செய்வினை… ஏவல்… தோஷம்… மாந்திரீகம்… இவைகளில் சிக்கியவர்கள் மீளும் வழி என்ன…? ஈஸ்வரபட்டர்

செய்வினை… ஏவல்… தோஷம்… மாந்திரீகம்… இவைகளில் சிக்கியவர்கள் மீளும் வழி என்ன…? ஈஸ்வரபட்டர்

 

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

Leave a Reply