அகஸ்தியனின் ஆற்றல்களும் அவனின் தாய் தந்தையரின் ஆற்றல்களும்

அகஸ்தியனின் ஆற்றல்களும் அவனின் தாய் தந்தையரின் ஆற்றல்களும்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்… சூரியன் பால் நினைவினைச் செலுத்தும் போது அதன் அருகில்… விளிம்பில் வரும் விஷத்தன்மைகளை இவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

சூரியனின் இயக்கத்தின் தன்மையை அந்தக் காட்டுவாசிகள் காண முடிந்தது. அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளையும் அந்தச் சிசுவிற்கும் (அகஸ்தியன்) படர்கின்றது.

அதன் தொடர் வரிசையாக நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு அதனதன் சக்திகளைக் கவர்கிறது…? என்ற நிலையைக் காண்கின்றார்கள்.

1.ஒரு விஷம் எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவிச் செல்கின்றதோ
2.அதைப்போல அவர்கள் தன் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் பொழுது
3.கண் ஒளியால் மற்றதை ஈர்க்கும் தன்மையை அவர்கள் பெறுகின்றார்கள்
4.வெகு தொலைவில் இருப்பதையும் காணும் சக்தி பெறுகின்றார்கள்.

அவ்வாறு கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான்
1.நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்கு உணவை எப்படி எடுத்துக் கொள்கின்றது..?
3.அதை நம் பிரபஞ்சத்திற்குள் எப்படிச் செலுத்துகிறது…?
4.மற்ற கோள்கள் தனக்குள் அதை எடுத்து எப்படி வளர்கின்றது…?
5.அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் சக்தியை சூரியன் எவ்வாறு கவர்ந்து கொள்கிறது…? என்ற பேருண்மைகளை
6.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணுகின்றார்கள்… கருவில் இருக்கும் அந்தச் சிசுவிற்கும் அது பதிவாகின்றது.

தாய் தந்தையர் கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால் கருவிலே வளரும் அகஸ்தியனுக்கோ இது வீரிய சத்தாக உருவாகின்றது.

மற்ற மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்திட அகஸ்தியன் தாய் தந்தையர்கள் அவர்கள் தங்கள் உடலிலே விஷம் கொண்ட பல தாவர இனங்களை மேலே பூசும் பொழுது அது உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்கிறது… கொல்லும் ஆற்றல் அந்த உடலிலே வளர்கின்றது. ஆனால்…
1.அந்தக் கருவிலே விளையும் சிசுவிற்கோ விஷத்தை அடக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக வளர்கின்றது.
2.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

பத்து மாதம் ஆன பின் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது. குழந்தைகள் பிறந்தால் பொதுவாக மேலே தான் பார்க்கும். காடுகளில் படுத்திருக்கும்போது வானை நோக்கிப் பார்க்கும் பொழுது சூரியனை உற்று பார்க்கின்றது.

தாய் தந்தையர்கள் எதைப் பெற்று அவர்களுக்குள் பதிவாக்கினார்களோ அந்த நினைவாற்றல் குழந்தையை விண்ணை உற்றுப் பார்க்கவும் வைக்கின்றது.
1.அவர்கள் கண்ட நட்சத்திரங்களை அவன் காண்கின்றான்
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும்… துகள்களாக மாற்றுவதையும்
3.கோள்கள் அதைக் கவர்வதையும் அது வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்வதையும் இவன் காணுகின்றான்.

அந்த இளம் வயதில் அகஸ்தியனுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் காட்சியாகக் காணுகின்றான். அவனுக்குள் அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

குருநாதர் இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டினார். அதை எல்லாம் நீங்களும் காண வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

Leave a Reply