மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

 

குழந்தைகள் மீது அன்பிருந்தாலும் சரி… மனைவி மீது கணவனுக்கு அன்பிருந்தாலும் சரி… அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்துவிட்டால் தொழில் நிமித்தம் வெளியில் வெறுப்படைந்து வீட்டிற்குள் வரும் சமயங்களில் மனைவி மீது கணவன் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்படையும் உணர்வுடன் வரப்படும் போது சாப்பிடும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாகச் செய்திருந்தாலும் அந்தச் சுவையை ரசித்துச் சாப்பிடும் நிலையை அது இழக்கச் செய்து விடுகின்றது.

அப்போது சோர்வடைந்து… என்ன சாப்பாடு இப்படி இருக்கிறது என்ற வேகங்கள் வருகிறது.

நாம் உழைத்துச் சம்பாரித்துப் போட்டாலும் கூட “இங்கே சாப்பாடு மோசமாக இருக்கின்றதே…” என்று இந்தக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியையும் வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

ஏனென்றால் நாம் அல்ல.

காரணம்…
1.நாம் எடுத்துக் கொண்ட பிற உணர்வுகள் நம் நல்ல குணங்கள் கொண்ட உணர்வுகளை மறைத்து விடும் போது
2.உணவைப் பார்க்கும் போது சுவைமிக்க உணர்வின் அமிலங்கள் ஊறினாலும்
3.அதிலே… சந்தர்ப்பத்தால் எடுத்த விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது
4.சுவையான அந்த உணவின் ருசியையே மாற்றிவிடுகிறது.

அதனால் பித்தம் அதிகமாகின்றது. பித்தம் கூடி விட்டால் அடுத்து எதைச் சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது. சுவையான உணவை நீங்கள் உட்கொண்டாலும் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.

ஆக பித்தத்தின் தன்மை கொண்டு நாம் உடல் வலுப் பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது. இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது அமிலங்களாக எச்சிலாக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் நிலையில் அந்தந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் ஜீரணிப்பதும் ஆஜீரணமாவதும்.
1.நீங்கள் அதிகமான சலிப்பும் சஞ்சலத்துடன் இருந்துவிட்டு அந்த உணர்வுடன்
2.நல்ல சுவையான உணவை உட்கொண்டால் அதை ஜீரணிக்கும் சக்தியும் குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து அப்பொழுது நல்ல சுவையான உணவை உட்கொண்டு உடல் வலுப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் உமிழ் நீராக மாறும் போது ஜீரணிக்கும் சக்தி இழந்து புளித்த ஏப்பமாக வரும்.

1.புளித்த ஏப்பம் வந்த பின் அந்த வாயு என்ற நிலைகளால் வயிறு உப்புசமாகும்
2.வயிறு உப்புசமானாலும் வாயுத் தன்மை நுரையீரலில் அதிகமானால் அங்கே மூச்சுத் திணறல் போன்று வரும்… ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா என்றால் இல்லை.

இதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி எல்லாம் இயக்குகிறது…? என்ற நிலையை நம் குருநாதர் அருள் வழியில் எமக்குக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து இந்த உணர்வின் தன்மை வலுவாகச் சேர்த்துக் கொண்டால் எத்தகைய குறைகள் வந்தாலும் அதை நீக்க முடியும்.

ஆகவே மன உறுதி கொண்டு…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி உடலில் சேர்த்துக் கொண்டால்
2.சோர்வு சலிப்பு சங்கடம் சஞ்சலம் போன்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.மற்றவர்கள் செயலைப் பார்த்து நுகரும் தீமையான உணர்வுகள் நமக்குள் உருப்பெறாதபடி தடுக்கவும் முடியும்… நோயாகவும் மாறாது.

Leave a Reply