ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply