
சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்
நம்மை ஒருவன் தவறாகப் பேசுகின்றான் பழித்துப் பேசுகின்றான் சங்கடமான நிலைகளில் தொல்லை கொடுக்கின்றான் என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1அவன் எண்ணிய உணர்வுகளை நமக்குள் வளர்த்து அவன் நினைவிலேயே நாம் வளர்ந்து விடுகின்றோம்.
2.நல்ல உணர்வுகளை இழக்க நேர்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பகைமை உணர்வுகள் நமக்குள் விடாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பகைமை கொண்டு ஒருவன் பேசினால் அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களும் அந்தப் பகைமை உணர்வுகள் ஒன்றுக்கொன்று வீரியத்தன்மை அடைந்து மேல் வலி கை கால் குடைச்சல் இது போன்று வேதனையின் நிலைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
ஆகவே நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு உள்புகாது காத்திடல் வேண்டும். ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி தீமை உள்புகாதபடி தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து அதை வலுவான நிலைகள் கொண்டு உருவாக்குதல் வேண்டும்.
1.அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
2.ஒருவன் தீமை என்ற நிலையில் அதிகமான அளவு தொல்லை கொடுக்கின்றான் என்றால்
3.அதை மறக்க அருள் ஒளி பெற வேண்டும் என்று இதை உருவாக்கிடல் வேண்டும்.
4.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.
5.நாம் சும்மா இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்திருக்க மாட்டோம்.
6.ஆனால் ஒருவன் தீமை செய்யும் உணர்வுடன் வரும் பொழுது அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குகின்றோம்.
7.அந்த வலுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது
8.சோம்பேறியாக இருந்தவனை உஷார்படுத்தியது போன்று வந்து விடுகின்.றது.
வயல்களிலே தண்ணீரை வாய்க்காலிலிருந்து பாய்ச்சுகின்றோம். கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் போகும் பாதையில் உடைப்பாகிவிட்டால் நீர் வேறு பக்கம் சென்று விடும். சீரான நிலையில் கொண்டு நம் வயலுக்குப் பாய்ச்ச முடியாது.
அதைப் போன்று நாம் இந்த வாழ்க்கையில் நமக்குள் நல்ல உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தும் நிலை எதுவாக இருந்தாலும் அவ்வாறு இடைமறித்தால் அதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.
நம் கண்ணுக்குப் பெயர் இடையன் என்றும்… நல்ல எண்ணம் கொண்டு நாம் செல்கின்றோம் இடைமறித்துத் தவறான உறவுகள் நமக்குள் வந்தால் அதனின்று காத்து நல்வழி செயல்படுத்தும் உணர்ச்சிகளை ஊட்டிடல் வேண்டும்.
நம் கண்களுக்குப் பெயர் கண்ணன் என்றும் இடையன் என்றும் அவன் மாடுகளை மேய்ப்பவன்… இந்தக் கண் நம்மை மேய்க்கின்றது. தவறு என்ற உணர்வு வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் நம்மை இடைமறித்து நல்வழியான நல்ல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.
நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்றோம் திடீரென்று எண்ணங்கள் உதயமாகும். நண்பரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் “அவர் வேறு ஒரு தெருப் பக்கம் சென்று கொண்டு இருந்தாலும்” நம் கண்ணின் நினைவாற்றல்கள் அங்கே செல்லும். அவரை இழுத்துக் கொண்டு இங்கே வரும்.
அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
2.அதை பதிவாக்கிக் கொண்ட பின் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?
3.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
ஒரு நோயாளியை உற்றுப் பார்க்கிறோம் உதவி செய்கிறோம் என்றால் அதை வலுவாக்கினால் இதே கண் அந்த நோயாளி மடிந்த பின் நம் உடலுக்குள் அந்த ஆன்மாவை அழைத்து வந்துவிடும்.
ஆகவே இந்தக் கண்ணின் இயக்க நிலைகளை கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். எதன் உணர்வை வலுப்பெறுகின்றாயோ அதன் தன்மையை நீ அடைகின்றாய் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
ஆகவே நாம் இந்த உடலுக்கு பின் எதுவாக வேண்டும்…? அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.