“உரமேறிய கட்டை” – ஈஸ்வரபட்டர்

“உரமேறிய கட்டை” – ஈஸ்வரபட்டர்

 

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள்… பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தைச் சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக (சக்தியாக) அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

Leave a Reply