
நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்
இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்…
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.
ஏனென்றால் “நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.
இது எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.
ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து “வழி நடத்துதல் வேண்டும்”
1.அன்பை மட்டும் செலுத்தினால்… அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.பகைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.
ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும். பகைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.
உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கிய அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும்… நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.
பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.
இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து… உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை… அருள் உணர்வுகளை… சீராக நுகரவில்லை என்றால்
1.நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத உருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.