துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

polaris agastyan

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

உபதேசம் கொடுக்கும் போது சில நேரங்களில் நான் (ஞானகுரு) மெதுவாகப் பேசுகின்றேன்.. நிறுத்திப் பேசுகின்றேன்…!

இதைப் போல முதலில்… சாமி கொஞ்சம் நிறுத்தி மெதுவாகப் பேசினால் எனக்கு அர்த்தம் ஆகுமே….! என்று சிலர் எண்ணலாம்.

ஆனாலும்… “வேகமாகப் பேசுகின்றார்… எனக்கு அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ணினால் அது அர்த்தமாகாது தான்…!

1.குருநாதர் வேகமாகப் பேசும் உணர்வுகள் “எனக்குள் பதிவாக வேண்டும்” என்ற
2.ஏக்க உணர்வுடன் ஒன்றி வந்தால்
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆகி
3.அந்த உணர்ச்சியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசத்தை (https://wp.me/p3UBkg-1Ag) அழுத்தமாகவும் வேகமாகவும் உங்களுக்குள் பாய்ச்சுவது. அதாவது ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் (ஊடுருவி) அவ்வாறு செய்கின்றேன்.

எவரொருவர் இதைப் பெற வேண்டுமென்று (அதே அழுத்தத்துடன் வேகமாக) இதைக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ அவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கின்றது. மகரிஷிகளின் ஆற்றலை விண்ணிலிருந்து பருகும் ஆற்றலை எளிதில் பெறுகின்றனர்.

“என்னமோ சாமி பெரிதாகச் சொல்கின்றார்…! நமக்குப் புரியவில்லையே…” என்றால் வரும் அலைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டே இருக்கும்

ஆகவே இதைப் போன்ற நிலைகளைத் தவிர்த்துவிட்டு எப்போதும் உபதேசிக்கும்போது அந்தக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் பதிவாகும்.
1.இந்த உணர்வின் தன்மை
2.உங்களை அந்த அருள் வழிக்கு அழைத்துச் செல்ல உதவும்.

Leave a Reply