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல சத்தினையும் நல்ல குணத்தினையும் நமக்குள் எண்ணமாகக் கொண்டு நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்று
1.அதனின் நிலைகள் நல்லதைச் செய்யும் நிலைகள் யாம் எழுப்பும் ஒலியின் நிலை சப்தம்
2.உங்களுக்குள் சொல்லும் உணர்வுகள் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளில் அதை உருவாக்கச் செய்து
3.அந்த மகிழ்ச்சியைத் தோன்றச் செய்வது தான்… ஆக அது சப்தரிஷி…!

ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று அந்த ஒலியின் நாதத்தால் ஏழாவது அறிவைக் கொண்டு இயக்குவது தான் சப்தம் நாதமும்… ஏழாவது நிலையும் இரண்டற ஒருக்கிணைந்து சப்தரிஷிகள் என்பது.

மனித உடலில் மெய் ஒளியாகச் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷி என்பது. சப்தரிஷி மண்டலம் என்பது ஏழு அல்ல. எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு மனிதனிலிருந்து உருப்பெற்றது தான்.

மனித வாழ்க்கையில் எண்ணிலடங்காத குணங்கள் இருந்தாலும் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் தெளிவாக உணர முடிகின்றது… அதைச் செயல்படுத்த முடிகின்றது. அதற்குத்தான் அப்படிப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

உணர்வினை ஒளியாக மாற்றிய தன்மையைத் தான் ரிஷியின் மகன் நாரதன் என்று சொல்வது. நாரதனோ அவன் ஒரு முனிவன். அவன் கலகப்பிரியன்.

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித் துருவம் சென்றடைந்து அதன் பின் அதிலிருந்து விளைந்து சப்தரிஷி மண்டலங்களாக உருபெற்றது.
1.ஒளியின் தன்மையாகப் பேரண்டத்தின் உண்மைகளை அறிந்து
2.தீயதை நீக்கி மெய் ஒளியைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெற்று
3.விண்ணிலே வரக்கூடிய விஷத்தின் தன்மையை அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் நுகர்ந்து அதை ஒடுக்கி ஒளியாக மாற்றினார்கள்.

வைரம் விஷத்தைத் தனக்குள் ஒடுக்கி ஒளியின் தன்மையாக என்றும் நிலையாகப் பிரகாசிக்கின்றது. இதைப்போல இந்த மனித உயிராத்மா ஒளியின் சரீரம் பெற்று விஷத்தை உள்ளடக்கிய பின் அந்த விஷமே ஒளியாக மாறுகின்றது.

அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் ஊடுருவி வரப்படும் பொழுது
1.அதை நம் எண்ணத்தால் நுகர்ந்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இந்தப் புவியிலிருந்த ஆசைகளைக் கலகமாகக் கலக்கிவிட்டு அந்த மெய் ஞானிகள் பெற்றது போல நாமும் ஆற்ரலைப் பெற முடியும்.

அதாவது… நாம் பாலைக் கடையும் போது வெண்ணை திரண்டு வருகிறது. அதை உருக்கப்படும் பொழுது அதனுடைய சக்தி நெய்யாக வடிவது போல
1.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாம் நுகரப்படும் போது மனித வாழ்க்கையில் வந்த விஷமான பிடிப்புகள் அகன்று
2.அந்த விஷத்தின் தன்மையே சத்தான நிலைகள் வடித்து மெய் ஞானிகள் ஒளியாக ஆனது போல நாமும் பெற முடியும்.

ஆனால் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும் அவன் ஒரு முனிவன்.
1.தான் பெற்ற ஒளியின் சரீரத்தை “விடாப்பிடியாக” அவன் நமக்குள்ளும் சிருஷ்டித்து விடுவான்… அது தான் முனி என்பது
2.அந்த உணர்வான சக்தியை நமக்குள் சேர்த்து அந்த வலுவான நிலைகளை உருவாக்கச் செய்வது தான் முனி என்பது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் நம்மை அறியாயது வரும் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு அவன் ஒளிகளிலேயே நாமும் விண் செல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞ்சம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகளை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.

எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது

 

இந்த மனித வாழ்க்கையில் இந்த ஆசை அந்த ஆசை என்று இருந்தாலும் அதனின் வளர்ச்சியில் உலகெங்கிலும் எத்தனையோ வகைகளில் எத்தனையோ நிலைகளில் போர்க்களங்கள் ஆகிக் கொண்டுள்ளது.

அதனால் ஆங்காங்கு வாழும் மக்களின் நிலை என்ன ஆவது…?

ஒவ்வொருவரும் தன்னைக் காக்க எத்தனையோ விஷமான குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்து
1.தன் நாட்டைக் காக்கப் போகின்றேன்… அதை வைத்து எதிரியை வீழ்த்தப் போகின்றேன் என்ற இந்த உணர்வை ஓங்கி வளர்த்து
2.அதேபோல மற்ற நாட்டவரும் எதிரிகளிடம் இருந்து காக்க அவனை அழிக்க வேண்டும் என்று அதை நுகர்ந்து
3.தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்து விடுகின்றான்.

இவன் உடலில் இருக்கக்கூடிய நல்ல எண்ணத்தை இவன் அழித்தும்… பதிலுக்கு எதிரியை அழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் நல்ல குணங்களை அவன் அழித்திடும் நிலையாகவும் தான் செயல்படுகின்றனர்.

1.ஆக… யாரைக் காக்க வேண்டும் என்று இப்படி எண்ணினார்களோ அவர்கள் யாரையுமே காக்க முடியாது
2.அனைவருமே நல்ல குணங்களை இழந்து மண்ணுடன் மண்ணாக மடியும் நிலைதான் வருகின்றது.
3.மடிந்தாலும் விஷ பூச்சிகளாகப் பிறக்கும் நிலை தான் உருவாகிக் கொண்டுள்ளது.

எப்படி… எதனால்…?

விஷமான ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள் அதை வெடிக்கும் போது சுட்டுப் பொசுக்கிப் பாதிப்பாகும் பொழுது அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள்
1.எந்தெந்த விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றனரோ அதற்கொப்ப இறந்து விடுவோமே என்ற வேகத்தில் அதை எல்லாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.குண்டுகளாக் நம்மை அழித்து விடுவான் சுக்குநூறாக ஆக்கி விடுவான் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு
3.அதனின் பய உணர்வுகள் கொண்டு அதனால் தாக்கப்படும் பொழுது இந்த உடலை அழித்து
4.அந்த உணர்வு தாங்கிய தன்மையாக மனிதன் இறந்த பின் விஷப் பூச்சிகளாகத் தான் இனி பிறக்க வேண்டி வரும்.

“யுத்தங்கள் நடக்கும் பகுதிகள் அனைத்திலும்” மனிதர்களாக இருப்பவர்கள் அங்கே இறந்து விட்டால் விஷப் பூச்சிகளாகப் பிறக்கும் நிலையைத் தான் அடைகின்றார்கள். யாராக இருந்தாலும் சரி…!

ஏனென்றால் பாலிற்குள் விஷத்தை ஊட்டினோம் என்றால் அதைக் குடித்தால் நம்மை நினைவை இழந்து மடியச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனுடைய ஆசை அலைகள் அனைத்துமே அழிந்து இனி எந்த நிலை ஆகப்போகின்றோமோ என்ற நிலையில் எதிரிகளின் பால் நினைவைச் செலுத்தி அவர்கள் வீசும் குண்டுகளினால் தன்னை அழித்து விடுவான் என்ற நிலையில் நல்ல உணர்வுக்குள் இத்தகைய விஷமான உணர்வு இணையப்படும் பொழுது அதன் அறிவுகள் உடலுக்குள் இது ஊடுருவித் தாக்கப்பட்டுச் சுக்குநூறாக்கிவிடுகிறது.

இந்தக் குறுகிய காலத்திலே விளைந்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் ஆற்றல் கொண்ட ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அதன் வழி உடலாகப் பெறப்படும் பொழுது
1.அடுத்து நல்ல உடல் பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
2.இந்தப் பூமி விஷமான நிலையிலிருந்து நல்ல நிலை பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
3.அப்படி நல்ல நிலை பெற்று அதிலே மீண்டும் மனிதர்களாக வரக்கூடிய எக்காலம்…? என்றும் சொல்ல முடியாது.

இப்பொழுது இருக்கக்கூடிய காலத்திலே எத்தனை சுகபோகங்களை அழித்தோமோ எத்தனை வேதனைகளை அனுபவித்தோமோ எந்த வேதனையை வளர்த்துக் கொண்டோமோ வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மைகள் இந்த உயிரிலே ஒன்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும் “வேதனைப்பட்ட நிலையிலிருந்து நாம் மீளவே முடியாது…”
1.உயிருடன் இந்த வேதனை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.
2.அந்த வேதனையின் உணர்வின் இயக்கங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.

இப்பொழுது உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது உடலின் துணை கொண்டு. சந்தர்ப்பத்தால் அதை மாற்றி அமைக்கவும் முடிகின்றது மனிதனாக இருக்கும் பொழுது தான் மாற்றவும் முடியும்.

ஆனால் மனித உடலில் நீக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த வேதனையான விஷம் உயிராத்மாவிலே சேர்க்கப்படும் பொழுது எப்பொழுதுமே விஷத்தன்மை கலந்ததாக இயக்கி “நம்மை வேதனையால் துடிக்கும்படி செய்து விடும்…”

அப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து
1.நல்ல நினைவிருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று விஷத்தன்மைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
2.அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…!

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

 

நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். “ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.

ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் “நண்டு மாதிரி இருந்து… எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?

1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.

நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை… “இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.

உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுது… அதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.

மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்…
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.

அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது… கண் திருஷ்டி பட்டுவிட்டது… எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.

ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது… ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.

ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்… அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.

அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக “நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

ஆரம்பத்தில் எத்தனையோ காட்சிகளை எல்லோருக்கும் நான் கொடுத்துக் கொண்டு வந்தேன்… சில உண்மைகளை அறியும் படியும் செய்தேன் – புவியின் ஈர்ப்புக்குள்.
1.அதிலே மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது… உடலின் இச்சைக்குள் நிகழ்ந்தது…
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

ஆகவே… அதை எல்லாம் நிறுத்தி விட்டு இப்பொழுது உங்களுக்குள் அந்த மெய் உணர்வைப் பெறும் ஆற்றலாக உபதேசிக்கின்றேன்,

விஞ்ஞான அறிவால் வரும் காற்று மண்டலம் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது மனிதன் அதை நுகர்ந்து சிந்தனையற்றவனாகச் செயல்படும் உருப்பெறும் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள நம் சிந்தனையை விண்ணில் செலுத்தி மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்.

1.அதனைப் பெற்று நம் உணர்வு கொண்டு தன் அருகில் வரும் மனிதனின் தீமைகளிலிருந்து விடுபடவும்
2.நுகர்ந்த உணர்வுகள் மற்றவரைக் காக்கவும் தன்னைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
3.உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய இது உதவும்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால்… வாழ்க்கையில் இந்த உடலின் இச்சைகுகந்த உணர்வுகளைப் பெறப்படும் பொழுது எந்தத் தெய்வம் செய்யும் என்ற உணர்வுகளைப் பதிவு செய்தனரோ அதே தெய்வச் சிலையாகப் பார்த்துணர்ந்த உணர்வுகள் மடிந்த பின் அதே உணர்வலைகளை அதே ஏக்கம் கொண்டவர்கள் “இன்ன தெய்வத்தைக் கண்டேன்…” என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மனிதனுடைய இச்சைக்குள் வளர்த்துக் கொண்ட நிலைகள்.

ஆகவே இந்தத் தெய்வக் காட்சிகள் என்பது… மனிதனில் உருவாக்கி வேஷமிடப்பட்டு அதனைப் படமாக்கி மீண்டும் அலைகளாக அனுப்பி (விஞ்ஞான அறிவிலே) அதை நுகரப்படும் பொழுது அதையே எப்படிக் காட்சியாகக் காணுகின்றமோ இதைப் போலத் தான் கண் புலனறிவுகளில் சிலையை உற்று நோக்கி ஆடைகளை அலங்கரித்த அதன் உணர்வை நமக்குள் பதிவாக்கிய பின்… உடலை விட்டுச் சென்ற பின் அந்த அலையின் ரூபமாகச் செல்லும்.
1.அதை மீண்டும் குவிக்கப்படும் பொழுது
2.எதனை வலுவாகச் சேர்த்தோமோ அந்த ரூபமாக முருகனாகவும் காளியாகவும் காட்டும்.

கொடூர உணர்வின் தன்மை கொண்டு ஒரு பூதகணையைக் காட்டி (துஷ்ட தெய்வங்கள்) கோரப் பல்களைக் காட்டி இதுதான் காக்கும் என்றும் அதற்குப் பல உயிரினங்களைப் பலியிடப்பட்டு அதனை நேசித்துத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒரு மனிதன் நுகர்ந்து மடிந்திருந்தால் அதே உணர்வலைகளை உற்று நோக்கி அச்சத்தால் நுகர்ந்தால் கோரப்பல் கொண்ட அந்தச் சிலையின் உணர்வுகள் ரூபங்கள் பட்டு அதைக் கோர உருவமாகக் காட்டும்.

கோரமான உருவம் பற்களுடன் வருகிறது என்று சிலர் சொல்வதையும் கேட்கலாம். என் வாய் பேசாது தடுக்கின்றது என்றும் சொல்வார்கள். அச்சம் கொண்ட நிலையாக வேறு எந்தச் செயலையும் செய்ய முடியாதபடி செயலாற்றதாகவும் அது மாற்றும்.

மனிதனில் உருவாக்கப்பட்ட உணர்வுகள்… இதை எல்லாம் காட்சிகளாகக் காணக்கூடாது. மெய் வழி சென்று மெய் உணர்வைத் தனக்குள் பெற்ற அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெறுவதற்குக் காலத்தால் இந்தக் காட்சியின் தன்மை சிறுகச் சிறுக குறைத்து விட்டேன்.

ஆரம்பக் காலங்களில் சில நேரங்களில் பக்தியின் நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது சில உணர்வின் இயக்கங்கள் “பொருட்கள் எப்படி வருகின்றது…?” என்று அதை எல்லாம் காட்டினேன்.

நான் குடியிருந்த தெருவில் முதலில் யாரும் நம்ப மாட்டார்கள். ருக்மணி என்ற அம்மாள் வீட்டிலே பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் இருக்கக்கூடிய விநாயகர் அந்தப் பக்கமாக நகர்ந்து செல்லும். அந்த விநாயகர் மீது பல விபூதிகள் வரும். பல பொருள்கள் மாறி மாறி வரும்.

அதையெல்லாம் கண்டபின் “சாமி மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று அதற்குப் பின்னால் தான் நம்புகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் என் தெருவிலிருப்பவர்கள் நம்பி இங்கே பலர் வந்தார்கள்.

எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் எங்களுக்கும் அந்த விபூதி வேண்டும் என்றார்கள். உங்களுக்கு “ஒரு சக்கரம்” தருகிறேன் என்று கொடுத்தேன்… பின் அதிலிருந்து விபூதி வந்தது,

இதைக் கண்டு ஒரு ஐந்து ஆறு பேர் சாமி எங்களுக்குச் சக்கரம் வேண்டும் என்று கேட்டார்கள். சக்கரத்திலிருந்து விபூதி வந்தவுடனே இந்தப் பக்தி என்ன செய்கிறது…?

சாமி நமக்குப் பெரிய சக்தி கொடுக்கின்றார்… அருள் கொடுக்கின்றார்… வரம் கொடுக்கின்றார்…! என்று இப்படித்தான் எம்மை உணர்ந்தார்கள்.
1.ஆனால் இது எப்படி இயக்குகிறது…? என்று அதை அறியும் பற்றினைச் செலுத்தவில்லை.
2.அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் யாம் காட்டப்படும் பொழுது
3.இதிலே தான் சக்தி இருக்கின்றது கடவுளே உருமாற்றி உதவி செய்கிறார் என்று இந்த உணர்வுகளைத் தான் அவர்களால் வளர்க்க முடிகின்றது.

ருக்மணி பல பேரைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து… பூஜை அறையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி… பாருங்கள்…! சாமியை நாம் என்னமோ மோசமாக நினைக்கின்றோம்… ஆனால் விபூதி எல்லாம் வந்திருக்கிறது…! என்று தெருவில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காண்பித்தது.

அதற்குப் பின் தான் தெருவில் உள்ளவர்கள்… “ஓஹோ…! சாமிக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று… நான் அங்கே வரும்பொழுது எல்லாம் விபூதி வாங்குவதற்கு வருவார்கள். இப்படித்தான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இது எல்லாம் தன் உணர்வின் சக்திகள் வளர்ந்திருப்பதை நுகரும் ஆற்றலை அது எப்படி உருவாகின்றது மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் எப்படி அந்த அணுக்களாக மாறுகின்றது…? என்று
1.இந்த நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களின் பதிவையே அங்கே ஊட்டி…
2.அவர்கள் எண்ணங்கள் மூலமாகவே விபூதியாக எப்படி அங்கே வருகிறது…? என்று
3.அன்று நான் அப்படிச் சொல்லவில்லை (அதாவது உண்மையைச் சொல்லவில்லை).

“சாமிக்குச் சக்தி இருக்கிறது…” என்று எதை ஏங்கிப் பெறுகின்றனரோ இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பதிவாகும் பொழுது… அவர்களாலேயே அதனை அங்கே இயக்கும்படிச் செய்தது. குருநாதர் காட்டிய நிலைகள் அங்கே சில அற்புதங்களையும் செயல்படுத்திநேன்.

ஏனென்றால் நான் செய்தேன் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களுக்கு முன்னாலேயே அந்த உணர்வு குவிக்கப்படும் பொழுது…
1.சேர்த்து விபூதியை வரவழைப்பதும் அந்த சிலைகள் நகரும்படி செய்வதும்
2.அவருக்குள் அந்த உணர்வின் சக்தியைக் கொடுத்துத் தான் அதை அறியும்படி செய்தேன்.

அவருடைய எண்ணங்கள் வளர்ச்சி எதுவோ அதனின் உணர்வலைகள் பாயப்படும் பொழுது அதில் உள்ள காந்தப்புலன் நினைவாற்றலை அங்கே குவிக்கும்… அதன் வழி எல்லாமே நடக்கும்.

ஆனால் அதற்குப் பிற்பாடு அது எதுவும் வரவில்லை… நடக்கவில்லை. காலத்தால் பல உண்மையின் உணர்வுகளைச் சொல்லச் சொல்ல… உண்மையின் நிலைகள் அங்கே வளர வளர அவை எதுவும் வராது.

ஏனென்றால் சாமிக்குச் செய்யத் தெரியாது என்று அல்ல. எல்லாவற்றையும் கவர்ச்சி செய்வதற்கு வந்தார் என்று என்னைப் பெரிய ஆளாகக் காட்டி என்னைப் போற்ற வைக்கவும் முடியும்.
1.அதனால் எனக்கு என்ன பலன்…?
2.உங்களுக்கு என்ன பலன்…? – ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுடன் ஒன்றி மனிதனின் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும்.

1.ஞானிகள் சென்ற பாதையிலே நாம் செல்ல வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.இருள் சூழ்ந்ததை நீக்கிடும் ஆற்றலை நமக்குள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனிதனில் தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் செல்லும்படி செய்து
4.அங்கிருந்து வரும் உணர்வலைகளை நுகர்வதற்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அதைத் தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று காட்டியது. மனிதனான அகஸ்தியன் ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக உருப்பெற்றுள்ளார்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உருவான உணர்வின் தன்மையை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ அவர்களுக்குள் அது நாரதனாகச் சென்று
1.தீமைகள் அகற்றும் உணர்வாக ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அந்த உணர்வினை அடக்கி
2.தீமைகளை அடக்கிடும் சக்தியாக இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது என்று தான் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது எல்லாம் இன்று “அந்த நிஜம் பொய் ஆகிவிட்டது… பொய் நிஜமாகிவிட்டது…”

இப்பொழுது பொய்யைக் காட்சியாகக் காணும் போது அதை நிஜமாகக் காணுகின்றீர்கள் அல்லவா…!
2.அதே சமயத்தில் உங்கள் உணர்வின் நினைவாற்றலை உங்களை நம்பாது பொய்யாக்கி விடுகின்றீர்கள்.

உணர்வின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து… “சாமி சொல்கிறார் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று ஏக்கமாகும் பொழுது நம்மால் முடியவில்லை…! என்று “உங்கள் சக்தியைப் பொய்யாக்கி விடுகின்றீர்கள்…”

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதன் தீமைகளை வென்று ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூர்மையாக நுகர்ந்தறிந்து அதனை வளர்த்து… இருள் சூழ்ந்த உணர்வை நீக்கி அருள் பெறும் உணர்வின் தன்மையை என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் வாழும் அந்த நிலையை “இந்த மனித சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டும்…”

இத்தகைய கூர்மை அவதாரத்தை நீங்கள் எடுத்தால் ஒளியின் சரீரமாக மாறலாம்.

ஒவ்வொரு உயிரினமும் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட மற்ற உயிரினங்களை கூர்மையாக உற்றுப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதனின் வலுவை எடுத்து வளர்ச்சி பெற்றுத் தான் ரூபங்கள் மாறியது.

அகஸ்தியனும் அவன் மனைவியும் விண்ணின் ஆற்றலை துருவத்தின் வழிக் கூர்மையாக ஏங்கிப் பெற்றனர். தீமை அகற்றும் வலிமை பெற்றனர்… இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரம் ஆனது.

இந்தப் பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையுமே ஒளியின் சரீரமாகத் தனக்குள் கருவாக்கி உருப்பெற்று அகண்ட பேரண்டத்தில் என்றும் 16 என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதைக் கூர்மையாக எண்ணி அதன் வலிமையை பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி “என்றும் பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையில் நாமும் வாழ முடியும்.

ஆகவே… மனிதனின் கடைசி எல்லை என்பது… உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் எல்லையை நாம் அடைவதுதான்.

ஆனால்… உடலில் ஆசை கொண்டு அந்த உணர்வு உயிருடன் ஒன்றி விட்டால் அந்த உணர்வுக்கொப்ப இன்னொரு கூட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த ரூபமாக நம்மை மாற்றி அதன் உணர்வாக நம்மை இயக்கிவிடும். இது அனைத்தும் உயிரின் செயல்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனையே அது உருவாக்குகின்றது… அதன் செயலாக நம்மை இயக்குகின்றது… அதன் ரூபமாக நம்மை மாற்றுகின்றது.

“தனக்குள் பயமோ வெறுக்கும் நிலையோ தீமைகள் செய்து அது வலுப்பெற்ற பின்”
1.அத்தகைய வலுவை நாம் நுகர வேண்டியதில்லை.
2.அருள் ஞானிகள் உணர்வை நாம் பெறுவோம்.
3.நமது பார்வையில் பிறருடைய இருளை நீக்கிடும் சக்தியாக மாற்றுவோம் என்ற இந்த வலிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறருடைய தீமை நம்மைத் தாக்காது. இந்த உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களும் உண்மையை உணரும்படி செய்யும்… தீமையிலிருந்து விடுபடுவார்கள். நமக்குள் வரும் தீமையைத் தடுக்கும் ஆற்றலும் வருகின்றது.

அதனைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை அனைவரும் எளிதாகப் பெறும்படி வழிகாட்டுகின்றோம்.

அகஸ்தியர் காட்டிய விநாயகர் தத்துவத்தை முன்னணியில் வைத்துக் காலை துருவ தியானத்தில்… கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் பெற்று இரு உடல்களிலும் வளர்த்து இரு உணர்வையும் ஒன்றாக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் சக்திகளாக நீங்கள் பெற்றுப் பழகுங்கள்.

பிறவி இல்லா நிலையை இந்த உடலிலேயே பெறுவோம் என்ற உணர்வுடனே இந்தப் பயணத்தைத் தொடருங்கள். இந்த அலையின் தொடர் கொண்டு உங்களுக்குள் தீமைகளை அகற்றும் சக்தியாக வளரும். அதை நீங்கள் காணலாம்.

“பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்” அச்சுறுத்தும் உணர்வு கொண்ட நிலை இருந்தால் அந்தப் பயமான உணர்வு வந்து அது அச்சுறுத்தும் உணர்வாகக் குவிந்து உயிரிலே மோதப்படும் பொழுது இரவிலே அறியாதபடி புலனறிவிலே சொப்பணங்களைக் காணுவதும் காணாத உருவங்களைக் காண்பதும் அந்த அச்சத்தினால் உடல் நடுக்கம் ஆவதும் உடல்கள் வேர்ப்பதும் அஞ்சி எழுந்து ஓடும் நிலைகளும் கூட வரும்.

1.அத்தகைய அஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
2.அந்த அச்சத்தை நீக்கிடும்… அச்சமான இருளைப் போக்கிடும்…
3.அந்த மகரிஷியின் அருளை கணவன் மனைவியாக நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.திருமணமாகாதவர்கள் அன்னை தந்தை உணர்வோடு இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அருள் ஞானம் பெற வேண்டும் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் மன பலம் பெறுவீர்கள் மன உறுதி பெறுவீர்கள் தெளிந்த நிலை பெறுவீர்கள்

“அத்தகைய சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தான் குருநாதர் எனக்குக் காட்டிய அனைத்தையும் உங்களுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அருள் உணர்வுகளை வளர்த்து அருள் வாழ்க்கை வாழுங்கள் “அருளானந்தம் பெறுவீர்கள்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி “உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை…”

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

மனிதனின் கடைசிக் கடமை

 

யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி நினைவை விண்ணிலே செலுத்தி கடவுளின் அவதாரம் என்று கூறிய அகஸ்தியன்…
1.அவன் எவ்வாறு மெய் ஞானம் பெற்றான்…? என்ற நிலையும்
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அவனில் விளைந்த உணர்வுகளை வியாசகர் தனக்குள் பெற்றதையும் நாம் பார்ப்போம்.

அவனில் (வியாசகர்) விளைந்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அவன் கண்டுணர்ந்த உணர்வை அறிய நாம் தியானிப்போம்.

வியாசகர் சந்தர்ப்பத்தால் தன்னை மீன் காத்ததை எண்ணி ஏங்குகிறான். காரணம்… எதைக் கொன்று அவன் புசித்தானோ “அதுவே தன்னைக் காத்தது” என்ற நிலையில் நினைவினை விண்ணிலே செலுத்துகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றான்… அகஸ்தியன் உணர்வைப் பெறுகின்றான்.

அந்த உணர்வின் அறிவை தனக்குள் எவ்வாறு கண்டான்…? என்ற அந்த வியாசகர் பெற்ற மெய் ஞானத்தை நாமும் பெறுவோம்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தான் என்ற பேருண்மையை அவனுள் கண்டறிந்ததை… அவன் தெளிவாக்கிய உணர்வினை உருவமாக்கி… அருவத்தின் தன்மை தனக்குள் பெறும் சக்தியாகப் பின் வந்த ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

அதை அறிவதற்கு
1.வியாசகர் கண்டறிந்த அந்த உணர்வின் சத்தை நாம் ஏங்கிப் பெறுவோம்.
2.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பின் வந்தோருக்கு வழி காட்டிய உணர்வையும் உயிரின் இயக்கத்தையும் நாம் காண
3.நம் வலிமையைக் கூட்டி… கூர்மையாக அவன் காட்டிய உணர்வுடன் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
4.அதன் உணர்வின் அறிவாக நாமும் அறிந்திட நம் நினைவைச் செலுத்துவோம்.

பல அணுக்களின் சேர்க்கையாக மேரு என்ற மலை போல் அது உருப்பெற்று விஷத்தன்மையால் தாக்குண்டு இயக்கும் அந்த வரிசைத் தொடர் அணுக்களின் தாக்குதலால் பூமி எவ்வாறு சுழல்கிறது…? துருவப்பகுதி வழியாக எவ்வாறு நுகர்கின்றது…? பூமி தனக்குள் ஒவ்வொன்றையும் தாவர இனங்களை எப்படி உருமாற்றுகிறது…? என்ற உணர்வின் நிலையை
1.வியாசகர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாமும் காண்போம்.
2.வியாசகர் தனக்குள் உணர்ந்த உணர்வின் தன்மை விளைய வைத்த அந்த உணர்வினை நாம் நுகர்வோம்.
3.அதன் அறிவாக அவன் கண்டறிந்த உணர்வினை நாமும் அறிவோம்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்வதும் துருவப் பகுதி வழியாக நுகர்வதும் பூமிக்குள் பல உணர்வுகள் தனக்குள் மற்றதுடன் இணைத்து தாவர இனங்களாக உருவாக்குவதையும் அந்த மகா ஞானி கண்டுணர்ந்து… அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாமும் காண்போம்.

பூமி துருவப் பகுதி வழியாக நுகர்வதை… அந்தத் துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்கியதைத் பூமி தனக்குள் இணைக்கப்படும் பொழுது “பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம்…” என்று உணர்த்திக் காட்டினான் அன்று வியாசகன்.

பிரபஞ்சத்தில் மிதக்கும் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து உணர்வின் இயக்கமாக… ஆலகால விஷத்தைச் சிவன் தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்ற நிலையில் துருவப் பகுதியில் விஷத்தின் தன்மை அடக்கி அதைச் சிறுகச் சிறுகப் படரச் செய்கின்றான்.

ஏனோ சிவன் இந்த உலகைக் காக்க விஷத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் என்று காவியத் தொகுப்பில் இதனை முன் மொழிந்திருப்பார்கள்.

விண்ணிலிருந்து வரும் சக்திகளை நுகரப்படும் பொழுது…
1.நமது பூமி நீள வடிவமாக அது வளர்ந்து கொண்டே செல்வதைக் காணலாம்.
2.துருவப் பகுதியிலே உறை பனியாக உறைந்து அடுக்கு வரிசையாக வரும்.

அதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்யும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து உங்கள் உணர்வுகள் அனைத்தும்
2.நமது பூமியை மேலிருந்தே பார்க்கும் நிலையாக இந்த உணர்வுகள் தோன்றும்.
3.நமது உணர்வுகள் மிதக்கும் தன்மை அடையும்… அங்கிருந்து பூமியைப் பார்க்கும் சந்தர்ப்பம் உருப் பெறுகின்றது.

உறைந்த பனிகள் கடலாக மாறி… வெப்பத்தினால் ஆவியாக மாறி மேகங்களாகக் கூடுவதும் இதிலே தாவர இனங்கள் உருப்பெறுவதும் தாவர இனங்கள் உருமாறுவதும் அதில் உயிரினங்கள் உணவாக உட்கொண்டு அது அது சேர்த்த நிலைகள் கொண்டு தன்னை வளர்த்திடும் நிலையாக… இதையெல்லாம் கண்டறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நாம் நுகர்வோமென்றால் அவன் கண்ட பேருண்மையை நமக்குள்ளும் நாம் காணலாம்.

வியாசக பகவான் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.தியானத்தில் அமர்ந்துள்ள அனைத்து உயிராத்மாக்களும் வியாசக பகவானின் உணர்வுகள் பெற்று
2.வியாசகரின் அருள் ஞானமாகத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றிப் பேருண்மையின் உணர்வை உணர்ந்து
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளைப் பின் வந்த அரசர்கள் யாக வேள்விகளை நடத்திச் சிலைகளை உருவாக்கி உணர்வின் தன்மை பதிவாக்கி பதிவின் அலைகள் மனிதனுக்குள் உருப்பெறச் செய்தார்கள்.

அந்த மனிதன் உடலை விட்டு அகன்ற பின் அதே உணர்வின் அலைகள் இங்கே படர்ந்திருப்பதும்… அதே தெய்வத்தினைப் பக்தி கொண்டு செல்வோர்கள் எண்ணி ஏங்கும் பொழுது… அந்தச் சிலையின் உணர்வைத் தனக்குள் வளர்க்கப்பட்டு… சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும் அலங்காரங்களும் படங்களாக உருவாக்கப்பட்டு அதனின் உணர்வலைகளாக வெளிப்படும் பொழுது… “அதனை மீண்டும் குவித்து” டிவிக்களில் நாம் உருவங்களாகக் காணுவது போன்று காணலாம்.

அதாவது… மனிதனுக்குள் பக்தி என்ற உணர்வை வளர்த்து எந்தச் சிலையை உருவாக்கினோமோ அதனை மனிதனின் உடலில் எந்தப் பக்தி கொண்டு எடுத்தார்களோ அது எல்லாமே “அலைகளாக இன்றும் உள்ளது…”

உதாரணமாக “முருக பக்தி கொண்டு” உடலை விட்டு வந்த அந்த உணர்வலைகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை
1.இப்போது நீங்கள் வானை நோக்கி எண்ணி…
2.ஆறாவது அறிவின் உணர்வாக வளர்த்துக் கொண்ட அந்த முருகனைக் காண வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
3.அந்த அலைகள் குவிந்து முருகனாகக் காட்சி தெரியும்… மேல் நோக்கிப் பாருங்கள்.

“காட்சி…” என்றால் மனிதனுக்குள் எந்தெந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு இந்தப் பூமிக்குள் அலைகளாகப் பரப்பப்பட்டதோ “அதைக் குவிக்கப்படும் பொழுது”
1.அந்தந்த உருவங்களை மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
2.டிவிக்களில் காணுவது போன்று குவிந்து உருவமாகக் காட்டும்.

வியாசகரும் அகஸ்தியரும் வானுலக ஆற்றலைத் தனக்குள் வளர்த்து இந்த உண்மையின் தன்மை உணர்த்தி அவர் உடலில் பெருக்கப்பட்டு அருள் ஞான ஒளியாகக் கண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் எடுக்கப்படும் பொழுது… வியாசகர் கண்ட உணர்வுகள் “பூமி விஷத்தின் தன்மையால் சுழல்வதும்… துருவப் பகுதி வழி கவர்வதும்… உணர்வுகள் தனக்குள் மாற்றம் அடைவதும் தாவர இனங்களாக உருப்பெற்றதும்… அதை மற்ற உயிரினங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும்…” காண முடிந்திருக்கும்.

இந்த்த் தியானம் இருக்கும் பொழுது மேரு என்ற மலையை மத்தாக வைத்து என்று சொல்லும் பொழுது இந்தப் பூமியினுடைய இயக்கத்தைச் சிலர் காட்சியாகப் பார்த்திருக்கலாம்.

இது எல்லாம் வியாசகர் அன்று கண்டறிந்த உணர்வுகள்…!

அகஸ்தியன் கண்டறிந்த அலைகளை அவன் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வை… அக்கால மொழி கொண்டு வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்… ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

இவ்வாறு எண்ணி ஏங்கப்படும் பொழுது
1.துருவ மகரிஷியாகும்போது கணவனும் மனைவியும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இருவரும் பரிமாறிக் கொண்டதை
2.அவர் உடலிலிருந்து அந்த அலைகள் வந்து படர்ந்து இருப்பதை நாம் காண்போம்.

வானை நோக்கி உற்றுப் பாருங்கள்…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரப்பும் பொழுது
1.அந்தக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் உடலின் அமைப்பு
2.அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக அவர்களுக்குள் இணைந்து ஒளியின் சரீரம் பெற்று எங்கே நிலை கொண்டார்களோ அந்த எல்லைக்குச் சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்றதையும் நீங்கள் காணலாம்.

துருவ மகரிஷியும் அவருடன் இணைந்த அருந்ததி அக்காலத்தில் வாழ்ந்த நிலைகளும்
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரமாகத் துருவப் பகுதி வழியாகச் சென்றதைக் காணலாம்.
2.துருவ நட்சத்திரத்தினுடைய ஒளியையும் காண முடியும்.

இந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின்…
1.துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இரவிலே படுத்தால்
2.அந்த உணர்வுகள் கலந்து உயிருடன் ஒன்றிப் பெருகி… அந்த உணர்வின் ஆற்றலைப் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு கவர்ந்து நம்மை எப்படிக் காணச் செய்கின்றார்களோ… இதைப் போலத்தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலில் இருந்து வெளி வந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றி வைத்துள்ளது… நாமும் அதைக் காண முடியும்.

1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வை எமக்குள் பதிவாக்கி உணர்வின் நினைவை எடுக்கச் சொல்லி
2.அருள் ஞான வித்தாகக் கேட்போருக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து வினைக்கு நாயகனாக ஆக்கி
3.நினைவு கொள்ளும் பொழுது படர்ந்திருக்கும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து கண் புலனறிவில் நிச்சயம் காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக் காட்சிகளாகத் தெரிய ஆரம்பித்தால் திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது உருவத்தைக் கண்டால் அஞ்சி ஓடுவோர் பலர் உண்டு.

பயத்தின் நிலை அடைந்து விடுவார்கள். ஆகையினால் அத்தகைய உணர்வின் தன்மை காட்சியாகக் கிடைக்கக் கூடாது என்பதற்கும்
1.ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வினை உங்களுக்குள் வளர்ப்பதற்கும் தான் இதைச் செய்வது.
2.சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம்.
3.நாம் காண வேண்டியது… பெற வேண்டியது… உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் திறனைப் பெறுவது தான்

மனிதனின் கடைசிக் கடமை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான்… வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெற வேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள்…? என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள்…? என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே… என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக… சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்

 

விஞ்ஞானிகள் இன்று மண்ணுக்குள் பதிந்திருப்பதை “காந்தப் புலனறிவு கொண்ட ஒரு டப்பாவில்” வைக்கின்றான். இது… பூமியில் இருக்கும் இந்த உணர்வுகள் எதனுடன் கலந்ததோ “அதன் இனத்தைக் காற்றிலிருப்பதை அது ஈர்க்கும்…”

அதைக் கண்டு கொள்வதற்காக மேலே விமானத்திலே பறந்து
1.அதிலிருந்து உணர்வலைகளை ஊடுருவிப் பாய்ச்சப்படும் போது ஈர்க்கும் சக்தியை அதிகமாகின்றது.
2.அதற்குள் இருக்கும் அளவுகோல் மானிகளை இதனுடன் இணையச் செய்து
3.பூமிக்குள் இன்ன இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் “இன்னது இருக்கிறது” என்பதை விஞ்ஞானி அறிகின்றான்.

ஆனால் அன்று ஆதியிலே… அகஸ்தியன் “தாய் கருவிலேயே” விஷத்தை அடக்கும் உணர்வுகள் கொண்டு விளைகின்றான். பிரபஞ்சத்தில் உருவாகும் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றான்… துருவன் ஆனான்.

1.வானஇயலையும் புவிஇயலையும் உயிரியிலையும் கண்டறிந்த பின் உயிரியலின் ஆற்றலைப் பெருகும் நிலையும்
2.நம் பூமியில் பரவிக் கிடந்த பல கோடித் தாவர இனங்களின் வலிமை கொண்டு அந்த எண்ணங்கள் கொண்டு தன்னை அறியும் ஆற்றலும்
3.இது எந்த வகையில் வந்தது என்று “துருவத்தினை நுகரப்படும் பொழுதுதான்” விண்ணின் ஆற்றலைத் துருவன் நுகர்கின்றான்.
4.இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகிறது…? என்பதையும் காண்கின்றான்
5.இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக எது எது இயக்குகிறது…? என்று தனக்குள் அறிகின்றான்.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மைகளை நம் குருநாதர் எப்படி அறிந்தார்…?

1.துருவத்தைப் பின்பற்றுகின்றார்… துருவனின் உணர்வைக் கவர்கின்றார்.
2.கவர்ந்த உணர்வின் தன்மை அவருக்குள் அறியும் ஆற்றலாக வருகின்றது.

அதன் உணர்வை வளர்த்துக் கொண்ட நிலை தான் எமது பாலும் அந்த உணர்வின் கருக்களைப் பதியச் செய்து அந்தக் கருவின் வித்தினை நினைவு கொள்ளும் பொழுது அதன் உணவை நானும் நுகர முடிகின்றது… அறிய முடிகின்றது.

அதிலே விளைந்த உணர்வின் வித்தை இப்பொழுது சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அதை நீங்கள் கேட்கும் போது ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உலகை அறிய முடிகின்றது… உங்களைக் காக்கும் உணர்வும் வருகின்றது.
3.இந்த இரண்டையும் பிணைத்துத்தான் இப்போது உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
4.குருநாதர் எமக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதன் வழியே தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால்… மனிதனாகப் பிறந்த பின் கார்த்திகேயா பல கோடி உணர்வுகளிலிருந்து எதிரி வருகிறது என்று அந்த உணர்வால் அறிகின்றது… உணர்வின் வலுவை அறிகின்றது… அதனின் உணர்வைத் தனக்குள் கவருகின்றது… விளைந்த பின் அதிலிருந்து தப்பிக்க எண்ணுகின்றது… அதன் வலுவும் கூடுகின்றது.

இவை அனைத்தும் இணைந்து எதனை உற்றுப் பார்த்துக் கூர்மையானதோ அதனின் வலிமை இதற்குள் விளைகின்றது. இந்த நினைவு ஓங்கி வளர்கின்றது.

வலிமையாகி உடலை விட்டுச் சென்ற பின் எதைக் கூர்மையாக எண்ணியதோ அதன் உடலுக்குள் சென்று… “அதன் வலிமை கொண்டு அதனின் உருவமாக மாறுகின்றது” என்று இதையெல்லாம் காவியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரத்தில் உயிரின் உணர்வுகள் எதைக் கூர்மையாகக் கண்களால் உற்று நோக்கி வலிமையாக்கிக் கொண்டதோ… அதன்படி அந்த வலிமை பெறுகிறது என்று வியாசகர் அதை உணர்த்துகின்றார்.

கண்ணின் உணர்வுகள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட நிலையில்
1.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதனை நினைவுபடுத்துவதற்குத் தான் வியாசகரைப் பகவான்… என்றார்கள்.
2.காரணம் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவன் அவன்.

கண்ணைக் கண்ணன் என்றாலும் கண்கள் பெற்ற உணர்வினைத் தனக்குள் நுகர்ந்தறிந்து பரமாத்மா. இந்தப் பரமில் உள்ள அனைத்திலும் கலந்துள்ளது. ஒவ்வொரு உயிரினங்களும் கண்ணின் நினைவாற்றல் கொண்டு கவர்ந்து அந்த உணர்வின் நிலையாக விளையச் செய்தது… பரமான பூமியில் பரமாத்மாவாகக் கலந்துள்ளது.

கண்ணின் செயலாக்கங்கள் உருவாக்கப்பட்டு
1.மீண்டும் இந்தப் பூமியில் படர்ந்திருப்பது மனிதனுக்குள் பரமாத்மாவாக மாறுகின்றது.
2.பூமிக்குப் பரமாத்மாவாக மாறுகின்றது… நமக்குள் பரமாத்மாவாக இயக்குகின்றான்.

வியாசகரால் உணர்த்தப்பட்ட உண்மை இது…!

காரணம் ஞானிகள் கொடுத்த காரணப் பெயர்கள் அனைத்துமே தெளிவானதே. தான் கண்டுணர்ந்ததைத் “தன் இனங்கள் பெருக வேண்டும்” என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடடா.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

 

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.

தீமையை வென்றவன் சுக்ரீவன்… அவன் வாலியின் சகோதரன்… இளையவன்.

விஷத்தின் தன்மை கொண்டு வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில் அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின் தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால்… பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன் வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.

கடும் வேதனைகளை அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத் துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றுகின்றான்.

உதாரணமாக ஒரு விஷமான பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

துரித நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும் விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும் பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில் வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.

அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.

எந்த உணர்வு நம்மைச் சோர்வடையச் செய்ததோ… அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும் நுகர்ந்து சோர்வடையாதபடி… அந்தத் துருவனின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது… அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் “சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் “அருள் ஒளியின் உணர்வாக இயக்கப்பட வேண்டும்” என்றும் காட்டுகின்றார்கள்.

அதாவது பிராணயாமம் என்று சொல்வார்கள்.

ஆனால்… மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.

1.புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்து… அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச் செய்வதே பிராணயாமம் என்பது.

ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை “ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்தக் கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு…!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதி மயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் – நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.

இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்…
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதைப் போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காகக் கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான்… அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போகன் உருவாக்கிய “மனோசிலை… காயகல்பம்…!”

 

மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.

அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.

ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது… இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.

அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றது… மந்திரக் காலங்கள்.

உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது… பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.

அதாவது… அது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்

வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி “மனோசிலை” என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.

பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.

அதே போல் அந்த மெய்ஞானியான அவன்… மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது… தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.

அப்போது நமக்குள் உணரலாம்.

ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.

போகனைக் கண்டவுடன் குருநாதர் “திருடன்… திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.

1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான்… அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து… தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.

ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை “மோகிக்கின்றான்… போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.

அதனால் தான் “போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.

கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.

அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.

கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது “அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால்” அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமாக உருவாகின்றது.

இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.

அவன் அன்று செய்தது.

சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.

இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் “காயகல்பமாக” அவன் மாற்றுகின்றான்.

அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.

எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் “பறந்து செல்கிறான்…”

மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.

கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?

இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.

அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று… இவர்கள் உருவாக்கும் நிலைகள்… மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.

உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.

கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.

அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்…
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.

இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு… யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெற வேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

 

விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.

ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம் போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.

இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து… ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?

1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.

அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.

ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.

ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக் கோபம் வருகிறது என்று…!”

“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.

ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.

மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.

ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.

அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.

காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.

அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.

ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!

1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.

குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.

ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION – SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன்.

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு…கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகி விட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்.

எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

 

நட்பாக இருக்கிறோம் என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள். அதையெல்லாம் உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.

1.கஷ்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்… நினைவுக்கு வராது.

ஆகவே… யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று அருள் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும் கண்டான்… அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான்… இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன் தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின் நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.

ஆக… மற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும்” என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

பாசத்தால் பரிவால் பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தால்… மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி விடும்.

குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம் அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.

சூரியனின் ஒளிக் கதிர்கள் வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால் இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின் வெளிச்சம் தெரிவதில்லை… இருண்டு விடுகின்றது.

இதைப்போல் உயிரால் உணர்வின் ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.

யாராவது உங்களிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள் காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்…
3.திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள் பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.

இல்லை என்றால் அந்தக் குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.

நான் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.

குடும்பங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால் நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்தச் சாப அலைகளின் இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை எப்படி இருக்கும்…?

அந்த உனர்வின் வேகங்கள் கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும் அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.

நான் செய்தேன்… இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…? எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று முடியாத நிலைகள் வந்த பின்… அடுத்தாற்போல் என்ன நினைப்பார்கள்…!

செத்த பிற்பாடு என்ன ஆகப் போகின்றோம்…? போகட்டும் போ…! என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. ஆகவே… இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப் போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வின் ஆற்றலை…
1.அகண்ட உலகையும் இருண்ட நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம் கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து விடும்…
3.சோர்வும் விரக்தியும் தான் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குக் “கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத் தவிர்க்க வேண்டும்…”

அப்படி அவர்கள் சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில் இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒரு சிலர் கஷ்டம் வந்து விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள் அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.

அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத் தான்
1.யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத் திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள் அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை “அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி… உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது… வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் “திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

 

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் “தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு “அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”

அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவே… நம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.

நம்முடைய எல்லை எது…?

துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.

இல்லை…! என்னை இப்படிப் பேசினான்… அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி… இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.

ஆக… அப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து… இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.

இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.

குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால்… மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.

இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை…
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.

ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி… அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று… இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார்… அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!

“அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.

யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.

1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.

ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? “தனக்குள் நோய் வந்தாலும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.

அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்………! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது………!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்… பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது…இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.உங்களையும் காக்கின்றீர்கள்
2.நாட்டையும் காக்கின்றீர்கள்
3.மக்களையும் காக்கின்றீர்கள்
4.இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனைப் போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டிக் கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூமி சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வைப் பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

 

அகஸ்தியன் கண்டதை… துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே அதைக் காணும்படி செய்யும்.

எப்படி…?

உதாரணமாக கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.

துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன் தாக்கும் உணர்வுகள் செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும் பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின் ரூபங்களைக் காணுவோம்.

தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ… அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள் அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள் தெரிய வரும்.

இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும் காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர் தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.

இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
4.இரவில் தூங்கும் பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.

ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும் உண்டு.

பூமிக்குள் வராது அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள் பல நிலைகளில் வருவது உண்டு.

கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை… அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

இந்த உணர்வுகள் உன்னை எப்படி இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர் வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம் தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”

அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும் நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள் உடலிலிருந்து வரும்.

பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர் எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…! என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.

இரவிலே தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.

சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.

இந்த வயதிலேயே இதையெல்லாம் கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து இதைக் கேட்டார்.

1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர் இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.

அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”

மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.

1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும் இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான் செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப் போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும் அவருக்குப் பலனில்லை.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத் தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது மன நிலை குழம்புகின்றது.

அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத் தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

 

அகஸ்தியரும் அவர் மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்தனர்.

1.உயிர் எவ்வாறு மின்னல் போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள் வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள் வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம். துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது இணையும்.

அந்த உணர்வின் ஒளிகள் இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன் இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.

உங்கள் எண்ண உணர்வுகள் அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள் ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள் உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.

1.மீண்டும் மீண்டும் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள் உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக உங்கள் உணர்வுகளிலே தென்படும்.

வான மண்டலத்தில் வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித வர்ணங்களாக வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள் உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப் பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

வான மண்டலங்களில் நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள் பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து… அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல் வந்திருக்கும்.

அதே சமயத்தில் பூமிக்குள் கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.

அதனின் விரிவாக்கங்கள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.

இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.

செடிக்கு உரமிடும் பொழுது அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.

எமது குருநாதர் அண்டத்தின் ஆற்றலைப் பெற எமக்குப் பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின் வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று கொண்டிருப்பதையும் காண முடியும்.

நாளுக்கு நாள் உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.

தியானமிருக்கும் பொழுது உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத் தெரியவரும்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும் அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம் பெற்றதும் தெரிய வரும்.

ஏனென்றால் கணவன் உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.

அதன் வழி எடுக்கும் அந்த ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப் போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின் சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”

இந்தத் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள் நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல் உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டியப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு “எந்த மந்திரக்காரன் சொன்னானோ” அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப் போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!

யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி

 

1.எப்படி இருந்தாலும் உடலை விட்டு நம் உயிர் பிரிந்து தான் ஆகும்.
2.கோடிச் செல்வம் இருந்தாலும் உடலுக்குள் உயிர் இருக்காது.

செல்வத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி “அவன் என்ன செய்வான்…? இவன் என்ன செய்வான்…?” என்ற இந்தப் பயம்தான் வரும் பயத்தைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்து நாம் எந்த நிலையிலும் தீமைகள் தன்னைத் தாக்காது மன உறுதி கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

மன உறுதி கொண்டிருந்தாலும் அதிர்ச்சியான நிலைகளில் ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்த பின் நம் உடலுக்குள் வந்த உடனே பயம் ஏற்படுகின்றது.

ஏனென்றால்
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையாகும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
2.அந்த அதிர்வுகள் நமக்குள் வருகின்றது.

அந்த அதிர்வான உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்த பின்… பயத்தை ஊட்டும் உணர்வின் தன்மை உடலில் தசைகளில் ஏற்பட்டு விடுகின்றது. அல்லது இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுடன் சேர்த்துப் பயத்தை ஊட்டுகின்றது அந்த உணர்வின் அதிர்வுகள் தான்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் 20 வருடம் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அவரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எத்தனை பேர் இதை எடுத்துக் கொள்கின்றார்கள்…! எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதே வழியில் எத்தனை பேர் ஆசைப்பட்டு எடுக்கின்றார்கள்…?
1.கொஞ்சப் பேர் தான் வருகின்றார்கள்
2.அவர்களும் கூட… ஏதோ தொழிலுக்காக என்று எண்ணித்தான் வருகின்றார்கள்
3.நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்தச் சாமியிடம் என்ன இருக்கிறது…? என்று போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
4.யார் எதைச் செய்தாலும் இந்த உடலில் என்ன வைத்திருக்கிறோம்…? என்று தெரியாது…!

ஆகவே… உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுத்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும்.

ஜோதிடம் பார்த்து எல்லாம் பார்த்து “எல்லாம் போய்விட்டது” என்று வேதனையைத் தான் வளர்க்க நேரும். கடைசியில் பேயாசையாக அது வருகின்றது.

அந்த உணர்வுடன் இறந்தால் இதே போன்று ஆசை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து அங்கே போய்ப் பேயாகத் தான் ஆட்ட முடியும். அந்த உடலை வீழ்த்திய பின் மற்றதை மிரட்டி வாழும்… பார்த்த உடனே அச்சப்படச் செய்யும் அத்தகைய உடலமைப்பாகத்தான் உயிர் உருவாக்கி விடும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… நாளை அந்த நிலை ஆகிவிடும்…!

டாக்டர்கள் எப்படி இன்ஜெக்ஷன் செய்து உடனடியாக மருந்தை ரத்தத்தில் கலக்கச் செய்து விஷ அணுக்களைத் தணியச் செய்து உற்சாகமூட்டி உடல் நலம் பெறச் செய்கின்றார்களோ அதே போல் தான்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.உங்கள் கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து
3.உயிரின் நினைவு கொண்டு அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்சினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…”

நாம் புறக்கண்ணால் பார்க்கின்றோம். அதை நுகர்ந்து உயிரான அகக்கண்ணால் உணர்கின்றோம்.
1.புறக்கண்ணால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏங்கி
2.நம் அகக் கண்ணான உயிருடன் மோதச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதை ஈர்க்கும் சக்தி கொண்டு வந்தால்
4.உயிரில் உள்ள காந்தம் கண்ணின் தன்மை கொண்டு வந்து அதை இழுக்கும்.

நாம் அப்படி இழுக்கக் கற்றுக் கொண்டால் தீமை என்ற அணுக்கள் உடலில் இருக்கின்றதல்லவா… அதற்கு ஆகாரம் செல்லாதபடி முதலில் தடைப்படுத்தும்.

தடைப்படுத்தப்படும் பொழுது தீய உணர்வுகள் அதற்குக் கிடைக்காமல் போனால் அந்த அணுக்கள் சோர்வடையும். சோர்வடையும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற ரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பரிதாபப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கின்றோம். இறக்கும்போது அவன் என்ன செய்கின்றான்…? “மகராசன்…!” நல்ல நேரத்தில் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணுவான்.

அப்போது அந்த உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் வந்து சேரும்… ஜீவான்மாவாக மாறிவிடுகிறது.
1.அவன் எப்படி வேதனைப்பட்டானோ துயரப்பட்டானோ அந்த உணர்வு உங்கள் ரத்தத்திலிருந்து அதனுடைய உணர்வை எடுக்கும்.
2.ரத்தத்தில் தான் அதனின் ஜீவிதமே இருக்கும்… தன் உணர்வை வளர்க்கும்.
3.உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது… போகும் இடமெல்லாம் உடலில் குடைச்சல் வரும்.

அதே சமயத்தில் ரத்தத்தின் உணர்வுடன் சேர்த்து உயிர் பாகம் சென்றால் உணர்ச்சிகளாக இயக்கி அதன் இயக்கமாக நம் நினைவை இழக்கும்படி செய்துவிடும்.

உடலில் எந்தக் கோளாறும் இருப்பதில்லை. ஆனால்… ஐயோ என்னை அடிக்கின்றான்… பிடிக்கின்றான்…! என்று சொல்பவர்கள் இன்று எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பழி தீர்க்கும் உணர்வைச் சேர்த்து “உன்னை நான் விடமாட்டேன்… நான் கொன்றே தீருவேன்… எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்கள்” என்று பூதகணங்களாக வளர்ந்து உடலுக்குள் வந்தால் உடலையே அழித்திடும் நிலையாக வரும்.
1.ஆக எதன் உணர்வைச் சேர்த்ததோ ரத்தத்திலிருந்து அதனுடைய வேலையைச் செய்யத்தான் செய்யும்.
2.அப்பொழுது அதை மாற்றுவது யார்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே எண்ணி அந்த ஜீவான்மாக்களுக்கு உணவு சேராதபடி தடைப்படுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் அப்படிச் செலுத்த வேண்டும்.

நண்பர்களுக்குள் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணும் போது உடலை இயக்குகின்றது.

அதே துரோகம் செய்த உணர்வு நமக்குள் இருக்கும் பொழுது அவனை எண்ணும் போது நமக்கு பதட்டமும் இப்படிச் செய்தானே என்று ஆத்திரத்தை ஊட்டும் உணர்வுகள் வரும் பொழுது… நாம் மற்றவர்களையும் சந்தேகப்பட்டு இங்கேயும் வெறுக்கும்படி செய்து “நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாதபடி” தடுத்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஜீவணுக்களின் நுனியிலும் இந்தக் காந்த சக்தி உண்டு. கண்ணால் கவரப்பட்டு உணர்வின் தன்மை கரு முட்டையாகி அது அணுவாக மாறுகின்றது.
1.அதனால் அந்த அணுக்களில் அந்த அருள் சக்தியை மோதச் செய்ய வேண்டும்.
2.கண்ணின் நினைவை நேரடியாக இணைக்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் காந்தத்தைச் செலுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக இப்படிச் சேர்த்துப் பழகினால் இன்னொரு உடலில் இருந்து நம் உடலுக்குள் தீமை செய்ய வந்தாலும் “அதை நாம் அருள் ஒளி கொண்டு மாற்றலாம்…”

இல்லை என்றால் எந்த இன்ஜெக்ஷனுக்கும் அது கட்டுப்படாது. அதன் உணர்வையே நமக்குள் செயல்படுத்தும். மற்ற எதையும் வைத்து அதை மாற்ற முடியாது.

மந்திரத்தை வைத்து இன்னொரு ஆவியை ஏவலாம். இரண்டு மாதம் மூன்று மாதம் அமைதியாக இருக்கும். மறுபடியும் அந்த ஆவியின் தன்மை வேலை செய்யும்.

இது போன்ற தீமையிலிருந்து நாம் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் இருந்து விடுபட வேண்டும் அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும் இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய பிரார்த்தனையே இருக்கின்றது.

ஒரு வெறுப்படைந்தவனுடைய உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப் போன்று
1.நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.இந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.சில நேரங்களில் நீங்கள் அதைக் கவனிக்கலாம்.
4.அந்த நேரத்தில் சிந்தனையைச் செலுத்தி… அந்த உயர்ந்த சக்திகளை எடுத்தால் நன்மை பயக்கும் சக்தியாக அதைப் பெற முடியும்.
5.ஏதோ ஒரு விதமான உற்சாகம் கிடைக்கின்றது என்று சொல்வீர்கள்… அடுத்து அந்த நினைவால் உயர்ந்த சக்தியை எடுக்கலாம்.
6.சில நேரங்களில் உங்களுக்கு அந்த நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத ஒரு உற்சாகம் வரும்.
7.அன்று சந்தோசமாக இருக்கும்.. காரியங்கள் சீராக நடக்கும்.

இது எல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கிறேன். அதையே பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடலில் இருக்கும் அணுக்களுக்கு கண்ணின் நினைவு கொண்டு அருள் ஞான உணர்வைப் பதிவு செய்கின்றேன்.

கண்ணால் பதிவு செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ் வினையாகப் பதிவாக்கி விடுகின்றது.

செல்ஃபோன்களில் பதிவாக்கிய பின் அழைத்தால் அந்த நம்பர் எப்படித் தெரிய வருகின்றதோ அதைப்போல அந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
1.மீண்டும் நினைவாக்கும் போது அந்தச் சக்தியை நீங்கள் பெற முடியும்.
2.அருள் உணர்வுகளை உங்களால் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
3.ரத்தத்தில் அது சேர்ந்து கெட்டதை அகற்றுகின்றது… நல்லதை உருவாக்க ஜீவன் கொடுக்கின்றோம்.

ஆனால் வீணாகக் கவலைப்பட்டு சஞ்சலப்பட்டு சங்கடப்பட்டு வெறுப்படைந்து வேதனைப்பட்டால் மீண்டும் அதை வளர்த்து மனித உடலிலே நோயாகி… அடுத்து மனிதனல்லாத உடலை உருவாக்கத்தான் அது உதவும்.

ஜோசியம் ஜாதகம் நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம்… தீமையை நீக்க வேண்டும் என்று எந்த நேரத்தில் எண்ணுகின்றீர்களோ அதுவே உங்களுக்கு நல்லது.

1.தீமை வரும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பயன்படுத்தி
2.என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ “அது எல்லாம் நல்ல நேரமாகின்றது…”

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… அவன் உருவாக்கும் சக்தி பெற்றவன். நல்லதை உருவாக்கப்படும் பொழுது நல்ல நேரம் வருகின்றது… நல்ல செயல் நடக்கின்றது… மன பலம் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது.

“எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லைப்படுத்தினான்” என்று எண்ணினால் அந்த நேரம் கெட்ட நேரம் ஆகின்றது. தொழில் செய்து நஷ்டம் ஆகிவிட்டது பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று எண்ணினால் அது எல்லாம் கெட்ட நேரம் தான்.

என் பையன் நல்ல ஒரு தெளிவானவனாக வரவேண்டும் தொழில் சீராக வேண்டும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பிள்ளைக்கு நல்ல நேரம்… நமக்கும் நல்ல நேரம் ஆகின்றது…!

நல்ல நேரமாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு வலு வேண்டும் அல்லவா. சாதாரணமாக நினைக்க முடியாது.
1.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.அதை நீங்கள் பெற்று உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் அதை நினைக்கும் போதெல்லாம் நல்ல நேரம் ஆகின்றது.

வேதனை என்று வரப்படும் பொழுது சர்க்கரைச் சத்து ரத்தக் கொதிப்பு ஆஸ்மா போன்ற நோய்கள் கடுமையாகின்றது. நான் நாளை என்ன செய்வேன்…? என்ற திகைப்பானால் வேதனை வெறுப்பானால் சளியாக உருமாறும் நிலையும் வந்து விடுகிறது. அடிக்கடி சலிப்பும் சஞ்சலமும் உருவானால் உப்பு சத்து உருவாகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு “எதிர்ப்பான நிலை வரும் பொழுது… அது செயலற்றதாக மாறி…” இந்த உடலையே சீர்குலைக்கச் செய்கின்றது.

அதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத் தான்
1.எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்திலும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்ச வேண்டும்
3.அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர வேண்டும்
5.உங்கள் பார்வை பிறருடைய தீமைகள் வராது தடுக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.

அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.

1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்) என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள் நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையைப் போடுங்கள்…! அதை நுகருங்கள்…! சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.

அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும் அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள் நல்லதாக்க வேண்டும்.

முன்னோர்களுக்குச் சாப்பாடு இன்று எப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்…?

 

முன்னோர்கள் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது வேதனையுடன் தான் வெளியில் செல்கின்றது. அந்த வேதனையை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் மாறுகின்றது.

அந்த அணுவிற்குச் சாப்பாடு எங்கே…?

மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமிக்குள் பரவி இருக்கின்றது.
1.அதை எடுக்கப்படும் பொழுது மூதாதையரின் நினைவும் அவர் பட்ட கஷ்டமும் நமக்கு நினைவு வருகின்றது.
2.அந்த உணர்வைச் சேர்க்கப்படும் போது அவர் உடலிலே எப்படி நோய்கள் உருவானதோ
3.நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் நிலை வந்து விடுகின்றது.

அதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?

பூரண நிலா அன்று துருவ நட்சத்திரம் நமக்கு நேராக வருகின்றது. அந்த நேரத்தில் முன்னோர்கள் உயிரான்மாக்களை ஒளியின் சரீரமாக்கி… நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு அந்த ஒளியை உணவாகக் கொடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் வேதனைப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கின்றது.
2.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.அதன் வழி வேதனைகளை நீக்கப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்த பின்… அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்.

1.மூதாதையர்கள் பெற்ற உணர்வு எனக்குள் இருந்து அது உயர்ந்த உணர்வு பெற்று
2.நல் உணர்வை உருவாக்கும் அந்த அணுத்தன்மை எனக்குள் பெருக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.அப்பொழுது அதற்கு உணவு கொடுக்கின்றோம்…! என்று பொருள்.

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான்” என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு. அவனை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் சுவாசித்து வெறுப்பான உணர்வு ஆகி அந்த வேதனையான உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சாப்பாடாகச் சேருகின்றது.

அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் போது உடலில் நோயாக வருகின்றது. சாதாரண நிலைகளில் இது நடக்கின்றது.

அது போல் நம்முடைய மூதாதையர்களின் உடலில் எத்தனை வகையான நோய்வாய்ப்பட்டார்களோ அதன் வழி வெளியில் செல்கின்றனர்.

அவர்களை நாம் எண்ணும் பொழுது… எங்களை வாழ வழி வகுத்துக் கொடுத்தீர்கள்…! ஆனால் நோயுடன் உடலை விட்டுப் பிரிந்தீர்கள்…! என்று எண்ணினால் அதே உணர்வு “பரம்பரை நோய் என்ற நிலையும் பரம்பரை குணம் என்ற நிலையும்” அத்தகைய உணர்வாக நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

முதலிலே குடும்பம் நன்றாக இருந்திருக்கும். எல்லோரையும் காக்க அவர் வேதனைப்பட்டு இருப்பார். அவர் இறந்த பின் அந்த உணர்வு வழி வழி வரப்படும் பொழுது அந்தக் குடும்பத்தில் பின் தொடர்ந்து தொல்லைகள் தான் அதிகமாகும்.

காரணம்… அவர் வேதனைப்பட்ட உணர்வுகளைப் பாசத்தால் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பரம்பரை நோயாகவும் பரம்பரை குணமாகவும் பரம்பரை செயலாகவும் மாறி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுடைய ஆன்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை விண் செலுத்த வேண்டும்.

எங்களை வளர்ப்பதற்காக எத்தனையோ தொல்லைகள் பட்டீர்கள் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை இப்படி விண் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
1.எங்களுக்குள் இருக்கும் மூதாதையரின் அத்தனை அணுக்களுக்கும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் அவையெல்லாம் நமக்குள் ஜீவணுவாக இருக்கும்.
3.அந்த அணுக்களுக்கெல்லாம் இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் செலுத்தி அதற்கு உணவு கொடுக்க வேண்டும்.

முன்னோர்கள் ஒளி உணர்வு பெற்றதை நாம் எண்ணி நம் உடலில் உள்ள அந்த ஜீவணுக்களுக்கு அந்த அருள் உணர்வுகளைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுவதன் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் “சந்தோஷமாக இருங்கள்” என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!

உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!

 

சந்தர்ப்பத்தில் மிகவும் வேதனையான உணர்வு நமக்குள் வருகின்றது. அப்பொழுது எதை நினைக்கின்றோம்…? அதை நிவர்த்திக்க…
1.எத்தனை தெய்வங்களை நினைத்தோமோ… எத்தனை கடவுள்களைப் பற்றிச் சொன்னார்களோ…
2.அங்கே தான் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

வேதனையான உணர்வுகள் வந்த பின் உடலுக்குள் என்ன நடக்கின்றது…? தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றது. அந்தக் காப்பாற்றும் உணர்ச்சி தூண்டப்படும் பொழுது உயிருக்குத் தான் தெரிய வருகின்றது… அங்கே தான் அறிவாகின்றது.

உடலுக்குள் சென்றபின் பிரம்மமாக உருவாகின்றது. அப்பொழுது சிவன் என்ன சொல்கின்றான்…! நான் என்ன செய்வேன்…? விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்… ஆகவே விஷ்ணுவிடம் கேட்போம் என்று அழைத்துச் செல்கின்றார்.

அதாவது இந்த உடலின் உணர்ச்சிகள் எல்லாம் “உயிரிடமே எண்ணும் எண்ணங்களை இயக்குகின்றது” என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

உயிரான விஷ்ணுவே… எனக்கு வரம் தான் கொடுக்கத் தெரியும்…! என் மகனான பிரம்மா “அதனால் உருவான இந்த அணுக்கள் அவனுக்குத் தான் அது தெரியும்… எனவே பிரம்மனிடம் செல்வோம்…” என்று அழைத்துச் செல்கின்றார்.

ஆனால் பிரம்மனோ என் தந்தை சொல் தட்டாது நான் இதை இயக்குகின்றேன். அதன்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் உருவாகாது. விஷ்ணு வரம் கொடுக்கவில்லை என்றால் உலகத்தில் உருவாகும் தன்மை எதுவும் இருக்காது.

உருவாகும் உணர்வுகள் அது அணுவானால் உடலான சிவன் அரவணைக்கவில்லை என்றால் ஒரு உருவின் தன்மை வராது. மும்மலம் என்ற நிலையில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

எல்லோரும் சேர்ந்து இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வேதனையிலிருந்து நிவர்த்திக்க கூடிய வழி எவருக்கும் தெரியவில்லை.

1.விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்
2.உள்ளே சென்ற பின் பிரம்மன் அணுவாக உருவாக்கி விடுகின்றான்.
3.அணுவின் மலம் உடலாகின்றது சிவன் அரவணைத்துக் கொள்கின்றான் என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

இப்பொழுது என்ன செய்வது…? என்று உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…! என்று உணர்வின் ஒலியை எழுப்புகின்றார்கள்.

உடலின் வழி உயிருக்கும் உயிரின் தன்மை பிரம்மனுக்கும் எட்டப்படும் பொழுது இதுவெல்லாம் யாருக்குத் தெரியும்…? யாரிடம் கேட்டால் வேதனையை நீக்குவதற்குண்டான வழி கிடைக்கும்…? என்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனும் கூட்டுச் சேர்ந்து ஆலோசனை செய்கின்றார்கள்.

கண்ணனுக்குத் தான் இது எல்லாமே தெரியும்…
1.கண்ணுக்குத் தான் எல்லாம் தெரியும்…!
2.கண்ணால் பார்த்து அதன் வழி தான் உணர்வின் தன்மை பதிவானது.
3.ஆகையினால் அவனிடம் போவோமா…? என்று கேட்கின்றார்கள்.

கண்ணனிடம் சென்று எல்லோரும் முறையிடுகின்றார்கள்.

அப்பொழுது கண்ணன் கேட்கின்றான். விஷ்ணு நீ வரம் கொடுக்கவில்லை என்றால் இந்தத் தொல்லை வராது அல்லவா. அது எப்படி…? நான் வரம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் உருவாகாதே என்று விஷ்ணு சொல்கிறான்.

பிரம்மனிடம் கேட்கின்றான்… நீ உருவாக்காமல் விட்டுவிடலாம் அல்லவா என்று. என் தந்தை சொல்படி நான் உருவாக்கவில்லை என்றால் உலகம் எதுவும் உருவாகாது என்று பிரம்மன் சொல்கிறான்.

கண்ணன் சிவனிடம் கேட்கின்றான். வேதனையை உடலுக்குள் வராதபடி… அரவணைக்காதபடி நீ விட்டு விட்டால் தொல்லை வராதல்லவா. உடலுடன் அரவணைக்கும் போது தானே தொல்லை வருகின்றது தெளிவாகக் கேட்கின்றான்.

வருவோரை நான் அரவணைக்கத்தான் தெரியும் அதுதான் என்னுடைய வேலை என்று சிவன் சொல்கிறான். இப்படி மூன்று பேரும் மூன்று வேலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

வேதனையிலிருந்து விடுபட ஏதாவது வழி வேண்டும்…? என்று எல்லோரும் கண்ணனிடம் கேட்கின்றார்கள்.
1.அதாவது கண்ணிலே இந்த எண்ணங்கள் வருகின்றது… சிறிது நேரம் யோசிப்போம் என்று கண்ணன் சொல்கின்றான்.
2.சிறிது நேரம் வானை நோக்கிப் பார்க்கின்றான். யார்…? இந்தக் கண்கள்.
3.அப்படிப் பார்க்கும்போது “அதோ வருகின்றான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் அவனிடம் கேட்போம் என்று சொல்கிறான்

ரிஷி என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெற்றது துருவ நட்சத்திரம். அது தான் ரிஷி.

ஏனென்றால் எல்லாவற்றையும் சிருஷ்டித்துக் கொண்டது உயிர்தான்.
1.ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கிடும் உணர்வு கொண்டு ஒளியாகி ஒளியின் சரீரம் பெற்றது… ஏழாவது நிலை பெற்றது சப்தரிஷி.
2.சப்தரிஷி என்றால் உணர்வின் நாதங்களால் இயக்கப்பட்டு
3.அந்த நாதத்தின் இயக்கமாகத் தீமைகள் தனக்குள் வராதபடி இயக்கும் சக்தி பெற்றது என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நம்முடைய காவியத் தொகுப்புகளில் தவறில்லை.

வேதனைப்படும் உணர்வைச் சூரியன்… அந்த நாராயணன் வெப்பம் காந்தம் விஷம் என்று இயக்க அணுக்களை அனுப்பி அதைக் கவர்ந்து தனக்குள் எடுத்து இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

வேதனைப்படும் உணர்வினை எடுக்கும் பொழுது அந்த வேதனையின் தொடர்கள் நமக்குள் வருகின்றது. ஆனாலும்…
1.அந்த வேதனையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியவன் துருவ நட்சத்திரம்.
2.அதிலிருந்து ஒளி அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
3.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அதைக் கவர்ந்து கொண்டால் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக இயக்கும் இயக்க அணுவாக அது மாறுகின்றது.

இதையும் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரங்கள்.

அதோ வருகின்றான் நாரதன் என்று கண்ணன் சொன்னபின் மற்ற எல்லோரும்…
1.ஐயோ அவன் கலகப் பிரியன் ஆயிற்றே…! பல தொல்லைகள் கொடுப்பானே…!
2.அவன் பரிசீலனைக்கெல்லாம் நாங்கள் தப்ப வேண்டுமே…! என்ன செய்வது…? என்று இந்த மூன்று பேரும் சொல்கின்றார்கள்.

“கலகம் நன்மையில் தானே முடிகின்றது” என்று கண்ணன் சொல்கின்றான்.

ஓருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நாமும் வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுகள் நமக்குள் போன உடனே உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது.

அதாவது உயிரிலே படும் பொழுது விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் சென்ற பின் அது அணுவாகப் பிரம்மம் ஆகி விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாகி விடுகின்றது.

அவன் எப்படி வேதனைப்பட்டானோ அந்த உணர்வு நம் உடலாக மாறும் பொழுது
1.வேதனை எப்படி இயக்குகின்றது…? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.
2.இது எல்லாம் ஞானிகளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை தான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்…?

கண்களால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று கண்ணனிடத்தில் கேட்ட பின் சொல்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கண்களால் தான் அறிந்து தப்பும் உணர்வுகளைக் கொடுத்து தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியது
2.அதனால் தான் கண்கள் அதோ வருகின்றான் நாரதன் என்று சுட்டிக் காட்டுகின்றது.

தியானத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?

சூரியன் காந்த சக்தி கவர்ந்து வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை “நமது குரு காட்டிய வழியில் அந்தச் சக்தியைப் பெற வேண்டும்” என்று கண்களால் ஏங்கப்படும் பொழுது அந்த உணர்வு இங்கே பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அந்த வேதனையை மாற்றி அமைக்க முடிகின்றது.

வேதனைப்பட்டவனையோ நோய்வாய்ப்பட்டவனையோ பார்த்தால் நாம் என்ன சொல்கின்றோம்…? நல்ல மனிதன் “இப்படி ஆகிவிட்டானே வேதனைப்படுகின்றானே…” என்று சொல்கின்றோம்.

அதே சமயத்தில் ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகிறான் என்றால் “எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் பாவி…” என்று அவன் மீது விடாப்பிடியாக இருப்போம்.

நல்ல மனிதன் கஷ்டப்படுகின்றான் என்று
1.அந்த வேதனையைத் தான் சொல்ல முடிகின்றதே தவிர
2.அதை மாற்றியமைக்கும் உணர்வு நமக்குள் வருவதில்லை.

அதை மாற்றுவதற்குத் தான் இந்தத் தத்துவத்தைச் சொல்வது. “அதோ வருகின்றான் நாரதன்…” என்று சாஸ்திரங்கள் நமக்கு வழிகாட்டுகின்றது.

ஆதன் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் அங்கே இணைத்து விட்டால் தீமை என்ற உணர்வுகள் உள்ளே போகாது அது தடுத்து விடுகின்றது. தடுத்தபின் வேதனை உணர்வுகள் நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் செலுத்தப்படும் பொழுது எல்லா அணுக்களுக்கும் அதை இணைக்கப்படும் பொழுது நாரதன்…! தீமை உள்ளே புகாதபடி எல்லா அணுக்களும் வலுவாகின்றது.

சிறிது நேரம் இவ்வாறு எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது “உடலுக்குள் வேதனையை ஈர்க்கும் சக்தி அங்கே குறைகின்றது…” அப்பொழுது நமக்கு முன் இருக்கும் அந்த தீமை “அனாதையாகின்றது…”

அனாதையாக இருப்பதைச் சூரியனுடைய காந்த சக்தி அது தன் ஈர்ப்பால் கவர்ந்து இழுத்துச் சென்று விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது
2.ஆன்மா நலமாகும் பொழுது உடலும் நலமாகின்றது
3.உயிரான்மாவும் புனிதம் (ஓளி நிலை) பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்…” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் “கௌரவம்” என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

மாரி

 

நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.

அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது…
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.

நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை) எண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.

அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் “வேப்ப மரத்தை” ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.

கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.

அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.

இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள் நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.

பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”

இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.

இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்… நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.

நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.

பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும்… கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.

இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.

அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.

எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும்… சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.

எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.பகைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

இது போன்று… நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமை உணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

 

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.

யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள்… தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.

வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்து… தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால்… இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.

இராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.

இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.

ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி இராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?

இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.

அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

 

மனிதனின் சகஜ வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம் கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம்.

அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும் இழக்கச் செய்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் இருவருமே அந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக் கவர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக கணவனுக்கு மனைவி இல்லை.

கணவனும் இதைப் போன்று பல தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதன் வழி பெற்றாலும் தன் வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல் பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும் இங்கே பிரிக்கப்படுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பின்… உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால் கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.

அங்கே செலுத்திய பின் என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள் குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும் என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள்…”

இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்.

கணவனுடைய உணர்வுகள் தனக்குள் உண்டு. சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு இங்கேயும் வளர்கின்றது… குடும்பத்திற்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும் சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் படரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெறுகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
2.அதே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.

பெண்கள் மாங்கல்யத்தை நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம் இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.

அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி கொண்டு இரு உணர்வும் ஒன்றாகச் சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின் தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும் போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள் மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும்… ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம் குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் “உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”

ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கிய அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.

மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் “எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.

இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் “எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.

மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது “நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”

இவை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.

விஷ்ணுவிடம் கேட்டாலோ “எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும்… பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான்… அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.

பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் “உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?

விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின்பு… அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.

தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்

வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும்… நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.

உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.

குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இதன் வழி உங்கள் வாழ்க்கையில் “உங்களை நீங்கள் அறிந்து” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து… தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் சொத்து சுகம் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உடலின் பற்றே அதிகரிக்கின்றது.

அந்த உடல் பற்றினால் சந்தர்ப்பத்தில் நம் காரியங்கள் தடைப்பட்டால் வேதனைப்படுகின்றோம்.

தொடர்ந்து வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அதையே…
1.நாம் பிடிவாதமான முறையில் அந்த வேதனை உணர்வுகளை அடைகாத்து
2.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளர்த்து
3.யாரால் வந்தது…? என்று அந்த எதிரிகளை எண்ணியபடி நம் தொழிலைப் பலவீனப்படுத்தி
4.அதனால் நம் நல்ல எண்ணங்களையும் தடைப்படுத்தி
5.கடைசியில் ஒருவரிடத்தில் உதவிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட
6.நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள் எல்லாம் சேர்த்து “நமக்கே எதிரியாகின்றது…”

உதவி செய்வோரின் நிலைகளிலிருந்தும் மாறுபடச் செய்கின்றது. இதைப் போல் நாம் செயல்படும் உணர்வுகள் நமக்குள் அந்த் எதிரியை உருவாக்கும் தன்மை தான் வருகின்றது.

அதை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் அந்தக் கருவாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்…
1.நாரதன் கலகப் பிரியன்… கலகம் நன்மையில் முடியும்…!
2.அதாவது நமக்கு இப்படித் தீங்கு செய்துவிட்டானே… என்ற இந்த எண்ணங்கள் வளராது அதைத் தடைப்படுத்தும்
3.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க இது வலு பெறும்.
4.எனக்கு இப்படிச் செய்கிறானே…! என்ற கோபமான வேதனையான எண்ணத்தை விடுத்துவிடும் அல்லது விடுக்கும்படிச் செய்யும்.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக வளர்க்கும்படி செய்யும்.
6.நாம் எடுக்கும் இத்தகைய எண்ணங்கள் நமக்கு எவர் தீங்கு செய்கின்றாரோ அவர்களுக்குள் பாய்ந்து அதை நினைவுக்குக் கொண்டு வரும்.
7.நம்மை எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் பலவீனப்படுத்தும்… தீங்கு செய்யும் நிலைகளை மடக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளைத்தான் நாரதன் கண்ணனிடம் செல்வார்… இந்திரனிடம் போகின்றார்… அசுரனிடமும் போகின்றார்… எல்லோரிடமும் போகின்றார்… என்று இந்திரலோகத்தையே சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த உண்மைகளை உணர்த்திச் சொல்லி அந்த உணர்வுகளை எப்படிச் சீர்ப்படுத்துகிறார் என்ற நிலைகளை விளக்கவுரைகளாகக் காட்டுகின்றார்கள்.

ஆக நமக்குள் இருக்கக்கூடிய பிடிவாதமான குணங்களுக்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொன்றும் படரச் செய்து அது மட்டுமல்லாதபடி…
1.எதிரி தீங்குகளையும் தவறுகளையும் செய்கிறான் என்றால்
2.இதே உணர்வுகள் கண்கள் கொண்டு பார்க்கப்படும் பொழுது
3.இந்த எண்ணம் அவர்கள் நுகரப்படும் பொழுது ஊடுருவி
4.பிடிவாதமாக இருப்பதையும் தொந்தரவு செய்வதையும் உணர்த்தி
5.அதனால் உங்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது…? என்றும் அவர்களுக்குள் உணர்த்தச் செய்கின்றது.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் அவன் கண்ணனிடத்திலும் செல்கிறான்… மும்மூர்த்திகளிடமும் செல்கிறான்… மற்றவர்களிடத்திலும் செல்கின்றான்… என்ற நிலையில்
1.அந்த நாரதன் என்ற மகரிஷியின் அருள் உணர்வுகள்
2.நாம் பகைவர்களை எண்ணும் பொழுது கூட
3.கண்ணன் அங்கே அழைத்துச் சென்று அங்கே பதியச் செய்து இந்த உணர்வை ஊட்டுகின்றான்.

அதாவது நாம் எதைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வலைகள் படரச் செய்யப்படும் பொழுது இந்தக் கண்களின் நினைவாற்றல் கொண்டு அவர்கள் நம்மை எண்ணும் பொழுதெல்லாம்
1.அதே கண்கள் அங்கே அழைக்கப்பட்டு இந்த நாரதன் உள்ளே சென்ற பின்
2.அவர்கள் செய்யும் தவறான உணர்வுக்குள் நாரதன் கலகப் பிரியனாகி
3.அந்தக் கலகமோ நன்மையில் முடியும்… அப்பொழுது அந்த உணர்வுகள் சென்ற பின் அது அங்கே அடக்குகின்றது.

அவர்கள் அறியாது செய்யும் இச்சைகளும் வெறுப்பான நிலைகளில் அவர்கள் செய்யப்படும் பொழுதும் அவராலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகின்றதா… அதனால் தொல்லைகள் அனுபவிக்கின்றனர்… வெறுப்பலைகளைச் சுவாசிக்கின்றனர்…! அவர்களுக்கும் இந்த நோய் வருகின்றது…! என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டுகின்றான் என்று காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாரதனை மையமாக வைத்துக் காட்டினாலும் அந்த நாரதன் யார்..? அகஸ்திய மாமகரிஷி அவர் உயர்ந்த சக்தி பெற்று இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதனைப் பின்பற்றிச் சென்றோர் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டுகின்றார்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த அரும்பெரும் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டு கண்ணிலே எண்ணும் பொழுது
1.யார் தவறு செய்தாலும் அவர்கள் திருந்த வேண்டும்
2.அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்திப் பாருங்கள்.
3.இந்த உணர்வை நாம் செலுத்தப்படும் பொழுது அவர்களின் தீமையின் உணர்வுகள் நமக்குள் விடுவதில்லை.

அவர்கள் தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் எண்ணும் பொழுது இது ஊருவும். உதாரணமாக… எப்படித் தீங்கு செய்தான் என்று எண்ணும் பொழுது புரை ஓடுகின்றதோ அதைப் போல் இந்த அலைகளை நாம் எடுத்துக் கொண்டால்
1.அங்கே அவர்கள் தீங்கும் செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது
2.நம் உணர்வுகள் அவர்களைத் திருத்தவும் உதவுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.

நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.

நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் – நம் பேரில் இருக்கக்கூடிய அந்த அணுக்களை இது தணியச் செய்யும்.

அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத் தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.

நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்பச் செல்கிறோம்… என்றால் அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு எதிரியாகிவிடுகின்றது.

அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி கொண்டது.

ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.

செய்து பாருங்கள்..!

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

 

செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.

இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்”
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.

நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி “மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர்” என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.

1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை இடைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.

தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீய அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் இன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.

இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து… மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எதிரிகளை எதிரிகள் என்று எண்ணாது
2.அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்தல் வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கொடுக்கும் இந்தச் சக்தியை வலு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க அவர்கள் உணர்வுகள் உங்களை இயக்காது. அதே சமயத்தில்…
1.யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்.
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பதிவாக்கி நம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது அவர் நமக்குத் தீங்கு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் வளர்த்து “நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதில்…”
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்திடும் நிலையாகக்
2.கண் வழி கொண்டு தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (நாரதன்) உணர்வைக் கவர்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை அங்கே சென்ற பின் அங்கே அவர் செய்யும் தீங்கினையும் மற்ற உணர்வினையும் அது வெளிப்படுத்துகின்றது. அப்பொழுது நம் மீது வரக்கூடிய இந்த உணர்வினைப் பலவீனைப்படுத்துகின்றது.

இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணங்கள் கொண்டு அதை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது நம் உடலில் முந்தைய தீய வினைகளையும் அடக்கிட முடியும்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கொண்ட உணர்வால் நம் உறுப்புகள் நல்ல உறுப்புகளில் இந்த இரத்தநாளங்களில் கண்டு இந்தக் கருக்களை அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கின்றது.

ஆகவே அந்தத் தீங்கு விளைவிக்கும் உணர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று கருக்களாக உருவாக்கப்படும் பொழுது இரத்தநாளங்களிலே இது பெருகுகின்றது.

உடலுக்குள் இந்த இரத்தம் போகாத இடமே இல்லை.

ஏனென்றால் இதனின் உணர்வுகள் நம்முடைய எண்ணமே எதனின் உணர்வின் தன்மையோ பாதுகாப்பான நிலைகள் அழைத்துச் சென்று அங்கே பகைமை உணர்வைத் தடுக்க உதவுகிறது.

இதைத்தான் இராமனுக்குப் படகோட்டியான குகன் தன் படகின் மூலம் நதியைக் கடக்க உதவி செய்கின்றான்…! என்று காட்டினார் வான்மீகி.

1.ஆக நம் எண்ணங்களின் நிலை கொண்டு
2.இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் அந்த அருள் உணர்வின் எண்ணமே கருவாகி
3.கருவின் உணர்வாக உருவாகி அதன் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது..? என்றும் இதைக் காட்டுகின்றனர் ஞானிகள்.

இப்படி நம் உடலுக்குள் பகைமை உணர்வைச் சாராத நிலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்றால் இதைப் போன்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர் தீங்கு செய்தார் என்ற எண்ணங்கள் வருவதற்கு முன்
1.என் மீது தீங்கு எண்ணும் அந்த எண்ணங்கள் அங்கே மறைய வேண்டும்
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் தீங்கு செய்யும் அந்த எண்ணங்கள் மடிந்திட வேண்டும் என்ற உணர்வினை
3.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வினை எண்ணிவிட்டு அந்த எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

“கண்ணால் இந்த உணர்வைப் பாய்ச்சி…” இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் நினைவாற்றல் கொண்டு ஊடுருவிச் செலுத்தப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அங்கே நாரதனாகச் சென்று
2.மற்றவர்கள் தீங்கு செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பலவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.

1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.

ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.

இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.

உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால்… இந்தப் பரத்தில் ஊன்றினால்… பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றது… அந்தச் செடி வளர்கின்றது.

இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிய பின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது… இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.

தனது ஆன்மாவாக மாறிய பின்… உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.

வேதனைப்படுபவரை… சங்கடப்படுபவரை… சலிப்புப்படுபவரை… வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.

ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் “விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”

ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பரத்தில் பல தீமைகள் உருவாகி… மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.

1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ…
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று…
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.

உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் பரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.

இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது… ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் “பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச் சரீரம் பெற்றிட” குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…? என்றும்
3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளை பாகம் சென்று
4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி
5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி
6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

தீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.

அதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்
2.நாம் எதை எண்ணினோமோ – நியாய அநியாய உணர்வுகள்
3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

ஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்து விடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.

உதாரணமாக… தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.

நொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.

வியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்
1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.
2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.

பகவான்…! என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்குப் “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.

பரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…!” என்ற பெயர்களை வைத்தார்கள்.

ஆக…
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நமக்கு ஒருவர் அடிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால்
1.அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.
2.நாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.

அப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி
1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது
2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.

பகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

அதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
3.வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.

காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக… “இருடா நான் பார்க்கின்றேன்” என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.

அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.

அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.

1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச… கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல…
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.

இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.

அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.

இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றது… அதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.

ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது… உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.

வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?

ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது… செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்…
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.

எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள்… அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து… நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.

இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.

சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.

அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?

இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.

நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.

இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.

அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.

அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!

அவனா…? துரோகி.. உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.

கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.

பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!

ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.

ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின் வெடித்துவிடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.

நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.

நாம் எங்கே சென்றாலும் இந்த ஆத்ம சுத்தியை மறவாது செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்து..
1.என்னுடைய பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணங்கள் கொண்டு நாம் செல்லப்படும் பொழுது
3.அந்தத் தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டே வருதல் வேண்டும்.

ஒருவர் நம்மிடம் வந்து இந்த மாதிரி உனக்குத் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன்னுடைய நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

 

நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.

கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.இதை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.

ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் “அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”

அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?

இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.

இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும்… அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமான பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.

வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாக வந்து விடும்.

ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும்… அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?

சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் “எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்…
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது… குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.

இது எல்லாம் எப்படி வருகின்றது…?

எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை “கணவரை உயர்த்த வேண்டும்” என்ற நிலைக்கு வருகிறது

ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.

அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.

செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!

உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.

எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!

1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.ஆசையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக எடுத்துக் கொண்டால்… என்ன…! சாமிக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! தபோவனத்தில் இருப்பவர் இந்த மாதிரிச் செய்துவிட்டாரே என்று..! சில பேருக்கு இந்த எண்ணம் வரலாம்.

எனக்கு (ஞானகுரு) இந்த உடலைப் பற்றிய நினைப்பே இல்லை.

இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுது நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் ஆன்மா அந்த ஒளியின் நிலை பெறுகின்றது.

1.அவன் தீங்கு செய்துவிட்டான்… (தபோவனத்தில்) என்ற எண்ணங்கள் வரப்படும் பொழுது
2.அதை எடுத்துக் கொண்டால் பழி தீர்க்கும் எண்ணங்களாக வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்குப் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். கை விரலை நீட்டினால் ஒரு மரத்தையே தூக்கி எறியச் செய்யும்.

எண்ணத்தால் எண்ணி.. இவன் மடிந்துவிடுவான்.. அல்லது இப்படித்தான் ஆகிவிடுவான்…! என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி அவனுக்குள் வேலை செய்யும். துரித நிலையிலும் மடிந்து விடுவான் (தீங்கு செய்தவன்).

நாம் ஏன் சொல்வானேன்…? அவனை ஏன் நாம் வீழ்த்துவானேன்…! அவன் எண்ணிய உணர்வுகள் அவனுக்குள் வீழ்த்தும்… அறியும் தன்மை வரும்.

இப்படித்தான் நாம் இருக்கின்றோமே தவிர குருநாதர் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அது பயன்படுத்துவதற்கு அல்ல…!

ஆஹா… எங்கள் சாமி எப்படிப்பட்டவர் பார்…! கெடுதல் செய்தான்… விரலை நீட்டினார்… விழுந்து விட்டான்… என்று நீங்கள் பெருமை பேசலாம்…!

அப்படிச் செய்தால் இது…
1.அவன் உடலில் உள்ள மற்ற நல்ல அணுக்களையும் சேர்த்துக் கொன்றதாகத் தான் அர்த்தம்.
2.அவனுக்குள் இருக்கக்கூடிய தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்ததாகத் தான் பொருளாகுமே தவிர
3.அவன் தீங்கின் செயல் நமக்குள் வந்து
4.அவன் உணர்வு வலிமையாகி நம்மை இயக்கும் பொழுது
5.அவன் தான் தவயோகியாகின்றான்.

அப்பொழுது நமக்குள் என்ன இருக்கின்றது…?

ஆகவே இந்த அருள் ஞானத்தின் வலிமை கொண்டு தாங்கும் சக்தி வர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதைத் தான் வலிமையாக்க வேண்டும். அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய செயல் நாளைய சரீரம்…!

1.அருள் ஒளியின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக
2.இனி அகண்ட அண்டத்தில் என்றும் நாம் வாழ முடியும் என்ற நிலையை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனாக ஆன நாம் இதைச் செயலாக்கும் தன்மைக்கே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply