உடல் நோய் நீக்கி உடல் நலம் பெறச் செய்யுங்கள்

உடல் நோய் நீக்கி உடல் நலம் பெறச் செய்யுங்கள்

 

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் அவரவர்கள் உயிரான ஈசனை வேண்டி… தியானத்தில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோருக்கும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற்று அவர்கள் உடல்களில் உள்ள சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அவரவர்கள் உடலில் இடுப்பு வலியோ தலை வலியோ கை கால் வலியோ வயிற்று வலியோ இருதய நோயோ கிட்னி கோளாரோ மூல நோயோ இருந்தது என்றால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கும்
2.எல்லோரும் இந்த நோய் நீக்கும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.
3.நோயை நீக்கும் அரும் பெரும் சக்தி இப்பொழுது பெறுவீர்கள்.
4.உங்கள் உடல் முழுவதுமே “ஒரு கரெண்ட்…” பாய்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ ஆஸ்த்மாவோ முல நோயோ இருதய நோயோ இதைப் போன்றிருந்தால் அந்த உறுப்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் அந்த அருள் சக்திகள் பாயும்.

1.அந்த உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்கத் தொடங்கும்
2.உங்கள் உடலில் உள்ள வலிகளும் வேதனையும் குறையும்.
3.அனைத்து நோயிலிருந்தும் விடுபடும் சக்தி பெறுகின்றீர்கள்.
4.கேன்சர் டி.பி. போன்ற கடுமையான நோய்களும் குறையத் தொடங்கும்
5.அது குறைந்து உங்கள் உடலிலிருந்து இறங்கும் தன்மையையும் நீங்கள் உணரலாம்.

எங்கெல்லாம் உங்கள் உடல்களில் குறைபாடுகள் இருக்கின்றதோ அதில் எல்லாம் இப்பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படரப்பட்டு உங்கள் உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்தும் பெற்று
1.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
2.தீய வினைகளால் விளைந்த
2.பாவ வினைகளால் விளைந்த
3.சாப வினைகளால் விளைந்த
4.பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த
5.சர்வ தோஷங்களும் சர்வ ரோகங்களும் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
6.சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற்று மன பலம் மன நலம் பெற்று
7.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

Leave a Reply