ஓம் என்ற பிரணவத்தை “சிவனுக்கே ஓதினான் முருகன்”
உடலான சிவனுக்குள் நின்று இந்த ஆறாவது அறிவு (முருகன்) இது இன்னென்ன பொருள்; ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதும் பொழுது நமது பூமி சுழல்கின்றது.
அது சுழலும்போது ஏற்படக்கூடியதுதான் ‘’பிரணவம்’’. நாம் சுவாசித்தது உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை ஜீவ அலைகளாக இயக்குவதுதான் ‘’பிரணவம்””, என்ற இந்தத் தத்துவத்தை உடலான சிவனுக்குக் காது வழியாகச் சொல்லுகின்றான்.
நாம் சுவாசித்த உணர்வினுடைய நிலைகள் ஒலி அலைகளாகப் பட்ட பின் செவிகளிலே பட்டுச் சிவனுக்கே ஓதினான்,
இதைத் தான் “தகப்பன்சாமி” என்று கதை எழுதுவார்கள்.
மனித உடலுக்குள் நாம் சுவாசிப்பது அனைத்தும் உயிரிலே பட்டு உணர்வின் எண்ணங்களாக மூச்சலைகளாக வெளியிடுகின்றோம். உணர்வின் காந்த அலைகளாக அது படரும் போது நம் செவிகளில் பட்டு அந்த ஒலியின் தன்மை கொண்டு செயல்படுத்தச் செய்கின்றது,
உங்கள் காதைப் பொத்திக் கொண்டபின் நீங்கள் பேசிப் பாருங்கள். சிந்தனை செய்ய முடியுமா…? முடியாது.
ஏனென்றால் காதைப் பொத்தியபின் நீங்கள் ஒலிகளை எழுப்பினாலும் அதை உங்களால் கேட்க முடியாது போகின்றது.
1.ஒலி கொண்டு ஒலியை எழுப்பிய பின் (உயிரிலே பட்டு)
2.அதன் மூலம் தான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.அறிவாக அறியச் செய்து உடலை இயக்குகின்றது.
4.இதைத்தான் ஆறாவது அறிவின் செயலாகக் காட்டினார்கள்
5ஆகையினாலேதான் “சிவனுக்கே ஓதினான் முருகன்…”
6.தன் உணர்வின் எண்ணத்தை
7.தான் சுவாசித்து வெளியிட்ட உணர்வின் தன்மையை
8.தன் செவிகள் கொண்டு அந்த உணர்வின் நிலைகளில் செயல்படுத்தும் தன்மை
9.இதுதான் ஆறாவது அறிவு தகப்பன்சாமி.
ஞானிகள் உடலைச் சிவமாகக் காட்டினார்கள். இந்த உடலிலிருந்து வெளிப்படும் மணத்தை ஆறாவது அறிவாகக் காட்டினார்கள்.
சுவாசிக்கும் உணர்வின் ஒலிகள் செவியில் பட்டு உயிரில் பட்டு உடலுக்குள் எப்படி உணர்த்துகின்றது என்பதைத்தான் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.
அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி நாம் ஏழாவது அறிவாக ஒளியாகச் சப்தரிஷி என்ற நிலையை அடைய வேண்டும்.