நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறர் மீது தாக்கப்பட்டு… மீண்டும் நமக்கே எப்படிக் கெடுதலாக வருகிறது…?

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறர் மீது தாக்கப்பட்டு… மீண்டும் நமக்கே எப்படிக் கெடுதலாக வருகிறது…?

 

இரண்டு பேர் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றால் அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இருவர் உடலிலும் இருக்கின்றது. இருந்தாலும் அவர் மீது நீங்கள் வெறுப்பாக இருக்கின்றார்கள்.

அவருக்கும் உங்களுக்கும் சேர்த்த நண்பர் இங்கே வருகிறார். இவர் எதிர்பாராதபடி அந்தப் பழைய நண்பரைச் சந்திக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தேன். உங்களை இந்த மாதிரி மோசம் செய்துவிட்டுப் போன நண்பன் இப்பொழுது அங்கே நன்றாக இருக்கின்றான்…! என்று சொன்னால் போதும்.

உடனே உணரச்சி வசப்படுவீர்கள். பாவிப்பயல்… அவனெல்லாம் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வு தோன்றியவுடன் எதிர்நிலையாகிறது.

தூண்டியவுடன் இந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

1.இதே உணர்வு கண்ணின் நினைவு அங்கே ஓடுகின்றது.
2.ஏனென்றால் சொன்னவுடன் பார்க்கலாம்… அந்த உருவம் தெரியும்.
3.உணர்ச்சிகள் (அலைகள்) அங்கே போகும்… திடீரென்று அவனுக்கும் உணர்ச்சிகள் தாக்கிய உடனே
4.எதிர்பாராத இந்த நினைவு அவனுக்கும் வரும்… பார்க்கலாம்.

அதனின் நினைவு வரப்படும் போது நம் உருவம் அங்கே தெரியும். இந்த உணர்ச்சிகள் அங்கே சென்ற பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றால் உள்ளே சாப்பாடு போகாது.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை குறைந்து ஓரத்தில் போய்க் கொண்டிருப்பவன் திடீரென்று நடுரோட்டுக்குச் செல்வான்… விபத்து ஆகிவிடும்.

காரை ஓட்டிச் சென்றால் விபத்து ஆகிவிடும். ஒரு எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் சிந்தனை இழந்து ஷாக் அடித்துவிடும்.

இது எல்லாம் புரை என்ற நிலையின் இயக்கங்கள். வெறுப்பின் தன்மையால் மட்டும் தான் இது போன்ற கெடுதல் செய்யவில்லை.

பாசத்துடன் இருக்கின்றோம்… வெளி ஊரிலிருந்து பையன் தகவல் கொடுக்கவில்லை… அவன் பேசவில்லையே… என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அவன் சாப்பிடும் பொழுது இதே உணர்வு புரை ஓடும்.
1.பாசத்தினால் உணர்வின் வேகங்கள் கொண்டு
2.வேதனை என்ற உணர்வு கலக்கப்படும் போது உறுப்புகளின் இயக்கச் சக்தியும் குறையும்.

பிள்ளையை எண்ணி வேதனைப்படும் சமயத்தில் ஒரு கணக்கை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…? கணக்கைத் தவற விட்டு விடுவோம்… ஆபீசில் குற்றவாளி ஆகி விடுவோம்.

தினசரி தகவல் கொடுக்கக் கூடிய பையன் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆச்சோ…? ஏது ஆச்சோ…? என்று எண்ணினால்
1.அந்தச் சந்தர்ப்பம் அவன் மீது இருக்கும் பிரியத்திலே வேதனைப் படும்போது
2.பாசத்திலே கலந்து இது தாக்கப்பட்ட உடனே
3.நாம் பார்த்துக் கொண்டிருந்த கணக்கே தவறாகி விடுகிறது.
4.அங்கே அவனுடைய செயலையும் குன்றச் செய்கின்றது.

இந்த மாதிரி இயக்குகிறது. ஐயோ நான் நினைத்தேனே… நான் நினைத்த மாதிரி என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்கிறோம் அல்லவா..!

குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளை படிப்பிலே ஒரு மக்காக இருக்கின்றானே. இவன் என்றைக்குத் தான் நன்றாகப் படிக்கப் போகின்றானோ…? என்று இந்த வேதனைப்படும் நிலைகளைச் செயல்படுத்தினால் இந்த உணர்வுகள் பாய்ந்து அவனுடைய நல்ல சிந்தனையை அது குறைக்குமே தவிர நல்லதாக ஆக்காது.

1.அவன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
3.நாம் யாராவது சொல்கிறோமா என்றால் இல்லை…!

இப்படியே இருக்கின்றான்… சரியான ஞாபகசக்தி வர மாட்டேன் என்கிறது என்ற இந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சும்போது கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளின் இயக்கமும் தடைபட்டுப் பாடம் சுத்தமாக வருவதில்லை.

பள்ளிக்கூடம் போகச் சொன்னால் போகவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். காரணம்…
1.நம்முடைய ஆசை உணர்வின் வேகம் இந்த மாதிரிப் பாய்ச்சுகிறது.
2.நம் உடலில் விளைந்தது எதுவோ இந்தப் பாசத்தினால் தவறாகிவிடுகிறது.

பையன் படிக்கவில்லை என்று அவனை நாம் வெறுத்தோம் என்றால் “பள்ளிக்கூடமே நான் போகவில்லை…!” என்பான். ஆக மேலும் மேலும் படிப்பு குறையும்.

இது எல்லாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் தாக்கப்பட்டுக் கெடுதலாக மீண்டும் நமக்கே எப்படி வருகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

Leave a Reply