விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்தான் இங்கே மெய்ஞானத்தை உணர்த்துகின்றனர்
- அருணகிரிநாதர்
உதாரணமாக அன்று அருணகிரிநாதருக்கு சொத்து சுகம் எல்லாம் இருந்தது. கடைசியிலே அவருக்கு கஷ்டம் வரப்படும் பொழுது உடல் முழுவதும் நோயாகி வேதனைப்பட்டார்.
என்ன வாழ்க்கை…? என்று நினைத்தார் இனி என்ன…? சாகப் போகிறோம். இன்றைக்கு இது நாள் வரை செய்த “கெட்டது அனைத்தும் போகட்டும்”. இனிமேல் அடுத்து நல்ல சரீரம் பெறவேண்டும் என்று கோபுரத்தின் மேல் ஏறி விழப்போனார்.
அந்த ஏக்கத்திலே இருக்கும் பொழுது அந்த சந்தர்ப்பம் என்ன செய்கின்றது? ஒரு நிமிடத்திற்குள் “உயர்ந்த சக்தி” உள்ளே வந்துவிடுகின்றது.
- இராமலிங்க அடிகள்
அதே போன்று இராமலிங்க அடிகளுக்குத் தான் செய்த தவறுக்காகத் தன் அண்ணியை அண்ணன் உதைக்கிறார் என்று ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு “ஞானியின் அருள்” அவருக்குள் வந்து எத்தனையோ சக்திகளைச் சொன்னார்.
- இராமகிருஷ்ண பரமஹம்சர்
இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன செய்தார்? மந்திரக்காரர்கள் காளி கோவிலுக்கு வந்து அடுத்தவர்களுக்கு ஏவல் செய்யப்படும்போது “அடப்பாவிகளா, காளி கோவிலில் வந்து ஆட்டையும் மாட்டையும் கொல்கிறீர்களே” என்று எண்ணுகின்றார்.
தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் செய்கிறார்களே என்ற ஏக்கத்திலே இருக்கும்போதுதான் அந்த “நல்ல உணர்வான ஆத்மா” இவர் உடலிலே சேர்ந்து அத்தனை பெரிய ஞானத்தைப் பேசினார்.
இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தெரியாது. அவர் பாட நிலையற்ற நிலைகள் கொண்டு கோவில் பூசாரியாக இருந்தாலும் உணர்வின் ஏக்கத்தாலே ஏங்கப்பட்டு இந்தப் பூஜைகள் கூடாது என்று ஒதுக்கிவிட்டு இந்த உணர்வின் ஆற்றலை முழுமையாக அறிந்துணர்ந்தார்.
1.பூஜை என்பது
2.மெய் ஒளியைத் தனக்குள் தனக்குள் சுவாசித்து
3.நம் உயிரான ஈசனிடத்திலே நாம் பாய்ச்சும் இந்த ஆராதனைதான்
என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் பலமுறை சொல்லியிருக்கிறார்.
ஆனால், ஆராதனையும் அபிஷேகத்தினுடைய தன்மையும் ஊக்குவித்துவிட்டார்கள். ஏனென்றால், அவர் வழியில் வந்தவர்கள் அவரவர்கள் பிழைப்புக்காக வேண்டிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த மெய்ஞானி சொன்னதைப் புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த மெய்ஞானி சொன்னதை இழந்துவிட்டார்கள்.
- விவேகானந்தர்
ஆனால், விவேகானந்தர் தான் இறைவனைப் பார்க்கவேண்டும் என்று பிடியாகப் பிடித்தார்.
அவர் தான் படித்த நிலைகள் கொண்டு அரசியல் பண்பைத் தெரிந்தார். உலகத்தையே அறிந்தார். தான் அறிய வேண்டும் என்ற வேட்கையிலே வந்தார்.
இங்கே படிப்பறிவு இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்திலே வந்தவுடன் என்னவாயிற்று?
வந்தவுடனே அவர் தொட்டவுடனே ஏதோ ஒரு “கரண்ட் ஷாக்..,” ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்ற நிலைகள் கொண்டு அவர் எடுத்துக்கொண்ட உணர்வை விவேகானந்தர் தனக்குள் பெறுகிறார்.
அதன் வழி கொண்டு தனக்குள் உணர்கின்றேன் என்ற நிலைகள் கொண்டு இவருடைய படித்த அறிவின் தன்மையை மற்றவர்களுடன் இணைக்கும் தன்மை வருகின்றது.
ஆனால் இணைக்கும் தன்மை வந்தாலும் சக்தியின் தன்மையை, அவர் காட்டிய அந்த படித்த வர்க்கத்தின் நிலைகள் கொண்டு பிராணாயமத்தினுடைய தத்துவத்தை அந்த அரசர்கள் காட்டிய நெறியில் உட்புகுந்துதான் அந்த பாட நிலைகளில்தான் வந்தார்.
- ஆதிசங்கரர்
அதே போன்று ஆதிசங்கர் வெளிப்படுத்தியது காற்றிலிருக்கக்கூடிய சக்தியை நீ சுவாசிக்கும் பொழுது உனக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு இந்தச் சுவாசமே அபிஷேகமாகின்றது.
நீ எந்த குணத்தை எண்ணுகின்றாயோ அந்த குணத்தின் தன்மை உயிரான நிலைகளில் அபிஷேகம் ஆகின்றது.
நீ பாலைப் போன்ற மணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது உடலுக்குள் மகிழ்ச்சியாகின்றது. தேனைப் போன்ற சுவையான நிலைகள் பெறவேண்டும் என்று சுவாசிக்கும் பொழுது உன் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் இனிமை நிறைந்ததாக மலர்கின்றது என்ற இந்தத் தத்துவத்தை ஆதிசங்கரர் சொன்னார்.
ஒரு ரோஜா மலர் என்றால் அதன் மணத்தின் தன்மையை எடுத்துத்தான் மலரின் தன்மை வருகின்றது. அந்த ரோஜா மலரை நாம் பார்த்து அந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி சுவாசித்தால் அந்த மணம் நமக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு செருகேருகின்றது.
ஆனால், துவைதம் என்பது அந்தப் பொருளை எண்ணி எடுப்பதே தவிர யாகங்களைச் செய்து, வேள்விகளைச் செய்து மந்திரத்தினாலே எடுப்பது அல்ல.
ஆக, இதையெல்லாம் ஒரு மனிதனுக்குள் இயக்குமேயானால் மனிதனுடைய உயிருக்குள் உணர்வை நீ மாற்றுகிறாய் என்ற நிலைகளைத்தான் அன்று அரசனின் நிலைகளைச் சாடப்படும் பொழுது ஆதிசங்கரருக்கு எதிர்ப்பு வருகின்றது.
அவருக்குப் பின் வந்தவர்கள் பீடங்களை அமைத்துக் கொண்ட அதன்வழி கொண்டு துவைதத்தின் தத்துவத்தை மனிதனுக்குள் எண்ணத்தை அன்று அரசன் காட்டிய நிலைகள் கொண்டு தன்னையறியாமல் இன்றைக்கு மக்களையும் சூனியமாக்கி அதிலிருந்து விடுபடும் நிலையே இல்லாது இன்றும் நாம் இருக்கின்றோம்.
வேள்விகள் செய்தால்தான் நம் பாவம் போகும் என்றும் வேள்விகள் செய்தால்தான் அம்மா அப்பா மோட்சம் போக முடியும் என்ற நிலைகளில்தான் இருக்கின்றோம்.
ஆனால் அதைச் செய்யவில்லை என்றால் பிழை வந்துவிடுமோ என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் விஷத்தை நஞ்சை நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.
நஞ்சின் தன்மை கொண்டுதான் ஒரு பிடியிலே சிக்குகின்றோம். நஞ்சுக்குள் சிக்கிவிட்டால் நாம் நஞ்சின் தன்மை அடைகின்றோம்.
6.மகரிஷிகளின் உணர்வலைகள்தான் இங்கே மெய்யை உணர்த்துகின்றது
இவையெல்லாம் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் நெறிகள்.
1.இங்கே இதை உபதேசிப்பது நான் அல்ல.
2.மெய்யை உணர்ந்த பல மகரிஷிகளின் உணர்வலைகள்
3.அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளப்படும் பொழுது,
4.அவர்களின் உணர்வலைகள்தான் உணர்த்தியது.
5.நீங்கள் இப்பொழுது கேட்பது, சுவாசித்தது அனைத்துமே அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைத்தான்.
அந்த உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது. அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆதிசங்கரர் சொன்னது போல் காற்றிலிருக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எங்கிருந்தும் பெறமுடியும்
அதே சமயத்தில் அங்கே விண்ணின் ஆற்றலையும், இந்தப் புவிக்குள் இருக்கும் சக்தியையும் நீங்கள் பெறமுடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.